Showing posts with label தொடர் கதை. Show all posts
Showing posts with label தொடர் கதை. Show all posts

Friday, December 19, 2008

வானின் நிறம் நீலம் - 14 - நிறைவுப் பகுதி !


Photo: concierge.com

ஃபுல்ல‌ர்ட‌ன் ஹோட்ட‌லில் கீழ்த‌ள‌த்தில், "ஹேய்ய்ய்ய்ய்...." என்று ஆட்ட‌ம் பாட்ட‌த்துட‌ன் க‌ளை க‌ட்டிய‌து அந்த‌ ஆண்டு, அலுவ‌ல‌க‌ ஆண்டு விழாக் கொண்டாட்ட‌ம்.

ம‌கேஷ், அப்ப‌ தான் அங்கு சேர்ந்த‌ புதிது. என்னோட‌ பி.எம்.க்கு சொந்த‌ம்னு நினைக்கிறேன். அவ‌ங்க‌ ரெண்டு பேருமே வெளியில் அதைக் காட்டிக்கிட்ட‌து இல்லை.

பேரு தான் பி.எம். முழுக்க‌ முழுக்க‌ எங்க‌ க‌ண்ட்ரோல் தான் ப்ராஜ‌க்ட் எல்லாம். அவ‌ரும் ரொம்ப‌ ஃப்ரென்ட்லி. நேர‌த்துக்கு வேலை முடிச்சிட்டோம்னா, மீதி நேரம் ஜாலி தான், அர‌ட்டை தான்.

எங்க‌ டீமே அப்ப‌டி இருக்க‌த‌ பார்த்து ம‌த்த‌வ‌ங்க‌ளுக்கு எல்லாம் பொறாமையா இருக்கும். வெளிப்ப‌டையாவே சில‌ர், உங்க‌ளுக்கு என்ன‌ப்பா கொறைச்ச‌ல் என்று ஆத‌ங்க‌ப்ப‌ட‌வும் செய்வார்க‌ள்.

ம‌கேஷ் ந‌ல்லா ஸ்பான்டேனிய‌சா பேசுவான். அவ‌ன் வ‌ந்தாலே க‌ளை க‌ட்டும். ந‌ம்ம‌ கிட்ட பேசிக்கிட்டு இருக்க‌வ‌ங்க‌ கூட‌, அவ‌ன் கூட‌ பேச‌ ஆர‌ம்பிச்சிருவாங்க‌. நாள் போக‌, போக‌ என‌க்கு ஒரு பொஸ‌சிவ்நெஸ் வ‌ந்திருச்சு.

ஆண்டுவிழா அர‌ங்கில், கேம் ஷோவில் ப‌ல‌ பெண்க‌ளும் அவ‌னுட‌ன் சேர்ந்து ந‌ட‌ன‌மாட‌ பிரிய‌ப்ப‌ட‌, என‌க்கு ஒரு வேக‌ம் வ‌ந்து, அவ‌னைப் பிடிச்சு த‌ர‌ த‌ர‌னு இழுத்து வெளியே வ‌ந்து, ச‌த்த‌மின்றி (நீண்ட) முத்த‌மிட்டேன்.

அன்று நிலை குலைந்த‌வ‌ன், எதுவென்றாலும் என்னிட‌ம் கேட்டு தான் செய்வான்.

ம‌கேஷ் ப‌ற்றி அண்ண‌னிட‌ம் சொல்ல‌. அவ‌ருக்கும், அண்ணிக்கும் ரொம்ப‌வே ச‌ந்தோச‌ம். தொலைபேசியில் ஜாடையாக சொல்லிய போது, அப்பா, அம்மாவிற்கு துளியும் விருப்ப‌மில்லை. அத‌னால் கொஞ்ச‌ நாட்க‌ள் போக‌ட்டும் என்றார் அண்ண‌ன்.

நாள் செல்ல‌ச் செல்ல‌ இர‌ண்டு வீட்டாரும், அவர்கள் இஷ்டத்துக்கு அலையன்ஸ் பார்த்து ஃபோர்ஸ் ப‌ண்ண‌, இங்கேயே ரெஜிஸ்ட‌ர் மேரேஜ் ப‌ண்ணிக் கொண்டோம். இதில் அண்ண‌னுக்கும், அண்ணிக்கும் துளியும் விருப்ப‌மில்லை.

அடிக்கடி என்னைப் பார்க்க வருகிறேன் என்று, நான் இல்லாத நேரங்களில் கூட வந்து, அண்ணியை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியிருக்கிறான். ஏதாவது சண்டையில் அண்ணி இதை சொல்லும் போதெல்லாம் அவங்க ஏதோ காரணத்துக்காக இப்படி சொல்றாங்களே என்று, மகேஷ் மேல் துளியும் சந்தேகம் இல்லை.

