Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Thursday, October 29, 2009

கட்டழகி ...


Photo Credit: Bernat Casero

கடந்த சில வாரங்களாகவே அவளிடம் அந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னைப் போல‌ அவ‌ள் இப்போது இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் அவளைப் பார்க்க வேண்டும்.

போன மாதம் கூட அவளைப் பார்த்த போது அப்படி ஒரு வசீகரம். கரும்பச்சையில் தலைமுடிச் சாயம். சிலர் தங்கள் தலைக்கும் அடிக்கும் வண்ணங்களைப் பார்த்தால் சகிக்காது, ஆனால் இவளுக்கோ வெகு நேர்த்தியாக‌ இருந்தது. ஆங்காங்கே கோர்த்த சிவ‌ப்பு முத்துக்க‌ள் த‌லைமுடியுள் தொங்கின‌. த‌ன்னை அல‌ங்க‌ரித்துக் கொள்வ‌தில் அவ‌ளுக்கு நிக‌ர் அவ‌ளே.

முதன் முதலில் அவளை எங்கே சந்தித்தேன் ... ம்ம்ம்ம் ...

இந்த ஊருக்கு வந்த புதிதில், பால் வாங்க கடைக்குச் சென்ற போது, ஒரு தெரு முனையில் தான் அவளைப் பார்த்தேன். அவளது வனப்பும், வடிவும், கலகலப்பும், பார்த்துக்கொண்டிருக்கும் போதே, என் இதயத்தைக் பறித்துக் கொண்டாள் அந்தக் கொள்ளைக்காரி.

இரண்டு தெருக்கள் சேரும் முனையில் இருந்தது அவளது வீடு. அவள் வசிப்பதாலோ என்னவோ அவள் வீடும் அழகாகவே இருந்தது. வீட்டின் ஜன்னல் சாய்ந்து, கை காட்டி சிரித்துப் புன்ன‌கைத்தாள். யாராவ‌து க‌வ‌னிக்கிறார்க‌ளா என‌ சுற்றி முற்றி பார்த்துக் கொண்டேன். ந‌ல்ல‌ வேளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை.

பச்சை வண்ண‌ம் மாற, அங்கிருந்து நகர மறுத்த என்னை, 'நான் இங்கே தான் இருப்பேன். நாளை சந்திக்கலாம்' எனக் கை அசைத்து அனுப்பி வைத்தாள். எனக்குப் பின் நின்ற வண்டிக்காரன் ஹாரன் அடித்து என் வயிற்றெரிச்சலை வேறு கட்டிக் கொண்டான்.

அன்றிலிருந்து அவளது தெருப்பக்கம் அடிக்கடி போக ஆரம்பித்தேன். எப்போது சந்தித்தாலும் அவ‌ள் அதிக‌ம் பேசுவ‌தில்லை. நான் பேசாம‌ல் இருப்ப‌தில்லை. காதுகளில் கிசுகிசுப்பாள், கலகலவெனச் சிரிப்பாள், திடீரென சோவென அழுவாள். அவளுடன் இருந்தால், மணிக்கணக்கும் நொடிப் பொழுதே. நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்கள் ஆனோம். ஆறே மாதங்கள் தான் என்றாலும் ஆறேழு வருடத்திற்கு இணையாக இருந்தது எங்கள் நட்பு.

"திரும‌ண‌ம் ஆன‌வ‌ன் நீ. இப்படி அவளையே சுற்றி வந்தால் உன் மனைவி என்ன நினைப்பாள்" என‌க் க‌டிந்து கொண்டான் ந‌ண்பன். என் காதுகளில் எதுவுமே விழவில்லை. அழகான மனைவி ஒரு புறம் இருந்தாலும், இவளின் மேல் பிரியமும் தவிர்க்க முடியாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.

சொல்ல‌ ம‌ற‌ந்துவிட்டேனே ! வனப்பும், வடிவும் தானே தவிர, அவள் அங்கமெல்லாம் தங்கம் இல்லை, க‌ருப்பி தான். ஆனால் க‌ட்ட‌ழ‌கி. அந்த‌க் க‌ட்ட‌ழ‌கிற்கு தான் இப்போது ப‌ங்க‌ம் வ‌ந்திருக்கிற‌து.

அவளைப் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அலுவலக நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டு இன்று தான் ஊர் திரும்பியிருந்தேன். "இப்ப தான வந்தீங்க, அதுக்குள்ள எங்கே கிளம்புறீங்க ?" என்ற மனைவியின் வார்த்தைகளை உதாசீனம் செய்து அவளைப் பார்க்கக் கிளம்பினேன். கையோடு காமெராவையும் எடுத்துக் கொண்டேன்.

வ‌ண்ண‌ச் சாய‌ங்க‌ள் அடித்து அடித்து முடி எல்லாம் ப‌ழுப்பாகிக் கொட்டியிருந்த‌து. இப்போது அவளிடம், கிசு கிசு பேச்சு இல்லை, கல கல சிரிப்பு இல்லை. இப்படி ஆகும் என்று முன்னரே தெரியும். இருப்பினும் இந்த நிலையில் அவளைப் பார்க்க என் மனம் ப‌ழ‌கியிருக்க‌வில்லை.

'அழ‌காய் இருக்கும்போது குழையக் குழைய‌ வ‌ளைய‌ வ‌ந்தாய். இப்ப எல்லாம் போச்சு. நீயும் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாயா ?' என்ப‌து போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

யாருமே அங்கில்லை. துளியும் யோசிக்காம‌ல், கிட்டே சென்று அவளை இறுக‌க் க‌ட்டிப் பிடித்துக் கொண்டேன். முன்னரே தானிய‌ங்கியில் போட்டுவிட்ட காமெராவில், க்ளிக், க்ளிக் என்று சில‌ ப‌டங்க‌ள் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன். 'இன்னும் சில மாதங்களில் எல்லாம் ச‌ரியாகிவிடும், கவலைப்படாதே' என்று அவ‌ள் என்னைத் தேற்றி அனுப்பிய‌து ஆறுத‌லாய் இருந்த‌து.

"வந்ததும் வராததுமா, அந்த மொட்டை மரத்தைப் படம் பிடிக்கத் தான் போனீங்களாக்கும் !" என்று தாளிக்கும் க‌டுகோடு சேர்ந்து கொண்டாள் என் ம‌னைவி.

Tuesday, October 20, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு - 2009 - 2



நீங்க எல்லாம் பதில் சொல்லி மத்தவங்களையும் மாட்டி விடுங்கப்பா, நான் (ரிலாக்ஸ்டா) உட்கார்ந்து படிக்கிறேன் என்றிருந்தால், 'What goes around, comes back around !' என்ற ஜஸ்டின் டிம்பர்லேக்கின் பிரபல பாடல் வரிகளுக்கேற்ப, கேள்விக்கணைகளை நம் பக்கமே திருப்பி விட்டாங்க ராம‌ல‌ஷ்மி அக்கா. தெரிஞ்சிருந்தா இன்னும் சுலபமா கேள்விகளைத் தயார் செய்திருக்கலாமே !!! :))


  1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

    தமிழில் ஆர்வம் தவிர்த்து பெரிய ஞானம் எல்லாம் இல்லாதவன். சிறுவயதில் இருந்து பண்டிகை நாட்களுக்கு (மட்டுமே) வாழ்த்து அட்டைகளில் கவிதை எழுத ஆரம்பித்து, பின்னர் சில கவிதைகள், கதைகள் எழுதி பத்திரிகைகளில் வராமல், நொந்து நூல் பிரியும் நேரத்தில் நுழைந்தது பதிவுலகம். கொட்டித் தீர்த்துட்டோம்ல .....


  2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

    ஒவ்வொரு வருடமும் தீபாவ‌ளி அன்று அதிகாலை நாலு நால‌ரைக்கெல்லாம் எழுந்து (எங்கே எழுந்து ? எழுப்பிவிட‌ப்ப‌ட்டு :)) எண்ணை தேய்த்துக் குளித்து, 'போன‌ முறை ம‌ஞ்ச‌ள் ஜாஸ்தி வ‌ச்சிட்டீங்க‌, இந்த‌ த‌டவை கொஞ்ச‌மா வைங்க'னு அட‌ம்பிடிச்சு, நெடுஞ்சான் கிடையாக‌ விழுந்து, புத்தாடைக‌ளை தாத்தா அப்பாவிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டு, ச‌மைய‌ல்க‌ட்டில் பிஸியாக‌ இருக்கும் பாட்டி, அம்மா, ப‌ணிப்பெண் எல்லோருக்கும் வாழ்த்துக்க‌ள் சொல்லி, (இப்ப‌ அவ‌ங்க‌ளை நினைத்தால் எவ்வ‌ள‌வு சிர‌ம‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள் என்று தெரிகிறது. அப்போதெல்லாம் நாம் செல்ல‌ப்பிள்ளைக‌ள் ஆச்சே :)), காலை உணவை வீட்டில் முடித்துக் கொண்டு, ப‌க்க‌த்தில் இருக்கும் உற‌வின‌ர் வீடுக‌ளுக்குச் சென்று வாழ்த்துக்கள் சொல்லி, நண்பர்கள் ஜோதியில் கலந்தால், வீடு திரும்ப‌ சாய‌ந்திர‌ம் ஆகும். இவையெல்லாம் ப‌தினைந்து இருப‌து வ‌ருட‌த்து முந்தைய‌ க‌தை.


