tag:blogger.com,1999:blog-63284885049088306462024-03-18T23:50:27.587-04:00வழக்கம் போல்காலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ...
"நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு ...சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger220125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-11745325997012610122015-06-11T22:40:00.001-04:002015-06-11T22:40:10.501-04:00நரியைப் பரியாக்கி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
<span style="text-decoration: underline;"><b>ஆவுடையார் கோயில்</b></span></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
குதிரை வாங்கச் சென்ற அமைச்சனைக் காணாது வருந்தினான் மன்னன். ‘யாரங்கே?’ என்று உரக்கக் கூவியதில், அருகில் இருந்த இரு காவலர்கள் பதறியடித்துப் பயபக்தியோடு மன்னனை நெருங்கினர். அமைச்சன் சென்ற வழியில் சென்று தகவல் அறிந்து வரப் பணித்தான் வீரர்கள் இருவரையும். மன்னனின் கட்டளைக்கேற்ப, இருவரும் தத்தம் குதிரைகளில் தாவி ஏறி, அமைச்சன் சென்ற வழித்தடத்தில் பயணிக்கலாயினர். மதுரையில் இருந்து தொண்டி மீமிசல் நோக்கிய பயணம். சென்ற வேகத்தில் அதே தினத்தில் திரும்பிய வீரர்கள் இருவரும் தாம் கண்டதை மன்னனிடம் விவரிக்க, விறகடுப்புச் செங்கணலாய் விரிந்தன அவன் விழிகள்.</div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
மேலும் சினந்து, ’மன்னனின் கட்டளை மீறிய அமைச்சனை இழுத்து வாருங்கள்’ என்று ஒரு சிறு படையை, வீரர்கள் இருவரோடும் அனுப்பினான். </div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
அறந்தாங்கி அருகே திருப்பெருந்துறையில், ‘குருந்த மரத்து நிழலில் குருவின் திருவடியில்’ உலகப் பற்றறுத்து பேரின்பத்தில் திளைத்திருந்த அமைச்சருக்கு, ‘தான் எதற்காக இங்கு வந்தோம்!’ என்று நினைவூட்டினர் சிறு படையோடு வந்த வீரர்கள் இருவரும். ‘நிச்சயமற்ற வாழ்வின்’ நினைவிற்கு மீண்டு வந்த அமைச்சர் மிகவும் வருந்தினார். மன்னனின் கட்டளை மீறியதை எண்ணி மனம் நொந்து கொண்டார். குருவின் காலடியில் விழுந்து கதறினார். நின்பால் அன்பு கொண்டு, ‘நமச்சிவாய வாழ்க’ என்று நின்னைச் சரணைடைந்த எனக்கு, இதற்கும் வழிகாட்ட வேண்டும் என்று மனமுருக வேண்டினார்.</div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
‘ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று குதிரைகள் மன்னனை வந்து சேரும் எனச் சொல்’ என்று திருவாய் மலர்ந்தருளினார் குரு அமைச்சரிடம். அமைச்சரும் அவ்வாறு சொல்ல, குதிரை வீரர்கள் மன்னனிடம் செய்தியை எடுத்துச் சென்றனர்.</div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Lucida Grande'; font-size: 12px;">
…</div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
நரியைப் பரியாக்கி, பரிகள் மீண்டும் நரிகளாய் காட்டுக்குள் ஓடி, அமைச்சனை மன்னன் பல வகையிலும் தண்டிக்க, வைகையில் வெள்ளம் வரச் செய்து, பிட்டுக்கு மண் சுமந்து, கரையை அடைக்காமல் போக்கு காட்டி, மன்னனால் முதுகில் பிரம்படி பட்டு, அது அனைவர் முதுகிலும் வலி பெறச் செய்து - கிழவி வந்தி; அமைச்சன் மணிவாசகன்; மன்னன் அரிமர்த்தனன் என மூவருக்கும் முக்தி அளித்தார் சிவபெருமான் என்று திருவிளையாடற் புராணம் சொல்கிறது.</div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
குருந்த மரத்தடியில் உபதேசம் கேட்ட அமைச்சர் மணிவாசகர் அப்படி என்ன செய்தார் அங்கே என்று பார்த்தால், குருவாய் வந்த ஆவுடையாருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார். குருவாய் வந்த சிவனின் கட்டளைக்கேற்ப, சிவகணங்களை வைத்து ஓரே இரவில் கோயில் கட்டப்பட்டதாகவும் இவ்வட்டார மக்கள் சொல்கின்றனர். இன்றும் சில தூண்களில் சிற்பங்கள் முழுமை பெறாமல் பாதியில் நிற்பதை, கோயில் எழுப்பிக் கொண்டிருக்கையில், பொழுது விடிய ஆரம்பிக்கும் பொழுது சிவகணங்கள் அப்படியே விட்டுச் சென்றதால் தான் என்று நம்பப்படுகிறது. </div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
இக்கோயிலின் சிறப்புக்கள் என்று சொன்னால், சொல்லில் சொல்லி மாளாது. எடுத்த எடுப்பிலேயே நான்கைந்து மானுடர் உயரத்தில் எழுப்பிய மண்டபம். மண்டபத்தைத் தாங்கும் நுண்ணிய வேலைப்பாடுடைய தூண்கள். தூண்களில் ஆளுயரச் சிலைகள். மணிவாகர், நரியைப் பரியாக்கி தானே குதிரைச் சேவகனாக ஓட்டிச் சென்ற சிவபெருமான், மன்னன் அரிமர்த்தனன் ஆகியோருக்கு கற்சிலைகள் உள்ளன. பக்கத்தே ‘கொடுங்கை’ கூரை. வரிசையாய் அடுக்கிய மரச் சட்டங்கள், அதைத் கோர்த்திருக்கும் கம்பிகள், இவற்றைத் தாங்கும் ஆணிகள், என வியந்து மேலே பார்த்தால், அனைத்தும் கல்லிலே!! வெள்ளைகாரன் காலத்தில், ‘இது மரமா, கல்லா?’ எனச் சுட்டுப் பார்த்தததில், அதில் ஏற்பட்ட ஓட்டையைக் கூரையில் இன்றும் காணலாம். </div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
பல சிற்பங்கள் எங்கும் காணாத அளவிற்கு தத்ரூபமகாவும், மிகுந்த வேலைப்பாடுகளுடன் காணப்படுவது வெகு சிறப்பு. ஒரு தூணில் இருக்கும் சிலையை எடுத்துக் கொண்டால், தலையில் கொண்டையும், நெற்றியில் பட்டையும், முகத்தில் முருக்கிய அல்லது படர்ந்து பரந்த மீசையும், புன்முறுவலும், கழுத்தில் மணிமாலைகளும், வணங்கும் கைகளும், விரல் நகங்களும், இடையில் வாளும், வேலைப்பாடுகள் பல கொண்ட சுருள் சுருள் அங்கவஸ்திரங்களும், காலில் தண்டையும், இப்படி விவரித்து கொண்டே போகலாம். எல்லாச் சிற்பங்களுக்கும் இது பொருந்தும். எங்கும் தூண்கள், எதிலும் சிலைகள். ‘தாவும் பரியையும் வீரனையும்’ பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கடிவாளத்தில் கயிற்றையும், கம்பியையும், கல்லிலே காணலாம். </div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
’ஒரு நாள் போதுமா? <span style="font-family: 'Lucida Grande';">…</span>’ இக்கோயிலை தரிசிக்க நிச்சயம் போதாது! பல சிறப்புக்கள் கொண்ட இக்கோயில் ஒரு கலைப் பொக்கிஷம். இன்றைக்கும் கோயில் திருப்பணியில் ஈடுபடும் ஸ்தபதிகள், ஆவுடையார் கோயில் அளவிற்கு வேலைப்பாடுகள் எங்களிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று கையொப்பம் இட்டுத் தங்கள் பணிகளை ஆரம்பிப்பதாகக் கூற்று இன்றும் உண்டு.</div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
மணிவாசகருக்குப் பின், பல சோழர்களும், பாண்டியர்களும், நாயக்கர்களும் இக்கோயிலை விஸ்தாரித்தாகச் சொல்லப்படுகிறது. பின்னால் எழுப்பிய பல மண்டபங்களே இதற்கு சாட்சி. மணிவாசகர் கட்டியதாக இதுகாறும் செவி வழியாக நம்பப்பட்டு வந்தது. சமீபத்தில் அகல்வாராய்ச்சியினர், கோயில் கல்வெட்டு ஒன்றின் மூலம், மணிவாசகர் தான் கட்டினார் என்று நிரூபனம் செய்திருக்கிறார்கள். செய்தித் தாள்களிலும் இச் செய்தி வந்திருக்கிறது.</div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
எனது சொந்த ஊருக்கு வெகு அருகாமையில், இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலை இத்தனை காலம் தரிசிக்காமல் இருந்திருக்கிறேனே என்று என்னை நானை வியந்து கொண்டேன்! சமீபத்தில் இக்கோயிலுக்குச் சென்று நானிருந்த ஒரு சில மணி நேரங்கள், என் கண்களுக்குப் புலப்பட்ட காட்சிகள் இங்கே புகைப்படங்களாக.</div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNKMk7NM4RWw9QEG4AqQwkrTZz8I-06EIj3-3t1wjz-G723o6-Rquk4-zAy7HYvDksoVqVnIQ2KBh_FKQ0OD1xT4_r3m0zDV-5qygsrbE6NMvWOxD-hLBVShAXf6M-PCJZFZXoDuRmFGXu/s1600/IMG_3034.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNKMk7NM4RWw9QEG4AqQwkrTZz8I-06EIj3-3t1wjz-G723o6-Rquk4-zAy7HYvDksoVqVnIQ2KBh_FKQ0OD1xT4_r3m0zDV-5qygsrbE6NMvWOxD-hLBVShAXf6M-PCJZFZXoDuRmFGXu/s320/IMG_3034.jpg" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJT4eqFbfmjUOs_x41g46iZxtykzz2b-UQVtPrzF0SiDJMk4Yet1Yl6WxHYN4ifiMYsXg65LyOo3Xozz99MPyfJNVzrtDAB6Io20_qUEq8ZBCL3UcwBytAKQ31Kdl4ojZQOWzf13JIKqhS/s1600/IMG_3036.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJT4eqFbfmjUOs_x41g46iZxtykzz2b-UQVtPrzF0SiDJMk4Yet1Yl6WxHYN4ifiMYsXg65LyOo3Xozz99MPyfJNVzrtDAB6Io20_qUEq8ZBCL3UcwBytAKQ31Kdl4ojZQOWzf13JIKqhS/s320/IMG_3036.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJffVPxkWvM5AhWAdPj87WnEZDJfpOZXJXzk0KFfTrwgBdhRiKcBxDPLBIBOu9aUI0Zq72wM9HinSK1g-_zRMOk2BABXj09Q9phqPN1nOITJkBXTznexJYVBU_V2Kxo6uF0AseWDUUoKGt/s1600/IMG_3040.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJffVPxkWvM5AhWAdPj87WnEZDJfpOZXJXzk0KFfTrwgBdhRiKcBxDPLBIBOu9aUI0Zq72wM9HinSK1g-_zRMOk2BABXj09Q9phqPN1nOITJkBXTznexJYVBU_V2Kxo6uF0AseWDUUoKGt/s320/IMG_3040.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4cNDFTbpksf3uKcOIx371fc6x9cLjMw-bEePsj1vlyjBsBg8pnX08vGwcFux8lay4M_Kmf-VF9g4IlDH8syfbgwPsaBZJvRb1U6EP-kQdJsilCgfVzZFFJQyvVh_Uf2n32VuTtgnx4TdH/s1600/IMG_3041.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4cNDFTbpksf3uKcOIx371fc6x9cLjMw-bEePsj1vlyjBsBg8pnX08vGwcFux8lay4M_Kmf-VF9g4IlDH8syfbgwPsaBZJvRb1U6EP-kQdJsilCgfVzZFFJQyvVh_Uf2n32VuTtgnx4TdH/s320/IMG_3041.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHQ1nvC-2qe1VCddxRb_ha6Tj4SH0bPgh0bA-siNRw_sjVOBf8P_sqeZJ5U4zQo1-Y0Kjl1MIa9r8poxLkO-rZXs6adrgBDi2pssiWFOpgcu7UcSv4MoqwQYXM6RCh7l8dvRTg69hL1w36/s1600/IMG_3044.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHQ1nvC-2qe1VCddxRb_ha6Tj4SH0bPgh0bA-siNRw_sjVOBf8P_sqeZJ5U4zQo1-Y0Kjl1MIa9r8poxLkO-rZXs6adrgBDi2pssiWFOpgcu7UcSv4MoqwQYXM6RCh7l8dvRTg69hL1w36/s320/IMG_3044.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFMhCwGrV01KuU-VFymdrxIV9jUXS0rRDi1yQYFMy2Z8SZaxXKXJNtfiUVUq3iDm-D9JTyC3sEH5J1RDIcjLEFP37T6LzbiZTqmW8y4BtXfN3ZnZdf2My1jRgpS_egUx5nWwCRf99dwHe9/s1600/IMG_3046.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFMhCwGrV01KuU-VFymdrxIV9jUXS0rRDi1yQYFMy2Z8SZaxXKXJNtfiUVUq3iDm-D9JTyC3sEH5J1RDIcjLEFP37T6LzbiZTqmW8y4BtXfN3ZnZdf2My1jRgpS_egUx5nWwCRf99dwHe9/s320/IMG_3046.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUIloswQuUc-7uzLCpbbQ7vW-zC8X3tvWHyV325CeafJjz6HLsy0G5bOGiDY0MlYz68OwsIAJDMa4Hi3TXRDuh8sI-ptI-au6BDDHJ7tkteYyNYGTplHXV7KmOhUPGDYeRsRf32KHk0CWR/s1600/IMG_3055.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUIloswQuUc-7uzLCpbbQ7vW-zC8X3tvWHyV325CeafJjz6HLsy0G5bOGiDY0MlYz68OwsIAJDMa4Hi3TXRDuh8sI-ptI-au6BDDHJ7tkteYyNYGTplHXV7KmOhUPGDYeRsRf32KHk0CWR/s320/IMG_3055.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJuhSUu6mmsYt2jcmR8eVjLs-Y7qOoJdG1YXkLx-3hAL4-A6ZD8LdtdB55q5eQwSrvt3C5HwDl8MIkXf93CnIkaZPy-1S_Jvn1rgOWVgrv-BTuGZ-_mNvvAMJ7PxSCAzJaLjZKNuKz_Zuo/s1600/IMG_3058.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJuhSUu6mmsYt2jcmR8eVjLs-Y7qOoJdG1YXkLx-3hAL4-A6ZD8LdtdB55q5eQwSrvt3C5HwDl8MIkXf93CnIkaZPy-1S_Jvn1rgOWVgrv-BTuGZ-_mNvvAMJ7PxSCAzJaLjZKNuKz_Zuo/s320/IMG_3058.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5QBQPblcYw4NDmIylo0cG4xOAbLtx6poIP0HBgxprBmDiJd7mr918c8Q0bXN7DNVQ4z7nI7bKMlFExu71mCWd6EnkdfgNJ1rFxrCbTuTxkT7DGlRnQbIOeKaeEvX4_zIgBERXKOLy4zDj/s1600/IMG_3060.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5QBQPblcYw4NDmIylo0cG4xOAbLtx6poIP0HBgxprBmDiJd7mr918c8Q0bXN7DNVQ4z7nI7bKMlFExu71mCWd6EnkdfgNJ1rFxrCbTuTxkT7DGlRnQbIOeKaeEvX4_zIgBERXKOLy4zDj/s320/IMG_3060.jpg" width="268" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4TH3fT_RbDNfMe6-GJ8FKCFiHsUrPQJBIimpnCXJPMatGvDkPIzUyWaktwpUmLW9LDXnIB5KyNTQy2kpPl9KkJWBtnCqInRhnZ_lDMAA7nRg8eJWkoT0CDMBmRBtbKfBLni6ZX_JXe8HR/s1600/IMG_3075.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4TH3fT_RbDNfMe6-GJ8FKCFiHsUrPQJBIimpnCXJPMatGvDkPIzUyWaktwpUmLW9LDXnIB5KyNTQy2kpPl9KkJWBtnCqInRhnZ_lDMAA7nRg8eJWkoT0CDMBmRBtbKfBLni6ZX_JXe8HR/s320/IMG_3075.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi74WKQE6F6JY-E50CKseN80JBp9W6rzrQ8qbQMwwDLklBGbXIESAVdvJ69LmlraB2_mEHA2YX6KbjdUs4qxILf3WEBeoi8Wb-flA7p8nDy4AedI1gpcLrxMv6r5zwV3Emlq-uRNspOApyo/s1600/IMG_3078.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi74WKQE6F6JY-E50CKseN80JBp9W6rzrQ8qbQMwwDLklBGbXIESAVdvJ69LmlraB2_mEHA2YX6KbjdUs4qxILf3WEBeoi8Wb-flA7p8nDy4AedI1gpcLrxMv6r5zwV3Emlq-uRNspOApyo/s320/IMG_3078.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtkKFyu0Qdh-4GIBgn5_BMolqivf1yadiuLJs_cyp_gs52YKuMYsEYfUgntcpHIumRIms-rk3y0QA40MfLH41OC-VHzj6DtEGUq2yuCTjhPOlhcAd1sj4eiBcYx2JR56CiR2amUpEJlKX4/s1600/IMG_3088.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtkKFyu0Qdh-4GIBgn5_BMolqivf1yadiuLJs_cyp_gs52YKuMYsEYfUgntcpHIumRIms-rk3y0QA40MfLH41OC-VHzj6DtEGUq2yuCTjhPOlhcAd1sj4eiBcYx2JR56CiR2amUpEJlKX4/s320/IMG_3088.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggCgfRTG6IMiGHiWLWElKE2ET-2NZZPikULJEduA7KpyQsec4O-6YYO8QTrR_DPV7prooxfLANlttVopKltQNJQ7vwcrKPtVLFqm1Djv5hTqUzExfploLUaCRjp5iyYdBvcaoAAlfPTC-B/s1600/IMG_3090.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggCgfRTG6IMiGHiWLWElKE2ET-2NZZPikULJEduA7KpyQsec4O-6YYO8QTrR_DPV7prooxfLANlttVopKltQNJQ7vwcrKPtVLFqm1Djv5hTqUzExfploLUaCRjp5iyYdBvcaoAAlfPTC-B/s320/IMG_3090.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgany4QEbUF0YBINoUvygEC4K0kXPqSGHkXrQCCTqq3hS1IE1U3br1hRnkZmD2E5q1lDpYiM2Ry9L4KMnO7ytlXRpQXT9VZ-ZGso61ln0kJsuR4Laugi8YM5G0CEhpkdtdbt_f_dub8Ek3k/s1600/IMG_3096.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgany4QEbUF0YBINoUvygEC4K0kXPqSGHkXrQCCTqq3hS1IE1U3br1hRnkZmD2E5q1lDpYiM2Ry9L4KMnO7ytlXRpQXT9VZ-ZGso61ln0kJsuR4Laugi8YM5G0CEhpkdtdbt_f_dub8Ek3k/s320/IMG_3096.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtc4sakQT48bqAtYTjTjPa-EaecG58RXHnmCqZegpdnsBN488WwD3Wqp4WfUcLDC3839EM5ikOOk2XmZM2malY0W7uvFrC8WFtUn89giwQ5L0QaZjNkFBoRaynV15tpUhcNl6DUCwoUzuZ/s1600/IMG_3098.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtc4sakQT48bqAtYTjTjPa-EaecG58RXHnmCqZegpdnsBN488WwD3Wqp4WfUcLDC3839EM5ikOOk2XmZM2malY0W7uvFrC8WFtUn89giwQ5L0QaZjNkFBoRaynV15tpUhcNl6DUCwoUzuZ/s320/IMG_3098.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGZkJ6SWb2P2rSPSjjXv4dajKtwJs7IodB-9sYOpah1Mxb7_rIBiBLzm0AKCV1HLxga3tvvaFOkjRJxZ6ORYZbcp3KRDza994LngVi_uW-18CRt6d8y_rgxnfHFqF7pw4URO7dZ4OW2sJJ/s1600/IMG_3101.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGZkJ6SWb2P2rSPSjjXv4dajKtwJs7IodB-9sYOpah1Mxb7_rIBiBLzm0AKCV1HLxga3tvvaFOkjRJxZ6ORYZbcp3KRDza994LngVi_uW-18CRt6d8y_rgxnfHFqF7pw4URO7dZ4OW2sJJ/s320/IMG_3101.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7cRl9piME13YyjTeS7Pirjico3jihEO5z_P_WPl5uxH_qRwwJ_Q60wMgycmITFd9lrhnB0P_s-wK5yfEO5rjBsg9Lt8I2F9bx_RCMldFZxuBsy62NnXmwDN-fF2hecd04db0QU5NnD2xV/s1600/IMG_3102.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7cRl9piME13YyjTeS7Pirjico3jihEO5z_P_WPl5uxH_qRwwJ_Q60wMgycmITFd9lrhnB0P_s-wK5yfEO5rjBsg9Lt8I2F9bx_RCMldFZxuBsy62NnXmwDN-fF2hecd04db0QU5NnD2xV/s320/IMG_3102.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtHHfrBoJuav5LtCuMagxvNcJ32ETvTKhvmytI2zpQ8LMmYLn2cJOj7-k1Xbhn_Yth6Qfg7nU82hHXEWBGME_9jD0hHij5NMq9c6ex7TnuQHOiAwRh39THROC1ST9oDrSPk97fZCdsNbx2/s1600/IMG_3111.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtHHfrBoJuav5LtCuMagxvNcJ32ETvTKhvmytI2zpQ8LMmYLn2cJOj7-k1Xbhn_Yth6Qfg7nU82hHXEWBGME_9jD0hHij5NMq9c6ex7TnuQHOiAwRh39THROC1ST9oDrSPk97fZCdsNbx2/s320/IMG_3111.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSPqIVh-B9bP8zBfPEJtr5nakeTyAMwe6q6KBr9YOwQxK1T_uqe5xPSilEmAfzugyl8xgRyKlQl2rXjXMklR6QJTFPfoY7XmqC-0PIGTEqERetNXh_IE7ZE85QaNYmpDVq57Zz6AiOADQ3/s1600/IMG_3116.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSPqIVh-B9bP8zBfPEJtr5nakeTyAMwe6q6KBr9YOwQxK1T_uqe5xPSilEmAfzugyl8xgRyKlQl2rXjXMklR6QJTFPfoY7XmqC-0PIGTEqERetNXh_IE7ZE85QaNYmpDVq57Zz6AiOADQ3/s320/IMG_3116.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEiS0mqz53iQIWz81hNPcqwEXiTAzJ9UMJxxZzUkEmqFTNK_si_6sOPgzR_l9kd8sz9MSvICVfHwTJuYql4nsPb3Ihs3n-q9ZsAnSS0kFtNXDCiQYGmtu2Mi9XBgx_WTBnZA9p-Izx5dcZ/s1600/IMG_3118.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEiS0mqz53iQIWz81hNPcqwEXiTAzJ9UMJxxZzUkEmqFTNK_si_6sOPgzR_l9kd8sz9MSvICVfHwTJuYql4nsPb3Ihs3n-q9ZsAnSS0kFtNXDCiQYGmtu2Mi9XBgx_WTBnZA9p-Izx5dcZ/s320/IMG_3118.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGukyaRaQpex1yI-NTs31ImE2I_KMQcc4cNzzZ5Mi5NpQ9UtPr4hpqbZhXU1YuQJsNB0CCc3bcdZAG4DVNw99sX5MxgyFL_fBUxVGscWLD40DJOjwuYmkEORlTUzT5Ly4NsOV02eiCZnT8/s1600/IMG_3129.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGukyaRaQpex1yI-NTs31ImE2I_KMQcc4cNzzZ5Mi5NpQ9UtPr4hpqbZhXU1YuQJsNB0CCc3bcdZAG4DVNw99sX5MxgyFL_fBUxVGscWLD40DJOjwuYmkEORlTUzT5Ly4NsOV02eiCZnT8/s320/IMG_3129.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhiqwcbV_1GR1feWVWEkWNwnYoeZ5gFPiosJgIfLUbRItV7yaQZFdKGrlrA39xmA9zakF-MpuF0UEDVuahudF_5THzgxgY5Iz_DfL5ePoDgSii-SwjMNmagVCO5nDQfg2ChsOSUxnAjIlV/s1600/IMG_3130.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhiqwcbV_1GR1feWVWEkWNwnYoeZ5gFPiosJgIfLUbRItV7yaQZFdKGrlrA39xmA9zakF-MpuF0UEDVuahudF_5THzgxgY5Iz_DfL5ePoDgSii-SwjMNmagVCO5nDQfg2ChsOSUxnAjIlV/s320/IMG_3130.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHLNbXO0oeihF5m0pMio_My6i6M6Z6rlzlFVS1GxCNuXHz1mBUu7avcsJLcYBCSuLa3sCWttvWVEJIeUuhp_o7HMdtXt9fRlhFWnjH-psM0SjU1WYHiZtsZ_vrSo1AeRZXxvoo-0nKFEdf/s1600/IMG_3138.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHLNbXO0oeihF5m0pMio_My6i6M6Z6rlzlFVS1GxCNuXHz1mBUu7avcsJLcYBCSuLa3sCWttvWVEJIeUuhp_o7HMdtXt9fRlhFWnjH-psM0SjU1WYHiZtsZ_vrSo1AeRZXxvoo-0nKFEdf/s320/IMG_3138.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiokExbzqObV0DC-bLwO0iC8ekPyRN2_3vYbPZafRIiPMUctAUxAJwYdKv6_TpzvgcH3p62lVrfqSEyGXUm-mhDdLGh1GFEvRJvN5N_qmvV8tns6fOeIPkRvjkBaOK6pRvn2j5vs8QbAYM/s1600/IMG_3140.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiokExbzqObV0DC-bLwO0iC8ekPyRN2_3vYbPZafRIiPMUctAUxAJwYdKv6_TpzvgcH3p62lVrfqSEyGXUm-mhDdLGh1GFEvRJvN5N_qmvV8tns6fOeIPkRvjkBaOK6pRvn2j5vs8QbAYM/s320/IMG_3140.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbnmXTiG5TirsD4ITVU-KKrWn_cn3StcX9lCgfE6Td6XFL_Yy5u6SZT2z3ns4shflW1pe-VgZwyyH8qvswRIkvDyjpiDbgRp0p4z5w8n1t6eT-IHN3NTUCXXRteeg8efazVFMUlZ-KoBQj/s1600/IMG_3145.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbnmXTiG5TirsD4ITVU-KKrWn_cn3StcX9lCgfE6Td6XFL_Yy5u6SZT2z3ns4shflW1pe-VgZwyyH8qvswRIkvDyjpiDbgRp0p4z5w8n1t6eT-IHN3NTUCXXRteeg8efazVFMUlZ-KoBQj/s320/IMG_3145.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO3To8l9wQ-eWPIS1mOcgq_X7hyphenhyphen_PuKaH6FAMVorYtgCMds1II8RXndAK1550SVTX6EHTdX1mm2OPFz-RPCLImFksWOOQwXS_U2cRFKwALnDiNVcmLPgfExWRForfwHZkbosnvPSjN9XEF/s1600/IMG_3148.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO3To8l9wQ-eWPIS1mOcgq_X7hyphenhyphen_PuKaH6FAMVorYtgCMds1II8RXndAK1550SVTX6EHTdX1mm2OPFz-RPCLImFksWOOQwXS_U2cRFKwALnDiNVcmLPgfExWRForfwHZkbosnvPSjN9XEF/s320/IMG_3148.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpZO5El6vW6L9_fQ2E266VlMF_LzGw25ii61pVuvQMHIjbo6B5ylG8zBLIKk1im2HDXXuedyKp-G4qGBNKbtmnDxG6L5xshGtF_sIXJyE3XOJ4VyR21w7oqoZHkmlxNXt9V-jCotYgdeKt/s1600/IMG_3152.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpZO5El6vW6L9_fQ2E266VlMF_LzGw25ii61pVuvQMHIjbo6B5ylG8zBLIKk1im2HDXXuedyKp-G4qGBNKbtmnDxG6L5xshGtF_sIXJyE3XOJ4VyR21w7oqoZHkmlxNXt9V-jCotYgdeKt/s320/IMG_3152.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsIlIesjcdTFEPariYhPU9IDPMVm878K4F5LbblJGjCLORKn-IexaY0ZcEhb2WAb2Zdz9IyUSCjRAyLx_wqiOWxL67Gv4P4DXCTnOTMiQTJyv6baat9AD5fKw6aOz-SXRG-zYazO0i3Qy4/s1600/IMG_3156.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsIlIesjcdTFEPariYhPU9IDPMVm878K4F5LbblJGjCLORKn-IexaY0ZcEhb2WAb2Zdz9IyUSCjRAyLx_wqiOWxL67Gv4P4DXCTnOTMiQTJyv6baat9AD5fKw6aOz-SXRG-zYazO0i3Qy4/s320/IMG_3156.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnNick3RvyckvdJRB_cf7fknr-K6YrE8C9ARcJtuFD1_PEOUV_t1Tx5TVGEj3zAhnFhKMmWtYft8BSyVWowqHY6WPmR5Hkb2d3ZHu_4Ei-sIEhkzZJKGBlorXsATK6t4pEhO7thDG0fgwX/s1600/IMG_3159.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnNick3RvyckvdJRB_cf7fknr-K6YrE8C9ARcJtuFD1_PEOUV_t1Tx5TVGEj3zAhnFhKMmWtYft8BSyVWowqHY6WPmR5Hkb2d3ZHu_4Ei-sIEhkzZJKGBlorXsATK6t4pEhO7thDG0fgwX/s320/IMG_3159.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFf2XJCctJn_QhPBdRvSy4ppecASofa3iEcM5TuaPuCNZuocERZK8uLw_KFiwAceqz911VPcWC8M5kwc2gRJKa5p_cxgJfPoWbs-POfNFNjVxY42XKysloF5fBMa63hLZyj-3yAqQ-LgZr/s1600/IMG_3163.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFf2XJCctJn_QhPBdRvSy4ppecASofa3iEcM5TuaPuCNZuocERZK8uLw_KFiwAceqz911VPcWC8M5kwc2gRJKa5p_cxgJfPoWbs-POfNFNjVxY42XKysloF5fBMa63hLZyj-3yAqQ-LgZr/s320/IMG_3163.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP-bRTKis1hUQsPQr9waTwmxZCRm_dH61i0bCIK3wi62bvQ3kp-ttBrWtn0UwNSMSaLJwWEK1xmN_2HbDerH0jsOX0HSeo0ZYvFj1bobI_SBQ3KqB3yCDUYOyXb1_IR_nQggrda7kKCNRg/s1600/IMG_3169.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="235" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP-bRTKis1hUQsPQr9waTwmxZCRm_dH61i0bCIK3wi62bvQ3kp-ttBrWtn0UwNSMSaLJwWEK1xmN_2HbDerH0jsOX0HSeo0ZYvFj1bobI_SBQ3KqB3yCDUYOyXb1_IR_nQggrda7kKCNRg/s320/IMG_3169.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb29uGnlZt80EjVrIkDE5ubIxz4mc4K0NKv0Amz_YuaqJRs6WCPVB_YuIic8gDRg3g5iYZV8vKEJr6kWH4Lb15muRETEU7UNjAqagBzJI_eUc57KaUVCg0TfIQzO1qHZ6UsBJTH5c89viE/s1600/IMG_3177.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb29uGnlZt80EjVrIkDE5ubIxz4mc4K0NKv0Amz_YuaqJRs6WCPVB_YuIic8gDRg3g5iYZV8vKEJr6kWH4Lb15muRETEU7UNjAqagBzJI_eUc57KaUVCg0TfIQzO1qHZ6UsBJTH5c89viE/s320/IMG_3177.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiCxH9maRe2myWNftcwN6JxRSZwhji9ey7E0wkKuvQAWraB9Ex1lmMwKwWxm_K_Gdp8m90KMGxc1hO9fDe3awqkVSKcYw3iosv3Ss3XW08yKr_elt9pN6VBMba1VLd35Vpi6YnFTCc-DgT/s1600/IMG_3180.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiCxH9maRe2myWNftcwN6JxRSZwhji9ey7E0wkKuvQAWraB9Ex1lmMwKwWxm_K_Gdp8m90KMGxc1hO9fDe3awqkVSKcYw3iosv3Ss3XW08yKr_elt9pN6VBMba1VLd35Vpi6YnFTCc-DgT/s320/IMG_3180.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAXgg7ZWJqL4jsGZXWPBLhxqKEw9rHhhiSFXW31xkr_Y5GAvlLJThH5td-S0TGDfSAAdre0SYzREmaHTATMkFDPHEoxGuiFXiQ3cIAyAbSIvOYbw5Z2qe55_xOZRpuALPVNDg6ROr4S2dF/s1600/IMG_3187.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAXgg7ZWJqL4jsGZXWPBLhxqKEw9rHhhiSFXW31xkr_Y5GAvlLJThH5td-S0TGDfSAAdre0SYzREmaHTATMkFDPHEoxGuiFXiQ3cIAyAbSIvOYbw5Z2qe55_xOZRpuALPVNDg6ROr4S2dF/s320/IMG_3187.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglC6Ep6LTlE4mC8dwUn54IgKkunciKxWyl3wAPI3PV4mBWVtmShoft5v7EElPEbtc97q9BR1EjLoqohAClefz4fxepFGj5NyE92AU4a4Uc_gJpPGDU9HDjmxNpzjqUMFb3ZG2xlhQy46AK/s1600/IMG_3193.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglC6Ep6LTlE4mC8dwUn54IgKkunciKxWyl3wAPI3PV4mBWVtmShoft5v7EElPEbtc97q9BR1EjLoqohAClefz4fxepFGj5NyE92AU4a4Uc_gJpPGDU9HDjmxNpzjqUMFb3ZG2xlhQy46AK/s320/IMG_3193.JPG" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6oLX2cFWgBYlVcl7PK7YtoK6Q5pcuRuiz7wOZ6pyqdTDn_0cbN0_YSfMJll5ifylUKxS9tz3MC1SdZVxm31BpsJK-xtMpealsCdn-nRvFpRShNsQhhdvJm1h5Z28TXLWwIkrEnJSjcKaz/s1600/IMG_3199.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6oLX2cFWgBYlVcl7PK7YtoK6Q5pcuRuiz7wOZ6pyqdTDn_0cbN0_YSfMJll5ifylUKxS9tz3MC1SdZVxm31BpsJK-xtMpealsCdn-nRvFpRShNsQhhdvJm1h5Z28TXLWwIkrEnJSjcKaz/s320/IMG_3199.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP4331qi3vvvrAoub7kXXQc0G1yMq_50ZjnVtK_Wv2biUveGKs4pGFFgjJFYGVvwAXfT7ANBfXrxQU__YnY4RkKsnQD699yjeqYDKrFCYASH0VpaAfbfnWkpkhmNIzQ3K4x2tcEB0G_8V-/s1600/IMG_3217.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP4331qi3vvvrAoub7kXXQc0G1yMq_50ZjnVtK_Wv2biUveGKs4pGFFgjJFYGVvwAXfT7ANBfXrxQU__YnY4RkKsnQD699yjeqYDKrFCYASH0VpaAfbfnWkpkhmNIzQ3K4x2tcEB0G_8V-/s320/IMG_3217.JPG" width="320" /></a></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px;">
