Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Monday, July 20, 2009

ஏம்மே அயுதுனுகீற ?!


Photo Thanks: bhopal.net

தொழில்முறை நடிகையாக இருந்து, வீராச்சாமியைக் கல்யாணம் கட்டியவுடன், பிள்ளை குட்டி என ஆனபின் குடும்பத்தைக் கவனிப்பதிலேயே காலத்தை ஓட்டினாள் கௌரி. வ‌ழ‌க்க‌ம் போல‌ அன்றும் வீராச்சாமியுட‌ன் விவாத‌ம்.

"ஏய், இன்னான்றே இப்போ ! சொம்மா தென்துக்கும் கத்தி கூப்பாடு போட்டுனுகீற..." என்று விழி பிதுங்கித் தள்ளாடிய வீராச்சாமி, கௌரி விட்ட அறையில், வாசல் தரையில் பொத்தென்று விழுந்தான்.

"கௌலீ ழீ ழல்லா இலுக்கனு...." என்று கை எடுத்துக் கும்பிட்டவனிடம் இருந்து சற்றைக்கெல்லாம் பேச்சு மூச்சைக் காணோம். பதறி போனாள் கௌரி. கிட்ட‌ நெருங்கி நாசித் துவார‌த்தில் விர‌ல் வைத்துப் பார்த்தாள்.

'நல்ல வேளைக்கு மூச்சிருக்கு !' என்று தெம்பானாள். குமட்டிய சாராய நெடியைத் தாங்கிக் கொண்டாள். வீராச்சாமியின் அவிழ்ந்த வேட்டியை, இறுக்கிக் கட்டி, அவனைத் தரதரவென குடிசையினுள் இழுத்து, தூக்க முடியாது தூக்கி கயிற்று கட்டிலில் போட்டாள்.

குடிசை மூலையில், ஏதோ நிக‌ழ்ச்சி ஓடிக் கொண்டு இருந்த‌ இல‌வ‌ச‌ டி.வி.யை அணைத்தாள்.

ச‌ட்டைப் பொத்தான்க‌ளை அவிழ்த்து விட்டு, அங்கே கிட‌ந்த‌ ஓலை விசிறியில் லேசாக‌ விசிறி விட்டாள்.

"இந்தாம்மே கௌரீ...வூட்டுல தான் கீறியா ?" என்று குடிசைக் கதவை அடித்தாள் கோமளவல்லி.

க‌த‌வைத் திற‌ந்த‌ கௌரி, "யக்கா, இது இம்ச நாளுக்கு நாள் தாங்கலக்கா..." என த‌ன் க‌ண‌வ‌னின் நிலை குறித்துப் புல‌ம்பினாள்.

"இப்ப‌டி வாய் பேசாத‌ இருந்துகினா, அது (வீராச்சாமி) வாய‌டைக்கிற‌து க‌ஷ்ட‌ங்க‌ண்ணு"

"யக்கா, நீ வேற‌, ஏய்யா இப்டி குட்சிட்டு வ‌ந்து க‌லாய்க்கிற. நமக்கும் புள்ள குட்டினு ஆகிபோச்சி. ஆனது ஆச்சி, கடலு பக்கம் எப்பதான் போவேனு கேட்டு தான் உட்டேன் ஒரு உடு, அது தாங்கா‌த‌ சுருண்டுகிச்சி" என்றாள் கௌரி.

"அய்யே அடிச்சியாக்கும்... ம்ம்ம்ம்ம், இப்டி செஞ்சீனாக்கா அது உன் காலாண்ட‌ சுத்தி சுத்தி வ‌ரும் பாரு !" என்று ஒரு யோச‌னையும் சொன்னாள் கோம‌ள‌வ‌ல்லி.

"சொம்மாங்காட்டியும் சொல்லாதக்கா !"

"மெய்யாலுமே தாங் க‌ண்ணு, செஞ்சி தான் பாரேன்."

***

இர‌ண்டொரு வார‌ங்க‌ளில் ந‌ல்ல‌ மாற்ற‌ம் இருந்த‌து வீராச்சாமியிட‌ம். நேர‌த்துக்கு க‌ட‌லுக்குப் போவ‌தும், மீன் அள்ளி வ‌ருவ‌தும், குழ‌ந்தைக‌ளை இஸ்கூலுக்கு அழைத்துச் செல்வ‌தும் என‌ ஆளே மாறிப்போனான்.

"இன்னாம்மே... எப்டிகீற‌ ? அய்யே மூஞ்சீல‌ சிரிப்ப‌ப்பாரு ..." என்றார் திண்ணைப் பேச்சில் ஒரு நாள் கோம‌ள‌வ‌ல்லி.

ஆனந்தத்தில் திக்குமுக்காடிய கௌரியால் அழுகையை அட‌க்க‌ முடிய‌வில்லை.

"ஏம்மே இதுக்குப் போயி அயுதுனுகீற. கவ்லைய உடும்மே. சொம்மாவே கடலு உப்பா கீது, அப்பாலிகா தாங்காது !" என்று ந‌ம‌ட்டுச் சிரிப்புச் சிரித்தார் கோம‌ள‌வ‌ல்லி.