  3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

    பென்டன்வில் ‍ ஆர்கென்ஸா, அமெரிக்கா.


  4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

    நாங்கள் வசிக்கும் பகுதி இந்தியர்கள் ஒன்று சேர்ந்து, இங்கிருக்கும் கோவிலில் கொண்டாடலாம் என்றிருந்தோம். கடுமையான குளிரின் காரணமாக அது ஒத்திப் போடப்பட்டது. பிறகு, நண்பர் ஒருவரின் அழைப்பில் அவர்களது வீட்டில் ஏழெட்டு குடும்பங்கள் சேர்ந்தும் தீபாவளி தீபாவளி தான். வெடிக்காத பட்டாசுகள் போட்டு (ஜூலை 4த் மற்றும் புத்தாண்டு தவிர பட்டாசு போடத் தடையாம். மீறி வெடிச்சா புடிச்சு உள்ள‌ வச்சிருவாங்களாம் :)) நம்மூர் கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வானம் எல்லாம் போட்டு குழந்தைகளுக்கு ஒரே கொண்டாடாட்டம்.


  5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

    கோல்ஸ், வால்மார்ட்


  6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

    ரொம்பலாம் இல்லைங்க. குலோப் ஜாமுன், ரிப்பன் பக்கோடா, இன்ன‌ பிற‌...

    இதோ, கொஞ்சம் குலோப் ஜாமுன் உங்களுக்காக, எடுத்துக்கங்க ...


    இந்தக் காலத்து ஆண்களை நினைத்தால் பாவமாக இருக்கிறதா ? இல்லேன்னாலும் அதாங்க‌ உண்மை :)))

    அம்மணி அடிக்க வந்திறப் போறாங்க :) எஸ்கேப்ப்ப்ப்ப்.


  7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

    மின்னஞ்சல், தொலைபேசி


  8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

    ரெண்டுமே. நண்பர்கள் வீடுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.


  9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

    பண்டிகை என்றில்லாமல் இணையத்தின் மூலம் அவ்வப்போது உதவிகள் செய்து வருகிறோம். ஊரில் இருந்தால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யவும் ஆசை.


  10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

    'ஜாம்பவான்கள்' என்று எழுதியிருந்தேன். 'சக்கரவர்த்தினிகள்' என்று சீனா ஐயா அழகாகக் குறிப்பிட்டார்கள். சக்கரவர்த்தினிகள் சுடச் சுட பதிவிட்டு/பதிவிட தயாரகிறார்கள்.

    இதோ இங்கே:

    கவிநயா : http://kavinaya.blogspot.com/2009/10/2009.html
    நானானிம்மா : http://9-west.blogspot.com/2009/10/2009.html
    துளசி டீச்சர் : http://thulasidhalam.blogspot.com/2009/10/beech-mein-kaun-hai.html
    வல்லிம்மா : http://naachiyaar.blogspot.com/2009/11/blog-post.html

Wednesday, October 14, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு - 2009

வலையகத்தில் கொஞ்ச காலம் ஆச்சு தொடர் ஓட்டி. அதனால தீபாவளியை முன்னிட்டு ஒரு தொடரை ஆரம்பித்து வைப்போம்.

முக்கியமா ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் இந்த நேரத்தில் பார்த்தால், நடிகர் நடிகையரின் பேட்டி சரம் சரமாய் தொகுத்தளிப்பார்க‌ள். பண்டிகை அல்லாத நாட்க‌ளிலேயே அவ‌ர் அறுப‌து, இவ‌ர் ஐம்ப‌து என்று சின்னத்திரை கதறுகிறது :)) தீபாவ‌ளி என்றால் கேட்க‌வும் வேண்டுமோ ?

நம்ம எல்லாம் பெரிய ஆட்கள் ஆனால் (இப்பவே அதுக்கு என்ன கொறச்சல் என்கிறீர்களா ? :)), நம்மை யாராவது பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும் ? நாட்டுக்கு ரொம்ப அவசியம் என்கிறீர்களா ? அதுவும் சரி தான் :)) அவசியம் என்பதைத் தாண்டி ஜாலியா இத்தொடரைக் கொண்டு செல்வோமே ?

வழக்கம் போல ஒரு சில விதிகள் மற்றும் நண்பர்களை இழுத்து ...மன்னிக்கவும், அழைத்து வருவது :)) ஐந்து விதிமுறைகள் பத்துக் கேள்விகள். ரொம்ப சிம்ப்பிள். குறைந்தபட்சம் உங்களது பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள்.

விதிமுறைகள்:


  1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.

  2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.

  3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.

  4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.

  5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.





ரொம்ப ஈஸீல்ல ? இப்ப, கேள்விகள்:


  1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

  2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

  3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

  4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

  5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

  6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

  7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

  8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

  9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

  10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?



*****

க‌டைசி கேள்வி எப்ப‌வுமே க‌ஷ்ட‌ம் தான் ந‌மக்கெல்லாம். அத‌னால‌ அதுக்கு என் பதிலை சொல்லி, தொடரை ஆரம்பித்து வைக்குமாறு வ‌லைய‌க‌ ஜாம்ப‌வான்களை அன்போடு அழைக்கிறேன் :))


  1. துள‌சி டீச்ச‌ர் - http://thulasidhalam.blogspot.com/

  2. நானானிம்மா - http://9-west.blogspot.com/

  3. வ‌ல்லிம்மா - http://naachiyaar.blogspot.com/

  4. கவிநயா - http://kavinaya.blogspot.com/



*** அனைவருக்கும் னி தீபாளி வாழ்த்துக்ள் ***

Thursday, October 1, 2009

நெல்லி மரம் !


Photo credit: indiamike.com

வாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம். தூவானத்திற்கே வெட்கப்பட்டு, இழுத்துப் போர்த்தியிருந்தது கருப்பு ஈர‌ ஆடையை.

வெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள். இலைகளுக்குப் போட்டியாய் ப‌ச்சை ருத்ராட்ச‌ங்களென ச‌டை ச‌டையாய் நெல்லிக்க‌னிக‌ள்.

சில வருடங்கள் முன்னர் என் அண்ணன் எடுத்த புகைப்படம் இப்போது என் கையில். புகைப்ப‌ட‌த்தில் ம‌ர‌ம் சிரிக்க‌, ம‌ன‌ப்ப‌ட‌த்தில் சிலிர்ப்போடு பின்னோக்கி ப‌ய‌ணித்தேன்.

***

"இன்னிக்கு நெல்லி ம‌ர‌ம் சுத்த‌ப் போக‌ணும். வ‌ர்றியா ? உங்க‌ அக்காளுக்குத் தான் வ‌ய‌சாகிடுச்சு. வாக்க‌ப்ப‌ட‌ ஒரு ப‌ய‌ வ‌ர‌க்காணோம். ம‌ர‌த்த‌ச் சுத்தினா சீக்கிர‌ம் க‌ல்யாண‌ம் கைகூடும், துணைக்கு வாடா சந்திரா" என்று கிராமத்துக்கு வந்திருந்த என்னை இழுத்துக் கொண்டிருந்தார், பேரன் பேத்திகளை டா போட்டு அழைக்கும் மீனாக்ஷி பாட்டி. அவருக்கென்னவோ ஆண்பிள்ளைகள் என்றால் அத்தனை பிரியம்.

'என‌க்கு அப்ப‌டி என்ன‌ வ‌ய‌சாகிடுச்சு. அவ‌ளைக் கூப்பிடாம‌ல் என்னை ஏன் கூப்பிடுகிறார். நான் போய் அவளுக்காக என்ன‌ செய்துவிடப் போகிறேன். இல்லை, என்னைவிட வயதில் மூத்த அண்ணனையாவது கூட்டிட்டு போகலாமே ?' என்றெல்லாம் என‌க்குத் தோன்ற‌வேயில்லை.

"வ‌ர்றேன். அங்க என்னல்லாம் நடக்கும் ?" என்றேன்.

"ஐய‌ரு வ‌ருவாரு. நெல்லி மரத்துக்கு முன் வ‌ந்து, பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் த‌லைவாலை இலையில் வைத்து, அதில் கும்ப‌ம் வைத்து, பூஜை செய்து தீபாராத‌னை எல்லாம் செய்வாரு. கும்ப‌த் த‌ண்ணிய‌ ம‌ர‌த்தில் தெளித்து, பின் ம‌க்க‌ளுக்குத் தெளிப்பாரு. உங்க‌ அக்கா வ‌ய‌சொத்த‌ புள்ளைக‌ நெறைய‌ வ‌ரும். தங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும் என்று வேண்டி, ம‌ர‌த்த‌ இருவ‌த்தியோரு வாட்டி சுத்திவ‌ருங்க‌..."

'அப்பாவின் ப‌ணியை ஒட்டி ப‌டிப்பெல்லாம் வெளியூரில் இருந்த‌தால் உள்ளூர் நிக‌ழ்ச்சிக‌ள் ப‌ற்றிய‌ ஞானம் எதுவும் இல்லை'. பாட்டி சொல்ல‌ச் சொல்ல, 'போய் பார்ப்போம்' என்று அவ‌ருட‌ன் புற‌ப்ப‌ட்டேன்.

