Tuesday, October 16, 2007

மழைக் காலம்



போர் கொள்ளும் மேகம்
தார் போலக் கருக்க

ஒளி மினுக்கல் மின்னி
துளித் துளியாய்த் தூவ

சிதறும் வெள்ளிக் கம்பி
உதறி மண்ணில் இறங்க



வட்ட வட்டமாய்ச் சொட்டி
வறண்ட பூமி நனைய

தென்றல் கூடிய காற்றில்
மண்ணின் வாசனை கசிய

மிதமாய் நடுக்கும் குளிரில்
இதமாய் தேகம் சிலிர்க்க

மரக்கிளை இலைகளின் இடுக்கில்
தூறல்த் துளிகள் தங்க



நடை பாதையில் ஈரம்
கேட்டுக் கதவில் ஈரம்

வீட்டுக் கூரையில் ஈரம்
ஆட்டு மந்தையில் ஈரம்

எங்கும் எதிலும் ஈரம்
பங்கு கொண்டு இருக்க

மழைக் கால ஈரம்
மனம் முழுதும் பரவியதே !

6 மறுமொழி(கள்):

Anonymoussaid...

அப்படியே (கவுஜ) மழயில நனைஞ்ச மாதிரி இருக்கு ஓய்...

ஆனா ஒண்ணு - ஊர்ல மழையே காணோம்னு அவன் அவன் வாட்டர் ரெஸ்ட்ரிக்ஷன் கொண்டு வரான். நீர் மழைய கனவு கண்டு கண்ணு முன்னாடி கொண்டுவந்து வயத்தெரிச்சல கொட்டிக்கிறீர். ஆமாம் இப்பல்லாம் காலைல பத்து மணிக்கே கனவா? என்ஜாய் மாடி! உம்ம கனவுல மழைல டெஸ்டர் பேபி நனையக்கடவது!

jeevagvsaid...

எதுகையுடன் அழகாக இருக்குங்க கவிதை!

சதங்கா (Sathanga)said...

நாகு,

//அப்படியே (கவுஜ) மழயில நனைஞ்ச மாதிரி இருக்கு ஓய்...//

ஆஹா ... இதையே உங்க பாராட்டா எடுத்துக்கறேன்.

//ஆனா ஒண்ணு - ஊர்ல மழையே காணோம்னு அவன் அவன் வாட்டர் ரெஸ்ட்ரிக்ஷன் கொண்டு வரான். //

எதுவுமே கிடைக்காத போது தான் அதன் தாக்கம் அதிகம் இருக்கும். அதுபோலத் தான் இதுவும். :)

சதங்கா (Sathanga)said...

ஜீவா,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

cheena (சீனா)said...

அழகு தமிழில் அருமையாக எளிய சொற்களினால் இயற்றப்பட்ட கவிதை. படித்தேன் ரசித்தேன்

சதங்கா (Sathanga)said...

சீனா,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !