Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Saturday, December 27, 2008

இசை இல்லாத மார்கழியா .....

ஜாதி, மதம், இனம், மொழி ... இப்படி எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்காத ஒன்றை இசை என்று சொல்லலாமா ?

சின்னப் புள்ளையா இருந்த காலத்தில் இருந்து, இந்த தாளங்களை நம்மை அறியாமலேயே கேட்டு வளர்ந்து வந்திருக்கிறோம். ஒரு குழந்தைக்கு பாடும் தாலாட்டில் இருந்து, கோவில் விசேடங்கள், கல்யாண வைபவங்கள், என எல்லாம் கடந்து கடைசி மூச்சுக்கு அப்புறமும் இசையை நாம் அனைவருமே சுவாசிக்கிறோம்.

சின்ன வயதில் யாராவது ச,ரி,க,ம ... என்று சாதகம் பண்ணினாலோ, அல்லது ஊரில் பக்கத்து தெருவில் குடியிருந்த மேளகாரர், டம்மு, டும்முனு அடித்து (தவிலை தான் :))) ப்ராக்டிஸ் செய்வதைப் பார்த்தாலோ ரொம்ப பாவமா இருக்கும். ஏன் இவ்வளவு கஷ்டப்படுறாங்க என்று :))) வயதாக ஆக, நமக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லையே என்று நினைத்து உண்டு, இன்று வரை.

அதுக்காக நம்ம புள்ளையவாவது இசை மேதையா ஆக்கலாம்னு பியானோ க்ளாஸ் சேர்த்தோம் .... கத்துக்க முடியலையேனு நாம அழுதால், "எங்களை ஏன் கஷ்டப்படுத்தறீங்க"னு புள்ளைங்க அழுகுதுங்க :((( ஃப்ரீயா விட்டாச்சு அவங்களை.

சென்னை சபாக்கள் நிறம்பி வழிவதால், இங்க ஒரு கச்சேரி பண்ணலாம், யூ டியூபின் துணையுடன் :))

ஒரு கல்யாண வீட்டுக்குள்ள நுழையும் போது, டக்கடக்க ... என்று விரல் உருள எழும் ஒலியில், நம் மனம் கரைவது நிச்சயம். இல்லையா ?!! இங்க ஒரு வெளிநாட்டுக்காரர், நம்ம ஊருக்கு எப்படி தேடி வந்து, தவில் மேல் காதல் கொண்டு (இப்படி தான் சொல்லணும் அவரின் வாசிப்பு லயிப்பைப் பார்த்து), முறைப்படி கற்றுக் கொண்டு ... நீங்களே பார்த்து மகிழுங்கள்.



பன்னாட்டுக் கலைஞர்கள் ஒரு ட்ரூப்பா சேர்ந்து, பாடும் பாடலும், இசையும் அருமை.



நம்ம ஊரு ஆட்கள் இல்லாமல் கச்சேரியா ? :))) டூயட் படம் பார்த்ததிலிருந்து, கத்ரி கோபால்நாத் அவர்களின் பல்லாயிரக்கான ரசிகர்களுள் நானும் ஒருவனானேன். இதோ அவருடைய இசைக் காட்சி

Wednesday, July 18, 2007

நிற்பதுவே நடப்பதுவே - பாரதியார்

யாமறிந்த புலவரிலே
கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சி்யில்லை


என்று பாரதி மற்ற புலவர்களைப் பாராட்டியிருந்தாலும். அவரும் கூட "உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" என்று கடைசியாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. வாழ்த்தினாலும் ஏசும், தாழ்த்தினாலும் ஏசும் வையகம் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும் போலும். எதெல்லாம் நிலையில்லை / நிலைத்திருக்கும் என்றும் இந்தப் பாடலில் சொல்லியிருக்கிறார் பாரதி.

பாரதியின் பல அற்புதமான பாடல்களுள் மிக அற்புதமான பாடல் 'நிற்பதுவே நடப்பதுவே'. பாரதி திரைப்படத்திலும் இடம் பெற்றிருக்கிறது இப்பாடல். இசைஞானியின் அற்புதமான இசை, நல்ல காட்சியமைப்பு, ஹரீஸ் ராகவேந்திராவின் குரல், ஷாயஜி அப்படியே இதற்கெல்லாம் உயிர் தந்து நம்முன் பாரதியாக ... காட்சியும், பாடல் வரிகளும் கீழே



Thanks to gr8member for the youtube

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ... நீங்களெல்லாம்
சொற்பனம் தானோ ? பல தோற்ற மயக்கங்களோ ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே ... நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?

வானகமே இளவெயிலே மரச்செரிவே ... நீங்களெல்லாம்
கானலின் நீரோ ? வெறும் காட்சிப் பிழை தானோ ?
போனதெல்லாம் கனவினைப் போல் புதைந் தொழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ ? இந்த ஞாலமும் பொய் தானோ ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ ? அங்கு குணங்களும் பொய்களோ ?
சோலையில் மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ ?

காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ ?
வீண்படு பொய்யிலே ... நித்தம் விதிதொடர்ந் திடுமோ ?
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதல்லால உறுதியில்லை
காண்பது சக்தியாம் ... இந்தக் காட்சி நித்தியமாம்.