காலை வெய்யில் ப‌னியைக் க‌ரைத்து பருகிக் கொண்டிருந்த‌து. ஊருணிக்க‌ரையை ஒட்டி, மேற்கே இருந்த 'வித்யா பாட‌சாலை'யின் தோட்ட‌த்தில் இருந்த‌து நெல்லி ம‌ர‌ம். மா, ப‌லா, வாழை என‌ ப‌ல‌ ம‌ர‌ங்க‌ளின் ஆதிக்க‌ம் இருந்தாலும், கூட்ட‌த்திற்குள் காத‌ல‌னைத் தேடும் க‌ள்ளியைப் போலே த‌னித்துத் தெரிந்தது நெல்லி ம‌ர‌ம்.

'வித்யா பாட‌சாலை' எங்கள் கிராமத்தில் ஒரு சின்ன‌ ப‌ள்ளிக்கூடம். அதற்குள் இருந்தது சின்ன‌த் தோட்ட‌ம் என்ப‌தால், வ‌ந்திருந்த‌ இருப‌து முப்ப‌து பேர் கூட‌ திருவிழாக்கூட்ட‌த்திற்கு இணையாக‌ இருந்த‌ன‌ர்.

பூஜை புன‌ஸ்கார‌ங்க‌ள் முடித்து, அரிசி, காய், க‌னிக‌ளை முடித்துக் கொண்டு டி.வி.எஸ் 50ல் புற‌ப்ப‌ட்டுச் சென்றார் ஐய‌ர்.

"ச‌ந்திரா... இங்கே இருப்பா. நான் போயி உங்க‌ அக்காளுக்காக‌ சுத்திட்டு வ‌ந்திர்றேன்" என்று ம‌ர‌த்தை சுற்ற‌ ஆர‌ம்பித்தார் மீனாக்ஷி பாட்டி.

'பாட்டி போற‌ வேக‌த்தைப் பார்த்தால், அவ‌ருக்கே ந‌ல்ல‌ மாப்பிள்ளை கிடைக்கும்போல‌வே' என்று நினைத்துக் கொண்டே மரத்தைப் பார்க்க‌, நெல்லி ம‌ர‌த்தைப் போல‌வே ஒல்லியாக, 'நெல்லி மர‌த்தைச் ச‌ற்று த‌ள்ளி வைத்து என்னை‌ப் பார்' என்ப‌து போல‌ ஒரு வ‌சீக‌ர‌த்துட‌ன் சுற்றி வ‌ந்தாள் அவ‌ள்.

கார்குழ‌ல் காதுக‌ளில் குழைய‌, க‌ருநீள விரிச‌டையும், தங்கத் தோள்களில் உருளும் கருமணி மாலையும், தாமரை நிற‌ தாவ‌ணியும், பிச்சிப்பூ நிற‌ பாவாடையும், ஏதோ ஒன்று என்னை அவ‌ளிட‌ம் ஈர்த்த‌து.

இவை எல்லாம் அன்றி, அவ‌ளின் 'ச‌ல‌க் ச‌ல‌க் கொலுசொலி' தான் முதலில் அவ‌ளைப் பார்க்க‌ வைத்த‌து என்ப‌தை பின்னாளில் அறிந்து கொண்டேன்.

டி.ஷர்ட், ஜீன்ஸில் இருந்த என்னை, 'ஏதோ வித்தியாசமா இருக்கிறேனே' என்பது போல‌ அவளும் ஓரிரு முறை கடைக்கண் பார்த்தாள்.

"என்ன‌ ச‌ந்திரா, இப்ப‌டி ஆவ்னு ப‌ராக் பாத்துகிட்டு இருக்கே. யாராவ‌து பைய‌த் தூக்கிட்டு போனாக்கூட‌ தெரியாதே ஒனக்கு" என்று பித‌ற்றி கொண்டே வ‌ந்தார் வேண்டுத‌லை முடித்துக்கொண்ட‌ பாட்டி.

ப‌ள்ளியை விட்டு வெளியில் வ‌ந்த‌ போது, என் வ‌ய‌திலும் என் அண்ண‌ன் வய‌திலும் நிறைய‌ இள‌வ‌ட்ட‌ங்கள் தென்பட்டனர். கூடி நின்றோ, சைக்கிளில் அம‌ர்ந்தோ, அர‌ச‌ ம‌ர‌ நிழ‌லிலோ நின்று பேசிக்கொண்டிருந்தாலும், அவ‌ர்க‌ள் க‌ண்க‌ள் எல்லாம் ப‌ள்ளியின் வாச‌லிலே தான் இருந்த‌து. பூவிருக்கும் இட‌த்தில் தானோ வ‌ண்டுக்கு வேலை ?

என்னிட‌ம் இருக்கும் கெட்ட‌ குண‌ங்க‌ளில் ஒன்று. யாரையாவ‌து பார்த்து என‌க்குப் பிடித்துப் போன‌து என்றால், உட‌னே அவ‌ங்க‌கிட்ட‌ போயி பேசி எப்படியாவது நட்பாயிடுவேன்.

அப்ப‌டித்தான் இன்றும், பாட்டியுட‌ன் செருப்பு மாட்டி கிள‌ம்புகையில், செருப்பைக் க‌ழ‌ட்டி விசிறிவிட்டு, விறுவிறுவென‌ ப‌ள்ளிக்குள் சென்று, அவ‌ளிட‌ம் என்னை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொண்டேன். திடுதிடுப்பென முகம் தெரியாதவர் வந்து பேச, ச‌ற்றே அதிர்ந்துவிட்டாள் அவ‌ள்.

காற்றின் சீற்ற‌ம் அதிக‌ரித்து, இலைக‌ளின் ர‌க‌சிய‌ப் பேச்சுக்க‌ள் ச‌ள‌ச‌ள‌த்தன.

சற்றைகெல்லாம் சுதாரித்துக் கொண்டு, "அப்ப‌டியா ... சரீ..." என்றெல்லாம் தலையாட்டி கேட்டுக்கொண்டாள். திரும்ப‌ எப்ப‌ மீட் ப‌ண்ண‌லாம் என்ற‌த‌ற்கு, செவ்வாய்க்கிழ‌மை மாலை அம்ம‌ன் கோவிலுக்கு வ‌ருவ‌தாக‌ச் சொன்னாள்.

கடவுளே, இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. வீட்டிற்கெல்லாம் அழைக்க மாட்டாளோ என்றெண்ணி, 'பார்த்த உடனே எப்படிக் கூப்பிடுவாள் ?' என்றும் எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

"உங்க பேரு சொல்லவேயில்லையே ?" என்றேன் நான்.

"நீ வா போ என்றே சொல்ல‌லாம். ம‌ரியாதை எல்லாம் எதுக்கு ? என் பேரு பூரணி...அன்னபூரணி.." என்றுவிட்டு, "எனக்கு வீட்டில நிறைய வேலை கிடக்கிறது" என‌ சிட்டாய் ப‌ற‌ந்தாள் அங்கிருந்து.

வீட்டிற்கு வரும் வழியில், "சந்திரா, இந்த கூட்டத்தில ஒருத்தி சலக் சலக்குனு சிலுப்பிகிட்டு திறிஞ்சாளே. அவளப் பத்தி என்ன நினைக்கிறே ? உன‌க்குப் புடிச்சிருக்கா ?" என்றார் மீனாக்ஷி பாட்டி.

'அக்காவுக்கு மாப்பிள்ளை கிடைக்க‌ணும் என்று தானே கூட்டி வ‌ந்தார். ஆனா யாருக்கு பொண்ணு பாக்குது பாட்டி. வெவ‌ர‌மான‌ ஆளு தான்' என்று நினைத்து, "ஆங், பாத்தா ந‌ல்ல‌ பொண்ணு மாதிரி தான் இருக்கு. ஒரே நாள்ல‌ எப்ப‌டி சொல்லிட‌ முடியும். எதுக்கு பாட்டி கேக்கற, யாரு அந்த பொண்ணு ?" என்றேன்.

"உன் வ‌ய‌சு தான் அதுக்கும். ந‌ம்ம‌ போ(ர்)ட்டு கார் சிங்கார‌ம் தெரியுமா உன‌க்கு ? உங்க‌ தாத்தோவோட‌ ... " என்று நீட்டி முழக்கி ஒரு கதையைச் சொல்லி, "அவ‌ரு பேத்தி தான் இந்த சிலுப்பி" என்று பாட்டி தொட‌ர்ந்து கொண்டிருக்க‌, எதிரில் அண்ண‌ன் பைக்கில்.

"கால‌ங்கார்த்தால‌ கெள‌ம்பி போனீங்க‌ ரெண்டு பேரும். ஒரு நெல்லி ம‌ர‌த்த‌ சுத்தி வ‌ர‌ இவ்ளோ நேர‌மா ? அங்க‌ உங்க‌ள காணோம் என்று நாலு ப‌க்க‌மும் எங்க‌ளை வெர‌ட்டிகிட்டு இருக்காரு அப்பா" என்று பொறுமித்த‌ள்ளினான்.

"சரி, சரீ, நீ பாட்டிய கூட்டிட்டுப் போ. நான் நடந்து வருகிறேன்" என்று பாட்டியை அண்ண‌னுட‌ன் பைக்கில் அனுப்பிவிட்டு, காலாற‌ ந‌ட‌ந்தேன்.

