Monday, July 30, 2007

உரையாடும் விழிகள்



இன்று அவள் பெயரை
எப்படியும் அறிந்துகொள்ள

ஏகாந்தமாய் உடையணிந்து
இங்குமங்கும் அலைகையில்

கடைவீட்டு ஜன்னல்வழி
கருகரு இரு விழிகள் !

மொய்க்கும் வண்டாய்
படபடக்கும் விழியிதழ்கள்

இமைமூடும் நொடிப்பொழுதும்
சளசளக்கும் சிந்தனைகள்

வழியும் வார்த்தைகள்
பளபளக்கும் இமைவழியே

சீர்செய்யும் கேசமது
சருக்கி முன்விழ

சிறிய இடைவெளியில்
தெரியும் விழிகண்டு

தடுக்கித் தடுமாறும்
அதனழகில் எந்தன் உயிர்

அசையும் விழிகளிலே
ஆயிரம் சேதிகள்

அற்புதங்கள் பல கலந்து
கலகலப்பாய் கதைக்கும் விழி

விரல்நுனியால் மையிட்ட அவள்
வேகத்திலே நிதானம்

காணும் என் விழிகள்
நாணித் தணிந்திருக்க

கயலூ... என்றவள் அம்மாவின்
காதடைக்கும் சத்தத்தில்

தேனினும் இனிதாய்த்
தெரிந்தது அவள் பெயர் !

அழகே உன்பெயரே
துள்ளும் விழி தானா ?!

Friday, July 27, 2007

கணினி ஓவியப் போட்டி - 3

கணினி ஓவியப் போட்டிக்கு. எனது மூன்றாவது படம்.

"ஆத்தா நான் பாசாயிட்டேன்" அப்படினு தலைப்பு வைக்கலாம், ஆனா commedy-யா போயிரதுனால

தலைப்பு : ஆனந்தம்
வரைதூரிகை : mspaint

Thursday, July 26, 2007

கணினி ஓவியப் போட்டி - 2

கணினி ஓவியப் போட்டிக்கு. எனது இரண்டாவது படம்

தலைப்பு : தேடல்
வரைதூரிகை : mspaint

கணினி ஓவியப் போட்டி - 1

கணினி ஓவியப் போட்டிக்கு. எனது முதல் படம்

தலைப்பு : மழை வரும் மாலை
வரைதூரிகை : mspaint

கல்வியா ? செல்வமா ? வீரமா ? - கண்ணதாசன்

சரஸ்வதி சபதம் எனும் திரைப் படத்தில் கவியரசரின் கருத்தாளமிக்க வரிகள்.

எவ்வளவு எதார்த்தம்:

படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா ? -- பொருள்
படைத்தவன் கருத்தானால் சபைமீறுமா ?

பாடலைக் கண்டு, கேட்டு, வாசித்து மகிழுங்கள்



Thanks to senthil5000 for the youtube

கல்வியா ? செல்வமா ? வீரமா ?
அன்னையா ? தந்தையா ? தெய்வமா ?

ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? -- இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ?

கற்றோர்க்கு பொருளின்றி பசிதீருமா ? -- பொருள்
பெற்றோர்க்கு அறிவின்றி புகழ் சேருமா ?

கற்றாலும், பெற்றாலும் பலமாகுமா ? -- வீரம்
காணாத வாழ்வென்றும் வாழ்வாகுமா ?

படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா ? -- பொருள்
படைத்தவன் கருத்தானால் சபைமீறுமா ?

படித்தவன், படைத்தவன் யாராயினும் -- பலம்
படைத்திருந்தால் அவனுக் கிணையாகுமா ?

ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது -- அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது

ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது ? -- மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது ?

மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா ? -- காலம்
முற்றும் பொருள் வளர்க்கும் மதி வேண்டுமா ?

தோங்கும் பகைநடுங்கும் வனம் வேண்டுமா ? -- இவை
மூன்றும் துணையிருக்கும் நலம் வேண்டுமா ?


அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? என்ற கவியரசரின் வரிகளை சற்று மாற்றி

அன்னையா ? தங்கையா ? மனைவியா ? என்று எழுதியிருந்தால் எப்படி இருக்கும் ? தற்போது இம்மூவரும் ஒன்றாக வாய்ப்பேயில்லை என்று வருத்தம் தான் குடிகொள்கிறது. அதே சமயம்

ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது ? -- மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது ?