<br /></div>
<div style="font-family: 'Tamil Sangam MN'; font-size: 12px; min-height: 12px;">
<br /></div>
<br /></div>
சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-58820689692890783262014-02-21T09:06:00.001-05:002014-10-26T20:25:15.811-04:00தமிழ்த் தாத்தா யார்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
'தமிழ்த் தாத்தா யார்?' எனக் கேட்டதற்கு, 'சாலமன் பாப்பையா' என்று சொல்லி அசத்திய ஒரு புள்ளைய சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்து பிரமித்திருக்கலாம். 'அப்படியா, கரெக்ட்டாம்மா ?' என சந்தேகமாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, பயபுள்ள பட்டுனு, 'இல்லியா... அப்ப, திருவள்ளுவர், திருவள்ளுவர், திருவள்ளுவர்' எனக் கூவி ஏகத்துக்கும் களேபரம் பண்ணி நம்மை எல்லாம் கலவரப்படுத்தியது. சரி, இந்தக் காலத்துல சாலமன் பாப்பையா அவர்களையும், திருவள்ளுவரையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என சந்தோஷம் கொள்வோம்.<br />
<br />
நிஜமாவே 'தமிழ்த் தாத்தா' யாரு ? தமிழுக்கு அவர் செய்த பணி தான் என்ன ? இன்றைக்குத் தமிழ் வளர்த்ததாக / வளர்ப்பதாக பிரகடனப்படுத்தும் கூட்டத்திற்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் ? என்றெல்லாம் தேடிப் பார்த்தால், இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல எனப் புரியும். இவரின் பணி இல்லை எனில், இன்று அறிந்த கைமண் அளவு தமிழ் கூட நாம் அறிந்திருப்போமா என்பது சந்தேகமே !<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd0_LQR_01mOIt-_AUtCCP7iwrRVvVR7rWQUX0t2mwM8taUqfHiheRQTBTmujSueYsWxCjq7YvRwC5IxmG4MdRMceRaWimRIvsN6yuy9e0d7-4zaYmFxGzj9Dnd8dY4b1LJUFWDbzE1dSh/s1600/%E0%AE%89.%E0%AE%9A%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%BE.+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd0_LQR_01mOIt-_AUtCCP7iwrRVvVR7rWQUX0t2mwM8taUqfHiheRQTBTmujSueYsWxCjq7YvRwC5IxmG4MdRMceRaWimRIvsN6yuy9e0d7-4zaYmFxGzj9Dnd8dY4b1LJUFWDbzE1dSh/s1600/%E0%AE%89.%E0%AE%9A%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%BE.+1.jpg" height="320" width="215" /></a></div>
<br />
தமிழ்த் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் உ.வே.சா. அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணி அளவிடற்கரியது. ஒரு படைப்பாளியையே நாம் காலம் கடந்து தான் போற்றுகிறோம். பாரதி வாழ்ந்த வரை அவருக்கு மலை போல குவிந்தன அவமானங்களே. அப்படியிருக்க, மற்றவரின் படைப்புகளை, அதுவும் பல்லாண்டு கால முந்தையவற்றை, சுவடியிலிருந்து அச்சுக்குக் கொண்டு வந்தவரை, நாம் பாராட்டியா புகழ்ந்திருப்போம் ?!! ஆனால், உ.வே.சா. அவர்களை பாரதி புகழ்ந்திருக்கிறார்.<br />
<br />
நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி<br />
இன்பவகை நித்தம் துய்க்கும்<br />
கதியறியோம் என்று மனம் வருந்தற்க<br />
குடந்தைநகர்க் கலைஞர் கோவே<br />
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்<br />
காலமெல்லாம் புலவர் வாயில்<br />
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்<br />
இறப்பின்றி துலங்குவாயே.<br />
<br />
இரண்டு நாட்கள் முன்பு Feb-19 உ.வே.சா. அவர்களின் பிறந்த தினம். இந்த ஆண்டு காதலர் தினமே வந்த சுவடும் தெரியல, போன சுவடும் தெரியல, இதுல சுவடி எடுத்தவர் பிறந்த தினமா நமகெல்லாம் ஞாபகம் இருக்கப் போகிறது !</div>
சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-11531980523384118752014-01-30T22:48:00.002-05:002014-01-30T22:48:34.574-05:00பழமொழி 400<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhinwWbGMloygvTNFCsC5DWOp0J5PKFlOKDjkfALpyuaAvH9TsguIU6kxjtsyhkbzsr5lXYF9JHVFVsdX649pMium6U58tXGWCmKS_nXAIU-kr5B2eBM7GaVi-0Z_2ZDoulFC4I74TNld5B/s1600/pazhamozhi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhinwWbGMloygvTNFCsC5DWOp0J5PKFlOKDjkfALpyuaAvH9TsguIU6kxjtsyhkbzsr5lXYF9JHVFVsdX649pMium6U58tXGWCmKS_nXAIU-kr5B2eBM7GaVi-0Z_2ZDoulFC4I74TNld5B/s1600/pazhamozhi.jpg" height="207" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17.940000534057617px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17.940000534057617px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17.940000534057617px;">'பழமொழி'கள் பல நம் வாழ்வில் நாம் கேட்டு வந்திருக்கிறோம். இன்றைய தலைமுறையினர் அவற்றைக் கையாளுகிறார்களா என்றால், அநேகமாக இல்லை என்ற பதில் தான் கிடைக்கிறது. காரணம், இன்றைய ஊடகங்களின் ஆளுமை. நம் போன்ற சாமான்யர்களிடம், 'ப்பா....' என்ற வசனம் கூட எவ்வளவு பிரபல்யமாக்க முடியும் என்று ஊடகம் அறிந்து வைத்திருக்கிறது.</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17.940000534057617px;"><br /><br />அந்தக் காலங்களில் செய்தி பரப்ப என்னவெல்லாம் முறை இருந்திருக்கும் ?! காதலர்களுக்கு புறாவும், மன்னர்களுக்குத் தூதுவர்களும், .... இருக்க நம் போன்ற சாமான்யர்களுக்கு எவ்வாறு செய்தி பரப்பப்பட்டிருக்கும் ?! 'செவி வழி' என நாம் இது வரை அறிந்து வந்திருக்கிறோம். இது மட்டும் போதுமா என சிந்தித்தால், இதற்கு மேலும் வேறு ஏதாவது மார்க்கம் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.<br /><br />பண்டை தமிழனின் வரலாறு பல 'பாடல்'களில் பொதிந்திருக்கிறது. கண்டதையும், கேட்டதையும், ஆராய்ந்து மொழி ஆற்றலோடு பாடலாகப் படைத்தனர் அன்றைய புலவர்கள். போட்டிகள், பொறாமைகள் பல இருந்திருக்கக் கூடும். அத்தனையும் பாடல் பெற்றது. கம்பனுக்கும் ஔவைக்கும் நடந்த சப்தமில்லாச் சண்டைகள் பாடலாக்கப்பட்டது !<br /><br />இதேபோல, நாம் பயன்படுத்தும் பழமொழிகள் பலவும் பாடல் பெற்ற பழமொழிகளே. இது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம், பலருக்குத் தெரியாது இருக்கலாம். 'கோழி மிதித்துக் குஞ்சு முடமாகாது', 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது', 'சூரியனைக் கண்டு நாய் குரைத்தாற் போல்' என்பதெல்லாம் இன்று வரை நாம் கேட்டு வந்திருக்கும் பழமொழிகளில் சில. இவை எல்லாம் ஒவ்வொரு பாடலின் இறுதி வரிகள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ! சில பழமொழிப் பாடல்கள்:<br /><br />உளைய உரைத்து விடினும் உறுதி<br />கிளைகள்வாய்க் கேட்பதே நன்றாம் - விளைவயலுள்<br />பூமிதித்துப் புட்கலாம்ம் பொய்கைப் புனலூர !<br />'<b>தாய் மிதித்து ஆகா முடம்</b>'. (பாடல்: 353)<br /><br />ஒற்கத்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்<br />நிற்பவே நின்ற நிலையின்மேல் - வற்பத்தால்<br />தன்மேல் நலியும் '<b>பசிபெரி தாயினும்<br />புன்மேயா தாகும் புலி</b>'. (பாடல்: 70)<br /><br />நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்<br />சிறியார் எளியரால் என்று - பெரியாரைத்<br />தங்கள்நேர் வைத்துத் தகவல்ல கூறுதல்<br />'<b>திங்களை நாய்குரைத் தற்று</b>'. (பாடல்: 107)<br /><br />இவற்றுள் 400 பாடல்களைத் தொகுத்து 'பழமொழி நானூறு' எனும் தலைப்பில் 'மூன்றுறை அரையனார்' என்ற சமண முனிவர் இயற்றியுள்ளார். இணையத்தில் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக விளங்கும் 'ப்ராஜக்ட் மதுரை' தளத்தில் PDF வடிவில் கிடைக்கிறது இப்பழமொழித் தொகுப்பு. சுட்டி கீழே:<br /><br /><a href="http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0036.pdf">http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0036.pdf</a><br /><br />மேலே கண்ட நன்கு பயன்பாட்டில் இருக்கும் பழமொழிகள் கூட சற்று எளிமைப் படுத்தி தான் நம்மை வந்து அடைந்திருக்கிறது. பாடலில் அவை பயன்படுத்திய விதம் கண்டால் வித்தியாசம் உணர முடியும். இப்படி இருக்க பல பாடல்கள் நமக்கு புரிவதாக இல்லை. புரியவில்லை என்பதற்காக அவற்றை ஒதுக்கிவிடலாமா ?!</span><br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17.940000534057617px;"><br /></span></div>
சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-16008135383676805982013-03-03T23:37:00.001-05:002013-03-03T23:37:43.377-05:00யோகம் பயில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU_YnpiMUnUkUkwDCgRPmDRkTaEq2IfMz0NU0t7qDHgYDSoBBkPhjMisXOJqG5IfmebuTc8uhfhzVZhZba6f59omaXxKICz3P3EIBgeMe1aLbra-Z0_sys71fd8-Fkt-P0y9813H9yAEKG/s1600/San_francisco_yoga_classes_deals_clothing.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" gsa="true" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU_YnpiMUnUkUkwDCgRPmDRkTaEq2IfMz0NU0t7qDHgYDSoBBkPhjMisXOJqG5IfmebuTc8uhfhzVZhZba6f59omaXxKICz3P3EIBgeMe1aLbra-Z0_sys71fd8-Fkt-P0y9813H9yAEKG/s320/San_francisco_yoga_classes_deals_clothing.jpg" width="320" /></a></div>
<br />
<br />
எளிதான நம் வாழ்வை எவ்வளவு கடினமானதாக ஆக்கியிருக்கிறோம். உறவுகள், நட்புக்கள், உணவுகள், செல்வம், பதவி, புகழ், வாழ்க்கை முறை எல்லாவற்றிலும் கோலோச்சினாலும், அடிப்படையான ஏதோ ஒன்றை இழந்தே இவற்றை எல்லாம் பெற்றிருக்கிறோம்.<br />
<br />
பொதுவாக இந்தியர்கள் உடல் நலத்தைப் பாதுகாப்பதில்லை என்பது உலகளாவிய ஒரு எண்ணம். அகவை நாற்பதைத் தொடுகையில் இது சற்று மாறக்கூடும். இங்கொன்றும் அங்கொன்றுமாக இளம்வயது மாரடைப்பு பற்றி செய்தி அறிகையில் நமக்குள்ளும் ஒரு படபடப்புத் தோன்றுகிறது. 'ஓடு உடற்பயிற்சி நிலையத்திற்கு' என்று கிளம்புகிறது ஒரு கூட்டம். 'உடற்பயிற்சி செய்கிறேன்' என்பது ஒரு பெருமிதத்தைத் தருகிறது நமக்கு. உடலுக்கு செய்யப்படுகிறதோ இல்லையோ, 'ஜிம்' சென்றுவருகிறேன் என்பது இன்றைய இளவட்டங்களின் மத்தியில் அந்தஸ்த்தான சொல் ஆகியிருக்கிறது. நாள் முழுக்க உடற்பயிற்சி செய்யும் மனிதர்களும் இருக்கிறார்கள்.<br />
<br />
ஜி.யு.போப் சொன்னால் திருக்குறள் படிக்கிறோம். 'ப்ரெய்ன் யோகா' என அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள் என தோப்புக்கரணம் போடுகிறோம். இதேபோன்று அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும், ஜப்பானியர்களும், ஏனைய மற்ற நாடுகளிலும் செய்யப்படுவதால் யோகம் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறோம். செய்கிறோமா, இல்லையா என்பது அடுத்த பிரச்சனை :)<br />
<br />
உடல் நலம் பேண, மேற்கண்டவாறு கடினமான உடற்பயிற்சி தேவையா ?, என்றால், தேவையில்லை என்கிறது யோகக் கலை. "இன்றைய வாழ்வின் கடின உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமே. அதுவும் கடின உடற்பயிற்சியினால் உடலின் உள்ளுறுப்புக்கள் சேதமடைய சாத்தியங்கள் அதிகம். யோகத்தில், உடல் வருத்தாது உடலுக்கும், மனதுக்கும் பயிற்சி இருக்கிறது". இதுவும் மேற்கத்திய அறிஞர்கள் சொல்லித் தான் நாம் அறிகிறோம். நம் நாட்டில் தோன்றிய பல துறவிகளும், ஞானிகளும் பன்னெடுங்காலம் செய்து வந்த யோகத்தை, நாம் செய்யாமல் விட்டதை, இன்று மேற்கத்திய நாடுகள் செய்கின்றன. நாமும் செய்ய என்ன செய்ய வேண்டும் என யோசித்தால், விடை சுலபமே.<br />
<br />
நமக்குத் தேவை நிறைய நேரம். கை, கால்களை நீட்டி முடக்கப் போதுமான இடம், ஒரு வழுக்காத விரிப்பு, ஒரு குரு. இதற்கும் மேலாக, மற்ற சந்தை போலவே யோகாவிற்கும் ஒரு பெரிய சந்தை இருக்கிறது. உலக அளவில் யோகா, முப்பது பில்லியன் டாலர் சந்தை என்கிறது இணைய ஆய்வறிக்கைகள்.<br />
<br />
மேற்சொன்ன குருவும் (பலருக்கு இணையம்), இடமும், விரிப்பும் நமக்குக் கிடைத்தாலும், பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை. கடின உடற்பயிற்சி செய்ய பல மணி நேரம் செலவிடுகையில், யோகாவிற்கு ஒரு அரை மணி நேரம் போதும் ஒரு நாள் ஒன்றுக்கு. 'மனம் ஒன்றுபடாத விஷயங்களில் புலன்கள் வேலை செய்யாது' என்பது பல பழைய பாடல்களின் வாயிலாக நாம் அறியலாம். அதே போல் யோகாவினுள் சென்று உணராத வரை நம் யோகத்தின் பெருமையை நாம் அனுபவிக்க முடியாது.<br />
<br />
மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி இரண்டும் கலந்தது யோகா. 'மூச்ச நல்லா இழுத்து விடுங்க' என்பாரே மருத்துவர், அதே தான் இங்கு மூச்சுப் பயிற்சி. யோக முறைப்படி கை கால்களை நீட்டி மடக்கியோ, மற்றும் இடுப்பு கழுத்தை வளைத்துத் திருப்பியோ நாம் வெளியில் இருந்து செய்யும் உடற்பயிற்சி, நம் உடலின் உள்ளுறுப்புகளை விரிவடையச் செய்கிறது. உடலின் உள்தசைகளையும் இலகுவாக்குகிறது. இதனால் நம்முள் ஆற்றல் பிறந்து பரினமிக்கிறது. இதுவே அனைத்துலகும் ஏற்றுக் கொண்ட யோகத்தின் அடி நாதம்.<br />
<br />
எளிய பயிற்சியாக ஆரம்பித்து, நம்மால் முடிந்த வரை கடினமான யோக ஆசன நிலைகள் வரை நம்மால் பயணிக்க முடியும். யோகா பற்றி ஏராளமான செய்திகளும் காணொளிகளும் இணையத்தில் இருக்கின்றன. நம் முன்னோர் கண்டுபிடித்ததை, நாமும் கண்டு, படித்து, செய்துணர்ந்து பயன்பெறுவோம் ! உடல் நலம் காப்போம் !!<br />
<br />
</div>
சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-27553361687977072492012-05-02T23:33:00.000-04:002012-05-02T23:36:46.534-04:00நா சுழற்றி - அருணகிரியார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="color: #8e7cc3;">மணியடிக்க உடனெழுந்து குளித்துச்</span><br />
<span style="color: #8e7cc3;">சிலநொடியில் உடை நுழைத்து</span><br />
<span style="color: #8e7cc3;">ஊண் திணித்துப் பறந்து தெருவேறி</span><br />
<span style="color: #8e7cc3;"><br /></span><br />
<span style="color: #8e7cc3;">வாகனப் புகை கசிந்து</span><br />
<span style="color: #8e7cc3;">வியர்த்தொழுக வீதி நிறைத்து</span><br />
<span style="color: #8e7cc3;">உடல் துடைத்து அலுவல் படியேறி</span><br />
<span style="color: #8e7cc3;"><br /></span><br />
<span style="color: #8e7cc3;">கணிணி தட்டிக் கடிதமெழுதி</span><br />
<span style="color: #8e7cc3;">கலவையாகக் குழுக்கள் கலந்து</span><br />
<span style="color: #8e7cc3;">காஃபி குடித்து மதிய உணவருந்தி</span><br />
<span style="color: #8e7cc3;"><br /></span><br />
<span style="color: #8e7cc3;">இருக்கை சரிந்து கண்மூடிக்</span><br />
<span style="color: #8e7cc3;">கனாக்கண்டு சிறுநகை பூத்து</span><br />
<span style="color: #8e7cc3;">பின்னெழுந்து பல கதைகள் பேசி</span><br />
<span style="color: #8e7cc3;"><br /></span><br />
<span style="color: #8e7cc3;">இரவு நிலா ஒளிவீச</span><br />
<span style="color: #8e7cc3;">காலைச் சூரியன் தகதகக்க</span><br />
<span style="color: #8e7cc3;">இன்று என்பணி இவையெலாம் என்று</span><br />
<span style="color: #8e7cc3;"><br /></span><br />
<span style="color: #8e7cc3;">மின்னஞ்சல்செய்து அலுவல் மறந்து </span><br />
<span style="color: #8e7cc3;">மீண்டும் வீதி நிறைத்து</span><br />
<span style="color: #8e7cc3;">அயர்வாக அடுக்கு மாடிப் படியேறி</span><br />
<span style="color: #8e7cc3;"><br /></span><br />
<span style="color: #8e7cc3;">கணிணி தட்டி உலகிற்கலந்து</span><br />
<span style="color: #8e7cc3;">கண்டதையும் உணவென்று உண்டு</span><br />
<span style="color: #8e7cc3;">தொலைக்காட்சி சிறிது கண்டு முடங்கியே !</span><br />
<span style="color: #8e7cc3;"><br /></span><br />
<span style="color: #8e7cc3;">மணியடிக்க உடனெழுந்து குளித்துச்</span><br />
<span style="color: #8e7cc3;">சிலநொடியில் உடை நுழைத்து</span><br />
<span style="color: #8e7cc3;">ஊண் திணித்துப் பறந்து தெருவேறி</span><br />
<br />
சமீப காலமாகக் கேட்டு வரும் ஞான சொற்பொழிவுகள், சற்று ... இல்லை இல்லை, பலமாகவே சிந்திக்க வைக்கிறது. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்றார்கள். மனம் இளகும். கண்கள் நீர் சுரக்கும் என்றும் சேர்த்துக் கொள்ளலாம். சங்கீத ஞானம் இல்லாதவர்கள் கூட ராகத்தோடு பாடக் கூடிய மென்தமிழ்ப் பாடல்கள் அத்தனையும். அத்தோடு நில்லாமல், இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு பாடலும் நாம் எழுதலாம். உதாராணம்: மேலே :)<br />
<br />
ஏற்கனவே அருணகிரியாரை வில்லிபுத்தூரார் யாரென்று கேட்டதற்கு, அருணகிரியாரின் நகைச்சுவை கலந்த தத்துவார்த்தமான பதிலை <a href="http://blog.richmondtamilsangam.org/2012/03/4.html" target="_blank">இந்தப் பதிவில் </a>கண்டோம்.<br />
<br />
ஒரு குழந்தை, கருவாகி உருவாகி வளரும் நிலையை எளிய தமிழில் அழகாகப் பாடியிருக்கிறார் அருணகிரியார். பாடலுக்கு விளக்கம் தேவையில்லை, ஒருமுறைக்கு இருமுறை படித்தால் நிச்சயம் புரியும்.<br />
<br />
<span style="color: #6aa84f;">கருவடைந்து பத்துற்ற திங்கள்</span><br />
<span style="color: #6aa84f;">வயிறிருந்து முற்றிப் பயின்று</span><br />
<span style="color: #6aa84f;">கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி</span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">கழுவியங் கெடுத்துச் சுரந்த</span><br />
<span style="color: #6aa84f;">முலையருந்து விக்கக் கிடந்து</span><br />
<span style="color: #6aa84f;">கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி</span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">அரைவடங்கள் கட்டிச் சதங்கை</span><br />
<span style="color: #6aa84f;">யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை</span><br />
<span style="color: #6aa84f;">அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி</span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து</span><br />
<span style="color: #6aa84f;">பிணியுழன்று சுற்றித் திரிந்த</span><br />
<span style="color: #6aa84f;">தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ</span><br />
<br />
இதே கருத்தை ஒத்த, ஆனால் சற்று விரிவாக வரும் 'இத்தா ரணிக்குள்மநு வித்தாய்' இப்பதிவில் வரும் இப்பாடலில் இறுதி வரிகள் சற்று ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. எனக்கு விபரம் தெரிந்து இருபது ஆண்டுகள் முன்னர் வரை கோவில் திருவிழாக் காலங்களில் நிச்சயம், சொற்பொழிவுகள், கதாகாலட்சேபங்கள் இருந்தன. இன்று ஆங்காங்கே ஒன்றிரெண்டு இருந்தாலும் கருத்தைக் கவர்வதாய் இருக்கின்றனவா என்றால், பெரும் கேள்விக்குறியே பதில். வர்த்தகத்தையே முதற்கண் நோக்கும் ஊடகங்களும், தமக்கு ஆதாயம் இருந்தாலலன்றி இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. நம்முடைய பழம்பாடல்கள் பொக்கிஷம் எனில், அதைக் காத்து நமக்கு எடுத்துச் சொல்ல ஆட்கள் இப்பொழுதில்லை. இப்படியிருக்க, அருணகிரியார், இவ்வுலகில் பிறந்து, வளர்ந்து, கலைகள் பயின்று, புத்தி கெட்டு, நரை கூடி, பின் கிழப் பருவம் எய்திடினும் தமிழ் பாடும் நேசத்தை என்றும் தரவேண்டும் என்று வேண்டுகிறார். இன்று வரை தமிழ் வந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறது. சிதைந்துவிடாமல், மேலும் காப்பது நமது பெரும் கடமை. முக்கியமாக அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் இவ்வித்தையும் விதைத்துச் செல்ல வேண்டும். கட கட என ஓடும் இத்தாரணிக்குள் பாடல்:<br />
<br />
<span style="color: #6aa84f;">இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது</span><br />
<span style="color: #6aa84f;">கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்</span><br />
<span style="color: #6aa84f;">தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்</span><br />
<span style="color: #6aa84f;">ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை</span><br />
<span style="color: #6aa84f;">யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர</span><br />
<span style="color: #6aa84f;">வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ...... ளுடனுறவாகி </span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு</span><br />
<span style="color: #6aa84f;">வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல</span><br />
<span style="color: #6aa84f;">திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்</span><br />
<span style="color: #6aa84f;">தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக</span><br />
<span style="color: #6aa84f;">மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை</span><br />
<span style="color: #6aa84f;">மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில ...... பிணியதுமூடிச் </span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம</span><br />
<span style="color: #6aa84f;">னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது</span><br />
<span style="color: #6aa84f;">பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ</span><br />
<span style="color: #6aa84f;">ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்</span><br />
<span style="color: #6aa84f;">தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி</span><br />
<span style="color: #6aa84f;">னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென ...... எடுமெனவோடிச் </span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை</span><br />
<span style="color: #6aa84f;">யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய</span><br />
<span style="color: #6aa84f;">இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி</span><br />
<span style="color: #6aa84f;">நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது</span><br />
<span style="color: #6aa84f;">சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை</span><br />
<span style="color: #6aa84f;">பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும் </span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத</span><br />
<span style="color: #6aa84f;">தாதத் தனந்ததன தானத் தனந்ததன</span><br />
<span style="color: #6aa84f;">செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு</span><br />
<span style="color: #6aa84f;">தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக</span><br />
<span style="color: #6aa84f;">தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு</span><br />
<span style="color: #6aa84f;">தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித் </span><br />
<br />
நா சுழற்றி அடிக்கும் மேற்கண்ட வரிகளில் வரும் சொற்கள் எல்லாம் ஒலியைக் குறிப்பதாகவே ஆகிறது. 'இவ்வாறு ஒலிக்கும் படியான ஒரு மயிலேறி வந்து' காக்க வேண்டும் என்று சொல்கிறார் அருணகிரியார். <br />
<br />
'பக்தி என்றால் வியாபாரம்' என்ற எண்ணம் தளைத்தோங்க இன்றைய சாமியார்களும் மடாதிபதிகளுமே பெரும் காரணம். இவர்களையும் மீறி, தமிழைப் போல் பக்தியும் இவ்வளவு தூரம் வந்திருக்கிறதெனில், நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணரலாம். 'அன்பே சிவம்' என்றார் திருமூலர். இது தான் பக்தி. தமிழோடு பயணித்து பல இடர்களையும் தடைகளையும் கடந்து தான் வந்திருக்கிறது பக்தியும். அப்படி வந்த அருணகிரியாரின் அடுத்த தமிழ்கவிதையின் பால் காதல் கொள்ளாதவர் எவருமில்லை எனலாம். இப்பொழுதெல்லாம் படத்திற்கு முன்னரே பாடல் வெளியாகிவிடுகிறது. அதுவும், மிகப் பிரபலமான நடிகரின் படம் என்றால், பட்டி தொட்டி எங்கும் டீக்கடை, பஸ் ஸ்டாண்ட், தொலைக்காட்சி, பத்திரிகைகள் என மாதக்கணக்கில் எங்கும் பரப்பி, நம் மண்டைக்குள் நீங்கா இடம்பெற்று பெரும் வெற்றி பெரும் அவர்தம் பாடல்கள். இப்பேற்பட்ட விளம்பரங்கள் சிறிதுமின்றி, பொருள் புரிகிறதோ இல்லையோ, முதன்முதலில் கேட்கையிலே மனதில் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் பாடல்:<br />
<br />
<span style="color: #6aa84f;">முத்தைத் தரு பத்தித் திருநகை</span><br />
<span style="color: #6aa84f;">அத்திக்கிறை சத்திச் சரவண</span><br />
<span style="color: #6aa84f;">முத்திக்கொரு வித்துக் குருபர ....எனவோதும் </span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">முருகா...</span><br />
<br />
என்று திரை இசைப்புகழ் டி.எம்.சுந்தரராஜன் அவர்கள் அட்சர சுத்தமாக ஆரம்பிக்க, திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இருக்கை நுனியில் அமரும் ஆர்வத்தைப் போல, மனம் பரபரப்பாகும். திரை சம்பந்தமாக அதிக மேற்கோள் காட்டியதற்கு, இப்பாடல் திரையின் மூலம் தானே நம்மை வந்தடைந்தது. முழுப் பாடல்:<br />
<br />
<span style="color: #6aa84f;">முத்தைத் தரு பத்தித் திருநகை</span><br />
<span style="color: #6aa84f;">அத்திக்கிறை சத்திச் சரவண</span><br />
<span style="color: #6aa84f;">முத்திக்கொரு வித்துக் குருபர ....எனவோதும் </span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">முக்கட்பர மற்குச் சுருதியின்</span><br />
<span style="color: #6aa84f;">முற்பட்டது கற்பித் திருவரும்</span><br />
<span style="color: #6aa84f;">முப்பதுமூ வர்க்கத்து அமரரும் ....அடிபேண</span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">பத்துத் தலை தத்தக் கணைதொடு</span><br />
<span style="color: #6aa84f;">ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு</span><br />