பலநூறு அடிகள் என‌க்கு முன் பூர‌ணி சென்று கொண்டிருந்தது க‌ண்ணில் ப‌ட்ட‌து. பி.டி.உஷா அளவிற்கு இல்லேன்னாலும், ஓட்ட நடை நடந்து பூரணியை நிறுத்தி, சேர்ந்து ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தேன். அவளுடன் வந்த இரு தோழிகள், எங்களை மேலும் கீழும் பலநூறு முறை பார்த்துவிட்டனர். அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கைகுலுக்க, வெட்கத்தில் நாணி கோணினர். ஒரு திருப்பத்தில் இரு வேறு திசைகளில் திரும்பி இருவர் வீடுகளுக்கும் சென்று சேர்ந்தோம்.

கிராமத்தில் இருக்கும் வரையிலும் வாரத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ நாங்கள் சந்தித்துக் கொள்ளத் தவறுவதில்லை.

"அண்ணனுக்குப் பார்த்திருக்கோம். அண்ணி புடிச்சிருக்காளா ?" என்று கோவிலில் ஒருமுறை மீனாக்ஷி பாட்டி என்னை இடித்துக் காண்பித்தார். நெல்லி மரத்தில் பார்த்தோமே, அந்தச் சிலுப்பி தான்" என்றும் நினைவூட்டினார்.

ஒரு கணம் நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

எதிர்வ‌ரிசையில் நின்றிருந்த‌ பூர‌ணி எங்க‌ளைப் பார்த்து வெள்ளிக்கீற்றாய் புன்னகைத்தாள்.

***

"அப்ப‌டி என்ன‌ தான் இருக்கு இந்த ஆல்பத்தில் ? எப்ப‌ வ‌ந்தாலும் ஆல்ப‌த்தைத் தூக்கி வ‌ச்சுக்கிட்டு, சின்ன‌ புள்ளை மாதிரி. சூடா காஃபி போட்டு வ‌ச்சிருக்கேன். குடிச்சிட்டு கெளம்பு, இன்னிக்கு மீனாக்ஷி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை இருக்கு, ஞாபகம் இருக்குல்ல ?" என்று சோஃபாவில் மெய்ம‌ற‌ந்து ப‌ட‌ம் பார்த்துக் கொண்டிருந்த‌ என்னை அழைத்துக் கொண்டிருந்தார் பூர‌ணி அண்ணி.

அண்ண‌னின் வீட்டிற்குள் நுழைந்த‌ போதே என் க‌ண‌வ‌ர் காட்டிய‌ தொட்டியை மீண்டும் பார்த்தேன். அழ‌கிய‌ நெல்லி க‌ன்று, கொழுந்துவிட்டுக் குழைந்து கொண்டிருந்த‌து வாசல் காற்றில்.

***

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டியில் இக்கதையை சமர்ப்பித்திருக்கிறேன்.

Tuesday, September 22, 2009

(ச‌ரியான‌ லூசுப்) பசங்க ...


Photo credit: comcast.net

"என்ன தான் ஒரே ஊர்ல இருந்து வேலை செய்தாலும் நாமெல்லாம் பார்த்து எவ்ளோ நாளாச்சு ? இந்த வீக்கென்ட் நாம எல்லோரும் மீட் பண்ணலாம்" என்று தொலைபேசி, மின்ன‌ஞ்ச‌ல், டிவிட்ட‌ர் என்று க‌ல‌க்கிக் கொண்டிருந்த‌ன‌ர் க‌ணினியால் இணைந்த‌ ந‌ண்ப‌ர்கள்.

சனிக்கிழமை, மணி மாலை ஐந்தரை. சிறுகுழந்தையின் அழுகையாய் விடாது சிணுங்க‌ ஆர‌ம்பித்த‌ வானோடு, புக‌ழேந்தியின் செல்லும் சேர்ந்து கொண்ட‌து.

"இல்ல‌ மாப்ள, அவ்ளோ தூரம் வ‌ர‌முடியாது சொன்னா கேளுங்க‌டா. வெளியில் ந‌ல்ல‌ ம‌ழை வேற‌. இன்னோரு தரம் பார்த்துக்கலாம். ஆள‌விடுங்க‌ சாமிகளா" என்று க‌ம்ப‌ளிக்குள் சுருண்டு ப‌டுத்துக்கொண்டான். 'இந்த‌ ம‌ழையில‌ எவ‌னாவ‌து வெளிய‌ல‌ சுத்துவானா, ச‌ரியான‌ லூசுப் ப‌ச‌ங்க‌' என்று நினைத்து கோழித் தூக்க‌த்தைத் தொட‌ர்ந்தான்.

அபார்ட்மென்டின் ஒரு பக்கம் முழுக்க வீடுகள், ம‌றுப‌க்க‌ம் பொட்ட‌ல் காடு. பொட்டல் காட்டை ஒட்டி இருந்த அறையில் படுத்திருந்தான் புகழ். சோவென்று இறையும் காற்று, எந்நேரமும் சுவ‌ற்றை உடைத்துக் கொண்டு உள்ளே வ‌ருவ‌து போல‌ இருந்த‌து.

மீண்டும் செல்லோசை. 'லூசுப் பசங்க தொல்லை தாங்கலையே. விடமாட்டானுங்களே' என்று நினைத்தான். ஆனால், சிணுங்கிய‌து ர‌ம்யா.

"ஹாய் ரம்யா. சொல்லு. இன்னிக்கா உன் பர்த்டே. சொல்லவே இல்ல. ஆமா, ஆமா. எனக்கே தெரியும் ப்ராஜ‌க்ட்ல நீ பிஸி. நோ ப்ராப்ளம். செவ‌ன் த‌ர்ட்டி தான கண்டிப்பா வர்றேன். போன வருஷம் உன் பர்த்டேல உன் அப்பார்ட்மென்ட்ல மீட் பண்ணது. ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடிப் போச்சு" என்று ரம்யாவிடம் சொல்லி பாராசூட்டாய் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்தான்.

ர‌ம்யா எப்ப‌வும் யாருட‌னும் அதிக‌ம் பேச‌ மாட்டாள். அலுவலக மீட்டிங்குகளில் தான் அதிகம் பார்த்திருக்கிறான். வெளியில் எங்கும் எவருடனும் பார்த்ததில்லை. நெருங்கிய நண்பர்கள் பர்த்டே பார்ட்டிகளில் பார்த்திருக்கிறான். நார்மல் ஹோம்லி டைப். அத‌னாலேயே புக‌ழிற்கு ர‌ம்யாவின் மேல் எப்போதும் ஒரு இது இருக்கும். ஆனால் அவ‌ளுக்கு(ம்) இருக்கா இல்லையா என்றெல்லாம் அவன் க‌வ‌லைப்ப‌ட‌வில்லை.

பொட்டுப் பொட்டாய் விழுந்த தூறல், காற்றின் வேகத்தில் பல்லாயிரம் பாம்புக் குட்டிகளாய் காரின் முன் கண்ணாடியில் ஊர்ந்தது. வைப்பரைத் தட்டி குட்டிகளை அழித்தான்.

'என்ன வேகம், சுதாரிச்சு கண்ணாடி ஏத்தறதுக்குள்ளே இப்படி நனைச்சிருச்சே' என்று கைக்குட்டை எடுத்து, இருக்கைக் கதவையும், தன் இடதுபுற உடலையும் துடைத்துக் கொண்டான் நன்றாகவே நனைந்து போன புகழேந்தி.

எட்டு எட்டரைக்கு இருட்டும் வானம், இன்று ஏழு மணிக்கெல்லாம் இருண்டிருந்தது. முன்சென்ற கார்களின் பின்விளக்கு, மழைநீரில் செங்குருதி சிந்தி நிற்க‌, தானும் ப்ரேக் பிடித்து காத்திருந்தான் சாலைவிளக்கின் வண்ண மாற்றதிற்கு.

கருவானில் பழுத்த வெள்ளிக்கம்பியாய் வெண்மின்னல் கோடு கிழிக்க கண்கள் கூசியது. மழையின் அடர்த்தி அதிகரித்ததில் 'சோ'வென்று பேரிறைச்சல். சிறிது நேரத்தில் எதிர்புற அணிவகுப்பு நகர ஆரம்பிக்க, இவன் பக்கம் வாகனங்கள் நிலைகுத்திய தேராய் நின்றுபோனது.

தூரத்தே, சாலை விள‌க்கின் அருகில் சிறுவிபத்து ஏற்பட்டு, இரு வாகன‌ங்கள் மோதி நிற்பது போல், நீரூற்றும் கண்ணாடிவழி மங்கலாகத் தெரிந்தது.

தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை அங்கிருந்து நகர‌ மறுப்பது போல, இப்போதைக்கு வாகன‌ங்கள் ந‌க‌ருவதாய் தெரிய‌வில்லை.

'இன்னிக்கு என்று பார்த்தா இப்ப‌டி ந‌ட‌க்க‌ணும். அழைக்காத‌வ‌ள் அழைத்திருக்கிறாள். இன்னும் எவ்ளோ நேர‌ம் இங்கேயே நிற்க‌ப்போகிறேனோ ? ச‌ரியா அவ‌ சொன்ன‌ நேர‌த்துக்குப் போக‌முடியுமா ? கொஞ்சம் லேட்டானாக்கூடப் பரவாயில்லை' என்று எண்ணச் சுழற்சிகள், நீர்குமிழிகள் போல்.

யாரோ ஒரு புண்ணிய‌வான் 'ஒன்ப‌து ஒன்று ஒன்று' அழைத்திருக்க‌ வேண்டும். ம‌ழை வெள்ள‌த்தில் ஒளி வெள்ள‌ம் சிந்தி, சீறி வ‌ந்த‌து சீருடைக் காவ‌ல‌ர் வாகன‌ங்க‌ள். சில‌ நிமிட‌ங்க‌ளில் போக்குவ‌ர‌த்து ச‌ரிசெய்ய‌ப்ப‌ட‌ சிட்டாய் ப‌ற‌ந்தான் ர‌ம்யாவின் அப்பார்ட்மென்ட் நோக்கி.

