வாக்கினிலே இனிமை வேண்டும் !
கடும் அலை மோதலிலும் -- அசையாது
கரும் பாறை.
மண் உரசி நடக்கையிலும் -- நசுங்காது
மயில் தோகை.
சுடும் கோடை வெய்யிலிலும் -- கருகாது
நெடு மரம்.
விழும் பனி வேளையிலும் -- சுருங்காது
மலர் கூட்டம்.
சீறும் காற்றின் வேகத்திலும் -- கலையாது
குருவிக் கூடு.
சிந்தும் மழை நீரிலும் -- சிதையாது
சிலந்தி வலை.
ஆனால் ...
சொல் ஒரு சொல்லில்
சிதைந்திடும் நம் மனம் !
அதனால் ...
வாக்கினிலே இனிமை கொள்வோம்
வளமாய் வாழ்திடுவோம் !