<span style="color: #6aa84f;">பட்டப்பகல் வட்டத் திகிரியில் ....இரவாகப்</span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">பத்தற்கு இரதத்தைக் கடவிய</span><br />
<span style="color: #6aa84f;">பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்</span><br />
<span style="color: #6aa84f;">பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ....ஒருநாளே</span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">தித்தித் தெய ஒத்தப் பரிபுர</span><br />
<span style="color: #6aa84f;">நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி</span><br />
<span style="color: #6aa84f;">திக்கு ஒக்கு நடிக்கக் கழுகொடு .... கழுதாடத்</span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">திக்குப் பரி அட்டப் பயிரவர்</span><br />
<span style="color: #6aa84f;">தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு</span><br />
<span style="color: #6aa84f;">சித்ரப் பவுரிக்கு த்ரிகடக ....எனவோதக்</span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">கொத்தப் பறை கொட்டக் களமிசை</span><br />
<span style="color: #6aa84f;">குக்குக் குகு குக்குக் குகுகுகு</span><br />
<span style="color: #6aa84f;">குத்திப் புதை புக்குப் பிடியென ....முதுகூகை</span><br />
<span style="color: #6aa84f;"><br /></span><br />
<span style="color: #6aa84f;">கொட்புற் றெழ நட்பற் றவுணரை</span><br />
<span style="color: #6aa84f;">வெட்டிப்பலி இட்டுக் குலகிரி</span><br />
<span style="color: #6aa84f;">குத்துப்பட ஒத்துப் பொரவல ....பெருமாளே !</span><br />
<br />
நம்மைப் போலவே பால்ய பருவத்தில் அருணகிரியாரும் படிப்பில் நாட்டம் அதிகமில்லாமல் இருந்திருக்கிறார். தொழு நோய் வந்து, மனம் வாடி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள இருந்தவரைக் காப்பாற்றி, நாவினில் வேல் கொண்டு மந்திரம் எழுதி, 'அருணகிரி தற்கொலை செய்து கொள்வது பாவம், மீண்டும் ஒரு பிறப்பு வாராது. எம்மருள் உனக்குண்டு', என முதலடி முத்தாக எடுத்துக் கொடுத்து, 'திருப்புகழ் பாடுவாயாக' என்று எம்பெருமான் முருகன் சொல்வது, அருணகிரியாரின் மிகச் சுருக்கிய வரலாறு. முருகனருள் பெற்று முத்து முத்தாய்ப் பொழிந்தார் அருணகிரியார் திருப்புகழை. மேற்கண்ட பாடல்கள் போலவே இன்னும் ஏராளம் இருக்கிறது அதனுள்.<br />
<br />
<br />
<br />
<div>
<br /></div>
<br /></div>சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-19184047499452523072012-05-01T01:41:00.001-04:002012-05-01T01:41:58.567-04:00எங்கும் எதிலும் கலாம் ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIYFoD9YZq6diuMOxiotewagEgNCRxP4tS4N5MHmDQIggcycA6i0Qjh_I2tBAzN0EL8um3r_y7GHYicYbOqvLzpshdNh3src_2y9COejnguI85sKKEF3YhYKQbRzV5PSYOb1gVIAmgZckH/s1600/Abdul+Kalam_0001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIYFoD9YZq6diuMOxiotewagEgNCRxP4tS4N5MHmDQIggcycA6i0Qjh_I2tBAzN0EL8um3r_y7GHYicYbOqvLzpshdNh3src_2y9COejnguI85sKKEF3YhYKQbRzV5PSYOb1gVIAmgZckH/s320/Abdul+Kalam_0001.jpg" width="247" /></a></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 20px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 20px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 20px;">'ஒன்னா ரெண்டா ... ஆயிரம் பொன்னாச்சே, ஆயிரம் பொன்னாச்சே' என திருவிளையாடல் படத்தில் நாகேஷ் புலம்புவது இன்றும் காதுக்குள் ஒலிக்கின்றது. அப்படி இருக்க, தனக்குக் கிடைத்த ஒரு கோடியை, நான்காகப் பிரித்து, நான்கு நிறுவனங்களுக்குத் தந்த டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களை எவ்வளவு பாராடினாலும் தகும். அப்பொழுதே எனது மற்ற தளத்தில் பதிந்த சிறு கவிதை இப்பொழுது இங்கே:</span></span></div>
<span style="background-color: white;"><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><br /></span></span><br />
<span style="background-color: white;"><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">அன்பாகப் பேசிக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">அறன்போற்றிப் பழகிக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">சிந்தனை வளர்த்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">சோம்பல் வீழ்த்திக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">ஆன்றோரை அணைத்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">சிறியோரைச் சகித்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">நல்லவை படித்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">அல்லவை அடித்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">விழியெனக் கோபித்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">கனவில் விழித்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">விழித்தபின் சிரித்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">சிதறாமல் பார்த்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">கருத்துக்களோடு மோதிக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">நற்செயலால் சாதித்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">பரிசுபல பெற்றுக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">பிறருக்குக் கொடுத்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">துயர் துடைத்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">தோள் சாய்த்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">புத்தகம் படித்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">அறிவியல் ஆராய்ந்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">இன்னும் பல </span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">கள்</span><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">மனதில் இருத்திக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">நிறைவாய் உணர்ந்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">இறைவனை வணங்கிக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">இனிது வாழ்ந்துக்</span><strong style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;"><span style="color: #cc6600;">கலாம்</span></strong><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: -webkit-auto;">.</span></span>
</div>சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-40412068246660078472012-04-23T12:57:00.001-04:002012-04-23T13:03:46.853-04:00புவி நாள் (Earth Day) Apr 22 !<br />
பேருந்து தினம், காதலர் தினம், அம்மாக்கள் தினம், மகளிர் தினம், என்று எல்லாத்துக்கும் நாள் வைத்துக் கொண்டாடுகிறோம். ஆண்கள் தினம் என்று ஒன்றிருக்கா என்று தேடினால், அட, அதுவும் இருக்கத் தான் செய்கிறது :) மற்ற தினங்கள் போலே இந்த நாளுக்கு, அவ்வளவு சிறப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 'புவி நாள்' என்ற Earth Dayக்கும் இது தான் இன்றைய நிலை.<br />
<br />
அம்மா என்றைக்கும் அம்மா தான். பேருந்து என்றைக்கும் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் போகிறது, காதலர் என்றுமே கருத்தொருமித்து தான் இருக்கப் போகின்றனர் ... என்று இவை எல்லாம் அனுதினம் வாழ்வோடு ஒன்றியிருந்தாலும், வருடத்தின் ஒரு நாளை அதற்கென ஒதுக்கி சிறப்பித்ததை, எல்லாவற்றின் பின்னனியிலும் வியாபர நோக்கம் இருக்கிறது எனச் சிலர் விவாதிப்பதும் உண்டு.<br />
<br />
ஆனால், மற்ற நாட்களில் இருந்து 'புவி நாள்' சற்று வித்தியாசப்படுகிறது. இதுவரையிலும் எந்த வியாபர நோக்கமும் கண்கூடாக நமக்குத் தெரியவில்லை. புவி நாளில், பல நாடுகளிலும், மரம் நடச் சொல்லி, பல நிறுவனங்கள் இலவசமாக மரக்கன்றுகள் வழங்குகினறன. இது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. <br />
<br />
<div style="text-align: center;">
<em>புவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். </em></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBlOH04uJBWu-Hz_3FOf663-1LV6nXiBP49JuaIZg5VYL-EMUqswi2W1IGDDVzmIp0NC8ZC9Lu7RVb5FuAgXfDpfn66hVRsZ8p6gO8nCVF1dnz-9P57Zls2q5FESz99jGLdjT3Xc1SLsJ4/s1600/Ecology_symbol.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" oda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBlOH04uJBWu-Hz_3FOf663-1LV6nXiBP49JuaIZg5VYL-EMUqswi2W1IGDDVzmIp0NC8ZC9Lu7RVb5FuAgXfDpfn66hVRsZ8p6gO8nCVF1dnz-9P57Zls2q5FESz99jGLdjT3Xc1SLsJ4/s1600/Ecology_symbol.JPG" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<em>1969இல் ரான் காப் உருவாக்கிய சுற்றுச் சூழல் குறியீடு: "Environment" மற்றும் "Organism" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துக்களின் ஒருங்கிணைப்பு.</em></div>
<div style="text-align: center;">
<span style="font-size: xx-small;">(நன்றி: விக்கிபீடியா)</span></div>
<br />
புவியில் இருந்து எவ்வளவு பெற்றிருக்கிறோம், இன்றும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். அதற்கு நாம் என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம் ? வாகனப் புகையையும், தொழிற்சாலைக் கழிவுகளையும், ப்ளாஸ்டிக் குப்பைகளையும், பொது இட அசுத்துங்களும் தானே அதிகம் கொடுத்திருக்கிறோம் !!! நல்லதைப் பெற்று தீயதைக் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது ?! 'கிவ் அன்ட் டேக்' பாலிசி என்று சின்ன குழந்தை முதல் கல்யாணம் முடித்த இளம் தம்பதியினர் வரை அறிவுறுத்தி வளர்க்கும் நாம், புவியைப் பற்றி இன்று வரை சிந்திக்காவிட்டாலும், இனிமேலாவது சிந்திப்போமே. நமது அடுத்த தலைமுறைக்கு இவ்வித்தை விதைத்துச் செல்வோம். <br />
<br />
மரம் வளர்க்காததன் விளைவு, மற்றும் மரம் வளர்த்துக் கொடுப்பதின் மூலம், புவி நமக்கு அளிக்கும் அற்புதம் பற்றி இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் ... <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitMFU-Yac4vCU8Rf6q_GuOoLQ7nodME2dgYDSksCXPFM0tJwHd_Sl2ZfcAhueoOGEfvgkxABeKON9QhayazcWF1RLodnNOugq-4X5MRKryDo3e8uxU84XKllgzaXG4EbauIDd6z7-yEOwG/s1600/namazhvar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320px" oda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitMFU-Yac4vCU8Rf6q_GuOoLQ7nodME2dgYDSksCXPFM0tJwHd_Sl2ZfcAhueoOGEfvgkxABeKON9QhayazcWF1RLodnNOugq-4X5MRKryDo3e8uxU84XKllgzaXG4EbauIDd6z7-yEOwG/s320/namazhvar.jpg" width="215px" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: xx-small;">(நன்றி: விகடன்)</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<em>1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் ``இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று'' சொன்னார். இதை அவர் 1987-ல் சொன்னார்.</em><br />
<em><br /></em><br />
<em>ஏன் என்று நான் கேட்டதற்கு, ``உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள `டீ' தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது. அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை'' என்று சொன்னார் அவர். அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கென்று ஒரு இலாக்கா இருக்கிறது. ஒரு துறை இருக்கிறது. காட்டை பாதுகாப்பதற்காகவே பணமெல்லாம் செலவழிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கு மந்திரிகள் எல்லாம் கூட வருகிறார்கள். ஆனாலும் அழிக்கப்படும் காடுகள் பற்றி எந்த அக்கறையும் இல்லை. இதன் மூலம் உண்டான விளைவுகளைத்தான் இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.</em><br />
<em><br /></em><br />
<em>இந்த மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு மட்டும் நடக்கின்ற நிகழ்ச்சி இல்லை இது. உலகம் முழுக்க நடக்கின்ற நிகழ்ச்சி. ஆனால் பாதிப்பு என்பது நமக்குத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால், தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடுதான் தண்ணீர் குறைந்த மாநிலம்.</em><br />
<em><br /></em><br />
<em>இன்றுள்ள நிலையில் இமயமலையே உருகி ஓடி வந்து கொண்டிருக்கிறது. கங்கை ஆற்றிற்கும் காவிரி ஆற்றிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? காவிரியில் மழை பெய்தால் தண்ணீர் வரும். கங்கையில் பனி உருகினால் தண்ணீர் வருகிறது. கோடை காலத்தில் கங்கையில் தண்ணீர் வருகிறது. அதனால் அங்கு விளைச்சல் என்னவோ அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்படியே இமயமலையில் பனிமலை உருகிக் கொண்டே போனால், நாளை கங்கையிலேயே தண்ணீர் வராது. இப்படியே உருகிக் கொண்டு வந்தால் வங்காள விரிகுடாவின் கடல் மட்டம் உயரும். அப்போது சென்னை பாதி இல்லாமல் போய்விடும். கடலூர் பாதி இல்லாமல் போய்விடும். நாகப்பட்டினம் இல்லாமல் போய்விடும். கன்னியாகுமரி இல்லாமல் போய்விடும். இதைக் கூட யோசிக்க கூடிய அளவிற்கு அந்தப் பதவியிலும், அந்தப் பொறுப்பிலேயும் இருப்பவர்களுக்கு அறிவில்லை. அதையெல்லாவற்றையும்தான் இவை கூட்டிக் காட்டுகின்றன.</em><br />
<br />
<em><span style="font-size: xx-small;">(நன்றி: குமுதம் குழுமத்தின் தீராநதி)</span></em>சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-20049044927810909432012-03-22T20:26:00.003-04:002012-03-22T22:16:29.361-04:00தோற்றத்தில் என்ன இருக்கிறது ?<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUIpcPphLpvFxVGeMJq8cghDox4fzGavMHm6IIoOm9JxdzW6B4GefuFB3zGWhQC4pP7kWt04DZTBgXsDCj8MdIjQpcaCxSbvljtwBdItr6qxt1fMYv8Roi_atCglGhoFSM2PlkSIcZQDQy/s1600/diversity_500.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 213px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5722878100361513138" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUIpcPphLpvFxVGeMJq8cghDox4fzGavMHm6IIoOm9JxdzW6B4GefuFB3zGWhQC4pP7kWt04DZTBgXsDCj8MdIjQpcaCxSbvljtwBdItr6qxt1fMYv8Roi_atCglGhoFSM2PlkSIcZQDQy/s320/diversity_500.jpg" /></a><br /><strong>ந</strong>ம்மில் சிலர், உடுத்தும் துணி ஆகட்டும், கால் நுழைக்கும் காலணி ஆகட்டும், பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். அதாவது, நிறுவனக் குறியீடு பார்த்து வாங்குவார்கள்! காலணிக்கு இந்த நிறுவனம். மேலாடைக்கு இந்த நிறுவனம். கைக்கெடிகாரம், கால்சட்டை, காதணி, கைவளை, சாந்து மற்றும் சந்தனப் பொட்டு, வாகனம், வீட்டுப் பொருட்கள் என அது அதற்கு பேர்பெற்ற நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவார்கள்.<br /><br />பேர்பெற்ற நிறுவனங்களின் பொருள் வாங்குவதற்கும், சாதாரண நிறுவனப் பொருள் வாங்குவதற்கும் முக்கிய காரணிகள், விலை மற்றும் அதன் தரம். முன்னதில் விலை, மற்றும் தரம் அதிகம். பின்னதில் விலையும் தரமும் குறைவே. தங்கள் வசதிக்கேற்பப் பின்னதைப் பலரும், முன்னதைச் சிலரும் வாங்கி பயனடைகிறார்கள்.<br /><br />முன்னதில் உடை உடுத்திய ஆணோ, பெண்ணோ, அப்படியெ லாவகமாக வந்து தங்கள் ஊர்தியில் இருந்து இறங்கினால், அங்கே அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையே தனி தான். "திரைப்படங்களின் தாக்கமா, அல்லது, 'இது என்னால் முடியவில்லை இவன் செய்கிறான்' என்றா?, அல்லது வேறு என்னென்ன காரணங்களாக இருக்க முடியும்?" என்று யோசித்தால், உளவியல் ரீதியாக அனுகினால் தான் இதற்கு விடை காண முடியும் போல.<br /><br />கோவில் விஷேஷங்கள், வீட்டுத் திருமணங்கள், போன்ற இடங்களில் விலை மிகுதி போன்று போலியாகவோ, அல்லது உணமையிலேயே விலை மிகுதியாகவோ பளபளக்கும் ஆடை அணிகலண்கள் பூண்ட இச்சிலரின் அலங்காரம் பலரின் கண்களைப் படுத்தி எடுக்கும். பல கணங்களில் 'ஏன் இப்படித் தங்களை அலங்காரம் செய்து காட்சிப் பொருட்களாய் வலம் வருகிறார்கள்' என்ற எண்ணம் எழும்.<br /><br />இப்படிப் பள பளா என்று இல்லாமல், 'கந்தையாணாலும் கசக்கிக் கட்டு' என்று சாதரணமாக இருந்தால் தான் என்ன? இவ்வுலகம் நம்மை எவ்வாறு பார்க்கும், நடத்தும்?<br /><br />தலைக்குமேல ஏறி உட்காருமா? எட்டி உதைக்குமா? திட்டுமா? வில்லெடுத்து எல்லாம் அடிக்குமா?<br /><br />'நன்றாக உடுத்தாமல் தோற்றத்தில் பொலிவில்லாமல் ஏழையாய்த் தோற்றம் தரும் இறைவா, உன்னையே இவ்வுலகம் இப்படித் தானே நடத்திற்று' என்று வேடிக்கையாக வெண்பா வடிக்கிறார் ஆசுகவி <strong>காளமேகம்</strong>.<br /><br /><span style="color:#990000;"><em>தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ<br />பூண்ட செருப்பாலொருவன் போடானோ –<br />மீண்டொருவன் வையானோ வில்முறிய மாட்டானோ<br />தென் பாலியூர் ஐயா நீ ஏழையானால்.<br /></em></span><br />தில்லை நாதனே, "நீ எழையானதால், உன் தலையில் கங்கை ஏறினாள். உன்னை செருப்பால் மிதித்தார் கண்ணப்பர். 'பித்தா பேயா' என்று திட்டினார் சுந்தரர். வில்லால் அடித்தார் அர்ச்சுனன்" என்கிறார் காளமேகம்.<br /><br />சமீபத்தில் என் நெருங்கிய நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் நடந்த சம்பவம். வேறொரு குழுவினரைச் சந்திக்க வேண்டி, இவரும் இவரது குழுவிலிருந்து வில்லியம் என்ற அமெரிக்கரும் காத்திருக்கிறார்கள். நம் நண்பர் சாதாரண தோற்றத்தில் என்ன தேவையோ அதற்கேற்ப இருப்பவர். ஐந்து நிமிடத்தில் வருகிறேன் பேர்வழி என்று சொல்லி கால்மணி நேரம் கழித்து வந்த இருவர், இவரைப் பார்த்து, 'யாரு வில்லியம்?' என்றிருக்கிறார்கள். நம் நண்பர் வில்லியத்தைக் காண்பிக்க. அவரிடம் ஓடி, 'ஹாய்... ஐ ஆம் ...' என்று சொல்லி இருவரும் அறிமுகம் செய்து கொண்டு, உரையாடலைத் தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரிடமே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் நம் நண்பரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வில்லியமும் எவ்வளவோ சங்கேதமாகச் சொல்லியும் அவர்களுக்குப் புரியவில்லை. வந்த இருவரும் நம் நாட்டினர். நண்பர் இதுபோல நிறைய பார்த்திருப்பார் போல, அவர் முகத்தில் சலனமில்லை. வில்லியத்திற்கு நம் நண்பர் தான் மேலாளர். ஆனால், கடைசி வரை நண்பர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.<br /><br />இதில், வெள்ளைக்காரன் போல் தோற்றமில்லாத, கோட் சூட் அணியாத நம் நண்பரின் பேரில் தவறா? அல்லது நம் இந்திய மனங்களின் மீது தவறா? இந்த எண்ண ஓட்டம் இந்தியா மற்றுமில்லை, பொதுவாக உலகெங்கிலும் உண்டு என்றே தோன்றுகிறது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWp81T72d23vAiY90BoWQ4p-yXoHJ7Vjo8POzUL6ecYopAadRTcuDkAotYRF3XDiXV5V_wNLBkH4KC2r-KmIhJCnlAQUifPpTAdMK8XK68ekYhyZ4OWtKBejK7ppfcjWTFbBI7RehKR7AO/s1600/diversity%252520jpg.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 198px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5722878096825316370" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWp81T72d23vAiY90BoWQ4p-yXoHJ7Vjo8POzUL6ecYopAadRTcuDkAotYRF3XDiXV5V_wNLBkH4KC2r-KmIhJCnlAQUifPpTAdMK8XK68ekYhyZ4OWtKBejK7ppfcjWTFbBI7RehKR7AO/s320/diversity%252520jpg.jpg" /></a><br />ஒரு காட்சி இங்கு அமெரிக்காவில். ஒரு கடையில், ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஒருவரும், நல்ல தோற்றம் கொண்ட ஒரு வெள்ளைக்காரரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கடைக்கு சரக்கு இறக்க வருகிறார் ஒரு வெள்ளையர். நேரே மற்ற வெள்ளைக்காரரிடம் சென்று, 'ஹலோ அலெக்ஸ், ...' என்று கைகுலுக்கி உரையாடலைத் தொடங்குகிறார். நம் நண்பருக்கு நேர்ந்த அதே கதி தான் இங்கு 'அலெக்ஸ்' என்ற ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணிக்கும். இத்தனைக்கும் அலெக்ஸ் கோட் சூட் எல்லாம் அணிந்திருந்தார், மற்ற வெள்ளையர் ஓரளவுக்கு அலுவலக உடையில் இருந்தார். இருப்பினும், அலெக்ஸை சரியாகக் கண்டு கொள்ளாது ஏன்?<br /><br />இப்பொழுதெல்லாம் இங்கே அலுவலகங்களில், மேற்கண்ட காட்சிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவரிடம் எங்கு எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் வகுப்பெடுக்கிறார்கள். இந்த நிலை இந்தியாவிலும் கடைபிடிக்க வேண்டும். எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் !!!<br /><br /><em>(படங்கள்: நன்றி இணையம்)</em>சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-91537132496016827622012-03-15T10:28:00.014-04:002012-03-15T23:38:33.900-04:00கொடுப்பது கடினம் !<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVJQGYlQoR4CsboqZhdV_wpRyZjmvFQOcK5FHN5qVHYyqc1lIPYcG225c8Ewx9EyqaVUR9b4_fAILBVEgVu8kFPVY0Ijm6sT5kzciVJRc5oqelKfwBch2HMCpHYGIrFdCWxMWQOqz1Ao9C/s1600/smiling_baby.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 249px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVJQGYlQoR4CsboqZhdV_wpRyZjmvFQOcK5FHN5qVHYyqc1lIPYcG225c8Ewx9EyqaVUR9b4_fAILBVEgVu8kFPVY0Ijm6sT5kzciVJRc5oqelKfwBch2HMCpHYGIrFdCWxMWQOqz1Ao9C/s320/smiling_baby.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5720207627133207570" /></a><br />பத்திருபது ஆண்டுகள் முன்னர், நூறு ரூபாய் என்றாலே அது பெரிய பணம். இப்பொழுதெல்லாம் ஆயிரக்கணக்கில் சர்வசாதாரணமாக செலவழிக்கும் மனப்பாங்கு தழைத்தோங்குகிறது. காரணம், தாராளமயமாக்கல், வேலை உற்பத்தி, வாழ்க்கைத் தரம், பன்னாட்டு முதலீடுகள், இப்படிப் பல காரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். நடந்து போனவன் சைக்கிள் வாங்கினான், சைக்கிளில் போனவன் பைக் வாங்கினான், பைக் காராச்சு, கார் வேனாச்சு, அதினும் மேலாய் எல்லாம் சொகுசாச்சு ... இதெல்லாம் நாம் பெற்றவை. பெறுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கொடுப்பதற்கு ?<br /><br />கிணறென்றிருந்தால் அதில் நீரென்றிருக்கும். எடுக்க எடுக்கத் தான் சுரக்கும். இல்லை என்றால் அது பாழும் கிணறு. <em>'தொட்டனைத்தூறும் மணற் கேணி'</em> என்றார் <strong>வள்ளுவர்</strong>. வீட்டினுள்ளே புகும் காற்று வெளியே செல்லவும் வழி இருக்க வேண்டும், அதற்கு வீடமைப்பு இப்படி இருக்க வேண்டும் என்கிறது மனை சாஸ்த்திரம். உள்ளே... வெளியே.... ஆனால், இக்கால வாழ்க்கை உள்ளே மட்டும் தான் செயல்படுகிறது, அநேக அப்பாட்மென்ட்கள் போல..,. வெளியேயும் செயல்பட்டால் நம் வாழ்வு மேலும் சிறக்கும் அல்லவா!<br /><br /><strong>வாரியார்</strong> தன் <strong>வள்ளலார்</strong> உரையில்:<br /><br />இந்த உலகத்திலே பக்தர்கள் பலர். ஞானிகள் பலர். வீரர்கள் பலர். சிறந்த அடியார்கள் பலர். பதிவிரதைகள் பலர். ஆனால், அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் சிலர் ! வள்ளல்களுக்குத் தான் எண்ணிக்கை உண்டு. முதலேழு வள்ளல், இடையேழு வள்ளல், கடையேழு வள்ளல். ஒருவன் விடிய விடியப் பேசுவான், அறஞ்செய்ய மாட்டான். நீர் மேல் குமிழிக்கு நிகர் என்பர். ஆனால், அறம் என்று சொன்னால், ஐம்பது மைல் ஓடுவான். <strong>கொடுப்பது தான் கடினம்</strong>. அதைத்தான் <strong>ஔவையார்</strong>,<br /><br /><em><span style="color:#990000;">ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம் புலவர்<br />வார்த்தை பதினாயிரத் தொருவர் பூர்த்தமலர்த்<br />தண்டாமரைத் திருவே <strong>தாதா கோடிக் கொருவர்</strong> ...<br /><br /></span></em>வேட்டையாடி அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான் ஒரு குறுநில மன்னன். வழியிலே ஒரு முல்லைக் கொடி தாவிப் படர கொழு கொம்பில்லாமல் தள்ளாடித் தவிப்பதைக் கண்டான். உள்ளம் துடித்தது, கண்ணீர் வடிந்தது. என் நாட்டிலே இப்படி ஒரு முல்லைக் கொடி தாவிப் படர கொழு கொம்பில்லாமல் தவிக்கலாமா என்று தேரை விட்டு இறங்கி தன் மணித்தேரிலே முல்லைக் கொடியைப் படர விட்டு நடந்து போனான் அரண்மனைக்கு.<br /><br /><strong>இதில் என்ன கிடைக்கிறது? </strong><br /><br /><em><span style="color:#990000;">செடி கொடிகளுக்கு ஓரறிவு<br />நத்தைக்கும் சங்குக்கும் ஈரறிவு<br />கறையானுக்கும் எறும்புக்கும் மூவறிவு<br />நண்டுக்கும் வண்டுக்கும் நாலறிவு<br />விலங்குகளுக்கும் மனிதர்களில் பலருக்கும் ஐயறிவு<br />மாவும் மாக்களும் ஐயறிவு எனவே என்பது தொல்காப்பியம்<br />மக்கள் தாமே ஆறறிவு !<br /></span></em><br />மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே ஆறறிவு கிடையாது. ஐயறிவோடு விலங்குகள் போலத் தான் வாழ்கிறார்கள் பலர். சில வீட்டில் போய், 'அம்மா, ஐயா எங்க?' என்று கேட்டால், 'அது எங்க போச்சோ தெரியவில்லை' என்பாள் அஃறினையில் வைத்து. ஆகவே, செடிக்கு ஒரே அறிவு, கொடிக்கும் ஒரே அறிவு. அந்த ஓரறிவு படைத்த முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுப்பானானால், ஆறறிவு படைத்ததற்கு என்ன தரமாட்டான்?!<br /><br /><strong>கபிலர்</strong> என்ற அந்தணப் புலவர் <strong>பாரியை</strong> ஒரு பாடல் பாடினவுடன், முன்னூறு கிராமம் கொடுத்தான். அதனால் தான் <strong>சுந்தரமூர்த்தி நாயனார்</strong>, கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பானில்லை. வன்புகழ் பாரி காரி என்பார் <strong>அருணகிரிநாதர்</strong>. அள்ளிக் கொடுக்கிற வள்ளல்கள் சிலர். கவச குண்டலத்தை அறுத்துக் கொடுத்தான் <strong>கர்ணன்</strong>. சிரம் கொடுக்க முயன்றான் <strong>குமணன்</strong>. ஆனால், அப்படி அள்ளி அள்ளி கொடுத்தவங்க எல்லாம் வள்ளல்.<br /><br />நம்மால இவ்வாறெல்லாம் அள்ளி அள்ளித் தர முடியுமா?<br />'எவன் வூட்டுக் காச எவனுக்குத் தர்றது' என்பது தான் நம் சிந்தை எல்லாம். <strong>கொடுப்பது கடினம் !