ஏழ‌ரை மணி போல் ர‌ம்யாவின் வீட்டுக் க‌த‌வைத் த‌ட்டினான்.

ஹாப்பி ப‌ர்த்டே அட்டைக‌ள், பல வண்ணப் ப‌லூன்க‌ள், சிலந்தி வலைக் க‌ல‌ர் காகித‌ங்க‌ள், அல‌ங்கார‌ கேக், என்றெல்லாம் எதிர்பார்த்த‌வ‌னுக்கு எதுவுமே இன்றி வெறுமையாய் இருந்த‌ ர‌ம்யாவின் அபார்ட்மென்ட் க‌ண்டு திகைத்தான்.

செல் எடுத்து அவள் எண்ணை அழைத்தான். எதிர்முனையில் ரம்யா.

"ஹாப்பி பர்த்டே ரம்யா. உன் வீட்டு முன்னால தான் நிற்கறேன். வீட்டில் தான இருக்கே ?"

"தேங்ஸ். ஆமா வீட்டில் தான் இருக்கேன். உன‌க்காக‌த் தான் காத்திருக்கிறேன். நீ எங்கே இருக்கே ?"

புக‌ழ் சொல்ல‌ச் சொல்ல‌, "ஹேய், யாரும் சொல்லலியா ? உனக்குத் தெரியும்னு நெனைச்சேன். நான் அப்பார்ட்மென்ட மாறிட்டேன்."

"என்ன சொல்றே ரம்யா ?" என்றான் புகழ் இடிந்து போன குரலில்.

"ஐம் ரிய‌லி சாரி புக‌ழ். ப‌ழைய‌ இட‌த்திலிருந்து ஒரு ப‌தினைந்து நிம‌ட‌ ட்ரைவ் தான்"

"சரி, புது அட்ரஸ் சொல்லு ..."

ம‌ழையிலும் வாடி வ‌த‌ங்கிய‌ செடியாய் ரம்யாவின் அப்பார்ட்மென்ட் விட்டுக் கிளம்பப் போன‌ புக‌ழேந்தி, எதிரே வ‌ரிசையில் த‌ன் ந‌ண்பர்களோடு ரம்யாவும் நிற்பது க‌ண்டு ட‌ன் ட‌ன்னாய் வ‌ழிந்தான் அசடை.

'யாருடா லூசு' என்ப‌து போல‌ இருந்த‌து ஒவ்வொருவ‌ரின் பார்வையும்.

ரம்யா கதவைத் திறக்க, உள்ளே புகழைத் தள்ளினர் நண்பர்கள்.

'மவனே, இந்த மீட்டை எந்த ஜென்மத்துக்கும் மறக்கக் கூடாது நீ' என்று நண்பர்கள் புகழை அடித்த அடியில் சற்றைக்கெல்லாம் வானம் வெளுத்திருந்தது.

Thursday, September 3, 2009

அந்த ஃபாரினர் தான் !


Photo Credit: olx.in

"சின்ன பக், யூனிட் டெஸ்ட்டிங்ல‌ எப்படி மிஸ் பண்ணிங்க ? இன்டக்ரேஷன் டெஸ்ட் வரைக்கும் வந்தாச்சு. டெஸ்ட் ரிசல்ட்ஸ் செக் பண்ணனும் எடுத்துகிட்டு வாங்க....." என்று உடுக்கை அடித்தாள் டெக் லீட் வர்ஷினி.

"ஹேய் இந்த சுடிதார் கலர் நல்லா இருக்கு. எப்ப வாங்கின ?" என்று கேட்டுக் கொண்டிருந்த சக டெவலப்பர் யாழினியிடம், "கொஞ்சம் பொறு, அச்சச்சோ குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது, இரு, அதுக்கு தீனி போட்டுட்டு வர்றேன்" என்று ஓடினாள் அருள்மொழி.

"இன்னும் கொஞ்ச நேரத்தில க்ளையன்ட் ஆன்லைனில் வந்திருவான். அதுக்குள்ள ஃபிக்ஸ் பண்ணுங்க. இந்த நேரத்தில டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் செக் பண்ணி... என்ன வர்ஷினி, கமான், பீ மோர் ப்ரொடக்டிவ்..." என்று வர்ஷினிக்கு அருள்பாலித்துக்கொண்டிருந்தான் ப்ராஜக்ட் லீட் செழியன்.

ர‌யில் நின்ற‌தொரு நிலைய‌த்தின் ப‌ர‌ப‌ர‌ப்பில் இருந்த‌து அந்த மிகப் பெரிய இந்திய மென்பொருள் நிறுவனத்தின் ஒரு கிளை அலுவ‌ல‌க‌ம். சர் சர்ரென்று கார்களும் வேன்களும் செல்லும் பெரு நகரத்தின் பிரதான தெருவில் இருந்தது. அலுவலகத்தினுள் ஆங்காங்கே இடுப்புய‌ர தடுப்புகளில், ஆறுக்கு ஆறில், ஆளாளுக்கு இட‌ம். எல் வ‌டிவ‌ மேசைக‌ள். வெண்திரைக் க‌ணிணிக‌ள், கிறுக்கிப் ப‌ர‌ப்பிய‌ வெள்ளைத் தாள்க‌ள், சித‌றி கிட‌க்கும் பேனாக்க‌ள், தொலைபேசி, ஆங்காங்கே இருவர் மூவராய் நின்று உரையாடல், தளத்திற்கு ஒரு காஃபி ஏரியா, ரெஸ்ட்ரூம்ஸ் என‌ ச‌ர்வ‌தேச தரத்திற்கு இருந்த‌து.

"இந்தாங்க சார் நீங்க கேட்ட ஃபோட்டோ காப்பி" என்று திலீபன் நீட்டிய காகிதங்களை வாங்கிப் பார்த்தான் செழியன்.

"க்ரேட்... இந்தாங்க கலைச்செல்வி, இவர் இன்னிக்கு இன்டர்வியூவிற்கு வருகிறார். ரெஸ்யூம ஏற்கனவே ஈமெயில் உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்கிறேன். எதுக்கும் கையில் காப்பி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்ப நேரம் இருக்கோ, அவருக்கு கால் பண்ணி அப்ப வரச் சொல்லுங்க. இஃப் ஹி இஸ் டெக்னிக்க‌லி ஸ்கில்ட், லெட் மீ நோ" என்றுவிட்டு அடுத்த‌ ப்ராஜ‌க்ட் டீமுட‌ன் ஐக்கிய‌மானான் செழிய‌ன்.

"எப்ப‌வும் செழிய‌ன் தானே இன்ட‌ர்வியூ ப‌ண்ணுவார். இன்னிக்கு என்ன‌ க‌லைச்செல்வி ?!" என்று கேள்விக‌ள் சில‌ர் ம‌ன‌ங்க‌ளில் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்த‌து.

ப்ராஜ‌க்ட் ஸ்டேட்ட‌ஸ், டெய்லி மீட்டிங், வீக்லி மீட்டிங், ரிசோர்ஸ் அஸைன்மென்ட், க்ளைய‌ன்ட் மீட்டிங், மேனேஜ்மென்ட் அப்டேட்ஸ் என்று ச‌தா சுழ‌லும் செழிய‌ன், அந்த‌ கார்ப்ப‌ரேட் அலுவ‌ல‌க‌த்தின் ஒரு உய‌ர் ப‌த‌வியில் இருந்தான்.

இந்த‌ நேர‌த்தில் செழிய‌னுக்கு இணையாக‌ வேறு ஒருவ‌ர் இன்ட‌ர்வியூவிற்கு வ‌ரும் செய்தி, அதுவும் ஒரு வெள்ளைக்கார‌ர் வ‌ருகிறார் என்ற செய்தி, ஏஸி குளிராய் அலுவ‌ல‌க‌த்திற்குள் ப‌ர‌விய‌து.

சாம்பார் சாதம், ரசம், ஃப்ரைட் ரைஸ், லெமன் ரைஸ் என்று கதம்ப மனம் கூடத்தில் மிதக்க, கூட்டாஞ்சோற்றை நினைவூட்டும் ம‌திய‌ உண‌வில், ஆளாளுக்கு இதே அர‌ட்டைக் க‌ச்சேரி தான்.

"மாப்ள, செழியன வேற இடத்துக்கு மாற்றபோறாங்களாம். அதுல கொஞ்சம் அப்செட் ஆகி, 'க‌டுமையா உழைச்சதுக்கு இந்த பலன் போதும், கொஞ்ச‌ நாள் ரெஸ்ட் எடுக்க‌ப் போறன்'னு க்ளோஸா இருக்கவங்க கிட்ட சொல்றாராம்." என்றான் ர‌வி.

"அதெல்லாம் இருக்காதுடா, ஏதாவது மேனேஜ்மென்ட் ப்ராப்ளம் இருக்கும்." என்றாள் த‌மிழ‌ர‌சி.

"வர்றவன் எப்படிப்பட்டவனோ ?" என்று க‌வ‌லை கொண்டாள் ச‌ங்கீதா.