என்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !!! சாத்தியம் இல்லையென்றாலும் கனவாவது காணுவோம் !!!

Wednesday, July 25, 2007

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ - பாரதிதாசன்

'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்று தமிழுக்குப் பெயரிட்டு அழகு பார்த்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் உன்னதமான வரிகள். பாடலைப் படிக்கும் போதே சிலிர்ப்பு ஏற்படுகிறதே, யாராவது பாடிக் கேட்டால் எப்படி இருக்கும், அதுவும் காட்சியோடு !

'பெற்றோர் ஆவல்' எனும் தலைப்பின் கீழ் வரும் பாடல் இச்சுட்டியை தட்டி காட்சியைக் காணுங்கள்

மகாகவி பாரதியாரின் மனைவி அவர்கள் மரணப்படுக்கையில் இந்தப் பாடலை விரும்பிக் கேட்டதாக குமரன் அவர்கள் பதிவில் படித்தேன். இப்பாடலுக்கு அருமையான விளக்கங்களையும், பின்னூட்டம் இட்டவர்களின் தகவல்களையும் இங்கே காணலாம்

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...

இப்பாடலைப் பற்றி வலையின் படித்த ஒரு செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Thunbam Nergayil is in Or Iravu where the MD is Sudarsanam. But this song was much earliersung by MM Dandapani Desigar in Kacherikal. AVM approached him to use the same tune in Or Iravu.

Tuesday, July 24, 2007

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா - M.S.சுப்புலக்ஷ்மி

இந்தப் பாடல் எவ்வளவு பிரசித்தம் என்று வலையில் கூகளிட்டபோது வியந்து தான் போனேன். ஆசையோடு நம் பதிவில் இடலாம் என்றால், தமிழ் வலைப்பதிவுகளிலேயே ஏகப்பட்ட பேர் பதிந்திருக்கிறார்கள். ஆதலால், ஒரு சிறு வித்தியாசம் செய்து, M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் வீடியோவுடன், ராஜாஜி அவர்களின் வரிகளும் சேர்த்து இங்கே பதிவிடுகிறேன்.

M.S. அவர்களின் குரலும், அவர்களின் லயிப்பும், பாடலின் நடுநடுவே அவர்கள் தட்டும் இசையும் நம்மை உருக வைக்கும் என்பது நிச்சயம்.

பாடலைக் கண்டு, கேட்டு, வாசித்து மகிழுங்கள்.



Thanks to navarasan for the youtube

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா

(குறையொன்றும்)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா -- உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் எனக்கொன்றும் குறையில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில்
ஏதும் தரநிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

பி.கு. குமரன், எளிமையான பாடல் வரிசையில் இப்பாடலும் வருவதால், விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன் ! :)

Monday, July 23, 2007

மூவிங் சேல் (Moving Sale)



அதிகாலை இரண்டு மணிக்கு ட்வின் சிட்டி எனப்படும் மினியாபோலிஸ் - செயின்ட்பால் விமான நிலையத்தில் தரையிறங்கியது நார்த் வெஸ்ட் ஏர்லயன்ஸ் விமானம்.

சிங்கப்பூரிலிருந்து எட்டு மணி நேரம் கழித்து ஜப்பானில் ஒரு தரையிரக்கம். ப்ளேன் மாற்றி அடுத்து பத்து மணி நேரம் கழித்து இப்போது. இதுவரையிலும் வந்ததே அப்பாடா என்று இருந்தது. இங்கிருந்து, அரை அல்லது முக்கால் மணி நேரம் தான் டென்வர் என்று நண்பன் இளங்கோ கூறியது நினைவில் இருந்ததால் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான் நந்தகுமாரன். நந்தாவுக்கு இது தான் முதல் முறை இத்தனை தூர விமானப் பயணம்.

டென்வருக்கு ப்ளேன் நாலு மணிக்கு என்று அறிவிப்புப் பலகை சொல்லியது. இன்னும் இரண்டு மணி நேரம் என்ன செய்வது என்று யோசித்தான். சரி ஒரு காபி சாப்பிடலாம் என்று சுற்றிலும் பார்த்தான், எட்ட ஒரு கடை தெரியவே அங்கே சென்று, பாக்கெட்டில் கையை விட்டவன் திடுக்கிட்டான்.