<br /></strong><br />***<br /><br /><strong>கீரன்</strong> தன் <strong>திருமந்திர</strong> உரையில்:<br /><br />நாம் தவம் தவம் என்று சொல்கிறோமே, பன்னெடுங்காலம் நீரிலே நின்றார்கள். நெருப்பிலே நின்றார்கள். ஊசி முனையிலே ஒரு காலைப் பொருத்திக் கொண்டு நின்றார்கள். என இந்த முனிவர் தவம் செய்தார் என்றெல்லாம் படிக்கின்றோமே, அப்பேர்ப்பட்ட தவத்தினாலே பெறக் கூடிய கருத்து, இல்லாவிட்டால் அப்பேர்ப்பட்ட தவத்தினாலே பெறக்கூடிய பலன், மிக மிக எளிதாகவே நமக்குக் கிடைத்து விடும் என எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார். யாருக்கும் செலவில்லாமல், போகிற போக்கில், அனைத்து உயிர்களுக்கும் பயன்படக் கூடிய ஒரு செயலைச் செய்தால் போதும். அதற்காக சிவபெருமான் மகிழ்ந்து நமக்கு மிகப் பெரிய தவப் பலனைத் தருகிறான் என்பது <strong>திருமூலர்</strong> கருத்து. அவர் சொல்கிறார்,<br /><br /><em><span style="color:#990000;">யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை<br />யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை<br />யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி<br />யாவர்க்குமாம் பிறருக்கு இன்னுரை தானே<br /></span></em><br /><br />***<br /><br />இறைவனுக்குத் தங்கத் தேரிழுத்து, உடல் வருத்தி அலகு குத்தி எல்லாம் இல்லாமல் மிக மிக எளிதாகப் பச்சிலை கொடுத்து அர்ச்சித்தாலே புண்ணியம் என்கிறது முதல் வரி. பச்சிலை பறித்துச் சென்று கோவிலில் கொடுக்க முடியவில்லையா, அப்படியே போகிற வழியில் புல்லிருந்தால் பிடுங்கி அங்கிருக்கும் ஒரு பசுவுக்கு அளித்தால் புண்ணியம் என்கிறது இரண்டாவது வரி. 'புல்லுக்கு எங்கே செல்வேன்?, பசுவுக்கு என்ன செய்வேன்?, இதெல்லாம் கடினம்' என்கிறீர்களா, உண்ணும் போது ஒரு கைபிடி அப்படியே எடுத்து காகத்துக்கோ மற்ற ஜீவராசிகளுக்கு அளியுங்கள் புண்ணியம் என்கிறது மூன்றாவது வரி. இதுவும் கஷ்டம்னா, பேசாம வாய மூடிகிட்டு இருங்க, அதுவே பெரும் புண்ணியம் என்கிறது நான்காவது வரி.<br /><br /><span style="font-size:180%;color:#993300;"><br /></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAxMftcl-oWoTuGjOeFwGG4Np54CgAqMta7eh_3c_eXfV0UsHNgvTFKpKUKUl9q3ZYkiGelyPmL7lUW1cITj6ZOBaR6BndJVR3LZ1SvjVVIafewLR6cBaMOrZbDU8nyRYf188CK8cMBGfu/s1600/Dr-APJ-Abdul-Kalam-speech.jpg"><img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 229px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5720205872730356674" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAxMftcl-oWoTuGjOeFwGG4Np54CgAqMta7eh_3c_eXfV0UsHNgvTFKpKUKUl9q3ZYkiGelyPmL7lUW1cITj6ZOBaR6BndJVR3LZ1SvjVVIafewLR6cBaMOrZbDU8nyRYf188CK8cMBGfu/s320/Dr-APJ-Abdul-Kalam-speech.jpg" /></a><br />இந்த நான்காவது வரியில் லேசாகப் புன்னகை சேர்த்தாவது நாம் தரலாமே ! மேற்கண்டவை நம் தமிழ் இலக்கிய சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்பெற்ற சிறு உதாரணங்களே ! பணம் தந்தால் தான் வள்ளல் என்றில்லை. நம்மால் இயன்றதை (மேற்கண்ட வரிகளில் வாயை மூடிக்கொண்டு சும்மா இருத்தல் சேர்த்து) பிறருக்குக் கொடுப்போம். உங்களால் என்ன தரமுடியும் என்று நீங்கள் சிந்தித்தால், 'என்னால் என்ன தரமுடியும்?' என்ற நம் ராமேஸ்வரத்து மசூதி தெரு நாயகன், <strong>அப்துல் கலாம்</strong> ஐயா அவர்களின் தளத்தைச் சென்று பாருங்கள். சுட்டி கீழே.<br /><br /><a href="http://www.whatcanigive.info/"><span style="font-size:180%;color:#993300;">What can I give ?</span></a><span style="font-size:130%;"><br /></span><br /><br /><br />படங்கள் நன்றி: இணையம்சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-9288070412977211472012-02-14T19:18:00.001-05:002012-02-14T19:19:55.248-05:00ஆதலினால், காதல் செய்வீர் !<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_PytM146YX1e0lxAcVbzRgkMD-SxQOKQcvCdPzrKs1_ls7lhSpjwMwmu1Z-Bs7TfcBMWbz9-E2BPEPVkhUbEyhiSvPF0DVOnWcBMq3puiPxd9nOieGNghVfknWJtKSiO0ubobXdeK3aTi/s1600/tender+fern+leaves+-+heart+shape.bmp"><img style="WIDTH: 320px; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5709148853594523154" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_PytM146YX1e0lxAcVbzRgkMD-SxQOKQcvCdPzrKs1_ls7lhSpjwMwmu1Z-Bs7TfcBMWbz9-E2BPEPVkhUbEyhiSvPF0DVOnWcBMq3puiPxd9nOieGNghVfknWJtKSiO0ubobXdeK3aTi/s320/tender+fern+leaves+-+heart+shape.bmp" /></a><br /><br /><br /><div><br />பழகிய சில காலமே<br />ஈருடல் ஓருயிராய் இணைந்தோம்<br /><br />இன்னார்க்கு இன்னாரென்று<br />எழுதியா வைத்தான் இறைவன் ?<br /><br />அன்று, இன்னார் இன்னார் என்றறிந்தே<br />காதலித்துக் கரம்பிடித்தோம் !<br /><br />இங்கே ஏது காதல் ?<br /><br />பகல் இரவாய் உழைத்து<br />மனை ஊர்தி மக்கள் பெற்றோம்<br /><br />உணவதனை வாய் விழுங்கி<br />தொலைக்காட்சியை கண் விழுங்க<br /><br />மனை வாழ்வை மறந்தோம்<br />மற்ற மனை அறியோம்<br /><br />இங்கே ஏது காதல் ?<br /><br />பகலவன் யாரென்றும்<br />குளிர் நிலவை ஏனென்றும்<br /><br />இயற்கையை அறிவதற்கு<br />இணையத்தை அணுகுகிறோம்<br /><br />நான்கு சுவர்களுக்குள்ளே<br />தொலைத் தொடர்பை வளர்த்தோம்.<br /><br />இங்கே ஏது காதல் ?<br /><br />பெற்ற பிள்ளை கிட்டே வர<br />கீரியாய்ச் சீறுகின்றோம்<br /><br />கட்டியவர் மனம் கனக்க<br />கடுஞ்சொற்கள் காட்டுகின்றோம்<br /><br />மூன்றே வருடத்தில்<br />முட்டி நின்றோம் இருபுறமும்.<br /><br />இங்கே ஏது காதல் ?<br /><br />இன்றுவரை எல்லாம் நலமே<br />சென்று சேருமிடம் அறிந்தால்<br />என்றும் எல்லாம் நலமே !<br /><br />முட்டி நின்றாலும் விட்டுக் கொடுப்பீர்<br />தடிக்கும் சொற்களை தளர்த்திக் கொள்வீர்<br />வாய் நிறுத்த கை உயர்ந்தால்<br />துணையைப் பற்றி அணைப்பீர்<br /><br />மற்ற மனை அறிவோம்<br />சுற்றம் சூழ வாழ்வோம்<br />ஒற்றுமையை வளர்ப்போம்<br /><br />பெற்றோரைப் போற்றிடுவோம்<br />பெற்ற பிள்ளை வளருமழகை ரசிப்போம்<br />கட்டியவர் மனம் இனிக்கக் கனிவாய் பேசிடுவோம்<br /><br />இவற்றை எல்லாம் காதலிப்போம்.<br /><br /><strong>காதலின்றி நாளையேது ?<br />ஆதலினால், காதல் செய்வீர் !<br /></strong><br /><br />காதல் சிறப்பிதழ் <a href="http://www.atheetham.com/story/dolove">அதீதத்தில்</a> ஆதலினால், காதல் செய்வீர் !<br /><br /><br /><span style="font-size:85%;"><em>(படம்: நன்றி இணையம்)</em></span></div>சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-49786385084175910532012-01-08T23:36:00.092-05:002012-01-13T11:18:35.462-05:00வீராப்பு<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6eJlB48VZWGdlf4EEZwc6HqV6kVCy9TxcjG5YIiRotTkMeUiqyntsRG4jyKK0dB_gVrifeeXKp47VFQXWWtIwKKBBdqh9zzRaK_8x7K2DvX7QINiu8TbJNBTiHTkOEV53n3dK43asKAvc/s1600/4282352042_f1bb991065_z.jpg"><img style="WIDTH: 400px; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5695488508460037474" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6eJlB48VZWGdlf4EEZwc6HqV6kVCy9TxcjG5YIiRotTkMeUiqyntsRG4jyKK0dB_gVrifeeXKp47VFQXWWtIwKKBBdqh9zzRaK_8x7K2DvX7QINiu8TbJNBTiHTkOEV53n3dK43asKAvc/s400/4282352042_f1bb991065_z.jpg" /></a><br /><span style="font-size:85%;">படம்: நன்றி இணையம்<br /><br /></span><strong>பெ</strong>ய்த மழையில் உழுத நிலமாய் சதசதத்துக் கிடந்தது மாட்டுக் கூடம்.<br /><br />நடுவில் குப்புறக் கிடந்த கூடையை சுவரோரமாய் நகர்த்தினான் பாண்டி. 'கொக் ... கொக்...' என்று கூடை நகர, உள்ளே நாலைந்து கோழிக் குஞ்சுகள்.<br /><br />ஆத்தாவுக்கு எப்பச் சொன்னாலும் புரியாது. இந்த மாட்டுக் கூடத்துல கோழியவும் போட்டு அடைக்காதேன்னு. கேக்குதா?...<br /><br />எதுக்கெடுத்தாலும் ஒரு டயலாக்கு, 'அட போடா போக்கத்தவனே...'<br /><br />எரிந்து கொண்டிருந்த அறுபது வாட்ஸ் பல்ப், படக் படக் என மினுக்கியது. பொசுக்கென்று காரிருள். மையிருட்டில் நின்ற இடத்திலேயே நின்றான் பாண்டி.<br /><br />இருட்டினுள் கண்கள் பழக சிறிது வினாடி பிடித்தது. உத்தரத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கை எடுத்து விளக்கை ஏற்றினான். நான்கடி தூரத்தில் படுத்திருந்தது லக்ஷ்மி. ம்மாஆஆஆ என்று முனகிக் கிடந்தது. இன்றோ நாளையோ குட்டியை ஈன்றுவிடும். காளையா இருந்தா, அதுவும் அரக்கும் வெள்ளையுமா இருந்தா 'செவலை', கருப்பா இருந்தா 'கருப்பு'. 'காளையாத் தான் இருக்கனும் கடவுளே...' அப்படி இருந்துச்சு, தலை மழித்து உன் தாள் பணிகிறேன் என்று வேண்டிக் கொண்டான்.<br /><br />சட சடவெனத் தூறல் பிடிக்க ஆரம்பித்தது. கூடவே லக்ஷ்மியின் முனகல் வலுப்பெற்றுத் தூறலோடு சேர்ந்து கொண்டது. அக்கம் பக்கம் யாரையும் கூப்பிடும் நிலையில் இல்லை பாண்டி. எழுந்திருக்க முடியாமல் இருந்த லக்ஷ்மியை, முடிந்த வரை தூக்கி மறுபுறம் படுக்க வைக்க முயற்சித்தான். ம்..ஹீம்... வயிறு மேலும் கீழும் ஏறி இறங்க, ஜனனப் பை திறக்க, திரை அப்பிய முகத்தோடு முன்னிரு கால்களை நீட்டிய கன்றை வெளித்தள்ளியது லக்ஷ்மி.<br /><br />சற்றும் தாமதிக்காது, தன் இடக்கையை ஜனனப் பாதையினுள் விட்டு, சளக் புளக் என்று தொங்கியவற்றை வாரி வெளித்தள்ளி ஒரு ப்ளாஸ்டிக் பையில் முடிந்து கொண்டான் பாண்டி. சில நாட்களாக அசையாமல் படுத்திருந்த லக்ஷ்மி, விறுட்டென்று துள்ளி எழுந்தது. வாஞ்சையாக நாவினால் தடவிக் கொடுத்து, கண்றின் மேலிருந்த திரையை அகற்றி அழகூட்டியது. ரப்பர் பந்து போல துள்ளிய கண்றின் அழகையும், மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்வதிலும் கவனமாக இருந்த பாண்டி, அப்போது தான் கவனித்தான், அட... 'காளை'. நிறம் அரக்கும் வெளுப்புமாக.<br /><br />பல நாள் கனவு இன்னும் சில வருடங்களில் நினைவாகப் போகிறது.<br /><br />***<br /><br />'ஏய், கருப்பு ... இன்னிக்கு செவலையக் குளிப்பாட்டணும். நான் பக்கத்துல மதுரை வரைக்கும் போயிட்டு வந்திர்றேன், பாத்துக்க' என்று தங்கையிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான் பாண்டி.<br /><br />அரிசி மாவு தேய்த்து வாரம் இருமுறை குளியல். துருவிய தேங்காயை சாதத்தில் பிசைந்து திருப்பதி லட்டு அளவுக்கு உருட்டி தினம் சிலபல உருண்டைகள். பாண்டி டவுனுக்கு போயிட்டு வரும்போதெலாம் பார்லே பிஸ்கட் பாக்கெட்கள், என ஏக கவனிப்புடன் பராமரிக்கப் பட்டான் செவலை. பாண்டிக்குத் தானும் தன் குடும்பமும் சாப்பிடுதோ இல்லையோ, நேரம் தவறாமல் செவலை கவனிக்கப்பட வேண்டும்.<br /><br />ஆறேழு வருடங்களில், ஐயனார் விழிப் பார்வையும், மூக்கனாங்கயிறிடாத பளபளத்த மூக்கும், சற்றே வளைந்து திமிறிய திமிலும், அகன்ற தோள்களும், பருத்த கால்களும், நெய்யும் எண்ணையும் தடவித் தந்தம் போன்ற கூரிய கொம்புகளும் என கம்பீரமாக நின்றான் செவலை.<br /><br />'ஒரு பயல கிட்ட நெருங்கவிட மாட்டான்' என்றும், 'பாண்டி..., மிஞ்சிப் போனா அவந்தங்கச்சி கருப்பு. ரெண்டு பேத்தையும் தவிர யாருமே செவலைய நெருங்க முடியுமா? குத்தித் தூக்கிருவான்ல ....' என்றும் ஊருக்குள் சொல்லிக் கொண்டார்கள்.<br /><br />அதே நேரம். 'இவனுக்கென்ன இப்படி ஒரு கேடு. பேசாம இந்தக் காச வேற எங்காவது போட்டா, சாப்பாட்டுக்காவது கவலை இல்லாம இருக்கலாம். இந்த மாட்டக் கட்டி அழுது அப்படி என்னத்த பெரிசா கிழிக்கப் போறான்' என்று தூற்றிக் கொண்டும் இருந்தார்கள்.<br /><br />'டவுனுக்குப் போகலாமாடா ?' என்று பாண்டி கேட்டால் தலையாட்டுவான். 'இன்னிக்கு என்ன சாப்பாட்டு அளவு கூடிருச்சே' என்று பாண்டி நையாண்டி செய்தால், முறைப்பான். குளிக்க நீச்சலுக்குச் செல்கையில் குஷியாகும் சமயங்களில் முதுகின் மேல் பாண்டியை அமர்த்திக் கொள்வான். அவர்களுக்குள் நாளுக்கு நாள் நெருக்கம் கூடிக் கொண்டிருந்தது.<br /><br />மதுரையிலிருந்து திரும்பி வருகையில், 'ஏம்பாண்டி செவலைக்கு இந்த கவனிப்பு நடக்குதே, அடுத்த வருஷமாவது அலங்காநல்லூர்ல இறக்கிட வேண்டியது தானே?' என்றார் சுப்பு வாத்தியார்.<br /><br />'அடுத்த வருஷம் என்ன சார் அடுத்த வருஷம் இந்த வருஷமே அலங்காநல்லூர் போகணும்னு செவலையே அடம் பிடிக்க ஆரம்பிச்சிட்டான்' என்றான் வீட்டை நெருங்கிய பாண்டி.<br /><br />இவர்கள் சம்பாஷனையைக் கேட்டு, பக்கத்து வேப்ப மரத்தில் கட்டியிருந்த செவலை தலையை மேழும் கீழும் ஆட்டினான். பக்கத்தில் இருந்த மண்மேட்டில், தலை கவிழ்ந்து கூரிய கொம்புகளால் மண்ணைக் கீறினான். விண்ணில் புயலெனப் புழுதி பறந்தது.<br /><br />***<br /><br />'அடுத்து வருவது படமாத்தூரைச் சேர்ந்த முத்துப்பாண்டியின் செவலை. முதன்முறையாக அலங்காநல்லூரில் கால் பதிக்கிறான் செவலை.<br /><br />மாமலை எனத் தோள்கள்<br />மதயானைத் தந்தக் கொம்புகள்<br />பாரினில் கண்டதுண்டா<br />படமாத்தூர் செவலை போலே ...<br />பார் ... என்னைப் பிடித்துப் பார் ...<br /><br />வருகிறான், இதோ ...<br /><br />எனக் கவிதை பாடிக் கொண்டிருந்தது ஆங்காங்கே கட்டியிருந்த பச்சை வண்ணக் குழாய்கள்.<br /><br />'இன்னோரு சிறப்பம்சம் என்னன்னா, செவலையின் கழுத்தில் ரெண்டு கிராம் தங்கக் காசு முடிந்திருக்கிறது...' வாடிவாசல் மேலே சாளரத்தில் அமர்ந்து அறிவிப்பு செய்து கொண்டிருந்தார் ஒருவர்.அவரைச் சுற்றிலும் கூட்டம். வாடிவாசல் திறந்து சிங்கமெனச் சீறிப் புறப்பட்டான் செவலை. கிட்ட நெருங்க முயற்சிப்போரை மணல் மேடாய் நினைத்து மோதினான. பதறிச் சிதறினர் மாடுபிடி வீரர்கள். 'யாரையும் கிட்ட நெருங்க விட மாட்டேங்குதே...' என்ற வீரர்களின் சொற்கள் செவலையின் காதுகளுக்குள் புகுந்து இனிமை கசிந்தது. உத்வேகம் பெற்று பாய்ந்து பறந்தான். 'செவ்லை நல்லா ஞாபகம் வச்சுக்க ... ஒரு பய கிட்ட வரப்படாது. அப்படியே வந்தாலும் முட்டித்தள்ளீரு. வாலைப் பிடிச்சா அப்படியே சுத்தித் தூக்கி வீசீரு...' என்ற வாசகங்களும் செவலைக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.<br /><br />'ஏன்டாப்பா பாண்டி, போட்டில ஜெயிச்சா இந்த வருஷம் என்ன குடுக்குறாக' என்றார் டீக்கடை அழகர்.<br /><br />'அத ஏங்கேக்குற பெருசு. ஒரு சைக்கிளாம், டிவிடி ப்ளேயராம், அப்புறம் அம்பதாயிரத்துக்கிட்ட மத்த சன்மானம்னு பேசிக்கிறாக' அப்புறம் பாரும், இந்தப் பாண்டிய யாரும் பிடிக்கமுடியாது. நம்ம கிட்ட எல்லாம் பேசுவானான்னு கூடத்தெரியாது. எது பேசுறதா இருந்தாலும் இந்தப் பொங்கலுக்கு முன்னாடி அவன்கிட்ட நாமெல்லாம் பேசிக்கிட்டாத்தேன்...' எனப் புகழ்கிறாரா அல்லது இகழ்கிறாரா என்று தெரியாத வண்ணம் சொல்லிக்கொண்டிருந்தார் நாத்திகம் பேசும் தேசிகன்.<br /><br />யாரும் நெருங்க முடியவில்லை. வீரர்கள் சிலர் கூச்சலிட்டுக் கொண்டனர். புதுசா வந்திருக்கு படக்குனு புடிபட்டுரும்னு பார்த்தா, விடாக்கண்டனா இருகே இந்த மாடு' என்று. இதெல்லாம் சரிப்பட்டு வராது. டேய் பரந்தாமா, நீ இடது பக்கமா ஓடு, நான் வலது பக்கம் ஓடிக்கிறேன். நம்ம ஆளுகள மேற்கால வரச்சொல்லிரு என்று சைகையிலேயே தன் கூட்டத்தாருக்கு செய்தி அனுப்பினான் மாறன். மாட்டோடவே ஓடிக்கொண்டு திமிலைப் பிடித்துக் கொண்டான். சரக்கென்று மாட்டின் வயிற்றை ஒட்டி உள்ளே கால்களை நுழைத்தான் மாறன். முட்டித் தூக்க நினைத்த செவலை தடாலடியாகச் சுருண்டு விழுந்தது. பாய்ந்து அதன் கழுத்துகளில் இருந்த துணியை அவிழ்த்து பொன் காசை எடுத்துக் கொண்டன் பரந்தாமன். 'அதான் விழுந்திருச்சுல்ல, விடுங்கப்பா ... மாட்டு மேல விழுகாதிங்க ... போகட்டும் விடுங்க' என்று அறிவிப்பாளர் அலறிக் கொண்டிருந்தார்.<br /><br />மாறனின் குறுக்கு புத்தியினால் இடறி விழுந்ததில் செவலையின் இடது பின்னங்கால் முறிந்து விட்டது. கெந்திக் கெந்தி நடக்க ஆரம்பித்தது செவலை. வழியெங்கும் அழுது கொண்டே வந்தான் பாண்டி. செவலையின் கண்களிலும் கண்ணீர் பெருகி நீண்ட கழுத்துகளில் ஒற்றை நீர்வீழ்ச்சியாய் ஓடியது. 'நீ என்னடா செய்வ, நீ ஏன் அழுகறே. பாவம் கால வேற ஒடச்சிட்டாய்ங்களே, பாவிங்க. நல்லாயிருப்பாய்ங்களா ... நாசாமாப் போவாய்ங்க' என்று திட்டித்தீர்த்தான். 'நான் இனி எந்த மூஞ்சியோட ஊருக்குள்ள போவேன். இனி என் செவலைய எவன் மதிப்பான்.' என்று சிந்தனை கண்ணீரோடு சேர்ந்து பெருகி ஓடியது.<br /><br />'சொன்னாக் கேட்டாத்தானே ... தனம் இருக்கவென தானம் பண்ணாத காலத்தில ... நமக்கெல்லாம் இது தேவையா ... பேசாம மாட்ட கோவிலுக்கு நேந்து விட்டமா, வயக்காட்டுல வேல செஞ்சு பொழப்ப ஓட்டுனமா, தின்னுனு வளந்து நிக்கிற தங்கச்சிக்கு ஒரு கல்யாணத்த பன்னமான்னு இல்லாம ...' என்றும், 'யானைக்குத் தீனி போடற மாதிரில்ல போட்ட ... இந்த மாட்ட கவனிச்சதுக்கு, ஒரு யானையை கவனிச்சிருந்தாக் கூட வீதிவீதியாப் போய் நாலு காசு பாத்திருக்கலாம்' என்றும் ஊராரின் பழிப்புச் சொற்களுக்கு ஆட்பட்டான்.<br /><br />சில நாட்கள் கால்களுக்கு மருந்து தடவியதில் முன்னைப் போல நடக்க ஆரம்பித்தது செவலை. முன்னிருந்த கம்பீரம் குறைந்து களையிழந்து நடைபோட்டது.<br /><br />'ஏன்டா பாண்டி. அதான் சொன்னேன்ல, அடுத்த வருஷம் விடுறான்னு. என்னமோ செவலை சொன்னானாம், இந்த வருஷமே அலங்காநல்லூர் போகனும்னு. இவரும் ஓட்டிக்கிட்டு போனாராம். கடசீல என்ன ஆச்சு ... வாத்தியார் சொல்றத எவன் தான் கேக்கறான் ...' என்று எறியும் வேள்விக்கு எண்ணையிட்டார் சுப்பு வாத்தியார்.<br /><br />'அப்படி என்னதான் வீராப்பு உனக்கு. அரசாங்கமே இத நிறுத்தலாமான்னு யோசிக்குது. ஜல்லிக்கட்ட நிறுத்துனு பல ஊர்கள்ல கூட்டம் போடுறாக. இந்த வீரவிளையாட்டெல்லாம் ஒரு காலத்துல தேவையா இருந்திருக்கலாம். இன்னிக்குத் தேவையா? கைத் தொலைபேசி, கணிணினு மாறிவிட்ட காலத்தில, இப்படி மாட்டப் பேணிப் பாதுகாத்து, போட்டியில விட்டு, பல பேற காயப்படுத்தி, சில உயிர்கள மாய்ச்சு...எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல. ஒரு காலத்துல எனக்குப் பிடிச்சது தான். ஆனால் இன்னிக்கு பிடிக்கல, விட்டுரு' என்று குழைந்து கொண்டிருந்தாள் மாமன் மகள் சித்ரா.<br /><br />பல்லாண்டுக் காதலை உதறி, ஊராரின் பல வசவுச் சொற்களையும் மனதில் இறுத்தி, அடுத்த ஓராண்டில், அண்ணனும் தங்கையும் சேர்ந்து செவலையை மீண்டும் தயார் செய்தனர் ஜல்லிக்கட்டுக்கு !!!<br /><br />***<br /><br /><a href="http://www.atheetham.com/">அதீதம்</a> பொங்கல் சிறப்பிதழில் <a href="http://www.atheetham.com/story/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">'வீராப்பு'</a>.சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-89238521680600049362010-02-14T10:12:00.006-05:002010-02-19T00:44:36.502-05:00வட்டக் கரிய விழி (ஒரு காதல் கதை !)<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyjtFJ09jWsd31qzlLt4lIT5q9uClmOrZWmjsEUSVb9JmlzrM3kg5O3TQFP3CY7Pa8IXo9Pz5TIFiL4D3uI_botU_uJfkfbDGYx3Kc0riwfOk8NndTjEZye9axYSZdcTC6UJOgvgNh7nig/s1600-h/sathangastory1102_B.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5437746309034550402" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 242px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyjtFJ09jWsd31qzlLt4lIT5q9uClmOrZWmjsEUSVb9JmlzrM3kg5O3TQFP3CY7Pa8IXo9Pz5TIFiL4D3uI_botU_uJfkfbDGYx3Kc0riwfOk8NndTjEZye9axYSZdcTC6UJOgvgNh7nig/s400/sathangastory1102_B.jpg" border="0" /></a><br />"ஆமா, நம்ம ராஜேஷ் எங்க சொல் பேச்சுத் தட்ட மாட்டான்."<br /><br />...<br /><br />"என்னது, உங்க மருமக வேளைக்குப் போவேன்னு அடம்பிடிக்கிறாளா ? விட்டுட்டீங்களா ?"<br /><br />...<br /><br />"ஆமா...நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு வருமானத்துக்காகப் பார்த்தா குடும்பம்ல செதஞ்சு போயிடுது.... அதான பார்த்தேன். உங்கள மீறி அவ போயிருவாளா என்ன ?"<br /><br />...<br /><br />"ஆமா...மத்த பிள்ளைங்க மாதிரி இல்லாம நம்ம பிள்ளைங்க நம்ம பேச்சு கேக்குதுங்களே, அதுவே எவ்வளவு பெரிய விஷயம். இதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்."<br /><br />...<br /><br />"சரி, வச்சிருங்க. அப்புறம் பேசலாம்".<br /><br />***<br /><br />"அம்மா, இன்னிக்கு ஆஃபீஸில் சரியான வேலை. தலைவலிக்குது, காஃபி சீக்கிரம் போடு" என்று சொன்ன ராஜேஷின் காதுகளில் விழுந்த, அவன் அம்மாவின் தொலைபேசி உரையாடல், சிறிதே நெருடலை ஏற்படுத்தியது. காரணம், இன்று தான் வாளினும் கூறிய விழியாளிடம் மொத்தமாய்ச் சுருண்டிருந்தான்.<br /><br />***<br /><br />'வந்த மின்னஞ்சல்களுக்கு எல்லாம் பதில் எழுதியாச்சு. ரீடெய்ல் ப்ராஜக்ட் டிசைன் முடிச்சு கோடிங் ஆரம்பிக்கப் போறாங்க. நாளைக்கு டிசைன் ரிவ்யூ ப்ரெஸன்ட் பண்ணனும். அதற்கான பவர்பாயின்ட் ரெடியா எடுத்து டெஸ்க்டாப்பில் போட்டாச்சு. ஃபார்மஸி ப்ராஜக்ட் கிக் ஆஃப் மீட்டிங் வேற இருக்கு நாளைக்கு. அதற்காக சேகரித்த செய்திகள், ஃபைல்கள் என எல்லாம் எடுத்து வச்சாச்சு' எனத் தனக்குள் பேசிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானாள் ஷாலினி. எப்பவுமே அவள் பெர்ஃபக்ட். ஆனாலும் 'பெர்ஃபக்ட் ஷாலினி' என்பதைவிட 'புயல் ஷாலினி' என்றால் அந்த ஆறரை ஏக்கர் இந்திய மென்பொருள் கம்பெனியில் அறியார் யாருமில்லை எனலாம். எல்லாவற்றிலும் ஒரு வேகம். தன் வேலையை, வேலை செய்யும் அலுவலகத்தை அந்த அளவிற்கு நேசித்ததன் பலன் தான் இந்த வேகம், பதவி எல்லாம்.<br /><br />இதே அலுவலகத்தில் ராஜேஷ் ஒரு சீனியர் மேனேஜர்.<br /><br />இவர்கள் இருவருக்கும் ஒரு 'இது' வந்து, நட்பாகிக் காதலாகிச் சில பல மாதங்களாகவே கசிந்து உருகிக் கொண்டிருந்தது.<br /><br />"புயல், ஐ லவ் யூ" என்று ஷாலினிக்கு நொடித்தகவல் (இன்ஸ்டன்ட் மெஸேஜ் தாங்க, இதற்குத் தமிழ் வார்த்தை கண்டுபிடித்து எழுதுவதற்குள் இவங்க எங்கேயாவது போயிடப்போறாங்க. அதனால இவங்கள ஃபாலோ பண்ணலாம், சரியா ?)) அனுப்பினான் ராஜேஷ்.<br /><br />"எத்தனை தடவை சொல்லிட்ட ... ஏதாவது புதுசா சொல்லுடா !" என்று பதிலடித்தாள் ஷாலினி.<br /><br />"உடல் மண்ணுக்கு ... உயிர் ஷாலுவுக்கு ..."<br /><br />"உவ்வே ... அரசியல் ஸ்டேமென்ட். ம்.ஹிம். நாட் இம்ப்ரஸ்ட் ..."<br /><br /><span style="color:#6600cc;"><span style="color:#993399;">"வட்டக்கரிய விழி கண்ணம்மா என்னை<br />வாட்டி வதைக்கிறதே !<br />கிட்ட நெருங்கிவரக் கண்ணம்மா புயலாய்<br />கிறங்க(வும்) வைக்கிறதே !"</span><br /></span><br />"பாவன்டா பாரதியார் பாட்டு. ப்ளீஸ் விட்டுடு. உல்டா பண்ணி சொன்னாலும் நல்லாத் தான் இருக்கு. ஏன் அவரு, இவருனு மத்தவங்க சொன்னதே சொல்றே ? உனக்கு என்று எதுவும் சொல்லத் தெரியாதா ?" என்று சீண்டினாள்.<br /><br />"விளையாடாதே ஷாலு. ஐம் சீரியஸ்"<br /><br />"நானும் சீரியஸ் தான் ராஜேஷ்"<br /><br />"போதும் ... உங்க அப்பா கிட்ட பேசறேன் பேசறேனு சொல்லிட்டே இருக்கியே. எப்போ பேசப் போறே? இன்னும் நாட்களைத் தள்ளிப் போட்டுக் கடைசியில் என்னைக் குறை சொல்லாதே. அப்புறம், எங்க வீட்டில் பார்க்கும் எந்த அழகான பெண்ணையாவது நான் திருமணம் செய்து கொள்ள, நீயே வாய்ப்புத் தந்த மாதிரி ஆகிவிடும்."<br /><br />"என்ன மிரட்டறியா ? அப்படியாவது ஆள விடு சாமீ. அடக்கமா அழகா எங்க வீட்டிலயும் எனக்குப் பையன் பார்க்கிறாங்க, தெரிஞ்சுக்கோ !"<br /><br />'இன்னிக்கு என்னாச்சு இவளுக்கு. ரொம்பவே பொங்குது புயல். சூராவளி ஆகறதுக்கு முன் தடுக்கணுமே !' என்று யோசித்திருந்தான் ராஜேஷ்.<br /><br />"ஹேய் ஷாலு, நான் கெளம்பறேன். என்னடி அரட்டை அங்க இன்னும் கிளம்பாமல் ?!" என்று ஷாலினியின் கணினித்திரையை ஊடுருவினாள் (ஸ்கேன்க்கு தமிழ் வார்த்தை என்னவா இருக்கும் ?) லதா.<br /><br />"ஓ... சாருக்குத் தெரியாதா செய்தி. அதான் இந்த வாரு வாருறியா ? இதோ இப்பவே போய் ராஜேஷ் கிட்ட எல்லாவற்றையும் சொல்றேன்" என்று புயலாய்க் கிளம்பிய லதாவைத் தென்றலாய்த் தடுத்தது புயல்.<br /><br />"அவளைத் தடுத்து என்ன பிரயோஜனம். எல்லாத்தையும் கேட்டுட்டேன் ஷாலு." என்று பூரிப்புடன் வந்த ராஜேஷை, "என்னது மறைந்து நின்றுகொண்டு அந்தக்கால கதாநாயகன் ... ம்ம்ம்ம் ... ஜெய்சங்கர் மாதிரி டயலாக் விட்டுகிட்டு வர்றே" என்று வாருதலைத் தொடர்ந்தாள் ஷாலினி.<br /><br />"அம்மாடீ... நீயாச்சு ராஜேஷாச்சு. நான் வர்றேம்பா ... ராஜேஷ், பை தி வே, கங்க்ராட்ஸ் அன்ட் ஆல் தி பெஸ்ட்" என்று அங்கிருந்து நாகரீகமாக நகன்றாள் லதா.<br /><br />அலுவலகத் தளத்தில் அருகில் யாருமின்றித் தாம் இருவர் மட்டும் என்று உணர்ந்தது முதலாய் அண்ணலும் அவளும் நோக்கியதில், அந்தக் கட்டிடத்தில் இருந்த எல்லா விளக்குகளும் பட்டு பட்டென்று விட்டுப் பிரகாசித்தது.<br /><br />இனிய மாலை நேரத்தில் மெரீனாவை நோக்கி பயணித்தது தென்றல். வழியில் செடி, கொடி, மரம், மக்கள் என எல்லோரும் சிலிர்த்தபடி ரசிக்க, மெரீனாவில் கடல்நீரில் கால்நனைத்து நடக்க ஆரம்பித்திருந்தனர் ராஜேஷும் ஷாலினியும்.<br /><br />"வீட்டில் என்ன நடந்தது ? எப்படி ஆரம்பிச்சே ?" என்று ஆரம்பித்தான் ராஜேஷ்.<br /><br /><i>"ஆச்சாரம், அனுஷ்டானம் இதெல்லாம் இந்தக்காலப் பிள்ளைகள் எங்கே பாக்கறது. அதாவது பரவாயில்ல, ஒரு குலம் கோத்ரமாவது பாக்கப்படாதா ? அபிஷ்டுக்கள் இதெல்லாம் எங்கே போய் முடியப்போறதோ. ஈஸ்வரா ..." என்றார் அப்பா.<br /><br />"குலம் கோத்ரம் பார்த்தால் ஆச்சாரம் அனுஷ்டானம் தன்னால வந்திடாதா என்ன ? என்ன பேசறேள் ? எங்கே போய் முடியும் ? கல்யாணத்தில தான்" என்றாள் அம்மா.<br /><br />"கமலம், நீ என்ன பேசறேனு புரிஞ்சு தான் பேசறியா ? நீயே நம்ம ஷாலுவப் பிடிச்சு, இந்தாடீ உன் ஆம்படையான்னு அந்த ராஜேஷ் கையில கொடுத்திடுவ போல் இருக்கு"<br /><br />"நான் புரிஞ்சுண்டு தான் பேசறேன். 'இந்தப் பையனப் பிடிச்சிருக்கு. இவன் இன்னார். அவா ஆத்துப் பழக்கம் இதான். நான் இவனக் கல்யாணம் பண்ணிக்கறேன்'னு நம்ம கிட்ட வந்து திடமா சம்மதம் கேக்கறச்சே எவ்வளவு சந்தோஷமா இருக்கு. அத்த விட்டுட்டு ..."</i><br /><br />"எனக்குத் தெரியும் அப்பா உஷ்ணமா இருந்தாலும், அம்மா தாங்கிப் பிடிப்பார் என. சிலநேர வாக்குவாதத்திற்குப்பின் பெண்கள் கூட்டணி வெற்றி வாகை சூடியது." என்று சொல்லி "த பால் இஸ் இன் யுஅர் கோர்ட் நௌ" என்றாள் ஷாலினி.