"யாரு வ‌ந்தா என்னா. நாம‌ வேலைய‌ செய்ய‌ப் போறோம், ச‌ம்ப‌ள‌த்த‌ வாங்க‌ப் போறோம். எதுக்கு க‌வ‌லைப்ப‌ட்டுகிட்டு" என்று வாயில் வ‌ழிந்த‌ ர‌ச‌த்தை உறிஞ்சிக் கொண்டே சொன்னான் ஆறுமுக‌ம்.

"என்னது செழியன் வேலைய விடப்போறாரா ? அவர் அளவிற்கு அடுத்து யாரு தான் இங்க இருக்கா ?" என்றான் வழக்கம் போல லேட்டா அலுவலகம் வந்து அரட்டையில் கலந்து கொண்ட ப‌ழ‌னி.

"அதான் இன்னிக்கு ஒருத்தர காலையில இன்டர்வியூ பண்ணாங்களே, ந் ஃபாரிர் தான் !" என்றாள் ம‌னோன்ம‌ணி சற்றும் யோசிக்காமல்.

நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் இருந்த அந்த அலுவலகத்தில் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக் கொண்ட‌ன‌ர். ச‌ற்றைக்கெல்லாம் நிலைமை உண‌ர்ந்து, அனைவரும் சிரித்த‌ சிரிப்பொலி அத்த‌ள‌த்தையே உலுக்கிய‌து.

Sunday, July 12, 2009

லெச்சுமி அக்கா ...


Photo: baby-sang-http-www.indianhindunames

'ஆஹா, எவ்வ‌ள‌வு பெரிய‌ த‌ப்புப் ப‌ண்ணிட்டோம். இத்த‌ன‌ பேர‌க் கூப்பிட்டு, அக்காவுக்கு ஒரு போன் கூட‌ போட்டு சொல்ல‌லையே !' என‌ வ‌ழ‌க்க‌ம் போல‌ என் ம‌ற‌தியை நினைத்து வ‌ருந்தினேன்.

மதுரையில் இருந்த வரைக்கும் பக்கத்து வீட்டுக்காரங்க என்ற நினைப்பே இல்லாமல், கூடப் பிறந்த சகோதரியாய் நினைத்தவர் லெச்சுமி அக்கா.

வீட்டில ஏதாவது ப்ரச்சனை, இல்ல எங்களோடு சேர்ந்து விளையாட, இல்ல தீபாவளி, பொங்கல்னு எல்லாத்துக்கும் பொசுக்கு பொசுக்கென்று வந்து எங்க வீட்டில் ஒருத்தரா இருந்து அம்மாவிற்கு உதவியும் செய்வார்.

அப்புறம் படிப்பு முடிந்து அயலகம் பறந்தபோது, பெற்றோரும் ஊருக்கே குடி பெயர, அக்காவின் நினைப்பும் மெல்ல அகல ஆரம்பித்தது என்னில்.

எனது திருமணத்திற்கு வந்தபோது, "டேய் சுபி. கல்யாணத்துக்கு இந்த அக்காவ கூப்பிடக் கூட மறந்திட்ட, பரவால்ல, பரவால்ல. அடுத்த வருஷமே பிள்ளை பிறந்து, காது குத்துக்காவது கூப்பிடுவியா ?" என்று மணமேடையில் இடித்துச் சிரித்தார்.

ஏதோ பக்ஷி சிறகடித்து இந்த செய்தியை இப்போது நினைவுபடுத்த, அப்ப தான் புரிந்தது, அவர் எந்த நிகழ்ச்சிக்கு அழைக்க சொல்லியிருந்தாரோ, கரெக்டாக அதை மறந்தது.

'போச்சு அவ்வளவு தான் ! இனி கூப்பிட்டா நல்லா இருக்குமா ? இப்ப சொன்னா கூட அவர் கிளம்பி வரவும் நேரம் ஆகுமே. வந்து ஒரு பிடி பிடிக்கப் போறாரே. இல்ல, வராம விட்டுட்டா ... கடவுளே அப்படி அவர் சொல்லிடக் கூடாது ....'

'என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று அவர்கள் எண்ணிற்கு அழுத்தினேன். பதிலே இல்லை பல முறை !! கடவுளே, என்ன சோதனை இது. "ஏம்மா அக்கா நம்பர் சரிதானே ?!" என்று அம்மாவை நோக்குகையில் ...

"லெச்சுமி வாம்மா ..." என அக‌மகிழ்ந்து வரவேற்றார் அம்மா. திடுக்கிட்டுத் திரும்பி, வாசல் பக்கம் பார்த்தேன். 'அதெல்லாம் நாங்க முன்னாடியே சொல்லிட்டோம்' என்பது போல் அம்மாவின் பார்வை இருந்தது.

'அமெரிக்கா ஐரோப்பானு போயி நீங்க தான் மாறீட்டீங்க. நாங்க அப்படியே தான் இருக்கோம் !!' என்பது போல் கள்ளம் கபடமின்றி உள்ளே சென்று, 'வாடா செல்லம்...' என்று என் மகளைத் தூளியில் இருந்து அள்ளிய‌‌ அக்காவை அசைவற்று பார்த்து நின்றேன் !

Thursday, December 11, 2008

உத்தரவின்றி உள்ளே வா !


Photo: inmagine.com

"ரொம்பத் தான் வித்தியாசமான ஆளுடா நீ ! இன்னைக்கு தான் பார்கறேன் என்று சொல்றே. பூனைக் கண்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவளைக் காதலிக்கறேன் என்றும் சொல்றே. இதெல்லாம் நல்லதுக்கில்ல ... ஆமா ... சொல்லிட்டேன்"

கல்லூரி வாசலில் அவள் கடக்கையில், 'மியாவ்' என்று கத்தணும் போல் இருந்தது.

கேசம் புறம் தள்ளி, பூனைக் கண்களில் நோக்கி, புன்னகை பூத்து சென்றாள்.

'ம்... இவளென்ன சிரித்துச் செல்கிறாள்'. நினைவுகளோடு வகுப்புக்குச் சென்றான்.

"டேய் ... உன்னைத் தான் ... பகல் கனவு பரந்தாமா, பாடத்தை கூட நீ இப்படி கவனித்த‌தில்லையே ராசா ..." என்ற விக்கியின் பரிகாசத்தில், சரிந்து யோசனையில் இருந்த‌ ஜீவா சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.

ரயில் கிளம்பும் முன் இருக்கும் பரபரப்பில் இருந்தது வகுப்பறை. சள சள வென ஒரே பேச்சுக் குரல்கள். இங்கும் அங்கும் சிலர் நடந்தோடிக் கொண்டு இருந்தனர்.

முதல் நாள் கல்லூரி. முதுகலை கணிப்பொறி இரண்டாம் ஆண்டு. முதலில் ஹெச்.ஓ.டி. வந்து, பொதுவாக‌ சில செய்திகள் சொல்லி விட்டுச் சென்றார். பலர், பலருக்கும் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தாலும், பல புதுமுகங்களும் ஆங்காங்கே தென்பட்டனர்.

"ஃபர்ஸ்ட் இயர் என்று நினைக்கறேன்" என்றான் ஜீவா.

"டேய் நாம இப்ப செகண்ட் இயர்" என்றான் விக்கி.

"அத சொல்லலடா, அவள சொல்றேன்"

"எங்களுக்கும் புரியாம‌ இல்ல‌ ... விள‌க்க‌ம் வேற‌ சொல்ல‌ வ‌ந்திட்டான்டா .. டேய் .. டேய் .. எல்லாம் இங்க‌ வாங்க‌" என்று விக்கி கூவ‌, குவிந்த‌ தாம‌ரை மொட்டாய் வ‌ட்ட‌மிட்ட‌ன‌ர் ந‌ண்ப‌ர்க‌ள்.

என்ன ??? என்ன ??? என்று எல்லோர் க‌ண்க‌ளிலும் குறுகுறுவென‌ ஒரு ஆவ‌ல்.

"சொல்றா விக்கி ... மேட்டர் என்னா ?" என்றாள் ராக‌வி.

"என்ன‌ மாமே, 'இன்னிக்கு குளிச்சிட்டு வ‌ந்திட்டேன்' என்று சொன்னே ... ம‌வ‌னே ர‌த்த‌த்தில‌ குளிப்பாட்டிருவேன்" மிர‌ட்ட‌லாய் மோபினின் குர‌ல்.

"ப்ளீஸ், இன்னிக்காவ‌து நான் சொல்ற‌த‌ ந‌ம்புங்க‌டா" கெஞ்சும் குர‌லில் விக்கி. "ந‌ம்ப‌ ஹீரோ, அதான் க‌ல‌ர்ப‌ட‌க் க‌தாநாய‌க‌ன், இது நாள் வரைக்கும் இல்லாம, ந‌ம்ம‌ ஜீவா, இப்ப ஜில்பான்ஸ்ல‌ இற‌ங்கிட்டான். பொண்ணு யாருனா ..."

ச‌ட‌ன் ப்ரேக் போட்ட‌ ர‌யில் வ‌ண்டியாய் இழுத்து நிறுத்தினான்.

"வாத்தி யாராவ‌து வ‌ருமுன், சீன‌ முடி ராசா ... நேர‌ம் ஆவுதில்ல‌ ..." அனைவ‌ரின் ம‌ன‌திலும் இவ்வ‌ரிக‌ள்.

