Showing posts with label வளம். Show all posts
Showing posts with label வளம். Show all posts

Wednesday, July 22, 2009

வாக்கினிலே இனிமை வேண்டும் !


Photo: www.zynnyadesign.com

கடும் அலை மோதலிலும் -- அசையாது
கரும் பாறை.

மண் உரசி நடக்கையிலும் -- நசுங்காது
மயில் தோகை.

சுடும் கோடை வெய்யிலிலும் -- கருகாது
நெடு ம‌ர‌ம்.

விழும் ப‌னி வேளையிலும் -- சுருங்காது
மலர் கூட்டம்.

சீறும் காற்றின் வேகத்திலும் -- க‌லையாது
குருவிக் கூடு.

சிந்தும் மழை நீரிலும் -- சிதையாது
சிலந்தி வலை.

ஆனால் ...

சொல் ஒரு சொல்லில்
சிதைந்திடும் ந‌ம் ம‌ன‌ம் !

அத‌னால் ...

வாக்கினிலே இனிமை கொள்வோம்
வ‌ள‌மாய் வாழ்திடுவோம் !

Wednesday, December 10, 2008

மின்னல் கவிதைக‌ள்: 1 - கழுத்துக் கறுப்பேறி


Photo: static.panoramio.com

கழுத்துக் கறுப்பேறி
மங்கின‌ தங்க நகை,

வளைந்து காதிலாடும்
நெளிந்த பொன் தோடு.

பாலில் விழும் வண்டோ ?
படபடக்கும் கருவிழிகள்,

வேல் கொண்டோ ? தேய்த்த
பளிச்சிடும் வெண்பற்கள்.

சேதி ஒன்று சொல்வேன்
சிணுங்காமல் கேட்பாயா ?

வெண்க‌ல‌க் குர‌லெடுத்து
வீண்வ‌ம்பு செய்யாது,

தேளெனக் கொட்டாமல்
தேன்போல் இனித்திடடி.

கன்றுகள் துள்ளியாடும்
காடு களனி நமக்கிருக்க‌,

உன்னையும் காத்திடுவேன்
உன் இதயம் த‌ருவாயா ?

மாராப்பு ரவிக்கைக்குள்ளே
மச்சான‌ வச்சிக்கடி,

ம‌திம‌ய‌ங்கிக் கிறங்கையிலே
மொத்த‌மா வளைச்சுக்க‌டி !!!