<br /><br />பன்னாட்டுக் குழுவினர் சந்திப்பில் கூட அவ்வளவு படபடப்பு ஏற்பட்டதில்லை. தற்போது படபடப்பின் உச்சத்தில் இருந்தான் ராஜேஷ்.<br /><br />"இவ்ளோ ஈஸியா சம்மதம் வாங்கிட்டே. இத முன்னாடியே செய்திருக்கலாமே ?" என்றான் ராஜேஷ்.<br /><br />'உன்ன நல்லாத் தெரிஞ்சுக்க டைம் வேண்டாமாடா மடையா ?' என்று நினைத்துச் சிரித்தாள்.<br /><br />என்னதான் கம்பெனியில் சீனியர் மேனேஜர் பதவியில் மிடுக்குடன் வளைய வந்தாலும், வெளியில் அதுவும் ஒரு பெண்ணின் பிடியில், திருவிழாக் குழந்தையாய் ஆகிவிடும் ஆண்களில், ராஜேஷ் மட்டும் விதிவிலக்கா என்ன ?<br /><br />சேலைத்தலைப்பு இருந்தால் பிடித்துக் கொண்டு நடந்திருப்பான். சுடிதாரில் 'துப்பட்டாவைப் பிடித்தால் கையோடு வந்துவிடுமே' என்று எண்ணியோ என்னவோ ஷாலினியின் விரல் பற்றி நடந்தான் ராஜேஷ்.<br /><br />"ஷாலு, ஜீன்ஸ் டி.ஷர்ட் விட இந்த சுடிதார்ல நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா ? ... அதையும் விட சேலையில, கடவுளே ... ரம்பை மேனகைகளை எல்லாம் விட அழகானவளை பூலோகத்திற்கு அனுப்பிவிட்டு அங்கே எப்படி இருக்கிறீரோ ... நீர் கடவுளே தான்" என்று தத்துவம் சிந்தினான்.<br /><br />ஷாலினி அப்படி ஒன்றும் வெளித் தோற்றத்தில் அழகு எல்லாம் இல்லை. அது அவளுக்கும் தெரியும். இருப்பினும் ராஜேஷின் வரிகளை வெகுவாக ரசித்தாள். முள்வெளி உள்சுவைக்கும் பலா அல்லவா அவள்.<br /><br />"ராஜேஷ், இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா மன நிறைவா உணருகிறேன். நீயும் சீக்கிரம் உங்க வீட்டில் இருந்து நல்ல செய்தி கொண்டுவா. இப்போ ஏதாவது கவிதை சொல்லேன். அவரு இவரு என்று சொல்லாமல் உனக்குத் தோன்றுவதைச் சொல்" என்றாள்.<br /><br />"இது ஒரு விதமான 'ஞ்'சிருங்கோ கவிதை ஸ்டைல் ஷாலு. உனக்கான ஸ்பெஷல்...<br /><br /><span style="color:#993399;">வட்டவிழி விட்ட வழி<br />சுற்றுதடி நெஞ்சம்,<br />விட்டிடாது பற்றி அதை<br />சுற்றிவந்தே கெஞ்சும்.<br /><br />சுட்டுவிடும் ஈர இதழ்<br />முத்தம்தர அஞ்சும்,<br />தட்டித்தட்டி நீயும் சென்று<br />காட்டுகிறாய் கஞ்சம்.<br /><br />கட்டவிழ் காளை நானும்<br />அடையணுமே தஞ்சம்,<br />பட்டுத்தொட்டு நீயும் என்று<br />தீர்த்திடுவாய் பஞ்சம் ?"<br /></span><br />"சாருக்கு ரொம்ப ஏக்கமும் ஆசையுமாத் தேங்கி நிக்குது போல. எதுனாலும் கல்யாணத்திற்கு அப்புறம் தான். முதலில் உங்க வீட்டில் சம்மதம் வாங்கப் பாருங்க" என்று கஞ்சத்தனத்தைத் தொடர்ந்தாள்.<br /><br />ஷாலினியின் பாதங்களுக்குக் கொலுசாய் வந்து சுற்றிய நுரை தள்ளிய அலையை ரசிக்கவும் முடியாமல், ரசிக்காமல் இருக்கவும் முடியாமல் தவித்திருந்தான் ராஜேஷ்.<br /><br />***<br /><br />இரவு, உணவு வேளையில் பேச்சை ஆரம்பித்தான் ராஜேஷ். "அப்பா, உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இப்ப பேசலாமா ?" என்றான்.<br /><br />"இருப்பா, அம்மாவும் வந்திரட்டும்" என்று சொல்லி, "சாரதா, கொஞ்சம் இங்க வர்றியா ..." என்றார்.<br /><br />"என்னங்க, உப்புப் புளி எதிலாவது குறைவா இருக்கா ?" என்று ஈரக் கைகளைத் துடைத்துக் கொண்டே வந்து உணவு மேசையில் அமர்ந்தார் சாரதா.<br /><br />"அதெல்லாம் சரியாவே இருக்கு. நம்ம ஜூனியர் நம்ம கிட்ட பேசணுமாம். அவரு ஏதாவது சொல்லி நம்ம வயிற்றில் புளியக் கரைக்காமல் இருந்தால் சரி" என்றார் விஸ்வநாதன்.<br /><br />"தோளுக்கு மேல் வளர்ந்தவனை, அதுவும் ஒரு ஐ.டி. கம்பெனியில் சீனியர் மேனேஜரா இருக்க புள்ளைகிட்ட இப்படியா சர்க்காஸ்டிக்கா பேசறது ..." என்றார் சாரதா.<br /><br />'அப்பா மூடு சரியில்லையே. இன்று பார்த்தா இந்த டாப்பிக்க ஓப்பன் பண்ணனும் ? ரொம்ப முரண்டு பிடிச்சாங்க என்றால், ரெஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணனுமோ ?' என்று யோசித்திருந்தான் ராஜேஷ்.<br /><br />"சரி, நானே நேரா விஷயத்துக்கு வருகிறேன். 'அப்பா, நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். அவள் பேரழகி எல்லாம் இல்லை. என் மனதிற்குப் பிடித்திருக்கிறது. அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. நாங்கள் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று நாங்கள் எடுத்த முடிவிற்கு, உங்கள் ஒத்துழைப்புத் தேவை...' என்னடா, சரியா சொல்லிட்டனா" என்று மகனைப் நோக்கிவிட்டு மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.<br /><br />'பெற்றோர்கள் இவ்வளவு ஈஸியா எடுத்துப்பார்களா ?' என ராஜேஷுக்கு ஒன்றும் புரியவில்லை.<br /><br />"அப்பா ..." என்று இழுத்தான் ராஜேஷ். பிறகு அம்மாவை நோக்கி, "அம்மா, உனக்கு மருமக வேலைக்குப் போனால் பிடிகாதே. அப்ப, கதையின் ஆரம்பத்தில் நீ விட்ட பில்ட்அப் ?"<br /><br />"அது உங்க அத்தை தான். மூனு மணி நேரமா போன் போட்டுத் தொல்லை தாங்கல. எப்படி கட் பண்றதுனு யோசிச்சுக்கிட்டிருந்தேன். அதான் அவங்க சொன்னதுக்கெல்லாம் ஆமா போட்டுகிட்டு இருந்தேன். எனக்கெதுக்குப்பா வேலைக்குப் போறவளப் பிடிச்சு வீட்டுல அடைக்கணும்னு ஆசை. அதுக்குத் தகுந்த மாதிரி வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு நீங்க நல்லா இருந்தா, அதைவிட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு..." என்று அன்டார்ட்டிக்காவின் குளிருக்குள் ராஜேஷை நிறுத்தினார் சாரதா.<br /><br />"முன்னரே எல்லாம் தெரியும்பா எங்களுக்கு. உங்க ஆஃபீஸ்ல லதா வேலை பாக்குதுல்ல. அவங்க அப்பாவும், உங்க அப்பாவும் சமீபத்தில ஒரு மீட்டிங்கில் சந்திச்சிருக்காங்க. அப்புறம் அடிக்கடி சந்தித்ததில், ஒரு நாள் உங்க அப்பா, அவருகிட்ட உனக்குப் பொண்ணு கேட்டிருக்காரு. பிறகு, லதா எல்லா விஷயத்தையும் அவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்கு. அவரு உங்க அப்பாகிட்ட சொல்லியிருக்காரு." என்ற சாராதவைத் தொடர்ந்தார் விஸ்வநாதன்.<br /><br />"நீ எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கே என்று எங்களுக்குத் தெரியாது. உனக்கு ஒரு கான்ஃபிடன்ட் வந்து, நீயா எங்ககிட்ட பேசட்டும் என்று தான் காத்திருந்தோம். இப்ப எங்களுக்குப் பூரண சம்மதம். உங்க கல்யாணத்த இந்த பிப்ரவரி 14 வச்சிக்கலாமா ?" என்று குறுநகை பூத்தார் விஸ்வநாதன்.<br /><br />மொட்டவிழ்ந்த வலையில் இருந்து, ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வானில் பறப்பதாய் உணர்ந்தான் ராஜேஷ்.<br /><br />***<br /><br />படம்: நன்றி யூத்ஃபுல் விகடன்.<br /><a href="http://youthful.vikatan.com/youth/Nyouth/feb14/sathangastory110210.asp">பிப்ரவரி 14 காதல் ஸ்பெஷல் - யூத்ஃபுல் விகடனில்<br /><img id="BLOGGER_PHOTO_ID_5437747500318648882" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 171px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQLkcSc-VjaRovyPIhDoz8K-DHE_HvSlv5r4Vf80Ud5KUygEfINhaArRUOuISIZVztE5cFNILAJ9nMuYYgXkMAkUmybRz3ne0TH5yak71fKT_J7VbSSIqohVMxF68mfnIU6p_QQlOP2pnJ/s400/vattakariya-vizhi-http-youthful.vikatan.com-youth-Nyouth-feb14-sathangastory110210.asp.jpg" border="0" /> </a>சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-27276705374694364962010-01-17T13:21:00.057-05:002010-01-19T15:22:29.071-05:00லெட்சுமி மாமி (நாடக அனுபவம்)<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFPD2xQfFzaS6mLMurQx07oaoyj5n5p0I9y1u8BFrKizG_ObOs2E5Stf0PdkpG73TVYDvOyDpCTWwZ6_QgEcDcQg9CznYNGgxQQ3E7TfC-07nMS3bJ7jp_LJneEBGA6im8ZYm26yMTl0iT/s1600-h/IMG_5135.JPG"><img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFPD2xQfFzaS6mLMurQx07oaoyj5n5p0I9y1u8BFrKizG_ObOs2E5Stf0PdkpG73TVYDvOyDpCTWwZ6_QgEcDcQg9CznYNGgxQQ3E7TfC-07nMS3bJ7jp_LJneEBGA6im8ZYm26yMTl0iT/s400/IMG_5135.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5428142014191332114" /></a><br /><br />அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !<br /><br />இதுவரையிலும் செய்திராத ஒரு புதிய படைப்பை ஏற்படுத்த இந்த ஆண்டுப் பொங்கல் விழா அமைந்தது. இப்ப தான் 'எங்கள் ஊர்ப் பொங்கல் விழா'னு பதிவு போட்ட மாதிரி இருக்கு, அதுக்குள்ள ஒரு வருடம் ஓடிவிட்டது.<br /><br />விழாக் கமிட்டியில் இருந்து, கலைக்குழுவின் சார்பில் நண்பர் ஒருவர் சொன்னார், "நீங்க இந்த ஆண்டு ஒரு நாடகம் போடுங்களேன்" என்று. "நாடகமா ? நானா ? (<em>தினம் தினம் வீட்டில் போடுவது பத்தாதா ? வெளியில் வேறு போடவேண்டுமா ? :)))</em>" என சற்றுப் பின் வாங்கினேன். அவர் விடுவதாய் இல்லை. "விகடனுக்கு என்றால் எழுதுவீர்கள். எங்களுக்கு எழுதுங்க என்றால், உங்களுக்கு அதெல்லாம் ஜூஜூபி தானே !" என்று போட்டு வாங்கிவிட்டார் நாடகத்தை :) நம்மை ஏதோ பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு உயர்த்திய நண்பருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் இன்னும் 'எழுத்துலகில் தவழும் ஒரு குட்டிப் பையன்' என :)<br /><br />என்ன எழுதப்போறோம், எது எழுதப்போறோம் என்று யோசனையே இல்லாமல், வழக்கம் போல 'என்ன பதியலாம்' என்று சிந்திக்கும் உங்களைப்போல <em>(சரி, சரி கோச்சுக்காதீங்க, நம்மளைப் போல்)</em> சென்றது சிலநாட்கள். விழாவிற்கு ஒரு வாரம் இருக்கையில் தான் இந்த ப்ராஜக்ட் நம் கைக்கு வந்தது. கதை இல்லை, கதை மாந்தர்கள் இல்லை. ஆனால், வீராப்பாக பதினைந்து நிமிடம் ஸ்லாட் பதிந்து கொண்டாயிற்று.<br /><br />ஒரு அளவிற்கு சிறிய கதையை ரெடி பண்ணி, நண்பர்கள் இருவரிடம் சொல்லி வைத்திருந்தேன் கதைமாந்தர்களுக்கு. ஆளுக்கு மூன்று பேரைப் பிடித்து விட்டோம் <em>(நம்ம ஊரு போலீஸ் மாதிரி வலைவீசி தான் :))</em> என்று இருவருமே சென்ற வெள்ளி சொன்னபோது கொஞ்சம் நிம்மதி.<br /><br />அன்றிரவே நண்பர் வீட்டில் அனைவரும் சந்தித்து கதை விவாதம் நடத்தினோம். கமல், ரஜினி <em>(அதெல்லாம் ஓல்டோ)</em> சரி விஜய், சூர்யா <em>(ம்.ஹிம்மா ?)</em>, சரி ... சரி ... ஒரு சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு சுவிட்ஸர்லாந்தில் கதை விவாவதம் பண்ண முடியவில்லை என்றாலும், நண்பர் வீட்டில் நல்ல விதமாகவே எங்கள் கதை விவாதம் தொடங்கியது.<br /><br />கதைப்படி அறுவர் தேவை. மூன்று பெண்கள், மூன்று ஆண்கள். மாமி வேடத்திற்கு ஆண் நண்பரே வேடமிட்டு நடிக்கவும் தயாராக இருந்தார்.<br /><br />இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து வசிக்கையில் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான் கதையின் நாயகன் லோகு. சிலநாட்கள் கழித்து தன் தாய் லெட்சுமிக்கு விஷயத்தைத் தெரிவிக்கிறான். தனக்குக் குழந்தை பிறக்கையில், தாயை இங்கு அழைத்து வருகிறான். அவரது முதல் விமானம் மற்றும் வெளிநாட்டுப் பயணம் தான் கதை.<br /><br />"வெள்ளைக்காரப் புள்ள தானங்க, புடிச்சிருவோம்" என்றார் நண்பர். அப்புறம், நம்ம இஷ்டத்துக்கு அவங்க ப்ராக்டிஸ் எல்லாம் வருவாங்களா என்றெல்லாம் தெரியாது. அதனால் நம்ம ஊரு பொண்ணு, அதுவும் வடநாட்டுப் பொண்ணுனு கதையில் சிறிது மாற்றம் செய்தோம். ஒரு நண்பியும் கதையின் நாயகி சாந்தியாக நடிக்க சம்மதித்தார்.<br /><br />நாடகத்தின் நடுநடுவே இசை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம். எப்படி செய்யலாம் ? ஒவ்வொரு கோப்பாக வைத்துக் கொண்டு, நேரம் வரும்போது ஒருவர் ப்ளே செய்யலாம். அல்லது வரிசையாக எல்லா கோப்புகளையும் இணைத்து, நடுநடுவே சைலன்ஸ் வைத்து ஒரே கோப்பாக ஆக்கி ஒருவர் கையாளுவது போல் செய்யலாம். எது எப்படியோ, டி.ஜே.வாக இருக்க ஒரு நண்பர் சம்மதித்தார்.<br /><br />மறுநாள் கூடி கதை விவாதம் சிறிது நடத்தி, சிலர் சொன்ன மாற்றங்களைச் செய்து, சரி 'இன்று, முதல் இரு காட்சிகள் செய்து பார்த்துவிடுவோம்' என அமர்ந்தோம். அப்பொழுது நண்பர் ஒருவர் சொன்னார், "ஊரில் இருந்து வந்த ஒரு மாமி இருக்காங்க. அவங்கள வேணா நடிக்கக் கேட்டுப் பார்ப்போம். இதிலெல்லாம் அவங்களுக்கு நிறைய ஆர்வம் உண்டு" என்றார். தொலைபேசியிலும் தொடர்பு கொண்டார்.<br /><br />"அப்படியா, பேஷ் நல்லா செய்யறேனே. எனக்கு என்ன காஸ்ட்யூம் ? எங்க, எப்ப ரிகர்சலுக்கு வரணும் ?" என்றெல்லாம் கேட்டு எங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார் மாமி. கதைக்கு எப்படி அவர் முதுகெலும்போ, அதே போல் ரிகர்சலிலும் எங்கள் அனைவருக்கும் அவர் தான் இன்ஸ்ப்பிரேஷன். பொங்கல் அன்று ரிகர்சலுக்கு நிஜ பொங்கலுடன் வந்து இறங்கினார். டப்பாக்களில் அடைத்து முறுக்கு செய்து வந்தார். கமகம மொறுமொறு என ரிகர்சலும் நடந்தது.<br /><br />காட்சி அமைப்பில் முக்கிய உதவியாக இருந்தார், இக் கதையில் நண்பன் ராகவனாக நடிக்க சம்மதித்த நண்பர். ரொம்ப சிம்ப்பிளான மேடை. ஒரு காட்சி விட்டு மறு காட்சிக்கு ஸ்க்ரீன் எல்லாம் போட்டு வித்தியாசப்படுத்த முடியாது. சொற்ப எண்ணிக்கை மைக்குகள், மேசை, நாற்காலிகள் எல்லாம் சரியான இடத்தில் அமைத்து அதை நாடகத்தின் கடைசிவரை எப்படிப் பயன்படுத்துவது என்று யோசனைகள் சொன்னதில் நடிக நண்பர்கள் அனைவரின் பங்கும் பாராட்டத்தக்கது. <br /><br />"காட்சிகளில் ஒரு தொய்வு தெரியாமல், கடைசி வரை அந்த ப்ளோ சூப்பரா இருந்துச்சுங்க" என்று ஒரு நண்பர் பிறகு சொன்னபோது, அட ! இந்த அளவுக்கு மக்கள் கூர்ந்து கவனிக்கிறாங்களா என்று ஆனந்த வியப்படைந்தோம். <br /><br />மாலை ஆறரை அல்லது ஏழு என்று தொடங்கி ஒரு மணி நேரம் ரிகர்சல். ஐந்து நாட்கள் ரிகர்சலில் அனைவரும் சந்தித்தது முதல் நாள் மட்டுமே. அனைவருக்கும் வேலைப் பளு தான் முக்கிய காரணம். கடைசி நாள் மட்டும் கொஞ்சம் ரிகர்சலுக்கு அதிக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தேன். அப்படி இருந்தும் நாயகியால் வரமுடியவில்லை. "விழா அன்று கண்டிப்பாக வந்துவிடுவேன். எனது டயலாக் எல்லாம் ஞாபகம் இருக்கு ஒன்னும் கவலைப்படாதீர்கள்" என்றார். <br /><br />பயிற்சி விட்டுவிடக்கூடாது என்பதற்காக, ஒருவரே மற்றவர் பாத்திரத்தை செய்ய, சில இடங்களில் பெயரை மாற்றி உச்சரிக்கும் படி ஆனதெல்லாம் தமாஷாக இருந்தது. அம்மாவ மாமினு கூப்பிடறது, ராகவனை லோகுனு சொல்றது என்று. மேடையில் பெயரை மாற்றி சொல்லிவிட்டாலும் சமாளித்துவிடுங்கள் என்று அனைவருக்கும் சொல்லி வைத்தோம்.<br /><br />ஜனவரி 16, 2010 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது எங்கள் ஊர்ப் பொங்கல் விழா. அதில் எங்கள் 'லெட்சுமி மாமி' நாடகமும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWlSyEU1zGY2wEDMFueVLWYvedreKHaVuKYdgxsO_gxqTTv9Jr6LTc6NrEGm1hMPupDtBDUT1pNpZ5xzGWaCZHPCQwjBVJQxxDsCEU5IyHwsXvLQh4bXHFTX2eWvGDy96yt3hz4-5e6zGi/s1600-h/IMG_5136.JPG"><img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWlSyEU1zGY2wEDMFueVLWYvedreKHaVuKYdgxsO_gxqTTv9Jr6LTc6NrEGm1hMPupDtBDUT1pNpZ5xzGWaCZHPCQwjBVJQxxDsCEU5IyHwsXvLQh4bXHFTX2eWvGDy96yt3hz4-5e6zGi/s400/IMG_5136.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5428439672441147794" /></a><br />'லெட்சுமி மாமி' நாடகக் குழுவினர் - From left to right: Uma Shankar, Shan, Nagarajan, Vibha, Pangajam Mami, Mani, Srivatsan <br /><br />தனக்குக் கொடுத்தது மிகச் சிறிய வேடமே என்றாலும், உண்மையான அபீசர் போல, உடையில் இருந்து, அச்சடித்து கொடுக்கும் பாஸ்போர்ட் என்றெல்லாம் செவ்வனே செய்து அசத்தினார், இமிக்ரேஷன் ஆபீசராக நடித்த உமா சங்கர். <br /> <br />இமிக்ரேஷனில் மூவர் என்றிருந்ததைக் குறைத்து இருவராக்கி, இருவரையுமே ஆண் கதாபாத்திரங்களாக ஆக்கியபோது எங்களிடம் அகப்பட்டுக் கொண்டார் இந்த நண்பர். மாமிக்கு குடைச்சல் கொடுக்கும் நுழைவாயில் ஆபீசராக வந்து, பாடி லேங்குவேஜ் மற்றும் கேஷுவல் டயலாக் டெலிவரியில் அசத்தினார் மணி. <br /> <br />ராகவனாக வந்த நண்பர் தனது ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியைக் கையாண்டார். கொண்டு வந்த ரோலர் ஹேண்ட்லக்கேஜ், விமனப்பயணத்தில் போர்த்திக் கொள்ளக் கம்பளிப்போர்வை, மாமியின் குடைச்சல் பொறுத்து நண்பனைப் பார்த்தவுடன், மாமியை ஒப்படைத்துவிட்டு தலைதெரித்து ஓடுவது என கலக்கிவிட்டார் நாகராஜன்.<br /><br />ஆரம்பம் முதல் கடைசி வரையில் மேடையில், கமல் போல வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து அசத்தினார் மாமி. முதலில் போர்த்திய சால்வை, ப்ளேனில் இருந்து இறங்கியவுடன் சால்வையை எடுத்த வெளிச்சுற்று சேலை, பிறகு குளித்துமுடித்து வருகையில் வேறொரு சேலை என்று வித்தியாசம் காண்பித்தார். ஹேண்ட்லக்கேஜில் வைத்துக் கொள்ளும் பொருட்கள் சேகரிப்பிலும் பங்கஜம் மாமி காட்டிய ஆர்வம் பாராட்டத்தக்கது.<br /><br />துறுதுறுப்புள்ள இளைஞர் லோகுவாக வந்த நண்பர். "என்ன பேசணும் ? எங்க பேசணும் ? நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க" என்று எப்பவும் ஒரு பரபரப்புடனேயே இருப்பவர். ஆள் மாற்றி ப்ராக்டிஸ் செய்ததில் அம்மாவை மாமி என்றவர். அப்படியே mommyனு மேடையிலும் ஆக்கிக்கொண்டார் ஸ்ரீவத்ஸன்.<br /><br />"சாந்தியாக நீங்கள் சேலையில் வரணுமே" என்றபோது, <em>('உங்க ஊர்க்காரங்களே எங்க சேலை கட்டறாங்க ?' என்பது போல் பார்த்து) </em>, "சல்வார் ஓகே வா ?" என்றார். ஆரம்பம் மட்டும் தமிழில் சொல்லுங்கள், பிறகு ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றோம். 'ம்.ஹிம். எனக்கு என்ன பேசணும் என்று தமிங்கிலத்தில் எழுதிக் கொடுங்கள்' என்றார். வட இந்தியப் பெண்ணாக இருந்தாலும், தமிழில் பேசி மேடையில் அனைவரையும் அசத்தி விட்டார் விபா.<br /><br />ஒரு சினிமா டைரக்டருக்குக்கூட படத்தின் முதல்நாள் வெளியீடு அன்று இந்த அளவு டென்ஷன் இருக்குமா ? தெரியாது.... ஓரளவுக்கு எங்கள் ஊர் மக்களை சிரிக்க வைக்க முடிந்ததில் எங்கள் குழுவினர் அனைவருக்கும் நிறைவான மகிழ்ச்சியே.<br /><br />கலைக்குழு நண்பர்: குமரேஷ்; நடிக நண்பர்கள்: பங்கஜம் மாமி, விபா, ஸ்ரீவத்ஸன், நாகராஜன், உமா சங்கர், மணி; நடிகர்கள் சம்மதம் மற்றும் டி.ஜே வாக இருந்த நண்பர்கள்: குமரேஷ், அருள்; மேடை அலங்காரம் மற்றும் வீடியோ உதவி செய்த நண்பர்: யோகா; மற்றும் யோசனைகள் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள்.<br /><br />நாடகத்தின் வீடியோ வடிவம் யூடியூபில்: <br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/z8Z9CT8txzo&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/z8Z9CT8txzo&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/biF7sVAAAhA&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/biF7sVAAAhA&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-56891754139179791972009-11-11T19:01:00.010-05:002009-11-11T20:43:11.330-05:00மெட்ரோ ... (யூத்ஃபுல் விகடன் Nov-09 மின்னிதழில்)<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0YdxO5_zcfIegIczU41DToLmnmm_pD7aJZB8dtNEcy1KqBSiLwf37d_eSTNLWRhFLrvdpkqrgbNaT5vy-iyTgmgUpT8o-lBjQuEJeWHcO29TEnTiwACoIJ8qpku42QnX2DNw-nnVXrPHd/s1600-h/metro-yv-minnithal-nov09.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0YdxO5_zcfIegIczU41DToLmnmm_pD7aJZB8dtNEcy1KqBSiLwf37d_eSTNLWRhFLrvdpkqrgbNaT5vy-iyTgmgUpT8o-lBjQuEJeWHcO29TEnTiwACoIJ8qpku42QnX2DNw-nnVXrPHd/s400/metro-yv-minnithal-nov09.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5403026534146788706" /></a><br /><br />"நீ இன்னிக்கு சாயந்திரம் ஏழு மணிபோல வந்தா அவளைப் பார்க்கலாம். இல்லேன்னா ஆறேழு மாசம் ஆகும்" என்ற நித்யாவின் நினைவூட்டலில் கிளம்பினேன். நித்யாவின் வீட்டிற்கு செல்லும் சாலை, வழக்கம் போல போக்குவரத்து அதிகம் இருந்தது. நண்பர்கள் மூவருடன் மெட்ரோவில் செல்லத் தீர்மானித்தேன். மெட்ரோவில் செல்வது இதுவே முதல்முறையும் கூட.<br /><br />'மனதிற்குள் ஆயிரம் மத்தாப்புக்கள் வண்ணங்கள் சிந்தின. அவளைப் பார்த்தபின், அவளின் முடிவிற்கேற்ப முதலில் வீடு மாற்றணும். பேஸ்மென்ட் இருப்பது போன்ற வீடாய் வாங்க வேண்டும். தணிகை வைத்திருப்பது போல அதில் ஒரு ஹோம் தியேட்டர். மாடியில் ஒரு கேம் ரூம்'. றெக்கை இல்லாமலே விநாடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பறந்தது மனம்.<br /><br />"யெல்லோ லேன் எடுத்து ஃபோர்ட்(டட்)டன் இறங்கி, பச்சை லேனில் மாறி காலேஜ் பார்க்கில் இறங்கிக் கொள்ளுங்கள்" என்றார் கௌண்டரில் இருந்த பெரியவர்.<br /><br />ரயில் தளத்திற்குப் நாங்கள் நால்வரும் படியிறங்கி வருகையிலே, வலதுபுறம் 'ஃபோர்ட் டட்டன் மஞ்சள் 2 நிமிடங்கள்' என்று அறிவிப்புப் பலகை மிணுக்கியது.<br /><br />சிறுத்த கடுகுகளாய் தூரத்தில் ஆங்காங்கே சிலர் சிந்தித்து நின்றிருக்க, அகண்ட ரயில் தளத்தில் கூட்டம் அதிகமில்லை. இலையுதிர் காலமாதலால் இரவு சீக்கிரமே வந்தனம் சொல்லியது.<br /><br />"சரியான நேரத்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்" என்று என் தோளில் தட்டினான் நண்பன் பவி.<br /><br />"அவன் எங்கே தேர்ந்தெடுத்திருக்கிறான், 'எல்லாம் அவள் செயல்'" எனப் புதுப்பெண் போல நாணி நடித்துக் காண்பித்தான் நரேஷ்.<br /><br />"இவன் ஒருத்தன், அப்படி எல்லாம் இல்லடா. இப்பதான் கூட்டம் கம்மியா இருக்கும். அதான்...." என்றேன்.<br /><br />என்னதான் விஞ்ஞான வளர்ச்சி என்றாலும், மழைக்கு மணக்கும் மண்வாசனை போலே... தடக் தடக், தடக் தடக் என்று தனக்கே உரிய இறைச்சலுடன் சற்றைக்கெல்லாம் வந்து நின்றது 'யெல்லோ லேன்' மெட்ரோ.<br /><br />கோட்டு சூட்டிலிருந்து, கோடியில் கிழிந்த ஆடை அணிபவர் வரை, கொத்தாய் மக்கள் கூட்டம் இறங்க, நம்ம ஊர் டீக்கடையில் பேப்பர் படிக்கும் ஆசுவாசத்தில் ஏறி, இரண்டு மூன்று வரிசை தாண்டி, ஆளுக்கு ஒவ்வொரு இருக்கையில் அமர்ந்தோம்.<br /><br />படம் முடிந்து வெளியேறிய கூட்டம் விட்டுச் சென்ற எச்சங்களாய், கசங்கிய செய்தித்தாள் குப்பைகள், தின்று முடித்த பிஸ்கட் காகிதங்கள், கடலைத் தோல்கள், ஐஸ் குச்சி, தீர்ந்த லிப்ஸ்டிக் குடுவை, இன்ன பிறவும், ஆடி ஆடி நாங்கள் இருந்த கம்பார்ட்மென்ட்டில் பயணித்தன.<br /><br />அடுத்த இரண்டு நிறுத்தங்களில் பலர் ஏற, ஓரளவு கூட்டமானது மெட்ரோ. இருப்பினும், மெட்ரோவின் இறைச்சலுக்குப் போட்டியாக இருந்தது எங்களின் அரட்டைக் கச்சேரி.<br /><br />"மச்சி, தாம்பரம் பக்கத்தில நாலஞ்சு வருஷம் முன்னர் ரெண்டு லட்சத்துக்கு ஒரு கிரவுண்டு வாங்கிப் போட்டேன். இன்னிக்கு ரேட்டு என்ன தெரியுமா ? கிட்டத்தட்ட முப்பது லட்சம்" என்றான் பவி.<br /><br />"இதென்ன பெரிய விஷயம். மாம்பலத்தில் ஒரு சின்ன இடம், மூனு வருஷத்துக்கு முன் ஏழு லட்சத்துக்கு வாங்கினேன். இப்ப 'நாப்பது தர்றேன், அம்பது தர்றேன்'னு ஒரு நாளைக்கு நாலைஞ்சு பேரு வந்து பார்க்கிறாங்களாம். 'பேசாம குடுத்திருப்பா'னு எங்க அப்பா அலுத்துக்கறார்" என்றான் நரேஷ்.<br /><br />ரியல் எஸ்டேட் முடித்து, ட்விட்டர், `ஃபேஸ்புக், ப்லாகிங் என எண்ணப் பகிர்வுகள் மற்றும் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என சினிமா அப்டேட்கள், அரசியலின் சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று பேச்சுக்கள் தொடர, எங்களுக்கெல்லாம் முன் அமர்ந்திருந்த இருவரின் சம்பாஷணைகள், திடீரென எங்கள் கவனத்தை ஈர்த்தன.<br /><br />"என்ன மொழிப் புத்தகம் இது ? எழுத்துக்கள் சுருள் சுருளாக இருக்கின்றன" என்று தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளம் வெள்ளைக்காரப் பெண்மணியை, தூய ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர்.<br /><br />"தமிழ்" என்று கேட்டது தான் தாமதம். சடன் ப்ரேக்கிற்கு நின்ற ரயில் வண்டியாய் சட்டென்று நின்று போனது எங்கள் அரட்டை. எல்லோருக்கும் அவளிடம் சென்று பேச வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்க வேண்டும்.<br /><br />இல்லையெனில், இறங்கும் இடம் இன்னும் இருக்கிறதென்றாலும், அருமையான திருப்பம் கொண்ட திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் போல சீட்டு நுனியில் அமர்ந்திருப்போமா ? மெட்ரோவின் 'தடக் தடக்' இப்போது எங்கள் மனங்களில்.<br /><br />"என்ன, திருக்குறள் புத்தகமா இருக்கும்" என்றான் ஆரோக்கியராஜ்.<br /><br />"தோடா... இவ்ளோ நேரம் அடச்ச பேஸ்ட் மாதிரி வந்துகிட்டு இருந்தான் ! இப்ப என்னடானா ஒடஞ்ச முட்டை மாதிரி வார்த்தைகளக் கொட்டறான்" என்று ஆரோக்கியராஜை சீண்டினான் நரேஷ்.<br /><br />"டேய் பார்த்துப் பேசுங்கடா, அவளுக்குத் தமிழ் தெரியும்" என்று எங்கள் காதுகளில் கிசுகிசுத்தான் பவி.<br /><br />"நாங்க ஒன்னும் தப்பாப் பேசிடலயே ! நிறுத்தறியா நீ..." என்று பவியையும் ஒரு கை பார்த்தான் நரேஷ்.<br /><br />இப்போது அவள் எங்களைக் கவனிக்க ஆரம்பித்திருந்தாள்.<br /><br />அடுத்த நிறுத்தம் ஃபோர்ட் டட்டன்.<br /><br />அவளும் அங்கு இறங்க. ரயில் தளத்திலேயே, மொய்க்கும் வண்டுகளாய் அவளை நாங்கள் சுற்றி கொள்ள, நான்கு வாலிபர்களைப் பார்த்ததும், எந்த ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் பயம் அவள் முகத்தில் தோன்றியது.<br /><br />"ஒன்றும் தவறாக நினைக்காதீர்கள். நாங்க எல்லோரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மெட்ரோவில் உங்களின் உரையாடல்களைக் கேட்டதிலிருந்து உங்களுடன் பேசவேண்டும் என எங்கள் எல்லோருக்கும் ஆவல்" என்று பவி கனிவாகக் கூற, செவி மடுத்துக் கேட்டுக் கொண்டாள்.<br /><br />"தமிழ் மொழி உங்களுக்கு எப்படித் பரிட்சையமானது ? யாரிடம் கற்றுக் கொண்டீர்கள் ? உங்க வீட்டில் யாரும் தமிழ் பேசுவாங்களா ? படிப்பாங்களா ? இதனால் உங்களுக்கு என்ன பயன் ?" என்று நாங்கள் அனைவரும் உலக நிருபர்கள் அனைவருக்கும் இணையாக மாறி கேள்விக் கணைகள் தொடுக்க ...<br /><br />"பொறுங்க, பொறுங்க. உங்க கேள்விகளுக்கெல்லாம் பொறுமையா பதில் சொல்றேன்" என்று காத்திருப்புப் பலகையில் அமர்ந்தாள்.