முகம் கருத்து, அங்கேயே பெட்டியை எல்லாம் பிரித்துப் போட்டு, தேடிய பர்ஸைக் காணாததால் பரிதவித்தான். அவ்வழியே சென்ற ஒரு வாட்ட சாட்டமான ஆப்பிரிக்க அமெரிக்கர், நந்தாவை ஒரு பார்வை பார்த்து.

Hey, waz up ? Any thing I can help you ? என்றார்.

திரு திரு முழி (வழக்கமான) ஒன்றை முழித்து, It's ok, I can manage என்றான்.

குனிந்து நிமிர்ந்து தேடியதில், என்னது ஒரே எடஞ்சலா இருக்கு என்று இடுப்பில் தொங்கிய pouch-ஐ பின்னுக்குத் தள்ளிய போது தான் நினைவுக்கு வந்தது, பாஸ்போர்ட், செல், பர்ஸ் எல்லாவற்றையும் ப்ளேன் மாறியவுடன் அதனுள் வைத்தது.

"உனக்குப் பொறுமையே இல்ல, எதுக்குக்கெடுத்தாலும் tension. ஒரு ரெண்டு செகண்ட் யோசிக்கறதில்லை". மனதில் உதித்தது மனைவியின் உளரல், மன்னிக்கவும் குரல்.

"நீங்க போய் செட்டில் ஆகிட்டு கூப்பிட்டுக்கங்க. அதுவரை நான் இந்தியா செல்கிறேன்" என்று அம்மா வீட்டிற்கு ஈரோடு சென்றுவிட்டாள் தேன்மொழி. அதான் நந்தா மட்டும் சிங்கையிலிருந்து இங்கே வந்திருக்கிறான்.

கொடுமையான அபார்ட்மென்ட் வாழ்க்கை, மூனு பெட்ரூமில் ஒன்பது பேர். அதைவிடக் கொடுமை அப்பார்ட்மென்ட் neatness. அதனினும் கொடுமை தினம் தினம் Interview. என்னவோ படித்து, என்ன வெல்லாமோ skill set வளர்த்து, எந்த எந்த job-ற்கோ interview attend பண்ணிக் கொண்டிருந்தான்.

ஆச்சு ரெண்டு மாசம். எல்லாம் தாண்டி, எதோ ஒரு skill set-ல வேலையும் கிடைத்தது. அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம் புரிந்தது. மனதுள் சிரித்துக் கொண்டான்.

இன்று சனிக்கிழமை. டென்வரிலிருந்து நாளை மறுநாள் புறப்பட வேண்டும். consultancy-யில் இருந்து e-ticket மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். ரெண்டாவது ஸ்டேட் தள்ளியிருக்கிற டெக்சாஸிற்கு ஒரு சுற்று சுற்றி, ஒரு முறை தரையிறக்கம் லாஸ் வேகஸில் வேறு.

தேதிகளையும், பெயரையும் சரிபார்த்து print பண்ணிக் கொண்டான். திங்கள் இரவு ஹூஸ்டனில் நண்பன் ரவியுடன் கழித்தான். பழங்கதைகள் பல பேசி இரவு படுக்கச் செல்கையில், ஒரே சிந்தனை. போயும் போயும் செவ்வாய்கிழமை வேலையை ஆரம்பிக்க வேண்டுமா ? புதன் கிழமை ஆரம்பிச்சா எப்படி இருக்கும் ? பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காதுன்னு சொல்வாங்களே ! என்று சிந்தனையின் எல்லையில் இருந்த நந்தாவை, ரவியின் குரல் களைத்தது. "என்ன மாப்ள ஒரே flashback-ஆ ஓடுதா ?"

நந்தாவின் மனதுள் "சொல்லலாமா ? வேணாமா ? சொன்னா, டேய் நீ இருக்கறது அமெரிக்கா-ல, அதுவும் IT job பாக்கறவன். நீயே இப்படி-னு திட்டுவானோ" என்று, ஒன்னுமில்ல மாப்ள, வீட்டு நினைப்பு என்று சமாளித்தான்.

Consultancy-ல எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் நந்தா. பெரிய சண்டையே நடந்தது தொலைபேசியில். "ஒன்னும் செய்ய முடியாது நந்தா, afterall ஒரு கிழமைக்காக ஏன் இவ்வளவு tension ஆகறீங்க, நீங்க செவ்வய்க்கிழமை client எடத்தில இருக்கீங்க" என்று ஆணி அடித்தாற் போல் சொல்லிவிட்டார்கள்.

