இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் !
"இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் ..." என்றவாறு இழுத்தாள் ரமா.
"என்னடி சொல்றே" என்று கேட்டுக் கொண்டே காலணிகளை கழட்டி விட்டு, ரமாவின் வீட்டுக்குள் நுழைந்தாள் அவளது தோழி ரமணி.
"எதை எல்லாம் செய்யாதீங்க என்று சொல்றோமோ, கரெக்டா அதைத் தான் செய்யறாரு, சொன்னா கேட்கறதே இல்லை !!! ரொம்ப கஷ்டமா இருக்கு".
"தண்ணி, தம் எல்லாம் இல்லனு சொல்லுவியே !, இப்ப என்ன ??"
"பாரு ரமணி, புதுவருசமும் அதுவுமா காலைல சீக்கிரமே எழுந்து, குளிச்சு, ஸ்வீட் எல்லாம் செஞ்சு, இட்லி, வடை, சாம்பார்னு ஒன்னுவிடாம பண்ணி, பத்தாதற்கு குழந்தைகளையும் பார்த்து ... என்னை ஒரு வேலை செய்ய விடறதில்லை ..."
"நீ சொல்றது கரெக்ட் தான் ரமா. இந்த (காலத்து) ஆம்பிளைங்களே இப்படித் தான் !!!!" என்று ரமாவுடன் சேர்ந்து கொண்டாள் ரமணி.
-----
ராஜ நடராஜன் வந்து 'நிஜமா கதையா ?' என்றும், நாகு வந்து 'என்னையா வீட்டுல இப்படித் தானா ?' என்றும், இல்ல தங்க்ஸே வந்து, 'ஏங்க ஒரு வேலை வீட்டில் பார்ப்பது இல்லை, நல்லா கதை விடறீங்களே' என்றும் யாராவது வந்து கொடி பிடித்து, மைக் பிடிக்கறது முன்னாடி எஸ்கேப்ப்ப்ப் ... அடுத்த வருஷம் சந்திப்போம் நண்பர்களே.
வழக்கம் போல வித்தியாசமான ஆண்டாக, வரும் 2009 ஆண்டும் அமைய, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