<br /><br />"வேலை நிமித்தம் சென்னையில் சில ஆண்டுகள் வசித்த போது, பக்கத்து வீட்டில் வசித்தவர் ஒரு தமிழாசிரியர். அவர்கிட்டயே தமிழ் படிக்க ஆரம்பிச்சேன். நீங்க நம்ப மாட்டீங்க, ஒரு பைசா அவர் வாங்கிக் கொள்ளவில்லை. என் ஆர்வத்தைப் பார்த்து பணம் எதுவுமே வேண்டாம் என்று கூறிவிட்டார். அந்த சொல் இப்ப நினைத்தாலும் என் மனதிற்குள் இனிமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதையே நானும் கடைபிடிக்கவும் செய்தேன், செய்கிறேன். முக்கியமா உங்க ஊர் கிராமப்புறங்களில்." என்றாள்.<br /><br />பச்சை லேன் மெட்ரோ வர, நண்பர்களைப் பார்த்தேன். கண்களிலேயே 'ரொம்ப அவசியம் ! என்ன பெரிய தமிழ். அவளுக்கு ஆர்வம் இருக்கு படிக்கறா. இதப் போய் பெரிசு படுத்திகிட்டு. கெளம்புங்கடா ... நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது. நான் அவளைப் பார்க்கவேண்டும்' என்று கடிந்து கொண்டிருந்தேன். அட்சர சுத்தமாய் பாடம் எடுக்கும் ஆசிரியரையும் பொருட்படுத்தாது, கனவுலகில் சஞ்சரிக்கும் கடைசி பெஞ்ச் மாணவர்களைப் போன்ற நிலையில் இருந்தனர் மூவரும்.<br /><br />"அடடே நான் போற மெட்ரோ தான் இது. நீங்கள் எங்கு செல்கிறீர்கள் ?" எனக் கேட்டுக் கொண்டே உள்ளே ஏறினாள். அனுமார் வால் போல அவளைப் பின் தொடர்ந்து நாங்களும் ஏறிக்கொண்டோம்.<br /><br />"அது என்ன புக் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா ?" என்றான் பவி.<br /><br />"நீங்களே பாருங்க" என்று புத்தகத்தை எங்களிடம் நீட்டினாள்.<br /><br />'ஆம்பர்' என்று கூட்டெழுத்தில் அவளைப் போலவே அழகாக இருந்தது அவள் பெயர். பின்பு தான் 'பட்டினத்தார்' என்ற புத்தகத் தலைப்பையே கவனித்தோம்.<br /><br />ஆம்பருக்குத் தமிழ் தெரியும் என்பதையும் மறந்து, "பெரிய ஔவையாராட்டு இருக்குது ..." என்று வாய்விட்டு வியந்தான் நரேஷ்.<br /><br />ஔவை போல வயதில்லை. சுற்றிய எண்முழப் புடவை இல்லை, கையில் கைத்தடி இல்லை .... நல்ல வெளிறிய நீல ஜீன்ஸ். முழங்கை வரை நீண்ட வெள்ளை மேல் சட்டை. க்ளிப்பிட்டுச் சுருட்டிய தலைமுடி. மைதீட்டிய ஊதாக் கண்கள். காற்றிலாடும் காது வளையங்கள் என வயதுக்கேற்ப தன்னை அழகுபடுத்தித்தானிருந்தாள்.<br /><br />"இதில் உங்களுக்குப் பிடித்த பாடல் ஏதாவது சொல்ல முடியுமா ?" என்றேன் நான்.<br /><br />"உங்க பேரு ?" என்றாள்.<br /><br />அடடா, இதுவரை யாரும் அவளிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளாததை நினைத்து வருந்தினோம்.<br /><br />"நான் சந்திரன். இவர்கள் பவி, நரேஷ், ஆரோக்கியராஜ். நாங்கள் நால்வரும் தமிழகத்தில் கல்லூரி ஒன்றாகப் படித்து, இங்கு வேறு வேறு அலுவலகங்களில் வேலை பார்க்கிறோம். சந்திரனின் நண்பி ஒருவரைப் பார்ப்பதற்காக இப்பொழுது போய்க்கொண்டிருக்கிறோம்." என்றேன்.<br /><br />"இந்தப் பாடல் என்றில்லை. ஓரளவு எல்லாமே எனக்குப் பிடிக்கும். குறிப்பா சொல்ல வேண்டும் என்றால் 'யாவர்க்கு மாம்' என்ற பாடல் ரொம்பப் பிடிக்கும். அதைக் காட்டிலும் நெஞ்சில் சட்டென்று ஏறி அமர்ந்த பாடல் 'அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே' என்றும் சொல்லலாம்.<br /><br />'என்னென்னவோ சொல்றாளே' என்று விழிபிதுங்கிய பவிக்கு, "டேய், கவியரசரோட 'வீடு வரை உறவு'" பாட்டோட முந்தைய வெளிப்பாடு தான் அப்பாடல் என்றேன்.<br /><br />கூட்டம் குறைந்து, சட சடவென இலையுதிர் கிளை போல் ஆனது மெட்ரோ. இன்னும் ஒரு நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.<br /><br />"எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால், யாரும் அதற்கேற்ப வாழ்வது இல்லை. அதான் எல்லா ஊரிலும் பிரச்சனை. பட்டினத்தார் என்னிக்கு 'செல்வத்தின் நிலையாமை' பற்றி எழுதி வைத்தாரோ, அன்றிலிருந்தே 'சேர்த்து வைக்கனும்' என்று உஷாராயிட்டான் மனுஷன். பிறருக்குக் கொடுத்துத் தம் வாழ்வையும் நீத்த வள்ளல்களைப் பார்த்து, தம் வாழ்வும் பாழாகிவிடும் என்று ஈவதையே மறந்தான். பிரிக்க முடியாதது என்ற தருமியின் கேள்விக்கு 'அக்கால ஆசிரியரும் வறுமையும்' என்று சொன்னால், இதனைப் பார்த்து உஷாரானார்கள் ஆசிரியப் பெருந்தகைகள். சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட். ஒத்துக்கறேன். நிலைமை இப்படியே போனால், பிழிந்தெடுத்த கரும்புச் சக்கை போலல்லவா ஆகிவிடும் வாழ்க்கை. கொடுக்கவும் கற்றுக் கொள்ளணும் இருத்தி வைக்கவும் கற்றுக் கொள்ளணும்' . அது தான் வாழ்க்கை. அதைத் தான் நான் செய்கிறேன்" என்று ஆம்பர் நிறுத்த, மெட்ரோவும் 'காலேஜ் பார்க்' நிறுத்தத்தில் நின்றது.<br /><br />"நண்பர்களே, உங்களை எல்லாம் சந்தித்தது ரொம்பவே மகிழ்ச்சி. உங்களை எல்லாம் போட்டு வாட்டி வதக்கிட்டேன்னா என்ன மன்னிச்சிருங்க. ஒரு ஆர்வத்தில என் மனசுக்குள்ள இருந்தத கொட்டிட்டேன். என் நண்பன் காத்திருப்பான். வரட்டா" என்று எவருக்கும் காத்திராமல் காற்றில் கரைந்தாள் ஆம்பர்.<br /><br />"டேய் எனக்கு அந்தப் பொண்ண பார்க்க விருப்பம் இல்லடா. இப்படியே திரும்பிடலாம். இப்பவே யாருக்காவது உதவி செய்யணும். மத்ததெல்லாம் அப்புறம் பார்க்கலாம்" என்றேன்.<br /><br />"இதத் தானடா இத்தன நேரம் பாடம் எடுத்துட்டுப் போறா ஆம்பர். 'கொடுக்கவும் கற்றுக் கொள்ளணும் இருத்தி வைக்கவும் கற்றுக் கொள்ளணும்' என்று" என அவளின் வாசகத்தை எதிரொலித்தான் பவி.<br /><br />"ரியல் எஸ்டேட், சினிமா, ட்விட்டர் எல்லாம் இருக்கட்டும். அத்தோடு மற்றவர்களுக்கு உதவுவது பற்றியும் இனிமே நாம பேசுவோம்" என்றான் ஆரோக்கியராஜ்.<br /><br />'தடக் தடக்' என்று மெல்ல நகர்ந்து வேகம் பிடித்தது மெட்ரோ.<br /><br /><a href="http://youthful.vikatan.com/youth/Nyouth/min_nov_10112009.asp">யூத்ஃபுல் விகடன் Nov-09 மின்னிதழ்</a>சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-25650842369992646592009-10-29T13:52:00.022-04:002009-10-30T09:57:58.314-04:00கட்டழகி ...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZLq9fCrgvUJ77EC7NXJwxmc6RomzSIRMICk-MDeBvg-bdETZgrAQIgiP57MnyRJzr0aFf3VCNLDE1tbfGY_rEhU022EvS5N0DDsIPP5CyJbk6B_X12UxDFoIbmFwEfhKWUHgnB_556TiB/s1600-h/tree-and-house-bernatcasero.com.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5398367175072823410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZLq9fCrgvUJ77EC7NXJwxmc6RomzSIRMICk-MDeBvg-bdETZgrAQIgiP57MnyRJzr0aFf3VCNLDE1tbfGY_rEhU022EvS5N0DDsIPP5CyJbk6B_X12UxDFoIbmFwEfhKWUHgnB_556TiB/s400/tree-and-house-bernatcasero.com.jpg" border="0" /></a><br />Photo Credit: Bernat Casero<br /><br />கடந்த சில வாரங்களாகவே அவளிடம் அந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னைப் போல அவள் இப்போது இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் அவளைப் பார்க்க வேண்டும்.<br /><br />போன மாதம் கூட அவளைப் பார்த்த போது அப்படி ஒரு வசீகரம். கரும்பச்சையில் தலைமுடிச் சாயம். சிலர் தங்கள் தலைக்கும் அடிக்கும் வண்ணங்களைப் பார்த்தால் சகிக்காது, ஆனால் இவளுக்கோ வெகு நேர்த்தியாக இருந்தது. ஆங்காங்கே கோர்த்த சிவப்பு முத்துக்கள் தலைமுடியுள் தொங்கின. தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அவளுக்கு நிகர் அவளே.<br /><br />முதன் முதலில் அவளை எங்கே சந்தித்தேன் ... ம்ம்ம்ம் ...<br /><br />இந்த ஊருக்கு வந்த புதிதில், பால் வாங்க கடைக்குச் சென்ற போது, ஒரு தெரு முனையில் தான் அவளைப் பார்த்தேன். அவளது வனப்பும், வடிவும், கலகலப்பும், பார்த்துக்கொண்டிருக்கும் போதே, என் இதயத்தைக் பறித்துக் கொண்டாள் அந்தக் கொள்ளைக்காரி.<br /><br />இரண்டு தெருக்கள் சேரும் முனையில் இருந்தது அவளது வீடு. அவள் வசிப்பதாலோ என்னவோ அவள் வீடும் அழகாகவே இருந்தது. வீட்டின் ஜன்னல் சாய்ந்து, கை காட்டி சிரித்துப் புன்னகைத்தாள். யாராவது கவனிக்கிறார்களா என சுற்றி முற்றி பார்த்துக் கொண்டேன். நல்ல வேளை யாரும் கவனிக்கவில்லை.<br /><br />பச்சை வண்ணம் மாற, அங்கிருந்து நகர மறுத்த என்னை, 'நான் இங்கே தான் இருப்பேன். நாளை சந்திக்கலாம்' எனக் கை அசைத்து அனுப்பி வைத்தாள். எனக்குப் பின் நின்ற வண்டிக்காரன் ஹாரன் அடித்து என் வயிற்றெரிச்சலை வேறு கட்டிக் கொண்டான்.<br /><br />அன்றிலிருந்து அவளது தெருப்பக்கம் அடிக்கடி போக ஆரம்பித்தேன். எப்போது சந்தித்தாலும் அவள் அதிகம் பேசுவதில்லை. நான் பேசாமல் இருப்பதில்லை. காதுகளில் கிசுகிசுப்பாள், கலகலவெனச் சிரிப்பாள், திடீரென சோவென அழுவாள். அவளுடன் இருந்தால், மணிக்கணக்கும் நொடிப் பொழுதே. நாட்கள் செல்லச் செல்ல நெருங்கிய நண்பர்கள் ஆனோம். ஆறே மாதங்கள் தான் என்றாலும் ஆறேழு வருடத்திற்கு இணையாக இருந்தது எங்கள் நட்பு.<br /><br />"திருமணம் ஆனவன் நீ. இப்படி அவளையே சுற்றி வந்தால் உன் மனைவி என்ன நினைப்பாள்" எனக் கடிந்து கொண்டான் நண்பன். என் காதுகளில் எதுவுமே விழவில்லை. அழகான மனைவி ஒரு புறம் இருந்தாலும், இவளின் மேல் பிரியமும் தவிர்க்க முடியாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.<br /><br />சொல்ல மறந்துவிட்டேனே ! வனப்பும், வடிவும் தானே தவிர, அவள் அங்கமெல்லாம் தங்கம் இல்லை, கருப்பி தான். ஆனால் கட்டழகி. அந்தக் கட்டழகிற்கு தான் இப்போது பங்கம் வந்திருக்கிறது.<br /><br />அவளைப் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அலுவலக நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டு இன்று தான் ஊர் திரும்பியிருந்தேன். "இப்ப தான வந்தீங்க, அதுக்குள்ள எங்கே கிளம்புறீங்க ?" என்ற மனைவியின் வார்த்தைகளை உதாசீனம் செய்து அவளைப் பார்க்கக் கிளம்பினேன். கையோடு காமெராவையும் எடுத்துக் கொண்டேன்.<br /><br />வண்ணச் சாயங்கள் அடித்து அடித்து முடி எல்லாம் பழுப்பாகிக் கொட்டியிருந்தது. இப்போது அவளிடம், கிசு கிசு பேச்சு இல்லை, கல கல சிரிப்பு இல்லை. இப்படி ஆகும் என்று முன்னரே தெரியும். இருப்பினும் இந்த நிலையில் அவளைப் பார்க்க என் மனம் பழகியிருக்கவில்லை.<br /><br />'அழகாய் இருக்கும்போது குழையக் குழைய வளைய வந்தாய். இப்ப எல்லாம் போச்சு. நீயும் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாயா ?' என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.<br /><br />யாருமே அங்கில்லை. துளியும் யோசிக்காமல், கிட்டே சென்று அவளை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். முன்னரே தானியங்கியில் போட்டுவிட்ட காமெராவில், க்ளிக், க்ளிக் என்று சில படங்கள் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன். 'இன்னும் சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதே' என்று அவள் என்னைத் தேற்றி அனுப்பியது ஆறுதலாய் இருந்தது.<br /><br />"வந்ததும் வராததுமா, அந்த மொட்டை மரத்தைப் படம் பிடிக்கத் தான் போனீங்களாக்கும் !" என்று தாளிக்கும் கடுகோடு சேர்ந்து கொண்டாள் என் மனைவி.சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-56973877107530751782009-10-20T10:11:00.022-04:002009-11-12T00:21:49.963-05:00தீபாவளி சிறப்புப் பதிவு - 2009 - 2<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyNffunKvHehGX7ScuksKvFNqoiQVVhIpcpOCc2Ys9W3E3iQ9yC8jrGolx4F7qAYmnnPsrz0jpKUW4Pie_GBwhaXAZknllyFHN9SRZsaKW-u_ix4cexpvevykDBXsWOHM2gFMq7KnvP1vg/s1600-h/deepawali-2009-3.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5392846169134598386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyNffunKvHehGX7ScuksKvFNqoiQVVhIpcpOCc2Ys9W3E3iQ9yC8jrGolx4F7qAYmnnPsrz0jpKUW4Pie_GBwhaXAZknllyFHN9SRZsaKW-u_ix4cexpvevykDBXsWOHM2gFMq7KnvP1vg/s400/deepawali-2009-3.JPG" border="0" /></a><br /><br />நீங்க எல்லாம் பதில் சொல்லி மத்தவங்களையும் மாட்டி விடுங்கப்பா, நான் (ரிலாக்ஸ்டா) உட்கார்ந்து படிக்கிறேன் என்றிருந்தால், 'What goes around, comes back around !' என்ற ஜஸ்டின் டிம்பர்லேக்கின் பிரபல பாடல் வரிகளுக்கேற்ப, கேள்விக்கணைகளை நம் பக்கமே திருப்பி விட்டாங்க <a href="http://vazhakkampol.blogspot.com/2009/10/2009.html#comment-1872063660420444270">ராமலஷ்மி அக்கா</a>. தெரிஞ்சிருந்தா இன்னும் சுலபமா கேள்விகளைத் தயார் செய்திருக்கலாமே !!! :))<br /><br /><ol><br /><li><strong><span style="color:#3366ff;">உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?</span></strong><br /><br />தமிழில் ஆர்வம் தவிர்த்து பெரிய ஞானம் எல்லாம் இல்லாதவன். சிறுவயதில் இருந்து பண்டிகை நாட்களுக்கு (மட்டுமே) வாழ்த்து அட்டைகளில் கவிதை எழுத ஆரம்பித்து, பின்னர் சில கவிதைகள், கதைகள் எழுதி பத்திரிகைகளில் வராமல், நொந்து நூல் பிரியும் நேரத்தில் நுழைந்தது பதிவுலகம். கொட்டித் தீர்த்துட்டோம்ல .....</li><br /><br /><li><strong><span style="color:#3366ff;">தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம் ?</span></strong><br /><br />ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று அதிகாலை நாலு நாலரைக்கெல்லாம் எழுந்து (எங்கே எழுந்து ? எழுப்பிவிடப்பட்டு :)) எண்ணை தேய்த்துக் குளித்து, 'போன முறை மஞ்சள் ஜாஸ்தி வச்சிட்டீங்க, இந்த தடவை கொஞ்சமா வைங்க'னு அடம்பிடிச்சு, நெடுஞ்சான் கிடையாக விழுந்து, புத்தாடைகளை தாத்தா அப்பாவிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டு, சமையல்கட்டில் பிஸியாக இருக்கும் பாட்டி, அம்மா, பணிப்பெண் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி, (இப்ப அவங்களை நினைத்தால் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அப்போதெல்லாம் நாம் செல்லப்பிள்ளைகள் ஆச்சே :)), காலை உணவை வீட்டில் முடித்துக் கொண்டு, பக்கத்தில் இருக்கும் உறவினர் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்கள் சொல்லி, நண்பர்கள் ஜோதியில் கலந்தால், வீடு திரும்ப சாயந்திரம் ஆகும். இவையெல்லாம் பதினைந்து இருபது வருடத்து முந்தைய கதை.<br /></li><br /><br /><li><strong><span style="color:#3366ff;">2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?</span></strong><br /><br />பென்டன்வில் ஆர்கென்ஸா, அமெரிக்கா.</li><br /><br /><li><strong><span style="color:#3366ff;">தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள் ?</span></strong><br /><br />நாங்கள் வசிக்கும் பகுதி இந்தியர்கள் ஒன்று சேர்ந்து, இங்கிருக்கும் கோவிலில் கொண்டாடலாம் என்றிருந்தோம். கடுமையான குளிரின் காரணமாக அது ஒத்திப் போடப்பட்டது. பிறகு, நண்பர் ஒருவரின் அழைப்பில் அவர்களது வீட்டில் ஏழெட்டு குடும்பங்கள் சேர்ந்தும் தீபாவளி தீபாவளி தான். வெடிக்காத பட்டாசுகள் போட்டு (ஜூலை 4த் மற்றும் புத்தாண்டு தவிர பட்டாசு போடத் தடையாம். மீறி வெடிச்சா புடிச்சு உள்ள வச்சிருவாங்களாம் :)) நம்மூர் கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வானம் எல்லாம் போட்டு குழந்தைகளுக்கு ஒரே கொண்டாடாட்டம்.</li><br /><br /><li><strong><span style="color:#3366ff;">புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?</span></strong><br /><br />கோல்ஸ், வால்மார்ட்</li><br /><br /><li><strong><span style="color:#3366ff;">உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?</span></strong><br /><br />ரொம்பலாம் இல்லைங்க. குலோப் ஜாமுன், ரிப்பன் பக்கோடா, இன்ன பிற...<br /><br />இதோ, கொஞ்சம் குலோப் ஜாமுன் உங்களுக்காக, எடுத்துக்கங்க ...<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjwYlp2d22SdQpUj0Jy57S9AkvMi9MhkjZ9_8iLTjy-pvl74fGGaTgoqMMQrAgb0SUFVj2e2EzpM1bcEOUrVQsjvzhk7MK7T2fF6T_l51-6EdhmA4dIA-h68I2KlBhpPTP5z3qJBtqBazv/s1600-h/GlobeJamoon.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5393696223674445698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 256px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjwYlp2d22SdQpUj0Jy57S9AkvMi9MhkjZ9_8iLTjy-pvl74fGGaTgoqMMQrAgb0SUFVj2e2EzpM1bcEOUrVQsjvzhk7MK7T2fF6T_l51-6EdhmA4dIA-h68I2KlBhpPTP5z3qJBtqBazv/s400/GlobeJamoon.JPG" border="0" /></a><br /><br />இந்தக் காலத்து ஆண்களை நினைத்தால் பாவமாக இருக்கிறதா ? இல்லேன்னாலும் அதாங்க உண்மை :)))<br /><br />அம்மணி அடிக்க வந்திறப் போறாங்க :) எஸ்கேப்ப்ப்ப்ப்.</li><br /><br /><li><strong><span style="color:#3366ff;">உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?</span></strong><br /><br />மின்னஞ்சல், தொலைபேசி</li><br /><br /><li><strong><span style="color:#3366ff;">தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?</span></strong><br /><br />ரெண்டுமே. நண்பர்கள் வீடுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.</li><br /><br /><li><strong><span style="color:#3366ff;">இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் ? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?</span></strong><br /><br />பண்டிகை என்றில்லாமல் இணையத்தின் மூலம் அவ்வப்போது உதவிகள் செய்து வருகிறோம். ஊரில் இருந்தால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யவும் ஆசை.</li><br /><br /><li><strong><span style="color:#3366ff;">நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள் ?</span></strong><br /><br />'ஜாம்பவான்கள்' என்று எழுதியிருந்தேன். <a href="http://vazhakkampol.blogspot.com/2009/10/2009.html#comment-1981911510113898452">'சக்கரவர்த்தினிகள்'</a> என்று சீனா ஐயா அழகாகக் குறிப்பிட்டார்கள். சக்கரவர்த்தினிகள் சுடச் சுட பதிவிட்டு/பதிவிட தயாரகிறார்கள்.<br /><br />இதோ இங்கே:<br /><br />கவிநயா : <a href="http://kavinaya.blogspot.com/2009/10/2009.html">http://kavinaya.blogspot.com/2009/10/2009.html</a><br />நானானிம்மா : <a href="http://9-west.blogspot.com/2009/10/2009.html">http://9-west.blogspot.com/2009/10/2009.html</a><br />துளசி டீச்சர் : <a href="http://thulasidhalam.blogspot.com/2009/10/beech-mein-kaun-hai.html">http://thulasidhalam.blogspot.com/2009/10/beech-mein-kaun-hai.html</a><br />வல்லிம்மா : <a href="http://naachiyaar.blogspot.com/2009/11/blog-post.html">http://naachiyaar.blogspot.com/2009/11/blog-post.html</a><br /></li><br /></ol>சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-68167748234130034092009-10-14T14:38:00.036-04:002009-10-15T11:43:24.584-04:00தீபாவளி சிறப்புப் பதிவு - 2009வலையகத்தில் கொஞ்ச காலம் ஆச்சு தொடர் ஓட்டி. அதனால தீபாவளியை முன்னிட்டு ஒரு தொடரை ஆரம்பித்து வைப்போம்.<br /><br />முக்கியமா ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் இந்த நேரத்தில் பார்த்தால், நடிகர் நடிகையரின் பேட்டி சரம் சரமாய் தொகுத்தளிப்பார்கள். பண்டிகை அல்லாத நாட்களிலேயே அவர் அறுபது, இவர் ஐம்பது என்று சின்னத்திரை கதறுகிறது :)) தீபாவளி என்றால் கேட்கவும் வேண்டுமோ ?<br /><br />நம்ம எல்லாம் பெரிய ஆட்கள் ஆனால் (இப்பவே அதுக்கு என்ன கொறச்சல் என்கிறீர்களா ? :)), நம்மை யாராவது பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும் ? நாட்டுக்கு ரொம்ப அவசியம் என்கிறீர்களா ? அதுவும் சரி தான் :)) அவசியம் என்பதைத் தாண்டி ஜாலியா இத்தொடரைக் கொண்டு செல்வோமே ?<br /><br />வழக்கம் போல ஒரு சில விதிகள் மற்றும் நண்பர்களை இழுத்து ...மன்னிக்கவும், அழைத்து வருவது :)) ஐந்து விதிமுறைகள் பத்துக் கேள்விகள். ரொம்ப சிம்ப்பிள். குறைந்தபட்சம் உங்களது பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள்.<br /><br /><b>விதிமுறைகள்:</b><br /><br /><ol><br /><li>கேள்விகளுக்கு உங்கள் வலைத்தளத்தில் புதிய பதிவில் பதிலளியுங்கள்.</li><br /><li>'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.</li><br /><li>இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.</li><br /><li>அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.</li><br /><li>உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.</li><br /></ol><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyNffunKvHehGX7ScuksKvFNqoiQVVhIpcpOCc2Ys9W3E3iQ9yC8jrGolx4F7qAYmnnPsrz0jpKUW4Pie_GBwhaXAZknllyFHN9SRZsaKW-u_ix4cexpvevykDBXsWOHM2gFMq7KnvP1vg/s1600-h/deepawali-2009-3.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5392846169134598386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyNffunKvHehGX7ScuksKvFNqoiQVVhIpcpOCc2Ys9W3E3iQ9yC8jrGolx4F7qAYmnnPsrz0jpKUW4Pie_GBwhaXAZknllyFHN9SRZsaKW-u_ix4cexpvevykDBXsWOHM2gFMq7KnvP1vg/s400/deepawali-2009-3.JPG" border="0" /></a><br /><br />ரொம்ப ஈஸீல்ல ? இப்ப, <b>கேள்விகள்:</b><br /><br /><ol><br /><li>உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?</li><br /><li>தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம் ?</li><br /><li>2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?</li><br /><li>தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள் ?</li><br /><li>புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?</li><br /><li>உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?</li><br /><li>உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?</li><br /><li>தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?</li><br /><li>இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் ? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?</li><br /><li>நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள் ?</li><br /></ol><br /><br />*****<br /><br />கடைசி கேள்வி எப்பவுமே கஷ்டம் தான் நமக்கெல்லாம். அதனால அதுக்கு என் பதிலை சொல்லி, தொடரை ஆரம்பித்து வைக்குமாறு வலையக ஜாம்பவான்களை அன்போடு அழைக்கிறேன் :))<br /><br /><ol><br /><li><a href="http://thulasidhalam.blogspot.com/">துளசி டீச்சர்</a> - http://thulasidhalam.blogspot.com/</li><br /><li><a href="http://9-west.blogspot.com/">நானானிம்மா</a> - http://9-west.blogspot.com/</li><br /><li><a href="http://naachiyaar.blogspot.com/">வல்லிம்மா</a> - http://naachiyaar.blogspot.com/</li><br /><li><a href="http://kavinaya.blogspot.com/">கவிநயா</a> - http://kavinaya.blogspot.com/</li><br /></ol><br /><br /><b>*** அனைவருக்கும் <span style="color:#000000;"><span style="color:#6666cc;">இ</span><span style="color:#9999ff;">னி</span></span><span style="color:#ccccff;">ய</span> <span style="color:#cc0000;">தீ</span><span style="color:#cc6600;">பா</span><span style="color:#cc9933;">வ</span><span style="color:#999900;">ளி</span> <span style="color:#ffcc99;">வா</span><span style="color:#ff9966;">ழ்</span><span style="color:#ff9900;">த்</span><span style="color:#ff6600;">து</span><span style="color:#cc6600;">க்</span><span style="color:#993300;">க</span><span style="color:#663300;">ள்</span> ***</b>சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-62340941232425245122009-10-01T07:25:00.011-04:002009-11-30T23:39:39.123-05:00நெல்லி மரம் !<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi76J1QZkuDKj-Xv9dp5kzI6QnoMgRPYB46teK71BvGygnjDJarzBteMzBrYYOAyz3ckQKLhZb1Tub1V99Tg0QZmuDsyaKqrc9bCsfs_SSOIhb46vgu96TWnxBjVNqLIcqOQklRjOkRa_M-/s1600-h/nelli-maram_indiamike.com.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5387265413724509554" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi76J1QZkuDKj-Xv9dp5kzI6QnoMgRPYB46teK71BvGygnjDJarzBteMzBrYYOAyz3ckQKLhZb1Tub1V99Tg0QZmuDsyaKqrc9bCsfs_SSOIhb46vgu96TWnxBjVNqLIcqOQklRjOkRa_M-/s400/nelli-maram_indiamike.com.jpg" border="0" /></a><br />Photo credit: indiamike.com<br /><br />வாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம். தூவானத்திற்கே வெட்கப்பட்டு, இழுத்துப் போர்த்தியிருந்தது கருப்பு ஈர ஆடையை.<br /><br />வெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள். இலைகளுக்குப் போட்டியாய் பச்சை ருத்ராட்சங்களென சடை சடையாய் நெல்லிக்கனிகள்.<br /><br />சில வருடங்கள் முன்னர் என் அண்ணன் எடுத்த புகைப்படம் இப்போது என் கையில். புகைப்படத்தில் மரம் சிரிக்க, மனப்படத்தில் சிலிர்ப்போடு பின்னோக்கி பயணித்தேன்.<br /><br />***<br /><br />"இன்னிக்கு நெல்லி மரம் சுத்தப் போகணும். வர்றியா ? உங்க அக்காளுக்குத் தான் வயசாகிடுச்சு. வாக்கப்பட ஒரு பய வரக்காணோம். மரத்தச் சுத்தினா சீக்கிரம் கல்யாணம் கைகூடும், துணைக்கு வாடா சந்திரா" என்று கிராமத்துக்கு வந்திருந்த என்னை இழுத்துக் கொண்டிருந்தார், பேரன் பேத்திகளை டா போட்டு அழைக்கும் மீனாக்ஷி பாட்டி. அவருக்கென்னவோ ஆண்பிள்ளைகள் என்றால் அத்தனை பிரியம்.<br /><br />'எனக்கு அப்படி என்ன வயசாகிடுச்சு. அவளைக் கூப்பிடாமல் என்னை ஏன் கூப்பிடுகிறார். நான் போய் அவளுக்காக என்ன செய்துவிடப் போகிறேன். இல்லை, என்னைவிட வயதில் மூத்த அண்ணனையாவது கூட்டிட்டு போகலாமே ?' என்றெல்லாம் எனக்குத் தோன்றவேயில்லை.<br /><br />"வர்றேன். அங்க என்னல்லாம் நடக்கும் ?" என்றேன்.<br /><br />"ஐயரு வருவாரு. நெல்லி மரத்துக்கு முன் வந்து, பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் தலைவாலை இலையில் வைத்து, அதில் கும்பம் வைத்து, பூஜை செய்து தீபாராதனை எல்லாம் செய்வாரு. கும்பத் தண்ணிய மரத்தில் தெளித்து, பின் மக்களுக்குத் தெளிப்பாரு. உங்க அக்கா வயசொத்த புள்ளைக நெறைய வரும். தங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும் என்று வேண்டி, மரத்த இருவத்தியோரு வாட்டி சுத்திவருங்க..."