Tuesday, November 6, 2007

குறுகும் உண்மைகளும் தழைக்கும் பொய்களும்



உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இது தான்டா,

உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புரி தான்டா,

தெள்ளத் தெளிவாத் தன்பாட்டிலே சொன்னான்
பட்டுக் கோட்டை யடா,

கள்ளம் கபடம் எங்கு தேடினும்
வெள்ளைப் பொய் களடா,

கிள்ளப் படாக்கொடி முளைவிட்டு கிளைவிட்டு
காடாய்ப் போகு மடா,

துள்ளத் துடிப்பாய் அதைச்சீர் செய்தாலே
சிறு தோட்டமாய் ஆகுமடா,

பள்ளத்தில் விழும்நீர் நாளொரு வடிவம்
பெற்றே மறையு மடா,

உள்ளத்தில் எழும்சொல் வேகமாய் இருந்தால்
வெள்ளமாய் மாறு மடா,

தள்ளப் பார்க்கும் உலகை நினைத்தால்
வேதனை பொங்கு தடா,

அள்ளக் குறையா உண்மை உரைத்தால்
வாழ்வு கடலாய் நிலையுமடா.

0 மறுமொழி(கள்):

Post a Comment

Please share your thoughts, if you like this post !