Friday, February 1, 2008

மழையும், சிறுவர்களும், நானும் ...



மேகம் கருக்குது
மின்னல் வெளுக்குது
மழையே மழையே
பெய் பெய் பெய்

ஆடுது ஆட்டம்
சிறுவர்கள் கூட்டம்
மழையின் நீரில்
தை தை தை

வேர்களின் வாசனை
காற்றினில் பறக்குது
மண்ணில் கையை
வை வை வை

காற்றின் வேகம்
சீற்றம் கொண்டு
ஏற்படும் சத்தம்
உய் உய் உய்

அப்பாவின் அழைப்பில்
ஆட்டத்தைக் குறைத்து
நட்புக் கூட்டத்திற்கு
பை பை பை

அடுக்கு மாடியில்
அம்மா சுடும்
தோசையின் ஓசை
சொய் சொய் சொய்

தலையைத் துவட்டி
தாவிக் குதித்து
தட்டில் கைவைத்துப்
பிய் பிய் பிய்

3 மறுமொழி(கள்):

jeevagvsaid...

நல்லா வந்திருக்கு சதங்கா.

சதங்கா (Sathanga)said...

பாராட்டுக்கு நன்றி ஜீவா.

ராமலக்ஷ்மிsaid...

பெய்யும் மழையில் தை தை ஆட்டம்.
மண்ணில் கை வைப்பது ரொம்பவும் இஷ்டம்.
உய் உய் காற்றில் பை பை சொல்வதோ கஷ்டம்.
சொய் சொய் தோசையைப் பிய்க்கையில்
பறந்திடும் வருத்தம்.

சூப்பர் சதங்கா!

Post a Comment

Please share your thoughts, if you like this post !