Thursday, July 26, 2007

கல்வியா ? செல்வமா ? வீரமா ? - கண்ணதாசன்

சரஸ்வதி சபதம் எனும் திரைப் படத்தில் கவியரசரின் கருத்தாளமிக்க வரிகள்.

எவ்வளவு எதார்த்தம்:

படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா ? -- பொருள்
படைத்தவன் கருத்தானால் சபைமீறுமா ?

பாடலைக் கண்டு, கேட்டு, வாசித்து மகிழுங்கள்



Thanks to senthil5000 for the youtube

கல்வியா ? செல்வமா ? வீரமா ?
அன்னையா ? தந்தையா ? தெய்வமா ?

ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? -- இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ?

கற்றோர்க்கு பொருளின்றி பசிதீருமா ? -- பொருள்
பெற்றோர்க்கு அறிவின்றி புகழ் சேருமா ?

கற்றாலும், பெற்றாலும் பலமாகுமா ? -- வீரம்
காணாத வாழ்வென்றும் வாழ்வாகுமா ?

படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா ? -- பொருள்
படைத்தவன் கருத்தானால் சபைமீறுமா ?

படித்தவன், படைத்தவன் யாராயினும் -- பலம்
படைத்திருந்தால் அவனுக் கிணையாகுமா ?

ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது -- அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது

ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது ? -- மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது ?

மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா ? -- காலம்
முற்றும் பொருள் வளர்க்கும் மதி வேண்டுமா ?

தோங்கும் பகைநடுங்கும் வனம் வேண்டுமா ? -- இவை
மூன்றும் துணையிருக்கும் நலம் வேண்டுமா ?


அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? என்ற கவியரசரின் வரிகளை சற்று மாற்றி

அன்னையா ? தங்கையா ? மனைவியா ? என்று எழுதியிருந்தால் எப்படி இருக்கும் ? தற்போது இம்மூவரும் ஒன்றாக வாய்ப்பேயில்லை என்று வருத்தம் தான் குடிகொள்கிறது. அதே சமயம்

ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது ? -- மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது ?


என்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !!! சாத்தியம் இல்லையென்றாலும் கனவாவது காணுவோம் !!!

0 மறுமொழி(கள்):

Post a Comment

Please share your thoughts, if you like this post !