Monday, February 11, 2008

அரிதாரத்தப் பூசிக் கொள்ள ஆசை



கருத்த மரக்கிளையும்
கருங்கூரை வீடுகளும்
கருந்தார்ச் சாலையும்
காய்ந்த புல்வெளியும்

இன்ன பிற ...

அசையாப் பொருட்களையும்
அரிதாரம் பூச வைக்கும்
வெள்ளைப் பூத் தூவலும்
வெண் மணற் சாறலும்.

நீண்ட கிளை விரித்து
மேனி முழுதும் வாரியிறைத்து
நாணி கோணி நிற்கும்
ஆடையில்லா மரம்,

பனிச்சறுக்கு விளையாட்டில்
பாத்திகட்டி விளையாடி
சிறுபிள்ளை செய்து கொண்ட‌
அரிதாரப் பூச்சு.

வெண் சேற்றில்
புதைந்து நிற்கும்
உயர்ந்த வீடுகளின்
பரந்த கூரை மேல்,

விழாமல் ஒட்டிய‌
வெண் பனித் தூவல்
அவசரத்தில் செய்து கொண்ட‌
அரிதாரப் பூச்சு.

நீளும் தார்ச்சாலை
நாளும் வாகன மேனி
நடுநிசிக் குளிரில்
வெண் கம்பளி போர்த்தி,

சற்றும் சளைக்காமல்
சேற்றுக் கலவையாய்
அடித்துச் சிதறிய‌
அரிதாரப் பூச்சு.

பரந்து விரிந்த வானத்தை
ஓரிடத்தில் முட்டும்
மேடு பள்ளம்
மிகுந்த புல்வெளி,

அளவாக அழகேற்றும்
அழகுப் பெண்கள் போல்
சீராகச் செய்து கொண்ட‌
அரிதாரப் பூச்சு.

5 மறுமொழி(கள்):

நாகு (Nagu)said...

அழகாக இருக்கிறது. இங்கே பனியே வராமல் வாடும் பசங்க இத படிச்சா அடிக்க வருவாங்க. நல்ல படமாக்கம். இந்த வாட்டி பனியே பாக்காமல் இருந்த குறைய தீத்துட்டிங்க...


பனிச்ச'று'க்கு விளையாட்டு!

சதங்கா (Sathanga)said...

நன்றி நாகு, வழக்கம்போல் வந்து பிழைதிருத்தி பாராட்டியதற்கு ...

CVRsaid...

படம் நீங்க எடுத்ததா??

மிக அழகான ஒளியமைப்பு மற்றும் காட்சியமைப்பு!! :-)

சதங்கா (Sathanga)said...

CVR, வருகைக்கு நன்றி.

உங்க ஆர்வம் புரிகிறது. புகைப்படம் எடுத்தது நான் தான், ஆனால் இணையத்தில் இருந்துங்க =:) ஐயோ அடிக்க வராதீங்க :))

CVRsaid...

Ha ha ha!!
Ok ok!! :-D

Post a Comment

Please share your thoughts, if you like this post !