<br /><br />'அப்பாவின் பணியை ஒட்டி படிப்பெல்லாம் வெளியூரில் இருந்ததால் உள்ளூர் நிகழ்ச்சிகள் பற்றிய ஞானம் எதுவும் இல்லை'. பாட்டி சொல்லச் சொல்ல, 'போய் பார்ப்போம்' என்று அவருடன் புறப்பட்டேன்.<br /><br />காலை வெய்யில் பனியைக் கரைத்து பருகிக் கொண்டிருந்தது. ஊருணிக்கரையை ஒட்டி, மேற்கே இருந்த 'வித்யா பாடசாலை'யின் தோட்டத்தில் இருந்தது நெல்லி மரம். மா, பலா, வாழை என பல மரங்களின் ஆதிக்கம் இருந்தாலும், கூட்டத்திற்குள் காதலனைத் தேடும் கள்ளியைப் போலே தனித்துத் தெரிந்தது நெல்லி மரம்.<br /><br />'வித்யா பாடசாலை' எங்கள் கிராமத்தில் ஒரு சின்ன பள்ளிக்கூடம். அதற்குள் இருந்தது சின்னத் தோட்டம் என்பதால், வந்திருந்த இருபது முப்பது பேர் கூட திருவிழாக்கூட்டத்திற்கு இணையாக இருந்தனர்.<br /><br />பூஜை புனஸ்காரங்கள் முடித்து, அரிசி, காய், கனிகளை முடித்துக் கொண்டு டி.வி.எஸ் 50ல் புறப்பட்டுச் சென்றார் ஐயர்.<br /><br />"சந்திரா... இங்கே இருப்பா. நான் போயி உங்க அக்காளுக்காக சுத்திட்டு வந்திர்றேன்" என்று மரத்தை சுற்ற ஆரம்பித்தார் மீனாக்ஷி பாட்டி.<br /><br />'பாட்டி போற வேகத்தைப் பார்த்தால், அவருக்கே நல்ல மாப்பிள்ளை கிடைக்கும்போலவே' என்று நினைத்துக் கொண்டே மரத்தைப் பார்க்க, நெல்லி மரத்தைப் போலவே ஒல்லியாக, 'நெல்லி மரத்தைச் சற்று தள்ளி வைத்து என்னைப் பார்' என்பது போல ஒரு வசீகரத்துடன் சுற்றி வந்தாள் அவள்.<br /><br />கார்குழல் காதுகளில் குழைய, கருநீள விரிசடையும், தங்கத் தோள்களில் உருளும் கருமணி மாலையும், தாமரை நிற தாவணியும், பிச்சிப்பூ நிற பாவாடையும், ஏதோ ஒன்று என்னை அவளிடம் ஈர்த்தது.<br /><br />இவை எல்லாம் அன்றி, அவளின் 'சலக் சலக் கொலுசொலி' தான் முதலில் அவளைப் பார்க்க வைத்தது என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன்.<br /><br />டி.ஷர்ட், ஜீன்ஸில் இருந்த என்னை, 'ஏதோ வித்தியாசமா இருக்கிறேனே' என்பது போல அவளும் ஓரிரு முறை கடைக்கண் பார்த்தாள்.<br /><br />"என்ன சந்திரா, இப்படி ஆவ்னு பராக் பாத்துகிட்டு இருக்கே. யாராவது பையத் தூக்கிட்டு போனாக்கூட தெரியாதே ஒனக்கு" என்று பிதற்றி கொண்டே வந்தார் வேண்டுதலை முடித்துக்கொண்ட பாட்டி.<br /><br />பள்ளியை விட்டு வெளியில் வந்த போது, என் வயதிலும் என் அண்ணன் வயதிலும் நிறைய இளவட்டங்கள் தென்பட்டனர். கூடி நின்றோ, சைக்கிளில் அமர்ந்தோ, அரச மர நிழலிலோ நின்று பேசிக்கொண்டிருந்தாலும், அவர்கள் கண்கள் எல்லாம் பள்ளியின் வாசலிலே தான் இருந்தது. பூவிருக்கும் இடத்தில் தானோ வண்டுக்கு வேலை ?<br /><br />என்னிடம் இருக்கும் கெட்ட குணங்களில் ஒன்று. யாரையாவது பார்த்து எனக்குப் பிடித்துப் போனது என்றால், உடனே அவங்ககிட்ட போயி பேசி எப்படியாவது நட்பாயிடுவேன்.<br /><br />அப்படித்தான் இன்றும், பாட்டியுடன் செருப்பு மாட்டி கிளம்புகையில், செருப்பைக் கழட்டி விசிறிவிட்டு, விறுவிறுவென பள்ளிக்குள் சென்று, அவளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். திடுதிடுப்பென முகம் தெரியாதவர் வந்து பேச, சற்றே அதிர்ந்துவிட்டாள் அவள்.<br /><br />காற்றின் சீற்றம் அதிகரித்து, இலைகளின் ரகசியப் பேச்சுக்கள் சளசளத்தன.<br /><br />சற்றைகெல்லாம் சுதாரித்துக் கொண்டு, "அப்படியா ... சரீ..." என்றெல்லாம் தலையாட்டி கேட்டுக்கொண்டாள். திரும்ப எப்ப மீட் பண்ணலாம் என்றதற்கு, செவ்வாய்க்கிழமை மாலை அம்மன் கோவிலுக்கு வருவதாகச் சொன்னாள்.<br /><br />கடவுளே, இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. வீட்டிற்கெல்லாம் அழைக்க மாட்டாளோ என்றெண்ணி, 'பார்த்த உடனே எப்படிக் கூப்பிடுவாள் ?' என்றும் எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.<br /><br />"உங்க பேரு சொல்லவேயில்லையே ?" என்றேன் நான்.<br /><br />"நீ வா போ என்றே சொல்லலாம். மரியாதை எல்லாம் எதுக்கு ? என் பேரு பூரணி...அன்னபூரணி.." என்றுவிட்டு, "எனக்கு வீட்டில நிறைய வேலை கிடக்கிறது" என சிட்டாய் பறந்தாள் அங்கிருந்து.<br /><br />வீட்டிற்கு வரும் வழியில், "சந்திரா, இந்த கூட்டத்தில ஒருத்தி சலக் சலக்குனு சிலுப்பிகிட்டு திறிஞ்சாளே. அவளப் பத்தி என்ன நினைக்கிறே ? உனக்குப் புடிச்சிருக்கா ?" என்றார் மீனாக்ஷி பாட்டி.<br /><br />'அக்காவுக்கு மாப்பிள்ளை கிடைக்கணும் என்று தானே கூட்டி வந்தார். ஆனா யாருக்கு பொண்ணு பாக்குது பாட்டி. வெவரமான ஆளு தான்' என்று நினைத்து, "ஆங், பாத்தா நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்கு. ஒரே நாள்ல எப்படி சொல்லிட முடியும். எதுக்கு பாட்டி கேக்கற, யாரு அந்த பொண்ணு ?" என்றேன்.<br /><br />"உன் வயசு தான் அதுக்கும். நம்ம போ(ர்)ட்டு கார் சிங்காரம் தெரியுமா உனக்கு ? உங்க தாத்தோவோட ... " என்று நீட்டி முழக்கி ஒரு கதையைச் சொல்லி, "அவரு பேத்தி தான் இந்த சிலுப்பி" என்று பாட்டி தொடர்ந்து கொண்டிருக்க, எதிரில் அண்ணன் பைக்கில்.<br /><br />"காலங்கார்த்தால கெளம்பி போனீங்க ரெண்டு பேரும். ஒரு நெல்லி மரத்த சுத்தி வர இவ்ளோ நேரமா ? அங்க உங்கள காணோம் என்று நாலு பக்கமும் எங்களை வெரட்டிகிட்டு இருக்காரு அப்பா" என்று பொறுமித்தள்ளினான்.<br /><br />"சரி, சரீ, நீ பாட்டிய கூட்டிட்டுப் போ. நான் நடந்து வருகிறேன்" என்று பாட்டியை அண்ணனுடன் பைக்கில் அனுப்பிவிட்டு, காலாற நடந்தேன்.<br /><br />பலநூறு அடிகள் எனக்கு முன் பூரணி சென்று கொண்டிருந்தது கண்ணில் பட்டது. பி.டி.உஷா அளவிற்கு இல்லேன்னாலும், ஓட்ட நடை நடந்து பூரணியை நிறுத்தி, சேர்ந்து நடக்க ஆரம்பித்தேன். அவளுடன் வந்த இரு தோழிகள், எங்களை மேலும் கீழும் பலநூறு முறை பார்த்துவிட்டனர். அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கைகுலுக்க, வெட்கத்தில் நாணி கோணினர். ஒரு திருப்பத்தில் இரு வேறு திசைகளில் திரும்பி இருவர் வீடுகளுக்கும் சென்று சேர்ந்தோம்.<br /><br />கிராமத்தில் இருக்கும் வரையிலும் வாரத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ நாங்கள் சந்தித்துக் கொள்ளத் தவறுவதில்லை.<br /><br />"அண்ணனுக்குப் பார்த்திருக்கோம். அண்ணி புடிச்சிருக்காளா ?" என்று கோவிலில் ஒருமுறை மீனாக்ஷி பாட்டி என்னை இடித்துக் காண்பித்தார். நெல்லி மரத்தில் பார்த்தோமே, அந்தச் சிலுப்பி தான்" என்றும் நினைவூட்டினார்.<br /><br />ஒரு கணம் நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.<br /><br />எதிர்வரிசையில் நின்றிருந்த பூரணி எங்களைப் பார்த்து வெள்ளிக்கீற்றாய் புன்னகைத்தாள்.<br /><br />***<br /><br />"அப்படி என்ன தான் இருக்கு இந்த ஆல்பத்தில் ? எப்ப வந்தாலும் ஆல்பத்தைத் தூக்கி வச்சுக்கிட்டு, சின்ன புள்ளை மாதிரி. சூடா காஃபி போட்டு வச்சிருக்கேன். குடிச்சிட்டு கெளம்பு, இன்னிக்கு மீனாக்ஷி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை இருக்கு, ஞாபகம் இருக்குல்ல ?" என்று சோஃபாவில் மெய்மறந்து படம் பார்த்துக் கொண்டிருந்த என்னை அழைத்துக் கொண்டிருந்தார் பூரணி அண்ணி.<br /><br />அண்ணனின் வீட்டிற்குள் நுழைந்த போதே என் கணவர் காட்டிய தொட்டியை மீண்டும் பார்த்தேன். அழகிய நெல்லி கன்று, கொழுந்துவிட்டுக் குழைந்து கொண்டிருந்தது வாசல் காற்றில்.<br /><br />***<br /><br /><a href="http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html"><strong>சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி</strong></a>யில் இக்கதையை சமர்ப்பித்திருக்கிறேன்.சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com60tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-12982124692283682992009-09-28T11:27:00.003-04:002009-09-29T00:53:28.144-04:00தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்ரொம்ப நாட்கள் கழித்து, விஜய் டி.வி.யின் சுவாரஸ்யமான ஒரு 'நீயா நானா' நிகழ்ச்சி பார்க்க முடிந்தது நேற்று. நிகழ்ச்சி பற்றி சில விமர்சனங்களும், எனது எண்ணங்களும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.<br /><br />"தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்"<br /><br />'ஆங்கிலம் எங்கெல்லாம் பயன்படுகிறது ?' என்று ஆங்கிலம் தரப்பில் பேச வந்தோரை கோபிநாத் கேட்க.<br /><br />"ஒரு இன்டர்வியூவிற்கோ, பரீட்சையில் நல்ல மார்க் வாங்கவோ, அல்லது ஒரு நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கவோ பயன்படுகிறது" என ஸ்மார்டாக ஏதாவது சொல்வார்கள் என எதிர்பார்த்தால். ஜூஸ் கடையிலும், போக்குவரத்துப் போலீஸிடமும், கிராமத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பயன்படுகிறது என்று சொல்லி, யானை போல தம் தலையில் தாமே மண் அள்ளிப் போட்டுக்கொண்டனர்.<br /><br />ஒரு ஆன்ட்டி சொன்னார், "இங்க்லீஷ் இஸ் எ வெப்பன். ஒரு போலீஸ்காரர் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டும் என்னை நிறுத்தினால், வெப்பனைப் பயன்படுத்தி தப்பிப்பேன்" என்றார்.<br /><br />அதற்கேற்ற ஒரு கேள்வியை அந்த ஆன்ட்டியிடம் கோபிநாத் கேட்க, அவர் முகத்தில் ஆங்கிலம்... மன்னிக்கவும், ஈ ஆடவில்லை :) 'நாங்களும் ரெவுடி தான்' மாதிரி இல்லாமல் ஒரு நிஜ ரவுடி இதே போல போலீஸிடம் மாட்டி, அவரது டீஃபால்ட் வெப்பன் அரிவாளைக் காண்பித்து எஸ் ஆகிறார் என்பது மாதிரி சொல்லி, "அவரும் நீங்களும் ஒன்றா ?" என்றார்.<br /><br />"உங்களுக்கு என்னென்ன ஆங்கில வார்த்தைகள் கடினமாக இருந்தது ?" என்ற கேள்விக்கு, தமிழ் அணியினர் பலரும் தங்களுக்கு வராத வார்த்தைகளைக் கூற, எதிர் அணியில் ஆளாளுக்கு ஆங்கில வாத்தியார்கள் ஆகி, வாய்க்கு வந்த உச்சரிப்புகளை அள்ளித் தெளிக்க அரங்கமே காமெடி ஸீனாக ஆனது. இங்கு ஒரு கேள்வி நமக்கு எழுகிறது.<br /><br />நமக்கென்று ஒரு ஆங்கில பாணி இருக்கிறதா ? நார்த் எல்லாம் போனால், ஹிந்தி பேசுகிறார்களா, ஆங்கிலம் பேசுகிறார்களா என்றே புரியாது பலநேரங்களில்.<br /><br />ஒரு அம்மணி சொன்னார் "சென்னை அமெரிக்கனைஸ்ட் ஆகிட்டு இருக்கிறது" என்று. ஆனால் உச்சரிப்புகளை சொன்ன வாத்தியார்களிடம் அப்படி எதுவும் தென்படவில்லை. இங்கிலாந்து ஆங்கிலத்தையும், தமிழையும் (இவர்களின் இன்னொரு கூற்று: எதிர் அணியில், தமிழைக் கலந்து ஆங்கிலத்தை தமிழ் போலவே பேசுகிறார்கள் என்று), ஹிந்தியையும், இன்னபிற இந்திய மொழிகளையும் கலந்து பேசுவது போலவே இருந்தது எங்களுக்கு.<br /><br />தமிழ் அணியில் இருந்து தடாலடியாக ஒருவர் புரியாத வார்தை ஒன்றை சொன்னார். இங்கு எழுதலாம் எனப்பார்த்தால், இப்பக்கூட நினைவில் இல்லையே.<br /><br />வாத்தியார்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, 'போலீஸிடம் எஸ்ஸாவேன்' என்று சொன்ன ஆன்ட்டி, "அப்படி எல்லாம் வார்த்தை இல்லிங்க. பையன் தெரியாம வந்து உளர்றான்" என்று சொல்லி அரங்கத்தையே அதிரவைத்தார்.<br /><br />பையன் ரூம் போட்டு டிக்ஸ்னரி புரட்டிருப்பாரு போல. உண்மையிலேயே அப்படி ஒரு வார்த்தை இருக்காம். அதற்கு அர்த்தம் இது தான் என்றெல்லாம் கெஸ்டாக வந்த நரசைய்யா சொல்ல, ஆங்கிலம் தடுமாறித் தான் போனது.<br /><br />"சரி, நம்மூரில் ஆங்கிலத்தில் புகழ்பெற்ற ஐந்து எழுத்தாளர்களைச் சொல்ல முடியுமா ?" என்ற கேள்விக்கு, இப்படியா ஃபெவிக்கால் மௌத் ஆவார்கள். ஒருவர் கூட ஒரு எழுத்தாளரைக்கூட சொல்லவில்லை. அப்ப இவர்களின் ஆங்கிலம் "வீண் ஜம்பம்" தானா ?<br /><br />பிறப்பால் தெலுங்கரான நரசைய்யா, அதிகம் எழுதுவது தமிழில். சமீபகாலமாகத் தான் சென்னையில் வசிக்கிறாராம். இவரின் இரண்டு வாக்கியங்கள் நினைவில் நிற்பவை.<br /><br />1. Colonial left over: ரெண்டாயிரம் வருடம் நாம பண்ணாதத முன்னூறு வருடத்தில் பிரிட்டிஷ்காரன் செஞ்சுகொடுத்துட்டுப் போயிட்டான்.<br />2. Language is a vehicle: பயணிக்க தான் மொழி பயன்படனும். ஒரு இடத்திற்கு செல்ல பேருந்தில் பயணித்து, செல்லும் இடம் வந்தவுடன் இறங்கிக் கொள்ளணும். புடிச்சுத் தொங்காதீங்க....னு சொல்லாமச் சொல்லிட்டார் :)<br /><br />உலகம் சுற்றி வந்த அவர் மேலும் சொன்னது, "ஆங்கில மோகம் அதிகம் இருக்கும் இடங்களில் தமிழகமும் ஒன்று" என்று. அப்ப, தமிழை அழிக்கிறோமா நாம் ? தமிழ் அழிந்துவிடுமே என ஆளும் அரசு ஆங்கிலத்திற்கு தான் தார் பூசுமா ?<br /><br />நாம ஆங்கிலத்தை இந்த அளவிற்கு நேசித்தால், தமிழ் எப்பொழுதோ அழிந்து போயிருக்கணுமே ? வாழும் தமிழை வாழ வைப்பவர் தான் யார் ?<br /><br />நிகழ்ச்சியின் மற்றொரு கெஸ்ட், "டால்டன்" என நினைக்கிறேன். வேற்று மாநிலத்துக்காரரான இவர், சென்னை வந்தபோது தமிழ் கற்றுகொள்ள ரொம்பவே ஆசைப்பட்டிருக்கிறார். "யூ நோ வேர் த லேங்குவேஜ் லிவ்ஸ் ?" என்று அவர் விவரித்த விதம் அருமையாக இருந்தது. ஆட்டோ ட்ரைவர்களிடமும், ரிக்ஷாகாரர்களிடமும் தேநீர் கடைகளில், பேப்பர் படிப்பது போல அமர்ந்து, தமிழ் படித்திருக்கிறார். வெவரமான ஆளு தான் :) வீட்டிற்கு வந்து "என்ன மச்சி", "போடீ" என்று தான் கற்றதை தன் மனைவியிடம் பயன்படுத்தியதையும் ரசிக்கும்படி சொன்னார்.<br /><br />அரசியல் ஆதாயத்துக்காக ஹிந்தியை எதிர்த்தோம். தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் ஹிந்தி பேசுகிறார்கள். ஆனாலும் அவர்கள் இருவர் சந்தித்துக் கொண்டால் தங்கள் தாய்மொழியில் தான் பேசுகிறார்கள். ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று தார் பூசினோம். ஆனால் இரு தமிழர்கள் பேசுவது ?சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-3080348353174427372009-09-25T11:15:00.009-04:002009-09-25T11:43:48.763-04:00இதெல்லாம் ஜூஜூபி மேட்டர் ...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2m0jerU1Qj5WLTdl5s76x3VZmUzlz-JGvJoBZaIzX_njUxAwSniHSWMCl-9qzMkxQt-zPpk6nfzPmNlqtbzaK64cWcp0UOzH3_5ckRnRVWjlBJrEcMQqDz8nOyBTYIfVAmV_yTXj-Lg_d/s1600-h/jujube-wikimedia.org.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5385424257410497266" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2m0jerU1Qj5WLTdl5s76x3VZmUzlz-JGvJoBZaIzX_njUxAwSniHSWMCl-9qzMkxQt-zPpk6nfzPmNlqtbzaK64cWcp0UOzH3_5ckRnRVWjlBJrEcMQqDz8nOyBTYIfVAmV_yTXj-Lg_d/s400/jujube-wikimedia.org.jpg" border="0" /></a><br /><span style="font-size:78%;"><span style="color:#666666;">Photo Credit: wikimedia.org</span><br /></span><br />Blade போடுவதற்கு முன்னால் ஒரு பாட்டோட ஆரம்பிப்போம்.<br /><br />செக்கச் செவந்த பழம், இது<br />தேனாட்டம் இனிக்கும் பழம்<br />எல்லோரும் வாங்கும் பழம், இது<br />ஏழைக்குனு பொறந்த பழம்<br /><br />ஒரு புத்துணர்ச்சி வந்த மாதிரி இருக்குமே ? மேல படிங்க ப்ளீஸ்.<br /><br />அநேக வியாழக்கிழமைகளில் சீனக் கடைக்கு செல்வது வழக்கம். அப்படி நேற்று போனபோது, கண்ணில் பட்டது அந்த லேபில். 'Jujube lb $1.69'. எத எதயோ சந்தைப்படுத்தியதில், எதற்கோ ஜூஜூபினு (இன்னோவேடிவா) பேரு வைத்து விற்கிறார்கள் போல என்று எண்ணினேன். வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு பில் போடும் போது பார்த்தால், காஷியர் அருகில் மீண்டும் அந்த லேபில்.<br /><br />உடல் சோர்வா ? ஜூஜூபி<br />தொண்டையில் கிச் கிச் ? ஜூஜூபி<br />மனதுக்குப் பிடித்த மயிலாலைக் கவரணுமா ? ஜூஜூபி<br /><br />என்றெல்லாம் நம்ம ஊரு விளம்பர பாணியில் சொன்னால், 'இதெல்லாம் அவ்ளோ ஜூஜூபியா ? எவன் சொன்னது ?' என்று நீங்கள் கேட்கலாம், கேப்பீங்க.<br /><br />பதில் திரும்பவும் 'ஜூஜூபி' தான் :)<br /><br />நம் திரைத்துறையினரின் (குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி) புண்ணியத்தில் இந்த வார்த்தை நமக்கு பிரபலம்.<br /><br />எப்போதும் எளிதென்று,<br />தப்பான அர்த்தத்துடன்,<br />இப்போதும் உலா வரும்,<br />ஜூஜூபி ... உண்மையில் ஒரு ஹீரோ.<br /><br />Ziziphus jujube என்ற தாவரவியல் பெயரில் வழங்கி வரும் 'ஜூஜூபி', மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வகைப் பழம்.<br /><br />மேலை நாடுகளில் 'Apple a day keeps a Doctor away' பழமொழிக்கு இணையாக நம்ம 'ஜூஜூபி' ஐயாவுக்கும் மதிப்பு இருக்கிறது. மேற் சொன்ன விளம்பர வரிகள் ஜூஜூபி புகழின் சிறிய உதாரணங்கள்.<br /><br />பளபளக்கும் பச்சை இலைகள், அடர்ந்த முட்புதர். அதில், உருண்டு திரண்டு ஆலிவ் பழ அளவில் வடிவம். கருஞ்சிவப்பு அல்லது கரும்பழுப்பு நிறம். சிறிது உலர்ந்து சுருங்கிய தோல். மொத்தத்தில் ஆசியாவின் பேரீச்சம்பழம் என்றெல்லாம் அறியமுடிகிறது இணையத்தின் வழி.<br /><br />ஆசியா எனும் போது, பட்டியலில் சீனா இல்லை என்றால் தான் ஆச்சரியப்படணும். ஆனால், இந்தியாவின் பெயரும் பார்த்த போது சிறிது ஆச்சர்யம். இந்தியாவில் கி.மு.9000 லிருந்தே பயிரிடப்பட்டிருக்கிறது ஜூஜூபி.<br /><br />சீனர்கள் ஜூஜூபி டீ, ஜூஜூபி வைன் என்று தயாரித்தால், நம் நாட்டில் மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தில் ஜூஜூபி ஊறுகாய் போட்டிருக்கிறார்கள். கிழக்கே ஐரோப்பாவில் சாக்லெட், கேன்டி போடுகிறார்கள்.<br /><br />ஆனால், நம்ம ஊருல பாட்டே போட்டு பட்டையக் கெளப்பீட்டாங்கள்ல ...<br /><br />செக்கச் செவந்த பழம், இது<br />தேனாட்டம் இனிக்கும் பழம்<br />எல்லோரும் வாங்கும் பழம், இது<br />ஏழைக்குனு பொறந்த பழம்<br /><br />ஆமாங்க, ஜூஜூபி நம்ம எலந்தைப்பழமே !<br /><br />ரஜினி அவர்களுக்கு ஒரு கேள்வி: இப்பேற்பட்ட ஜூஜூபியை எப்படிய்யா தவறான அர்த்தத்தில் தரணியில் விட்டீர்கள் ?<br /><br />Blade போதும்னு நினைக்கிறேன். இணையத்தில் ஏராளம் செய்திகள் ஜூஜூபி பற்றி குவிந்து கிடக்கின்றன. மேல் விபரங்களுக்கு கூகிளார், அல்லது விக்கி அண்ணாச்சியை அணுகவும்.சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-8586091706229759622009-09-24T11:52:00.008-04:002009-09-24T12:03:57.979-04:00நடுச்சாமம் - 2<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLJ0Z8FYR8ouiyTAqpKLnvaWTkKqK8wbbpe4T38CZanKDoRIIIom0yIGun3kIXaJ4XM9HqQJiKIRJqs1mcyxYZ5z505DGAUz6wJrymaMrBx7Uy_kDhRWS5dcZmZmA2iQmrPyOMG5C64qwH/s1600-h/green-snake-allposters.com.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5385064626980629506" style="WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLJ0Z8FYR8ouiyTAqpKLnvaWTkKqK8wbbpe4T38CZanKDoRIIIom0yIGun3kIXaJ4XM9HqQJiKIRJqs1mcyxYZ5z505DGAUz6wJrymaMrBx7Uy_kDhRWS5dcZmZmA2iQmrPyOMG5C64qwH/s400/green-snake-allposters.com.jpg" border="0" /></a><br /><span style="color:#666666;"><span style="font-size:78%;">Photo Credit: allposters.com</span><br /></span><br /><br />To read <a href="http://vazhakkampol.blogspot.com/2009/09/part-1.html">Part 1</a> click here.<br /><br />நெல்குதிருக்குள் விழுந்து, கை கால்கள் குத்துவதெல்லாம் பொருட்படுத்தாது, நாசியில் ஏறிய தூசியின் ஆதிக்கத்தில் விழும் பல தும்மல்கள் போல, அந்த இருள் அறையில் நுழைந்ததிலிருந்து மூச்சடைத்து புழுக்கத்தில் தும்மினான் தமிழவன்.<br /><br />தரையின் பிசுபிசுப்பு, சுவற்றிலும், ஜன்னல் கம்பிகளிலும், கதவுகளிலும் படர்ந்து கான்க்ரீட் கூரை வரை அப்பி கறுத்திருந்தது. நான்கு மூலைகளிலும் ஆளுயரத்துக்கு இருந்த ஐந்து முக விளக்குகளில், தவழும் குழந்தையாய், நெய்யூரிய திரியில் நீந்தி விளையாடியது நெருப்புச் சுடர்.<br /><br />அறையின் மையத்தில் இணையும் விளக்குகளின் ஒளியில் அமைந்திருந்தது அந்தச் சிறிய மேடை. இடுப்புயர அளவிற்கு இருந்த அம்மேடையின் கிழக்கு முகத்தில் இருந்தது நான்கு படிகள். மேடையின் மற்ற மூன்று மதில்களிலும் எண்ணை அப்பிய ப்ரேமிற்குள், மிரள வைக்கும் பல்வேறு அம்மன்களின் ஆக்ரோஷ காட்சிகள். தெற்கு பார்த்த அறைவாயில், அதன் அருகில் இருந்த சிறிய ஜன்னல் சாத்தியே இருந்தது. வெகுநாட்கள் திறக்காமல் இருந்ததற்கான அடையாளமாக சிலந்திகளின் வலைப்பின்னல் சாட்சியம் கூறியது.<br /><br />மேடையின் ஒருபுறத்தை ஆக்கிரமித்து மேலெழும்பி, நாலைந்து துவாரங்கள் கொண்டு ஆங்காங்கே சிறு குன்றுகளாய் நீண்டிருந்தது அந்தப் புற்று. அதைச் சுற்றிலும் மஞ்சளும் குங்குமமும் தெளித்து, புஷ்பங்கள் தூவி, ருத்ராட்சமாலையும், சில புத்தகங்களும், ஒரு மரப்பலகையும், ஒருசில சிறிய மரப் பெட்டிகளும், சருகாய் சுருண்டு கிடந்த பாம்புச்சட்டைகளும் என பார்ப்பவரை ஒரு கணம் மிரள வைக்கும்படி இருந்தது. அறைக்கதவை நன்கு திறந்துவிட்டாலும் வெளிச்சம் படாவண்ணம் இருந்தது மேடையும் புற்றும். மேடைக்குக் கீழே யாகம் வளர்க்க சதுரமாக மூன்றடுக்கு உயரத்தில் செங்கல் மதில்.<br /><br />'குளிக்கப் போன சாமியார் சற்று நேரத்தில் வந்துவிடுவார், உள்ளே அமர்ந்திருங்கள்' என்றிருந்தாள் வாசலில் கோலமிட்ட பணிப்பெண்.<br /><br />ஒருசில நிமிடங்கள் கூட உள்ளே இருக்க முடியவில்லை. படபடக்கும் காகிதங்கள் கூட பயத்தை ஏற்படுத்தின. உருளும் மாலையும் ஏனோ பாம்பையே நினைவுபடுத்தியது. 'உண்மையிலேயே இங்கு பாம்பு இருக்கிறதா ? எத்தனை இருக்கும் ? திடீர் என்று வெளியில் வந்துவிட்டால் என்ன செய்வது ?" என அடுக்குக் கேள்விகளில் திகைத்து எவரும் அறையில் இன்றி தனியனாய் காத்திருந்தான் தமிழவன்.<br /><br />விரிசடை முடியும், நீள்சாம்பல் தாடியும், காவிசூழ் உடலும், கையில் கைத்தடியுமாக வருவார் குடுகுடு சாமியார் என்று எதிர்பார்த்த தமிழவனுக்கு, கெண்டை வேட்டியும், காவி ஜிப்பாவும், கழுத்தில் சிறு ருத்ராட்ச மாலையும், கரும்பச்சையில் தலைப்பாகையும், நெற்றியில் திருநீறும், பழுத்த வெள்ளரிப் பட்டையாய் மஞ்சள் கீற்றும், செர்ரிப் பழமாய் அதில் குங்குமப் பொட்டும் என வந்த நடுத்தர வயது சாமியாரைக் கண்டு சிறிது அதிசயித்தான்.<br /><br />அறைவாயிலில் குனிந்து, சரிந்த ருத்ராட்ச மாலைகளை மார்போடு அணைத்து உள்ளே நுழைந்தார் புற்று சாமியார். திருநீற்று மனம் காற்றில் மிதந்து அந்த அறையை நிறப்பியது. நேரே மேடையில் ஏறி மரப்பலகையில் அமர்ந்து, சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டார்.<br /><br />சளசளத்து ஓடும் அருவியாய் வெளியே பேச்சுக் குரல்கள். 'ஆறு அறரைக்கு முன்னாடியே போய்ட்டேன்னா சாமியாரப் பாக்கறது சுலபம்' என்ற பாலாவின் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்து காணப்பட்டது. ஒரு நேரத்தில் ஒருவர் தான். அவருக்கு எத்தனை நேரம் ஆனாலும், அதுவரை மற்றவர் வெளியில் காத்திருக்க வேண்டும். முதல் ஆளாய் வந்ததில் சிறிது கர்வமும் கொண்டான் தமிழவன்.<br /><br />"சொல்லுங்க, என்ன விஷயமா வந்திருக்கீங்க ?!" என்றார் கண்களைத் திறந்த சாமியார் தமிழவனை நோக்கி.<br /><br />வடநாட்டு சாமியான அவர் உடைந்த தமிழில் பேசுவார் என்று எதிர்பார்த்தவனுக்கு, அவரது இயல்பு தமிழ் தொடக்கம் புதிதாய் இருந்தது. வாளின் கூர்மையில் அறுபடும் கதிராய் உணர்ந்தான் அவரது பார்வையில். தூசி விழாத பாலில் மிதக்கும் இரு ஒற்றை திராட்சைகளாய் திகழ்ந்தது அவரது விழிகள். துவைத்து அணிந்த ஆடைகள். குளித்த தூய மேனி. ஆனால் அறைமட்டும் தூசிபடிந்து தூய்மையின்றி !<br /><br />"நான் சென்னையில் இருந்து வருகிறேன். என் பேரு தமிழார்வன். நண்பர்களும் மற்றவர்களும் சொல்லியே காலப்போக்கில் தமிழவன் என்றாகிவிட்டது. சொந்த ஊர் திண்டுக்கல் பக்கத்தில்" என்று தமிழவன் தொடர, போக்குவரத்து போலீஸ் போல கைகாட்டி நிறுத்துமாறு கூறிய சாமியார், "ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள், விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்க" என்றார்.<br /><br />தமிழார்வன் சொல்லச் சொல்ல ...<br /><br />'அதகள பயங்கரீ, ஆக்ரோஷ பைரவீ, ஆனந்த ரூபஸ்ரீ .... உத்தரவு வாங்கிய பின்னுமா நீ இங்கு இருக்கிறாய் ?' என்று நினைத்து உள்ளுக்குள் அதிர்ந்தார் சாமியார்.<br /><br />"ஓம் சர்வேஷீ<br />ஓம் தர்மேஷீ<br />ஓம் நாகேஷீ<br />க்லீம் ஜ்லீம் ந்லீம்<br />ஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்<br />நாகேஷ்வரீஈஈஈ"<br /><br />என்று உச்சரித்த சாமியாரின் மேனி வியர்வையில் வழிந்தது. பேரிறைச்சலோடு அறைக்குள் புகுந்தது சூராவளிக் காற்று. நெருப்பு சுடர்கள் படபடத்தன. புத்தகத் தாள்கள் சடசடத்தன. கையில் ருத்ராட்ச மாலையை விடாது உருட்டினார் சாமியார்.<br /><br />சற்றைக்கெல்லாம் மயான அமைதி நிலவியது அறையில்.<br /><br />நடப்பது எதுவுமே புரியாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் தமிழார்வன்.<br /><br /><br /><em>தொடரும் .....</em><br /><br /><br />To read <a href="http://vazhakkampol.blogspot.com/2009/09/part-1.html">Part 1</a> click here.சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-60083916495069301942009-09-22T11:28:00.010-04:002009-09-22T14:17:30.458-04:00(சரியான லூசுப்) பசங்க ...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgerNEViOzFZNembHXST_HHSPcZFEGvw3HiH06P1pB6KO-hF3f2nePBjwHMROfSbzemAkkVR94xUbWzkr8OiO_9BlEllWEuskJBvbEytTmaGvCPXazgx3iXc-RILM2r3PamrQ0nhlKIcKL1/s1600-h/090125_5Birds_0033w-home.comcast.net.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5384317470283981730" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 288px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgerNEViOzFZNembHXST_HHSPcZFEGvw3HiH06P1pB6KO-hF3f2nePBjwHMROfSbzemAkkVR94xUbWzkr8OiO_9BlEllWEuskJBvbEytTmaGvCPXazgx3iXc-RILM2r3PamrQ0nhlKIcKL1/s400/090125_5Birds_0033w-home.comcast.net.jpg" border="0" /></a><br /><span style="color:#666666;"><span style="font-size:78%;">Photo credit: comcast.net</span><br /></span><br />"என்ன தான் ஒரே ஊர்ல இருந்து வேலை செய்தாலும் நாமெல்லாம் பார்த்து எவ்ளோ நாளாச்சு ? இந்த வீக்கென்ட் நாம எல்லோரும் மீட் பண்ணலாம்" என்று தொலைபேசி, மின்னஞ்சல், டிவிட்டர் என்று கலக்கிக் கொண்டிருந்தனர் கணினியால் இணைந்த நண்பர்கள்.<br /><br />சனிக்கிழமை, மணி மாலை ஐந்தரை. சிறுகுழந்தையின் அழுகையாய் விடாது சிணுங்க ஆரம்பித்த வானோடு, புகழேந்தியின் செல்லும் சேர்ந்து கொண்டது.<br /><br />"இல்ல மாப்ள, அவ்ளோ தூரம் வரமுடியாது சொன்னா கேளுங்கடா. வெளியில் நல்ல மழை வேற. இன்னோரு தரம் பார்த்துக்கலாம். ஆளவிடுங்க சாமிகளா" என்று கம்பளிக்குள் சுருண்டு படுத்துக்கொண்டான். 