வேலையும் ஓரளவு துரிதகதி அடைந்து ஆறு மாதங்கள் ஆகிய நிலையில், ஒருவாரத்தில் தனி அபார்ட்மென்ட் பார்த்து, பத்து நாள் கழித்து வருவதாகச் சொல்லிப் பதிந்து கொண்டான். தேன்மொழிக்கு தொலைபேசியில் எல்லா விபரங்களும் சொல்லி அவளும் பதினைந்து நாட்கள் கழித்து வருவதாகச் சொன்னாள்.

அபார்ட்மென்ட் புக் பண்ணியாச்சு. அடுத்து வீட்டு சாமான்கள் வாங்க வேணுமே. நந்தாவுக்கு, ரவி யோசனை சொன்னான். "மாப்ள, நம்ம இந்தியன் ஸ்டோர்களில் 'மூவிங்க் சேல்ஸ்' notice போட்டிருப்பாங்க, அங்க போகும் போதெல்லாம் பாரு. அப்புறம் உங்க office-லயும் பாரு. உனக்குத் தேவையானது cheap-ஆ கிடைக்கும்" என்று.

microwave - $80

21" TV - $ 350

Honda Accord 1998 - Only 95 k, Brand new tires - $8000 OBO

பெரிய list-ல் நந்தா, அவனுக்கு தேவையானதாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். அட போங்கப்பா ... இவ்ளோ $ குடுக்கறதக்கு, நான் புதுசே வாங்கிடுவேன். பழசுக்கு எதுக்கு இவ்ள தெண்டம் அழுகணும் என்று எறிச்சல் பட்டான் ரவியிடம்.

ரவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காத நந்தா, அனைத்துமே புதிதாய் வாங்கிச் சேர்த்தான். எல்லாம் 'தேனை' impress பண்ண வேண்டுமென்ற தலையாய நோக்கமும் அதற்குக் காரணம். மற்றொன்று பழையதை வாங்கி ஏதாவது repair-னா, அதுக்குக் வேறு அழ வேண்டும்.

தேனும் வந்து சில மாதங்கள் ஆகிய நிலையில், project முடிந்து விட்டது. மீண்டும் Interview படலம் ஆரம்பம் ஆனது. திரும்பவும் எந்த எந்த job க்கோ interview attend பண்ணி கடைசியில், ப்ஃரீமாண்டில் வேலை கிடைத்தது.

கொஞ்சமாவது பொறுப்பு வந்திருக்கா ? பாருங்க எல்லாத்தையும் புதுசா வாங்கி வச்சிருக்கீங்க. இங்க இருந்து எடுத்திக்கிட்டுப் போற மாதிரியாவா இருக்கு. என் ப்ஃரண்ட் லஷ்மி வீட்டுக்காரருக்கெல்லாம் Relocation cost consultancy-யே குடுத்துச்சாம். அந்த மாதிரி உங்க consultancy குடுக்குமா ? அதுவும் இல்ல. எப்பத் தான் திருந்தப் போறீங்களோ ...

எல்லாம் செவ்வாய்க் கிழமை வேலைக்குச் சேர்ந்த நேரம் தான் என்று நொந்து கொண்டான் நந்தா.

மறுநாள், அனைத்து இந்தியன் ஸ்டோர்களிலும் நந்தா, மூவிங் சேல்ஸ் poster ஒட்டிக் கொண்டிருந்தான்.

Friday, July 20, 2007

பச்சை மாமலை போல் மேனி - உன்னிகிருஷ்ணன்

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், மனதை உருக வைக்கும் பாசுரம்.

மெல்லிய இசையில், கசிந்து வழிகிறது உன்னிகிருஷ்ணனின் குரல். கண்ணை மூடி கண்ணனை நினைக்க உள்ளத்துள் ஒலித்துக் கொண்டேயிருக்கும் வரிகள் :

ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரில்நின் பாதமூலம்
பற்றினேன் பரம மூர்த்தி


கண்ணனைக் கண்டும், பாடலையும் கேட்டும், வாசித்தும் மகிழுங்கள்.



Thanks to myalias for the youtube

பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்

ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரில்நின் பாதமூலம்
பற்றினேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதருகின்றேன்
ஆருளர்களை கணமா
அரங்கமா நகருளானேன்

பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்

Thursday, July 19, 2007

இந்தியா 2020

இந்தியா 2020ல் எப்படி எல்லாம் இருக்கும் என்று நம்ம அப்துல் கலாம் அவர்களும், நாமளும் கணவு கண்டுகொண்டு இருந்தால், அப்பவும் நமது பத்திரிகைகள் எந்த மாதிரி செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கறாங்கன்னு பாருங்க. படத்தைப் பெரிதாக்கிப் பாருங்கள்.