"யாருனா ... யாருனா .. யா..." என்று சுருதி குறைத்தான் விக்கி. மார்போடு அனைத்த‌ புத்த‌க‌ங்க‌ளுட‌ன், வெளிர் ப‌ச்சைப் புட‌வையில், (க‌ண்க‌ளுக்கு மேட்சிங்காக‌ இருக்கும்) உள்ளே நுழைந்தாள் ஸ்ருதி.

'அட‌ ந‌ம்ம‌ க்ளாஸ் தானா ?!' என்று யோசிக்கும்போதே, ஆசிரியருக்கான மேசையில் புத்தகங்களை வைத்து விட்டு, திரும்பி அனைவரையும் பார்த்து, "குட் மார்னிங், ஐ ஆம் ஸ்ருதி ..." என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, விக்கியும், ஜீவாவும் உறைந்து தான் போனார்க‌ள்.

"இங்க திருச்சில, செயின்ட் ஜோச‌ப்பில் முதுக‌லை க‌ணிப்பொறி. பின் சென்னையில் சில‌ மாத‌ங்க‌ள் வேலை. ஆசிரிய‌த் தொழிலின் மீது ஆரம்பத்தில் இருந்தே ப‌ற்று. அத‌னால் வேலையைத் துறந்து இங்கு வ‌ந்துவிட்டேன்" என்று சுருதி பிஸ‌காம‌ல் ஸ்ருதி சொல்லிக் கொண்டே போக‌, இவை எதும் ஜீவாவின் காதுக‌ளில் விழுந்த‌ன‌வாக‌த் தெரியவில்லை.

"ம‌ச்சான், சும்மா சொல்ல‌க் கூடாது ... உன் லெவ‌லே த‌னி தான். அவங்க டீச்ச..ரா..மா ... சும்மாவே மார்க் நல்லா வாங்குவோம், இதில இவங்கள வேற பகச்சிகிட்டோம் அவ்ளோ தான். இந்த‌ விளையாட்டுக்கு நான் வ‌ர‌லபா." என்று ச‌ற்று த‌ள்ளி அம‌ர்ந்தான் விக்கி.

"இருக்கட்டுமே ... நம்மை விட‌ ஒரு வ‌ய‌சு ... மிஞ்சிப் போனா ரெண்டு வ‌ய‌சு தான் கூட‌ இருக்கும் ... இதெல்லாம் ஒரு பிர‌ச்ச‌னையா. இன்னிக்கு சாய‌ந்திர‌ம் க‌ல்லூரி விட்டுப் போகும் போது, அவ‌சிய‌ம் இவ‌ கிட்ட‌ பேச‌ப் போறேன் பாரு. கூட‌ நீ வர்ரே" என்று ஆணி அடித்தாற் போல் சொல்லிமுடித்தான் ஜீவா.

"டேய் நான் மார்க்க‌ ப‌த்தி பேசிட்டு இருக்கேன். நீ என்ன‌டானா வ‌ய‌ச‌ப் ப‌த்தி பேசற. உன் புரியாத விளையாட்டுக்கு என்னை ஏன் பலிகடா ஆக்கறே" என்று விழி பிதுங்கினான் விக்கி.

'பூனைக் கண் கண்டேன்
புவியீர்ப்பில் விழுந்தேன்

காந்த‌க் கண் கண்டேன்
க(ல்)வி மறந்து நின்றேன்.

சாந்த‌ முகம் கொண்ட‌‌
செம் மேனிப் பெண்ண‌ழகி

காந்தமாய் எனை ஈர்த்த‌
பூனைக் க‌ண்ண‌ழ‌கி.'

என்று மெதுவே விக்கியின் காதுகளில் பாடினான் ஜீவா.

"ச‌ரியாப் போச்சு ... நீ திருந்த‌ மாட்ட‌டா, போ க‌ன‌வுல‌க‌ க‌ன்டினியூ ப‌ண்ணு, நான் பாட‌த்தை க‌வ‌னிக்க‌றேன்." என்றான் விக்கி

"குட் மார்னிங்க், குட் மார்னிங்க் ... ப‌ச‌ங்க‌ளா எப்ப‌டி இருக்கீங்க‌ ... மன்னிக்கணும், கொஞ்சம் லேட்டாயிடுச்சு. விடுமுறை எல்லாம் எப்ப‌டி இருந்துச்சு" என்ற‌வாறு உள்ளே வ‌ந்தார் க‌ணித‌ ஆசான் ச‌பார‌த்தின‌ம்.

அடித்து பிடித்து, முட்டி மோதி கிடைத்த‌ இட‌த்தில், ஜீவாவின் அருகில் அம‌ர்ந்தாள் ஸ்ருதி.

சிறு பரபரப்புக்குப் பின், ர‌யில் சென்ற‌வுட‌ன் ஏற்ப‌டும் நிச‌ப்த‌ம் நில‌விய‌து அங்கே.

ஆசானை முகம் பார்த்தாலும், 'என்ன நடக்குது இங்கே' என மனம் பக்கத்தில் இருந்த ஸ்ருதியைப் பார்த்தது. 'விக்கியை நோக்கி என்னடா, என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே' என்றும் முறைத்தது.

ஆட்காட்டி விரலை உயர்த்தி, ஒரு கண்ணைச் சிமிட்டினாள் ஸ்ருதி விக்கியைப் பார்த்து.

"டேய் என்னடா" என்று முறைத்தான் ஜீவா.

"ஃபர்ஸ்ட் இயர் சென்னையில முடிச்சிருக்கா, அப்பா ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு, சொந்த ஊருக்கே எல்லோரும் வந்துட்டாங்களாம். இவள ஹாஸ்டல்ல இருக்க சொல்லிருக்காங்க. முடியாதுனு அப்பா பின்னாடியே வந்துட்டாளாம்.

எங்க தெரு தான். இந்த லீவு முழுக்க இங்க தான் இருந்தா. இவ கிட்ட‌ பேசப் பேச, உன்னைப் மாதிரி ஒருத்தன தான் தேடிட்டு இருக்கானு தோணுச்சு. முதலில் எனக்கும் காதல் எண்ணம் இருந்தது. என் கிட்ட என்ன பழகினாலும், ஒரு டிஸ்ட‌ன்ஸ் மெய்ன்டெய்ன் ப‌ண்ற‌தை நானும் உண‌ராம‌ல் இல்லை. அத‌னால் ஒதுங்கிட்டேன்.

ஃப்ரெண்ட்ஸ் ப‌த்தி பேசும் போதெல்லாம், உன்னைப் ப‌த்தி சொல்ல‌ச் சொல்ல‌ .. அப்ப‌டியா ... இந்த‌ வ‌ய‌சு வ‌ரைக்கும் யாரையும் காத‌லிக்க‌லையா ?? த‌ம், த‌ண்ணி எதுவும் கிடையாதா ?? ரொம்ப‌ ஜோவிய‌லான‌ டைப்போ ?? என்றெல்லாம் ஆர்வ‌மா கேட்டுட்டிருப்பா.

உன‌க்கு ஞாப‌க‌ம் இருக்கா, லீவில் ஒரு நாள் ம‌லைக் கோட்டைக்கு போனோமே. நானும், நீயும் ம‌ட்டும் இல்லை. ஸ்ருதியும் வ‌ந்திருந்தா. உன்னைப் பார்க்க‌ணும் என்றாள், அதான். தப்பித்தவறி கூட பக்கத்தில வந்திராத என்று உத்தரவாதம் வாங்கித் தான் வரச் சொன்னேன்.

இது போல பட இடங்கள், பல சந்தர்ப்பங்களில் உன்னை தொடர்ந்து, உன்னை பிடிச்சும் போச்சு அவளுக்கு. முத‌ன் முத‌ல் உன்னை நேரில் ச‌ந்திக்குபோது ஒரு ஷாக் கொடுக்க‌ணும் என்று சொன்னா. அதான் இந்த 'டீச்ச‌ர்' நாட‌க‌ம்.

நேரம் இருந்தா உன்னை எழுந்திருக்க‌ சொல்லி கேள்வி எல்லாம் கேட்க‌லாம் என்று திட்ட‌ம். அதுக்கு கொடுப்பினை இல்லாமப் போச்சு. இருந்தாலும் ஆப‌ரேஷ‌ன் ச‌க்ஸ‌ஸ்" என்று சொல்லி முடித்தான் விக்கி.

விக்கித்து ல‌யித்திருந்தான் ஜீவா.


மார்ச் 3, 2009 யூத்ஃபுல் விகடனில்

Monday, March 10, 2008

அடி பெண்ணே !

சுவாமி தரிசனங்களில் மனம்
உன்னையே காணுதடி

லேசாய் நீ புன்னகைத்தால்
தேசமே சுழலுதடி

புன்னகைக்க நீ மறுத்தாலோ
பூகம்பமே வெடிக்குதடி

தெத்துப்பல் உன் முகம்
உள்ளத்தில் பதிந்ததடி

உன் கன்னக் குழிகளில்
நின்றே விழுந்தேனடி

இடைவரைக் கூந்தலில்
இறுக்கியே முடிந்தாயடி

பொன் நிறத் தேகத்தில்
என்னையே இழந்தேனடி

விழி வழி உரையாடி
நாளும் ஈர்த்தாயடி

சினம் கொள் நேரத்தில்
சிணுங்கியே கவர்ந்தாயடி.

‍‍‍‍‍-----

முடிவில் ஒருநாள் உன்
திருமணத் தேதியைச் சொன்னாயடி

குடும்பத்து சூழ்நிலை
வேறு வழியில்லை என்றாயடி

முந்தானைத் தாவணியில்
முகம் புதைத்து அழுதாயடி

கலமெனக் காற்றிலாடி
பின் மனம் தெளிந்தேனடி.