'இந்த மழையில எவனாவது வெளியல சுத்துவானா, சரியான லூசுப் பசங்க' என்று நினைத்து கோழித் தூக்கத்தைத் தொடர்ந்தான்.<br /><br />அபார்ட்மென்டின் ஒரு பக்கம் முழுக்க வீடுகள், மறுபக்கம் பொட்டல் காடு. பொட்டல் காட்டை ஒட்டி இருந்த அறையில் படுத்திருந்தான் புகழ். சோவென்று இறையும் காற்று, எந்நேரமும் சுவற்றை உடைத்துக் கொண்டு உள்ளே வருவது போல இருந்தது.<br /><br />மீண்டும் செல்லோசை. 'லூசுப் பசங்க தொல்லை தாங்கலையே. விடமாட்டானுங்களே' என்று நினைத்தான். ஆனால், சிணுங்கியது ரம்யா.<br /><br />"ஹாய் ரம்யா. சொல்லு. இன்னிக்கா உன் பர்த்டே. சொல்லவே இல்ல. ஆமா, ஆமா. எனக்கே தெரியும் ப்ராஜக்ட்ல நீ பிஸி. நோ ப்ராப்ளம். செவன் தர்ட்டி தான கண்டிப்பா வர்றேன். போன வருஷம் உன் பர்த்டேல உன் அப்பார்ட்மென்ட்ல மீட் பண்ணது. ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடிப் போச்சு" என்று ரம்யாவிடம் சொல்லி பாராசூட்டாய் பறக்க ஆரம்பித்தான்.<br /><br />ரம்யா எப்பவும் யாருடனும் அதிகம் பேச மாட்டாள். அலுவலக மீட்டிங்குகளில் தான் அதிகம் பார்த்திருக்கிறான். வெளியில் எங்கும் எவருடனும் பார்த்ததில்லை. நெருங்கிய நண்பர்கள் பர்த்டே பார்ட்டிகளில் பார்த்திருக்கிறான். நார்மல் ஹோம்லி டைப். அதனாலேயே புகழிற்கு ரம்யாவின் மேல் எப்போதும் ஒரு இது இருக்கும். ஆனால் அவளுக்கு(ம்) இருக்கா இல்லையா என்றெல்லாம் அவன் கவலைப்படவில்லை.<br /><br />பொட்டுப் பொட்டாய் விழுந்த தூறல், காற்றின் வேகத்தில் பல்லாயிரம் பாம்புக் குட்டிகளாய் காரின் முன் கண்ணாடியில் ஊர்ந்தது. வைப்பரைத் தட்டி குட்டிகளை அழித்தான்.<br /><br />'என்ன வேகம், சுதாரிச்சு கண்ணாடி ஏத்தறதுக்குள்ளே இப்படி நனைச்சிருச்சே' என்று கைக்குட்டை எடுத்து, இருக்கைக் கதவையும், தன் இடதுபுற உடலையும் துடைத்துக் கொண்டான் நன்றாகவே நனைந்து போன புகழேந்தி.<br /><br />எட்டு எட்டரைக்கு இருட்டும் வானம், இன்று ஏழு மணிக்கெல்லாம் இருண்டிருந்தது. முன்சென்ற கார்களின் பின்விளக்கு, மழைநீரில் செங்குருதி சிந்தி நிற்க, தானும் ப்ரேக் பிடித்து காத்திருந்தான் சாலைவிளக்கின் வண்ண மாற்றதிற்கு.<br /><br />கருவானில் பழுத்த வெள்ளிக்கம்பியாய் வெண்மின்னல் கோடு கிழிக்க கண்கள் கூசியது. மழையின் அடர்த்தி அதிகரித்ததில் 'சோ'வென்று பேரிறைச்சல். சிறிது நேரத்தில் எதிர்புற அணிவகுப்பு நகர ஆரம்பிக்க, இவன் பக்கம் வாகனங்கள் நிலைகுத்திய தேராய் நின்றுபோனது.<br /><br />தூரத்தே, சாலை விளக்கின் அருகில் சிறுவிபத்து ஏற்பட்டு, இரு வாகனங்கள் மோதி நிற்பது போல், நீரூற்றும் கண்ணாடிவழி மங்கலாகத் தெரிந்தது.<br /><br />தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை அங்கிருந்து நகர மறுப்பது போல, இப்போதைக்கு வாகனங்கள் நகருவதாய் தெரியவில்லை.<br /><br />'இன்னிக்கு என்று பார்த்தா இப்படி நடக்கணும். அழைக்காதவள் அழைத்திருக்கிறாள். இன்னும் எவ்ளோ நேரம் இங்கேயே நிற்கப்போகிறேனோ ? சரியா அவ சொன்ன நேரத்துக்குப் போகமுடியுமா ? கொஞ்சம் லேட்டானாக்கூடப் பரவாயில்லை' என்று எண்ணச் சுழற்சிகள், நீர்குமிழிகள் போல்.<br /><br />யாரோ ஒரு புண்ணியவான் 'ஒன்பது ஒன்று ஒன்று' அழைத்திருக்க வேண்டும். மழை வெள்ளத்தில் ஒளி வெள்ளம் சிந்தி, சீறி வந்தது சீருடைக் காவலர் வாகனங்கள். சில நிமிடங்களில் போக்குவரத்து சரிசெய்யப்பட சிட்டாய் பறந்தான் ரம்யாவின் அப்பார்ட்மென்ட் நோக்கி.<br /><br />ஏழரை மணி போல் ரம்யாவின் வீட்டுக் கதவைத் தட்டினான்.<br /><br />ஹாப்பி பர்த்டே அட்டைகள், பல வண்ணப் பலூன்கள், சிலந்தி வலைக் கலர் காகிதங்கள், அலங்கார கேக், என்றெல்லாம் எதிர்பார்த்தவனுக்கு எதுவுமே இன்றி வெறுமையாய் இருந்த ரம்யாவின் அபார்ட்மென்ட் கண்டு திகைத்தான்.<br /><br />செல் எடுத்து அவள் எண்ணை அழைத்தான். எதிர்முனையில் ரம்யா.<br /><br />"ஹாப்பி பர்த்டே ரம்யா. உன் வீட்டு முன்னால தான் நிற்கறேன். வீட்டில் தான இருக்கே ?"<br /><br />"தேங்ஸ். ஆமா வீட்டில் தான் இருக்கேன். உனக்காகத் தான் காத்திருக்கிறேன். நீ எங்கே இருக்கே ?"<br /><br />புகழ் சொல்லச் சொல்ல, "ஹேய், யாரும் சொல்லலியா ? உனக்குத் தெரியும்னு நெனைச்சேன். நான் அப்பார்ட்மென்ட மாறிட்டேன்."<br /><br />"என்ன சொல்றே ரம்யா ?" என்றான் புகழ் இடிந்து போன குரலில்.<br /><br />"ஐம் ரியலி சாரி புகழ். பழைய இடத்திலிருந்து ஒரு பதினைந்து நிமட ட்ரைவ் தான்"<br /><br />"சரி, புது அட்ரஸ் சொல்லு ..."<br /><br />மழையிலும் வாடி வதங்கிய செடியாய் ரம்யாவின் அப்பார்ட்மென்ட் விட்டுக் கிளம்பப் போன புகழேந்தி, எதிரே வரிசையில் தன் நண்பர்களோடு ரம்யாவும் நிற்பது கண்டு டன் டன்னாய் வழிந்தான் அசடை.<br /><br />'யாருடா லூசு' என்பது போல இருந்தது ஒவ்வொருவரின் பார்வையும்.<br /><br />ரம்யா கதவைத் திறக்க, உள்ளே புகழைத் தள்ளினர் நண்பர்கள்.<br /><br />'மவனே, இந்த மீட்டை எந்த ஜென்மத்துக்கும் மறக்கக் கூடாது நீ' என்று நண்பர்கள் புகழை அடித்த அடியில் சற்றைக்கெல்லாம் வானம் வெளுத்திருந்தது.சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-70510139608153179952009-09-18T03:53:00.175-04:002009-09-18T07:17:34.670-04:00சமையல் சமையல் கிச்சன் கில்லாடிகள் vs. அயர்ன் செஃப் அமெரிக்கா<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5rJ1HeS0dsYEOJi25h8MI2p2ujbdtA_zVfXWQoyqLTWh_9nPG7zbqVWYW2Vwvo4m9cCQqPcwvyYKel37KX3sS6tNEygHe1wmJQ_j2r1qZXbzMbQYYxzcKFF4gq_ZxUqivpIMSAuj-6CA6/s1600-h/samayal_samayal1-vijay.indya.com.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5382745397570888290" style="WIDTH: 313px; CURSOR: hand; HEIGHT: 126px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5rJ1HeS0dsYEOJi25h8MI2p2ujbdtA_zVfXWQoyqLTWh_9nPG7zbqVWYW2Vwvo4m9cCQqPcwvyYKel37KX3sS6tNEygHe1wmJQ_j2r1qZXbzMbQYYxzcKFF4gq_ZxUqivpIMSAuj-6CA6/s400/samayal_samayal1-vijay.indya.com.jpg" border="0" /></a><br /><br />vs.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPUSHqo9SbiJ3wfW_6g5N2H8wghzLI-KeYvaTioLICl3dRUdLXkx_W-DqIaNirSP2SCE0WSwrrA7dTYIbpjeZOefH50ufpUbP3KloUOideI0V_3B7ku5OwlKk6nYUSwSMW-vslah3PCF21/s1600-h/iron-chef-america.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5382763456039568498" style="WIDTH: 247px; CURSOR: hand; HEIGHT: 104px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPUSHqo9SbiJ3wfW_6g5N2H8wghzLI-KeYvaTioLICl3dRUdLXkx_W-DqIaNirSP2SCE0WSwrrA7dTYIbpjeZOefH50ufpUbP3KloUOideI0V_3B7ku5OwlKk6nYUSwSMW-vslah3PCF21/s400/iron-chef-america.jpg" border="0" /></a><br /><br />The Battle begins ...<br /><br />நீங்க சாப்பாட்டுப் பிரியரா (ராமர் இல்லை) ? 'ஃபுட் நெட்வொர்க்' ரசிகரா ? அப்ப, உங்களுக்கு நிச்சயம் 'அயர்ன் செஃப் அமெரிக்கா' நிகழ்ச்சி பற்றி தெரிந்திருக்கும். அல்லது நண்பர்களோ, உறவினர்களோ இந்நிகழ்ச்சி பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கலாம்.<br /><br />நிகழ்ச்சியின் அந்த ஒரு மணி நேரமும், நம் காலில் சக்கரம் கட்டாத குறை தான். படம் பிடிக்கும் கேமிராக்களுக்கே பசி எடுக்கும் போல ! அப்பப்ப 'க்ளோஸ் அப்'பில் சென்றுவிடும். சமையல் செய்பவர், அவர் தம் கூட்டாளிகள், நடுவர்கள், தள மேலாளர்கள் இப்படி எல்லோரும் சமையல் சார்ந்து இருக்க, நிகழ்ச்சியின் சேர்மன் மட்டும் சற்று வித்தியாசமான களத்தில் இருந்து வந்திருக்கிறார்.<br /><br />மார்க் டகாஸ்கோஸ் (MARK DACASCOS), பேருக்கேத்த மாதிரி ஏதோ டகால்டி செய்கிற மாதிரி தான் இருக்கு அவரது என்ட்ரி. ஆனா, ஆளு பலே ஆளாம். அதாங்க பலசாலி ! அடிப்படையில் குங்ஃபூ (குஷ்பூனு நீங்க படிச்சா நான் பொறுப்பு கிடையாது :)) மாஸ்டராம்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVpvwEFW12XRA_cWZ2pHtspRrLOiZpuc7Mr5h8ixy0POPjWPNULaE4xhB1-25fbUmLlnewapso8Aj_EchoxaNJqlx2-dPFSy2D4vc0cNTlhUOX4OjKr6qGFyzvVDFCVHkr8nNrQKN_-ptW/s1600-h/mark-dacascos_al-www.foodnetwork.com.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5382745386402070114" style="WIDTH: 266px; CURSOR: hand; HEIGHT: 354px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVpvwEFW12XRA_cWZ2pHtspRrLOiZpuc7Mr5h8ixy0POPjWPNULaE4xhB1-25fbUmLlnewapso8Aj_EchoxaNJqlx2-dPFSy2D4vc0cNTlhUOX4OjKr6qGFyzvVDFCVHkr8nNrQKN_-ptW/s400/mark-dacascos_al-www.foodnetwork.com.jpg" border="0" /></a><br /><span style="color:#999999;"><span style="font-size:78%;">Photo Credit: foodnetwork.com</span><br /></span><br />அப்படியே ஒரு பத்தாயிரம் மைல் பயணித்து நம்ம ஊருக்குப் போனால், சட்டு புட்டுனு செட்டுப் போட்டு ஒரு பேரும் வச்சிட்டாங்க 'சமையல் சமையல் கிச்சன் கில்லாடிகள்'னு.<br /><br />நம்ம ஊருக்கேத்த மாதிரி கொஞ்சம் (நிறையவேயா ? சரி !) மாற்றி, இந்நிகழ்ச்சியை தமிழ்படுத்தித் தருகிறார்கள் விஜய் டி.வி.யில்.<br /><br /><span style="color:#6666cc;">அங்கே மார்க்கஸ் 'சம்மர் சால்ட்' அடித்து நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, இங்கே 'கேட் வாக்'கில் பிரியதர்ஷினி அக்காவும், தேவதர்ஷினி அக்காவும் ஸ்டைலா நடந்து வந்து கடைய நடத்துறாங்க.</span><br /><br />புதிய சமையல்காரர் ஏற்கனவே இருக்கும் 'அயர்ன் செஃப்' நால்வரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க, அவர்கள் இருவரின் அறிமுகத்திற்குப்பின், 'உங்களின் ஒரு மணி நேரம் ஆரம்பிக்கிறது, உங்களுக்கான சீக்ரெட் இன்கிரீடியன்ட் இஸ்'னு குங்ஃபூ ஸ்டைலில் பறந்து வானளவு மூடி திறக்கிறார்.<br /><br /><span style="color:#6666cc;">மட்டை அடித்து முட்டி வலிக்கிற மாதிரி தரையில் அமர்ந்திருக்கும் பிரியதர்ஷினி அக்காவைத் தலையில் தட்டி, 'ஏய் எழுந்திருடி, கமர்ஷியல் முடிஞ்சு காமெரா ஸ்டார்ட் ஆகிடுச்சு பாரு' என்று அதட்டுகிறார் தேவதர்ஷினி. அரக்கபரக்க இருவரும் டீம் ஏ, டீம் பி பற்றி உரையாற்றி விட்டு, 'உங்கள் அரை மணி நேரம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, அஞ்சு நிமிஷம் டைம் தர்றோம், அதுக்கும் முன் உங்க சீக்ரெட் இன்க்ரீடியன்ட் இஸ்'னு இட்லி சட்டி மூடி போல் இருக்கும் ஒன்றைத் திறக்கிறார்கள்.</span><br /><br />ஒரு ஊரே சாப்பிடும் அளவிற்கு கோழியோ, பன்றியோ, ச்சீஸோ, மீனோ, ஏதோ ஒன்று குவிந்து கிடக்கிறது. கையில் அகப்பட்டதை அள்ளிக் கொண்டு ஓடத் தொடங்கும் சமையல்காரர்கள்.<br /><br /><span style="color:#6666cc;">'டீம் ஏ'வும் 'பி'யும் திருதிரு என்று விழிக்கிறார்கள் திறந்த மூடி கண்டு. உள்ளே என்ன இருக்கு ? எங்கே இருக்கு ? என்பது போல ஏதோ இருக்க. 'ஹையா சிக்கன்' என்று பள்ளிச்சிறுமிகள் போல பூரிக்கும் அக்காக்கள்.</span><br /><br />முட்டை ஒரு பக்கம் உடைத்து, ச்சீஸ் ஒரு பக்கம் துருவி, அவனில் ஒரு பக்கம், ப்லெண்டரில் கொஞ்ச நேரம், கூட்டாளிகளுக்கு அவ்வப்போது கட்டளைகள் என்று செய்தித்தாள் அலுவலகம் போன்றதொரு பரபரப்பில் சமையல் வல்லுநர்கள். தள மேலாளர் கேட்கும் சமையல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு, சமையலில் பரபரப்பாகவும், மைக்கில் நிதானமாகவும், சுவையாகவும் பேசி சுழலுன்றபடி இருக்கிறார்கள்.<br /><br /><span style="color:#6666cc;">முதல் ஐந்து நிமிடத்தில் ஆர அமர, லிஸ்ட் போட்டு தேவையான சாமான்கள் அள்ளி வந்து, அலுக்காமல் சமைக்கும் செலிபிரிட்டீக்கள் (??) நடிகையாக இருந்தால், முடியை பின் தள்ளி விடுவதும், உடையை சரி செய்வதிலும், அக்காக்கள் கேட்கும் சினிமா கேள்விகளுக்கு அள்ளித் தெளிக்கும் அட்டகாசங்களும். அவர்கள் அம்மாவோ, அக்காவோ, நண்பியோ தேமே என சமைத்துக் கொண்டிருப்பார். செலிபிரிட்டாவாக ('டி' க்கு ஆப்போஸிட் 'டா' தானே ?) இருந்தால், எங்கவீட்டில் சமையல்கட்டு எந்த பக்கம் இருக்குனு கூட தெரியாது என்று சொல்லி வெகு அழகாகக் காய் அறிந்து கொடுப்பார் துணைவிக்கு.<br /></span><br />கமர்ஷியல்ஸ் அதிகம் தான். இருப்பினும் சமையலில் யாரும் குறுக்கே புகுந்து எதையும் குதறுவது இல்லை.<br /><br /><span style="color:#6666cc;">நடுவால 'செஃப் ஸ்பெஷல்', 'நொடியில் ரெடி'னு புதுமை(யா ?) பண்ணியிருக்காங்க. 'சிரிப்பு போலீஸ்' மாதிரி ஒரு 'சிரிப்பு செஃப்'. ஏதோ ட்ராமாவில் இருந்து இழுத்து வந்தவர் போலவே இருக்கும் அவர் நடையும் உடையும். அள்ளிப்போட்டு சமைப்பதும், அதற்கோர் பேர் சொல்வதும், ஏதோ சின்னபுள்ளத்தனமா தான் இருக்கும்.</span><br /><br />நாலைந்து டிஷ்கள் செய்து, வேர்த்து விறுவிறுத்து, ப்ளேட்டிங்க் செய்து, ஒரு மணி நேரத்திற்குப்பின், பவ்வியமாக பறிமாறும் போது தான் அப்பாடா என்று நிற்கிறார்கள் சமையல்காரர்கள்.<br /><br /><span style="color:#6666cc;">ஓடி ஆடி சமைத்த களைப்பில் தனி அறையில் ஜாலியா உட்கார்ந்திருக்காங்க இங்க. அவர்களை விடாது, 'சொல்லுங்க நீங்க டென்ஷனா தான இருக்கீங்க ?, ப்ளீஸ் சொல்லுங்க, டென்ஷனா இருக்கேன்னாவது சொல்லுங்க ப்ளீஸ்' என்று கெஞ்சும் ப்ரியதர்ஷினி.</span><br /><br />சமையல்காரர் ஒவ்வொரு உணவாக சிறு குறிப்பு தந்து பாறிமாற, தாங்கள் ரசித்து ருசிக்கும் அனுபவங்களை, உணவு போலவே புட்டுப் புட்டு வைக்கின்றனர் நடுவர்கள். தலையாட்டிக் கேட்டுக் கொள்கின்றனர் சமையல்காரர்கள்.<br /><br /><span style="color:#6666cc;">தேவதர்ஷினி அக்கா சொல்ல சொல்ல, ஒரு சின்ன ஸ்பூன் எடுத்து, அதிலும் நுனியில், 'டீம் ஏ'யின் உணவு கொஞ்சம் எடுத்து, லைட்டா சரக்கு அடிக்கும்போது ஊறுகாய் தொட்டுக்கற மாதிரி சாப்பிடுகிறார் நம்ம ஊர் (செஃப்) நடுவர். நம்ம ஊரு டச் கொடுக்கலேன்னா எப்படி ? அந்த ஸ்பூனை அங்கிருக்கும் ஒரு கண்ணாடி டம்ளர் நீரில், அப்படி ஒரு சுழற்று சுழற்றி விட்டு, 'டீம் பி' உணவை மேற்சொன்னது போலவே சுவைக்கிறார்.<br /></span><br />'அன்ட் த வின்னர் இஸ்'னு மார்க்கஸ் கதற, நெஞ்சை உறையவைக்கும் இசை சில நொடிகள்.<br /><br /><span style="color:#6666cc;">அதே 'அன்ட் த வின்னர் இஸ்'னு தேவதர்ஷினி அக்கா சொல்ல, அதே நெஞ்சை உறையவைக்கும் இசை சில நொடிகள்.</span><br /><br />நொடியில் ரெடி மாதிரி இதுல ஏதாவது புதுமை பண்ணியிருக்கலாமே ?!<br /><br />"நான் நல்லாத் தான் சமைத்தேன். இதுல காரம் இவ்வளவு தான் போடணும். அந்த டிஷ் நார்த்ல இப்படித் தான் பண்ணுவாங்க. குழந்தைகள் உணவுங்கறதால ஸ்பைஸஸ் கம்மியாத் தான் போடணும். தெரியாமச் சொல்றாரு."<br /><br />இதெல்லாம் நம் நடுவர் குறித்து ரன்னர் அப் டீமின் கருத்துக்கள். சமீபத்தில் ஒரு மாமி, 'எந்த அடிப்படையில் எங்க உணவைத் தேர்ந்தெடுக்கலே'னு கேட்டு ஒரு நிமிடம் நடுவரை கிலிபிடிக்க வைத்துவிட்டார்.<br /><br />'செய்வன திருந்தச் செய்'னு சொல்லியிருப்பதை சினிமாக்காரர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் நன்கு புரிந்து வைத்துள்ளனர் :))<br /><br />---<br /><br />இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. முழுக்க நகைச்சுவைக்காவே.சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-12834784045527662742009-09-15T11:55:00.028-04:002009-09-15T23:24:14.230-04:00ஐ.டி. ப்ரோக்ராமரும் ~ படிக்காசுப் புலவரும் ...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA2XkWwC2pFZMEO3LZGFyk5oNftx9H6yVIEozEBfzjtXQWVOtkRAgQrhFKADwsgEbBM0lSxdEwM-tUirIlSKoe8_mE2LX92Sc7eyc1HCjZpDXtcSNFtSzayCDHUm0U_uVb2RMYUCMtKZKi/s1600-h/frustrated-programmer.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5381898748796342002" style="WIDTH: 270px; CURSOR: hand; HEIGHT: 257px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA2XkWwC2pFZMEO3LZGFyk5oNftx9H6yVIEozEBfzjtXQWVOtkRAgQrhFKADwsgEbBM0lSxdEwM-tUirIlSKoe8_mE2LX92Sc7eyc1HCjZpDXtcSNFtSzayCDHUm0U_uVb2RMYUCMtKZKi/s400/frustrated-programmer.jpg" border="0" /></a><br /><br /><div>சமீபகாலமாக ஐ.டி.துறை பற்றி வருந்தத்தக்க பதிவுகள் வருகின்றன. 'பணம் அதிகமா சம்பாதிக்கிறாங்க' என்று பல வருடங்களாக குற்றசாட்டு. போக, 'ஒரு ப்ராஜக்ட் எடுத்து, எப்படி எல்லாம் போக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள்' என்று ஒரு பதிவு படித்த போது மனம் வெம்பித் தான் போனது. என்ன தான் கட்டுரையாளர் நகைச்சுவை(க்காக) கலந்து எழுதியிருந்தாலும், மறுபுறம் ஐ.டி.பற்றி அவதூறான எண்ணத்தை மக்களிடம் விதைப்பதாகவே ஆகிறது.<br /><br />எந்தத் துறையில் இல்லை கேவலம் ? ஐ.டி.யிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். அதற்காக மொத்தத் துறையையும் எப்படி குறை சொல்லலாம் ?<br /><br />சினிமாத் துறையில் ரஜினி கோடிகளில் சம்பாதிக்கிறார் என்பதற்காக, கோடியில் நிற்கும் லைட்மேனைக் குறை சொல்லலாமா ? ஐ.டி.யும் அப்படித்தானே. எத்தனை பேரு சந்தோஷமா வேலைக்கு போறாங்க தினமும் ? எத்தனை பேர் கோடிகளில் புரளுகிறார்கள் ?<br /><br />அப்படியே க்ளையண்ட்டை இழுத்தடித்து வேலை வாங்கினாலும், எத்தனை காலம் சந்தையில் வியாபாரம் பண்ணமுடியும் அந்த ஐ.டி. கம்பெனி ? இதென்ன திருவிழா காலங்களில் போடப்படும் கடையா ? 'வந்தவரைக்கும் லாபம்' என பத்துநாளில் பணத்தை வாரிகிட்டு பொட்டி கட்டி கெளம்ப ?<br /><br />'பட்டர் அடிச்சு ப்ரெட் சாப்பிடும் ஆட்கள்' இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், ஆணிபுடுங்கி அசந்து கிடக்கும் ப்ரோக்ராமர்கள் தான் எங்கிலும் அதிகம். ஊண் உறக்கம் இன்றி வற்றிய கன்னங்களுடன், பாவம் ஓயாது உழைக்கும் வர்க்கம். 'நீங்க என்ன செஞ்சாலும் சரி, நாங்க உழைக்கத் தயார். எங்களை ஆன்ஷோர் அனுப்புங்க' என்று க்யூ கட்டி 'தவமாய் தவமிருக்கும்' செய்திகளும் நண்பர்கள் மூலம் தெரிகிறோம்.<br /><br />"என்னய்யா தூங்கி மூனு நாள் தானே ஆச்சு. 'மூ....னு நாள்'னு இழுக்கறே. என்ன மசமசனு நின்னுகிட்டு இருக்கே. போ, போ, போயி கோட் அடி" என்று துரத்தும் ப்ராஜக்ட் மேனேஜர் முதல், "டெஸ்ட் கேஸ்ல புள்ளி இருக்கு. ஆனா, டெஸ்ட் ரிசல்ட்ல புள்ளி இல்ல. பஃக் ஃபிக்ஸ் பண்ணு ராசா" என 'கோடில் புள்ளி' வைக்கும் டெஸ்டர் வரை, அவர்தம் பாடு அட அடா ....<br /><br />நம்ம ஊர்ல சின்னச்சின்ன அலுவலகங்களில் பார்த்தால், அக்கவுண்டன்ட் என்று ஒருவர் இருப்பார், அவருக்குக் கீழே நாலைந்து பேர் இருப்பர். ஒருவர் லெட்ஜர் எழுதுவார், ஒருவர் பெட்டி கேஷ், ஒருவர் ஜெர்னல் என்ட்ரி, ஒருவர் பி.அன்ட்.எல். இப்படி ஒவ்வொருவரும் ஒரு வேலையைச் செய்வார்கள். ஆனால் சின்ன ஐ.டி.கம்பெனியிலோ, அத்தனையும் ஒருவர் தான். UNIX, Windows, Networking, Java, .Net, 4gl, Oracle, Informix, db2 ..... இப்படி அத்தனையும் சும்மாடு வைக்காமலேயே ஒருவர் தலையில் ஏறி, அவர் தலை கனக்கும். இதைத்தான் தலைக்கனம் என்று தவறாகப் புரிந்துகொண்டோமோ ?<br /><br />ரெண்டு நாள் ட்ரெய்னிங், மூனு வார கோர்ஸ் என்று இப்படி ஆறுமாசத்துக்கு ஒரு தரம் அறிவை அப்டேட் பண்ணியே ஆகணும். இல்லை எனில் 'சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்' கேமில் கால் பதிக்கும் முன்னே கரைந்து போகும் நிலை.<br /><br />இப்படி இந்தக்காலத்தில் ஐ.டி. படித்துவிட்டு அல்லோலகல்லோலப்படும் மக்கள் போல அந்தக்காலத்தில் தமிழ் படித்துவிட்டு தவித்திருக்கிறார்கள் போல. தமிழால் பிரபலமடைந்தவர்கள் சிலர் தானோ ? (வள்ளுவருக்கே, மதுரை தமிழ் சங்கத்தில் ஔவை சிபாரிசு செய்தார் என்பதாகப் படிக்கின்றோம்). பலரது படைப்புகள் பலரைச் சென்றடையாமலும் போனதுவோ ? அவர்களில் சிலர் தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தியும் சென்றிருக்கிறார்கள்.<br /><br />தனிப்பாடலில் 'படிக்காசுப் புலவர்' இவ்வாறு புலம்புகிறார்:<br /><br /><strong><span style="font-size:85%;">அடகெடுவாய் பலதொழிலு மிருக்கக்கல்வி<br /> அதிகமென்றே கற்றுவிட்டோ மறிவில்லாமல்<br />திடமுளமோ கனமாடக் கழைக்கூத்தாடச்<br /> செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோமில்லைத்<br /><br />தடமுலைவே சையராகப் பிறந்தோமில்லைச்<br /> சனியான தமிழைவிட்டுத் தையலார்தம் !<br />இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை<br /> என்னசென்ம மெடுத்துலகி லிரக்கின்றோமோ ?</span></strong><br /><br />எந்த அளவிற்கு படித்துவிட்டோம் என நொந்திருக்கிறார் மனுஷன். ப்ரோக்ராமர் மாதிரியே புலம்பியிருக்காருல்ல ?<br /><br />ஏதாவது ஒரு இலக்கண முறைக்குட்பட்டு தான் இப்பாடல் எழுதியிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த சில பெயர்களை பயண்படுத்திக்கொள்கிறேன். தமிழார்வலர்கள் மன்னிக்க.<br /><br />இதே புலவர் (<span style="color:#666666;">ப்ரோக்ராமர்</span>) 'நிலைமண்டில ஆசிரியப்பா'வில் (<span style="color:#666666;">கணினி மொழிகள்</span>) பாடல் (<span style="color:#666666;">சுயபுராணம்</span>) எழுதி மன்னரிடம் (<span style="color:#666666;">கார்ப்பரேட் நேர்முகம்</span>) பரிசில் (<span style="color:#666666;">வேலை</span>) பெறச் சென்றால், அங்கே இருக்கும் மந்திரி (<span style="color:#666666;">ப்ராஜக்ட் மேனேஜர்</span>) "எண்சீர் விருத்தத்தில் இல்லையா ?" (<span style="color:#666666;">வேறு கணினி மொழிகள்</span>) என்பார்.<br /><br />"இது நிலைமண்டில ஆசிரியப்பானு எப்படிச் சொல்கிறீர்கள் ?" என்று குறுக்கு விசாரணை செய்வார் நக்கீரன் (<span style="color:#666666;">டெக் லீட்</span>).<br /><br />"எங்கள் மன்னவரின் ஆட்சி பற்றி (<span style="color:#666666;">கம்பெனி பற்றி</span>) ஒரு பாடல் பாடுங்கள் (<span style="color:#666666;">என்ன நினைக்கிறீர்கள் ?</span>)" என்பார் அரசியார் (<span style="color:#666666;">ஹெச்.ஆர்</span>)<br /><br />பொருட்குற்றம், சொற்குற்றம் எல்லாம் விளக்கி, நஞ்சு தொஞ்சு (<span style="color:#666666;">நாலைந்து நேர்முகங்கள்</span>), கடைசியில் அரசி கிட்ட பேரம் பேசி தான் பரிசில் பெறமுடியும்.<br /><br />இப்படி பீஸ் பீஸா பிஞ்ச பஞ்சுகளை லூஸ்ல விடுங்க பாஸ் :))) <br /><br /></div>சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-24552046468498466362009-09-15T09:00:00.007-04:002009-09-18T01:47:20.217-04:00ஹேப்பி டியர்ஸ் - ஹுவான் மார்டின் - யு.எஸ்.ஓபன் 2009 சாம்பியன்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAf8GwiDBZ_m8QO2ezCb88PKqmr76y4aOEHjXw8MrkgpaYjGXM28jbPBFAyPN7laZ3hWmZlzOmhnZqTaMT0VQ4dW0Du7KDfBDDeSx_ZiDqIvCDSJGGUQZlc03y0hkGMRGt05P2kVY_xPwj/s1600-h/b_0914_DelPotro30-us-open-2009.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5381531584224134002" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAf8GwiDBZ_m8QO2ezCb88PKqmr76y4aOEHjXw8MrkgpaYjGXM28jbPBFAyPN7laZ3hWmZlzOmhnZqTaMT0VQ4dW0Du7KDfBDDeSx_ZiDqIvCDSJGGUQZlc03y0hkGMRGt05P2kVY_xPwj/s400/b_0914_DelPotro30-us-open-2009.jpg" border="0" /></a><br /><span style="font-size:78%;"><span style="color:#999999;">Photo Credit: usopen.org</span><br /></span><br />வழக்கம் போல அலுவலகப் பணிகளின் தீவீரத்தில் மூழ்கியதில் இன்று US Open 2009 Mens Final என்பது மறந்தே போனது. ஞாபகம் வந்து டிவியைத் தட்டினால், நான்கு செட்கள் ஆடி ஐந்தாவது செட்டில் ஹுவான் மார்ட்டின் லீடிங்கில் இருந்தார்.<br /><br />ஒரு செகண்ட் பெடரர் தோற்கப்போவதை நினைத்து நிலைகுலைந்தாலும், அர்ஜெண்டினாவின் இளம்புயல் (20 வயது) ஹுவானின் விளையாட்டுத் திறன் ஆச்சரியம் தந்தது. போதும் ராஜர், ஐந்து வருடங்களில் நாற்பது தொடர் வெற்றி. புதியவர் வெல்லட்டும் என பிரார்த்தித்துக் கொண்டோம்.<br /><br />பெடரரின் நிறைய இடர்கள், டபுள் ஃபால்ட், ஏகப்பட்ட டென்ஷனுக்கிடையில் கடைசியில் அவுட்டில் அடிக்க, ஹுவான் ஹேப்பி டியர்ஸில் விழுந்தார். தேம்பி அழுத கன்னங்களில் முகம் பூரிக்க, நேரமிண்மை குறித்து அறிவிப்பாளர் அறிவித்தும், விடாப்பிடியாக ஸ்பானிஷில் நான்கு வார்த்தைகளாவது எனது மக்களுக்கு நான் பேசவேண்டும் என வாங்கிப் பேசி, மீண்டும் தேம்பியது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvyVNwbKjhf2sTTqrnyejshWub1KZify0irM-oZwTj1Ut2KfHEr_5zK9G9t_dFRRZ8s9db9ZxcsSgPr8xfOxb79XCLhAYza3NynImGcZnWbMI6Tt_phB9RIxDKQr-edp55IetNMsk-FVdh/s1600-h/b_0914_DelPotro08-usopen.org.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5381531595740288850" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvyVNwbKjhf2sTTqrnyejshWub1KZify0irM-oZwTj1Ut2KfHEr_5zK9G9t_dFRRZ8s9db9ZxcsSgPr8xfOxb79XCLhAYza3NynImGcZnWbMI6Tt_phB9RIxDKQr-edp55IetNMsk-FVdh/s400/b_0914_DelPotro08-usopen.org.jpg" border="0" /></a><br /><span style="font-size:78%;"><span style="color:#999999;">Photo Credit: usopen.org</span><br /></span><br />இளம் வயதில் கோப்பை வென்று யு.எஸ். ஓபனில் புதிய வரலாறு. அர்ஜெண்டினாவில் இருந்து இரண்டாவது யு.எஸ்.சாம்பியன். உலகின் ஆறாவது நிலை ஆட்டக்காரர். ஆனாலும் புதிய முகம். என்றெல்லாம் அறிவிப்பாளர் அறிவித்து, உங்களது போராட்டதின் வெற்றி ஒரு மில்லியன் அறுநூறாயிரம் டாலர், அது போக மேலும் இருநூறாயிரத்தூ சொச்ச டாலரும் சேர்த்து, ஒரு மில்லியன் என்னூறாயிரத்தி சொச்சம் டாலர் என்றார். இடையில் நிறுத்தி இத்தோடு நின்றுவிடவில்லை, லெக்ஸஸ் கார் கம்பெனி (ஏற்கனவே விலை உயர்ந்தது தான்) விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாகவும் அளிக்க, இவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு கண்களில் நீர்வழிய, உள்ளத்தில் வெற்றி கனியைச் சுவைத்து கொண்டிருந்தார் ஹுவான்.<br /><br />மேலும் தொடர்ந்து பல வெற்றிகள் குவிக்க <strong>வாழ்த்துக்கள் ஹுவான் மார்டின்</strong>!!!<br /><br />ஹுவான் மார்டினின் வெற்றி தருணங்கள் கீழே வீடியோவில்:<br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/5pxieW-XVxk&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/5pxieW-XVxk&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com4