நன்றி : மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு.

Wednesday, July 18, 2007

திருவிளையாடல் - இன்றொரு நாள் போதுமா ?

திருவிளையாடல் படம் என்றவுடன் நம் யாவர் மனதிலும் சட்டென்று நினைவில் வரும் காட்சி, 'தருமி' நாகேஷ் 'பரமசிவன்' சிவாஜியுடன் மண்டபத்தில் கவிதை பற்றி விவாதிப்பது.

அதே சமயம் அப்படத்தில் பாடல்கள் அனைத்துமே அற்புதம். நம்ம கவியரசர் இயற்றிய இந்தப் பாடலில் தான் எத்தனை அகந்தை, எத்தனை கர்வம், என் பாட்டுக்கு உன்னோட நாடு ஈடாகுமா என்னும் திமிர்.

அட, பாலையாவின் பாத்திரப் படைப்பை தாங்க சொல்றேன். எப்படி கவியரசரால் இத்தனை தத்ரூபமாக, எளிமையாக, பாத்திரத்தின் குணத்தை பாட்டில் எழுத முடிகிறது ?

கவியரசர் தான் அப்படி என்றால், பாடிய பாலமுரளி, அடா அடா, என்ன ஒரு லயிப்பு பாடுவதில். இவர்களுக்கெல்லாம் போட்டியாய் பாலையாவின் முகபாவமும், அவர்தம் சிஷ்யர்களின் ஆமோதிப்பும், என்னவென்று வியப்பது. மொத்தத்தில் ஒரு தர்பாருக்கே உயிரூட்டியிருக்கிறார்கள். பாடலைக் கண்டு, கேட்டு, வாசித்து மகிழுங்கள்.



Thanks to senthil5000 for the youtube

ஒரு நாள் போதுமா ? இன்றொரு நாள் போதுமா ?
நான் பாட இன்றொரு நாள் போதுமா ?
நாதமா ? கீதமா ? அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா ?

புதுநாதமா ? சங்கீதமா ? அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா ?

ராகமா ? சுகராகமா ? கானமா ? தேவகானமா ?
ராகமா சுகராகமா கானமா தேவகானமா
என் கலைக்கிந்த திருநாடு சமமாகுமா ?
என் கலைக்கிந்த திருநாடு சமமாகுமா

நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா ?

குழலென்றும் ...
யாழென்றும் ...
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்

அழியாத கலையென்று எனைப் பாடுவார்
அழியாத கலையென்று எனைப் பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி ... தோடீ ....
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ ?
தர்பாரில் எவரும் உண்டோ ?
தர்பாரில் ...
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ ?

கலையாத மோகனச் சுவை நானன்றோ
மோகனச் சுவை நானன்றோ
மோகனம் ...
கலையாத மோகனச் சுவை நானன்றோ

கானடா ...
என் பாட்டுத் தேனடா
இசை தெய்வம், நானடா ...

நிற்பதுவே நடப்பதுவே - பாரதியார்

யாமறிந்த புலவரிலே
கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சி்யில்லை


என்று பாரதி மற்ற புலவர்களைப் பாராட்டியிருந்தாலும். அவரும் கூட "உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" என்று கடைசியாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. வாழ்த்தினாலும் ஏசும், தாழ்த்தினாலும் ஏசும் வையகம் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும் போலும். எதெல்லாம் நிலையில்லை / நிலைத்திருக்கும் என்றும் இந்தப் பாடலில் சொல்லியிருக்கிறார் பாரதி.

பாரதியின் பல அற்புதமான பாடல்களுள் மிக அற்புதமான பாடல் 'நிற்பதுவே நடப்பதுவே'. பாரதி திரைப்படத்திலும் இடம் பெற்றிருக்கிறது இப்பாடல். இசைஞானியின் அற்புதமான இசை, நல்ல காட்சியமைப்பு, ஹரீஸ் ராகவேந்திராவின் குரல், ஷாயஜி அப்படியே இதற்கெல்லாம் உயிர் தந்து நம்முன் பாரதியாக ... காட்சியும், பாடல் வரிகளும் கீழே



Thanks to gr8member for the youtube

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ... நீங்களெல்லாம்
சொற்பனம் தானோ ? பல தோற்ற மயக்கங்களோ ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே ... நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?

