Thursday, September 20, 2007

மாட்டுச் சந்தை - ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்

அலை கடலெனக் கூட்டம் திரண்டு கலை கட்டுகிறது மாட்டுச் சந்தை. மக்களின் கூச்சலோடு, மாக்களின் கத்தலும் காதை அடைக்கிறது. கண்களை மூடிக்கொண்டு பார்த்தால் ... மன்னிக்கவும், கேட்டால், வனாந்திரத்தில் இருப்பது போன்ற உணர்வு.

"இந்தச் சந்தையிலயாவது நாம ஒன்னு ரெண்டு மாடாவது வாங்கிப்புடணும்ணே" என்று கூவிக் கொண்டு, அக்கூட்டத்திலும் செல்வராஜை விடாது பின் தொடர்ந்தான் வேலப்பன்.

தூரத்தே ராமதுரை இரு காங்கேயம் காளைகளுடன் நின்றிருந்தார். உழைத்துக் களைத்த மாடுகளாய் நின்று கொண்டிருந்தன அவை. ஏண்ணே, ஒழச்சதெல்லாம் பத்தாதுன்னு, விக்க வேற வந்திட்டிங்களா ? பாருங்க எவ்வளவு பாவமா நிக்குதுக ரெண்டும் என்று ஆரம்பித்தான் செல்வராஜ்.

அதற்கு ராமதுரை, "ஒனக்கு ஏன்டாப்பா இத்தன அக்கற ? இந்த வெரைட்டி ஒழைக்கறதுக்குனே பொறந்ததுகடா. மத்த ஜாதி மாதிரி இத்தன வருசமினு இல்ல, சாகறவரைக்கும் ஒழைக்குமாக்கும்" என்றார் பெருமிதத்துடன் !

"அப்புறம் எதுக்கு விக்கறீங்க" என்று கிடைத்த கேப்பில் சிந்து பாடினான் வேலப்பான்.

ராமண்ணே, எம்புட்டு போகுது என்று நடந்து கொண்டே கேட்டாள் சின்னத்தாயி. ஏத்தா, ஒங்க ஊட்டுல இல்லாத மாடுகளா, நீ என்னாத்துக்கு கேக்குற என்றார்.

அதானே, நாங்கள்லாம் அப்புறம் எப்ப....டி மாடு வாங்குறது என்று இழுத்தான் செல்வராஜ்.

எப்ப 'டி'யா ? சந்தைக்குள்ள வந்து என்ன இடிச்சி தொந்தரவு பண்றேனு ஒரு வார்த்த சொன்னப் போதும், என்ன நடக்குமினு தெரியுமில்ல ... என்று மிரட்டினாள். மாட்ட வாங்க வந்தமா, போனமானு இருக்கனும். சண்டை பிடிச்சிக்கிட்டு இருந்தா வேற எவனாவுது வாங்கிட்டு போய்டுவான், இது கூட தெரியாம ... அய்யே.... என்று இழுத்தாள் சின்னா.

அப்போது அங்கு வந்த கணேசன், ராமதுரையுடன் துண்டில் கை மறைத்து விலைபேசி முடித்துவிட்டார்.

-----

மேலே உள்ள கதையை இப்போதுள்ள நடைமுறை வாழ்வில் ஒரு துறையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறதா ?

உங்கள் ஒப்பிடுதலுடன் வந்த துறையுடன், கீழுள்ள வெண்பா (மாதிரி) பொருந்துகிறதா என்று பாருங்கள்.

பணம் பண்ணப் பணிந்து நல்ல
மனம் தன்னை இழந்து - கண்ட
காட்சி தனில் மிதந்து அன்பிலா
மாட்சியில் மறையுதே குணம்.

-----

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன !

1 மறுமொழி(கள்):

Kasthuri Rengansaid...

அருமை
வலைச்சரம் மூலம் அறிமுகம் வாழ்த்துக்கள்

Post a Comment

Please share your thoughts, if you like this post !