***

வீராச்சாமியைத் தன் வசம் வைத்துக் கொள்ள, கௌரியிடம், கோம‌ள‌வ‌ல்லி அப்ப‌டி என்ன‌ யோசனை சொல்லி இருப்பார் ? உங்க‌ள் எண்ண‌ங்க‌ளைப் பின்னூட்டுங்க‌ள்.

இரண்டொரு நாட்களில் பதில் இங்கு :)))

ஒரு சின்ன க்ளூ : இந்த கதையிலும், இதற்கு முந்தைய சில பதிவுகளிலும் பதில் ஒளிந்திருக்கிறது.

***

ரெண்டு நாளாச்சுபா ... உங்க முயற்சிகளுக்கு நன்றி. எனது பதில் கீழே,

கோமளவல்லியின் ரோசனை:
'எதுனா டி.வி. நிகழ்ச்சிக்கு ஜட்ஜா போயி, நம்ம குப்பத்துல ஒரு ப்ரோக்ராம் வச்சிகினு, வீராச்சாமிய அதுல கலந்துக்க வச்சி, போட்டுத் தாக்கிருவேன்'னு சொல்லிப் பாரு கண்ணு :)))))

ஆகஸ்ட் 19 யூத்ஃபுல் விகடனில்


விகடன் முகப்பில்

Friday, June 20, 2008

ஓம் ப்லாகாய நமஹ !



சுருக்காக, நறுக்கென்று மணிரத்னத்தின் திரைக்கதை வசனங்கள் இருந்தாலும், 'அக்னி நட்சத்திரம்' படத்தில் 'தங்கமணி ஊருக்குப் போய்ட்டா' என்பதை தமிழ்கூறு நல்லுலகம் மறக்க வாய்ப்பேயில்லை.

என்ன தான் மறுபாதி, என் உசுரு, செல்லம் என்றெல்லாம் நெய்யாய் உருகினாலும், தங்கமணி தனியா ஊருக்குப் போறாங்க என்றால் ரங்கமணிகளுக்கு வெண்ணெய் போல் கொண்டாட்டம் தான். உதாரணம் மேற்கூறிய திரைப் படத்தில், ஜனகராஜ் அவர்கள், ரங்கமணிகளின் மனோபாவத்தை அற்புதமாகக் காட்டியிருப்பார்.

அது ஏன், எப்ப‌டி என்றெல்லாம் நாம் இங்கு அல‌சப் போவ‌து இல்லை. மாறாக‌ அவ‌ர்க‌ள் ஊருக்கு செல்லும்போது என்ன‌வெல்லாம் சொல்லிச் செல்வார்க‌ள் என‌க் கொஞ்சூண்டு பார்ப்போம். வழக்கம் போல,

  • மறந்திடாதீங்க யுடிலிட்டி பில், ஃபோன் பில் இதெல்லாம் இன்னும் ஒரு வாரத்தில கட்டணும்.
  • வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்க.
  • ரெண்டு வாரத்துக்கு மாவு ஆட்டி ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன், கொஞ்சம் கொஞ்சமா எடுத்து ஊத்திக்கங்க.
  • புளி, லெமன் இதெல்லாம் காய்ச்சி வச்சிருக்கேன். சாதம் மட்டும் வச்சிக்கிட்டாப் போதும்.
  • தினம் டாய்லட் வெறும் தண்ணில மாப் பண்ணுங்க, வாரம் ஒரு முறை சோப் போட்டு கழுவுங்க‌.
  • ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வேக்கு(வ)ம் போடுங்க.
  • இந்த அளவு தண்ணி, இந்த அளவு சோப்பு. அப்புறம் நார்மல் ட்ரை செலக்ட் பண்ணிக்கங்க வாஷிங்க் மெஷின்ல, உங்களுக்கு கொஞ்ச துணி தான் இருக்கும்.
  • தூங்கும்போது எல்லா லைட்டும் அனைச்சிருக்கோமா, அடுப்பெல்லாம் அனைச்சிருக்கோமானு ஒரு தரம் பாத்துட்டு படுங்க.
  • மறக்காம டி.விய ஆஃப் பண்ணிடுங்க.
  • (எந்த உள்குத்தும் இல்லாமல்) நான் இல்லையே என்று வருத்தமெல்லாம் படாதீங்க, கொஞ்ச நாள் தான், வந்திருவேன்.
இவ்வளவு வேலையும் செய்யும் தங்கமணிகள் தனியே ஊருக்குப் போகிறார்கள் என்றால் ரங்கமணிகள் வருத்தம் அல்லவா படவேண்டும் !!!! யோசிக்கணும் :)

இப்ப புதுசா ஒன்னு சேர்த்து சொல்லிட்டுப் போறாங்களாம். சும்மா ப்லாக் ப்லாக்னு கட்டி அழுகாம, வெளில போய் ஃப்ரெண்ட்ஸோட தீர்த்தம் கீர்த்தம் சாப்பிட்டு, கொஞ்சம் வெளி உலகிலும் இருங்க என்று =;)