வானகமே இளவெயிலே மரச்செரிவே ... நீங்களெல்லாம்
கானலின் நீரோ ? வெறும் காட்சிப் பிழை தானோ ?
போனதெல்லாம் கனவினைப் போல் புதைந் தொழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ ? இந்த ஞாலமும் பொய் தானோ ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ ? அங்கு குணங்களும் பொய்களோ ?
சோலையில் மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ ?

காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ ?
வீண்படு பொய்யிலே ... நித்தம் விதிதொடர்ந் திடுமோ ?
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதல்லால உறுதியில்லை
காண்பது சக்தியாம் ... இந்தக் காட்சி நித்தியமாம்.

Tuesday, July 17, 2007

photography-in-tamil புகைப்படப் போட்டிக்கு

போகஹான்டாஸ் ஏரி, வர்ஜீனியா



போகஹான்டாஸ் ஏரி (மற்றுமோர் கோணம்), வர்ஜீனியா



http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_17.html

ஹரிவராசனம் - K.J.யேசுதாஸ்

எவ்வளவோ திரைப்படப் பாடல்கள் பிரசித்தி பெற்றிருந்தாலும், பக்தி பாடல்களுக்கு இணையாக வருமா என்பது கேள்வியே ! காலத்துக்கும் அழியாதவை பக்தி பாடல்கள் என்பது எனது எண்ணம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய பாடல்கள் இன்றும் நாம் கேட்கிறோம் என்றால், அதன் பின் வந்த பலபாடல்களும் இதற்கு உதாரணம் சொல்லலாம். அப்படி ஒன்று தான் 'ஹரிவராசனம்' பாடல்.

கணீர் குரலும், தெள்ளிய உச்சரிப்பும், மிதமான இசையும் நம்மை மயங்க வைக்கும் என்பது நிச்சயம்.

சுவாமி ஐயப்பனையும், பாடல் வரிகளையும் கண்டு, யேசுதாஸ் அவர்களின் குரலைக் கேட்டும் மகிழுங்கள்.



Thanks to shankermcsa for the youtube

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அறிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

சரணகீர்த்தனம் ஷக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

துரகவாகனம் சுந்தரானனம்
வரஹதாயுகம் வேதவர்நிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

த்ருபுவனார்ஜிதம் தேவதாத்மகம்
த்ரனயனம் ப்ரபும் திவ்யதேஷிகம்
த்ரதஷபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

பவபயாபகம் பாபுகாவஹம்
புவனமோகனம் பூதிபூஷனம்
தவளவாகனம் திவ்யவாரனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

களம்ருதுஸ்மிதம் சுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருதிவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

Friday, July 6, 2007

நிலவு

வட்டப் பட்டமென வான்சுற்றி
தட்டும் மேளதின் வடிவே

காரிருளில் வெண் பொட்டென
வலம்வரும் குட்டி நிலவே

புள்ளி வானின்
வெள்ளிப் புன் சிரிப்பே

மாதமொருமுறை தேய்ந்து வளரும்
வட்டநிலவே வான்முட்டும் நிலவே

நின்றன் வெள்ளை நிறம்
என்றும் கொள்ளை கொள்ளுமே

நின்றன் ஒளிக்கதிர் எம்மை
தென்றலாய் தீண்டிச் செல்லுமே

மனம்

ஏற்றிவைத்த விளக்கு
காற்றிலசையும் கலம்
சேற்றிலாடும் மலர்
தொற்றியாடும் தளிர்
திரியிலாடும் சுடர்
ஆட்டங் களினூடே
சுற்றிவரும் புலம்

ஓவியம்

வண்ணக் கலவையில்
எண்ணத் தூறல்

உருவிலா உருவத்தை
உருப்பெற வைத்திடும்

காணப்பெறா காட்சிகளை
கண்முன்னே காட்டிடும்

கோடிட்டே காவியத்தை
புவிதனில் சேர்த்திடும்

வரலாற்றின் சூழல்தனை
வண்ணமாய் வடித்திடும்

...

வண்ணம் சிதற
எண்ணம் சிதறா

படைப்பு பளபளக்கும்
படைப்பாளி ஓய்ந்திருப்பான்