------

வீதியில் ஒருநாள்
எதேச்சையாய் உனைச் சந்திக்க‌

யாரந்த ஆண்ட்டி என‌
என் பிள்ளை உனைக் கேட்டான்

உன் பிள்ளை பேர் சொல்லி
அவள் அம்மா என்றேன் நான் !

ஒரே பள்ளி எனத் தெரியும்
ஆனால் இருவர்களும் நண்பர்களாமே !!!

Sunday, December 16, 2007

நச்சுனு ஒரு காதல் கதை

"டேய் ரவி அவ விடற லுக்கு நாளுக்கு நாள் தாங்க முடியலடா".

Outlook-ல் pop-ஆன "This evening special Dinner" click செய்து, "எவ அவ" என்று நக்கலுடன் ஆனந்தைப் பார்த்தான் ரவி.

ரவியும், ஆனந்தும் ஒரே அலுவலகத்தில் வேலை (மன்னிக்க) பொட்டி தட்டுபவர்கள். ஆனந்த் ஆறு வருடமாகவும், ரவி இரண்டு வருடமாகவும் ஆணி பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரவி வெளிநாடுகளில் ஐந்து ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டு, தாயகத்தில் குப்பைகள் அகற்ற (!) மற்றும் பெற்றோர்களுக்காக (!!) இந்தியா வந்து இந்த நைப்ரோ எனும் MNC கம்பெனியில் சேர்ந்திருக்கிறான்.

டேய் தினம் அவளப் பத்தித் தான பொலம்பறேன். அதான் அந்த எதிர்க்க இருக்க பில்டிங்கில் HR-ல வேலை செய்யறாளே பானு, அவளப் பத்தித் தான். லுக்கு தான் ஜாஸ்தியா இருக்கே தவிர்த்து பேசவே மாட்டேன்ங்கறா. இன்னிக்குக் காலைல 'வழக்கம் போல' கொஞ்சம் லேட்டா வந்தனா, வண்டிய பார்க் பண்ணிட்டு, அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்து lift எடுத்தா எதிர்த்தாப்புல நிக்கறா. அதே கண்ணு, அதே பார்வை ! அப்படியே தேவதை மாதிரி !!

அந்தப் பரபரப்பில் lift-ல் நீ இருந்தத கூட நான் கவணிக்கலை. காலரப் பிடிச்சு இழுத்தியே, நியாபகம் இருக்கா. மச்சி உன் கிட்ட தான்டா பொலம்ப முடியும். தப்பா எடுத்துக்காத டா.

என் கிட்ட மட்டுமா பொலம்பறே ! பக்கத்து cube பாஸ்கர் கிட்ட கூட தினம் அலுத்தக்கறியே டா. போன வாரம் அருண் வந்து 'உன் தொல்லை தாங்க முடியல'னு சொல்லி அவன் பொலம்பிட்டுப் போறான். "சரி இப்ப என்ன செய்யனும்" என்றான் ரவி

எனக்குத் தனியாப் போகப் பயமா இருக்கு. அவ கிட்ட இன்னிக்கு எப்படியாவது பேசிடனும்னு இருக்கேன். நீதான்டா ரவி அதுக்கு ஏதாவது நச்சுனு idea பண்ணி help பண்ணனும்.

"இந்தக் காலத்திலயும் இப்படி ஒரு புள்ளையா ?" டேய் அவனவன், காலைல சைன் போட்டு, ப்ரேக்ஃபாஸ்ட்ல பிட் போட்டு, லன்ச்சுல பன்ஞ்ச் வச்சு, டின்னர்-ல பின்னி பெடலெடுக்கறான். பேசப் பயமா இருக்காம், போடாங்க ....

இதான் நச்சா ... நல்லாத் தான் இருக்கு, எப்படி work-out பண்றது ?

ரெண்டு cube தள்ளி இருந்த அனு அங்கு வந்து, "ரவி இன்னிக்கு டின்னர் போறோமே, ஆனந்தும் வரட்டும்" என்று சொல்லி ரவியின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

அடப்பாவி, எனக்கு idea-ன்ற பேர்ல சும்மா அளந்துவிடறேனு பார்த்தால், உண்மையாவே டின்னெர் வரை போய்டியா. அது சரி, நான் வரேன். பானு எப்படி வருவா என்றான் ஆனந்த்.

அதப் பத்தின கவலய விடுறா. அனு பார்த்துப்பா என்றான் ரவி.

சாயந்திரம் ஆனந்தப் பிக்கப் செய்து கொண்டு "லீ மெரிடியன்" நோக்கி வண்டியைச் செலுத்தினான் ரவி.

"டேய் பானு கண்டிப்பா வருவாளாடா ?" என்று பொலம்பிக் கொண்டே வந்தான் ஆனந்த்.

hotel வரவேற்பறை படு பயங்கரமாய் இருந்தது. "நவரத்னா"விற்கு வழி கேட்டுச் சென்றனர் இருவரும். ஆனந்தின் படபடப்பைச் சொல்லி மாளாது. பாவம் ரவி, எல்லாப் பொலம்பலையும் சேர்த்து கேட்டு வந்து கொண்டிருக்கிறான்.

சற்று தொலைவில், நால்வர் அமரும் மேசையில் பானுவும், அனுவும் அமர்ந்திருப்பதைப் பார்த்த ஆனந்த், மென்று விழுங்கினான். லேசாகத் தன்னைக் கிள்ளிப் பார்த்து, "thanks டா ரவி" என்று மெலிதாகச் சொல்லிக் கொண்டான்.

மேசையை நெருங்கி இருவரும் அமர்ந்தனர்.

என்ன order பண்ணலாம் என்றான் ரவி. ஆனந்திற்கு எரிச்சலாய் இருந்தது. இப்ப என்ன order பத்திப் பேசறான். பானு கிட்ட எப்ப, எப்படி, என்ன பேசறது என்று மனதுள் குமைந்து கொண்டிருந்தான்.

முகவரி படித்து, டேய் என்னமோ பேசனும்னு சொன்னியேடா பானுவிடம், பேசு என்றான் ரவி.

என்னது காட்டான் மாதிரி போட்டு ஒடைக்கறான். இப்படியா எல்லார் முன்னாலயும் சொல்றது என்று ரவியை முறைத்தான் ஆனந்த்.

சரி ரொம்ப tension ஆகத என்ற ரவி, "பானு, உன்கிட்ட ஏதோ ஆனந்த் பேசனுமாம், அந்த private room இப்ப காலியாத் தான் இருக்கு, போய் ரெண்டு பேரும் பேசிட்டு வாங்க என்றான்.

நல்ல காரியம் பண்ணேடா ரவி இப்பவாவது என்றான் ஆனந்த்.

private room. மடை திறந்தோடும் வெள்ளமென ரத்த ஓட்டம் இருப்பதை உணர்ந்தான் ஆனந்த்.

அவன் எப்படிப் என்ன பேசுவது யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பானு பேச ஆரம்பித்தாள். எங்க வீட்டுல love marriage-க்கு ரொம்ப against. விசயம் வெளில தெரிஞ்சா ரொம்ப ப்ரச்சினை ஆயிடும். ரவி வீட்டுலயும் அப்படித் தான். அதான் ரெண்டு பேரும் இவ்ளோ நாள் அமைதியா இருந்திட்டோம். அனு வந்து என் கஸின் சிஸ்டர். அவ அப்பா கிட்ட மட்டும் விசயத்த சொல்லியிருந்தோம். அவர் இன்னிக்கு எங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசி, ஒரு வழியா எல்லோர் சம்மதமும் கிடைச்சிருச்சு. இந்த நிலமையில தான் ரவி இன்னிக்கு உங்களப் பத்தி சொன்னாரு. நானே உங்க கிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லிடறேன்னு ரவி கிட்ட சொல்லி, நான் தான் உங்கள கூட்டி வரச்சொன்னேன் என்றாள் பானு.

-----

வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரே. இந்தக் கதை சர்வேசன் 'நச்சுனு ஒரு கதை' போட்டிக்காக எழுதி பதிந்திருக்கிறேன். ஒரு வரி பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்தினால் சந்தோசமாய் இருக்கும்.

Tuesday, November 6, 2007

குறுகும் உண்மைகளும் தழைக்கும் பொய்களும்



உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இது தான்டா,

உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புரி தான்டா,

தெள்ளத் தெளிவாத் தன்பாட்டிலே சொன்னான்
பட்டுக் கோட்டை யடா,

கள்ளம் கபடம் எங்கு தேடினும்
வெள்ளைப் பொய் களடா,

கிள்ளப் படாக்கொடி முளைவிட்டு கிளைவிட்டு
காடாய்ப் போகு மடா,

துள்ளத் துடிப்பாய் அதைச்சீர் செய்தாலே
சிறு தோட்டமாய் ஆகுமடா,

பள்ளத்தில் விழும்நீர் நாளொரு வடிவம்
பெற்றே மறையு மடா,

உள்ளத்தில் எழும்சொல் வேகமாய் இருந்தால்
வெள்ளமாய் மாறு மடா,

தள்ளப் பார்க்கும் உலகை நினைத்தால்
வேதனை பொங்கு தடா,

அள்ளக் குறையா உண்மை உரைத்தால்
வாழ்வு கடலாய் நிலையுமடா.