உறவில் கொஞ்ச‌ம் விரிச‌ல் விழ, நேரம் பார்த்து, "ந‌ம‌க்கென்று ஒரு வீடு இருந்தால் ந‌ல்லா இருக்குமே" என்றான் மகேஷ். 'பாசிர் ரிஸ்'ஸில் ஒரு வீடும் வாங்கினோம்.

அங்கு குடிபோன சில‌ மாத‌ங்க‌ளில், என் வ‌யிற்றில் ரோஷினியும், ம‌கேஷ் ம‌ன‌தில் ம‌ரிய‌மும் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்ந்தேன்.

இவ‌னுக்கு எங்க அலுவலகத்திலேயே இருக்கும், ம‌ரிய‌ம் கூட‌ முன்னரே தொட‌ர்பு இருந்திருக்குனும் தெரிஞ்ச‌து. ஒரு நாள், செமினாருக்கு போறவன், தற்செயலா என்னோட‌ தொலைபேசிய‌ மாத்தி எடுத்திட்டுப் போக‌, இவ‌னோட‌த நான் எடுத்துப் போக‌ வேண்டிய‌தாப் போச்சு.

என் வாய் சொல்ல‌க் கூசுது. அப்ப‌டி அசிங்க‌ அசிங்க‌மா டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப‌றா ம‌ரிய‌ம். நான் கூட‌ முத‌லில் த‌வ‌றுதலா அனுப்பி இருப்பானு பார்த்தால், ம‌கேஷ், ம‌கேஷ்னு ஒரே உருக‌ல்.

கொஞ்ச‌ நேர‌த்தில் ம‌கேஷ் கிட்ட‌ இருந்த என் போனில் இருந்து ஃபோன், "நிமி எங்க‌ இருக்க‌, போன‌ மாத்தி எடுத்து வ‌ந்திட்டேன்.... செக‌ன்ட் ஃப்ளோர்ல‌ இருக்கியா, அங்கேயே இரு, நான் வரேன்".

"ப‌ரவாயில்லை, எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்லை, நான் மேனேஜ் பண்ணிக்கறேன்" என்றேன். "ஹிம்ம்ம் ... இல்ல இல்ல, இப்பவே வ‌ரேன்" என்று பரபரத்தான்.

எல்லாம் தெளிவாகி, என் ம‌ன‌ வானில் மேக‌ங்க‌ள் சூழ்ந்து கொண்ட‌து.

முத‌லில் ம‌றுத்த‌வ‌ன், "இவ‌ளுக்கு தெரிஞ்சு போச்சு, இனி ம‌றுத்து இவ‌ள் என்ன‌ செய்து விட‌ப் போகிறாள்" என்று தைரிய‌மாய் என்னை எதிர்கொண்டான்.

ந‌ட‌க்கும் யாவையும் அண்ண‌னுக்கோ, அண்ணிக்கோ சொல்லாம‌லே இருந்தேன். இது மேலும் விரிச‌லை தான் ஏற்ப‌டுத்திய‌தே த‌விர‌ வேறெத‌ற்கும் உத‌வ‌வில்லை.

ச‌ண்டையும், ச‌ச்ச‌ர‌வுமாய் நாட்க‌ள் க‌ழிய, ரோஷிணியும் பிற‌ந்தாள். ச‌ரி இனியாவ‌து ம‌கேஷ் ச‌ரியாகிவிடுவான் என‌ப் பார்த்தால், வீட்டிற்கே ம‌ரிய‌த்தை கூட்டி வ‌ர‌ ஆர‌ம்பித்தான்.

எல்லை மீறி எல்லாம் செல்கையில், "இனி அவ‌ளா, நானா ? என்று முடிவு ப‌ண்ணிக்க‌. அப்ப‌டி அவ‌ தான்னா, இந்த‌ வீட்ட‌ விட்டு வெளிய‌ போயிடு" என்றேன்.

அங்க‌ ஆர‌ம்பித்த‌து அடுத்த‌ எரிம‌லை. "இந்த‌ வீட வாங்கும்போது நானும் காசு போட்டிருக்கேன். நீ வெளியே போ" என்றான்

அவ‌ன் ப‌ங்கு சொற்ப‌ ஆயிர‌ங்க‌ள். அதைத் த‌ந்துவிடுகிறேன், வெளியே போ என்ற‌த‌ற்கு அவ‌ன் ஒத்துழைக்க‌வில்லை.

உன்னால‌ முடியாது என்றால், என்னால‌யும் முடியாது என்று சொல்லி, ஒரு முடிவுக்கு வ‌ரும் வ‌ரை யாரு இங்க தங்க கூடாது என்று ஆளுக்கு ஒரு பூட்டை போட்டு, நான் என் அண்ண‌ன் வீட்டிலும், என் ம‌க‌ள் காப்ப‌க‌த்திலும் இருக்க‌லானோம்.

ச‌ந்த‌ர்ப‌ம் கிடைக்கும்போதெல்லாம் ம‌கேஷ் தொல்லை த‌ர‌வே, வேலையை ராஜினாமா செய்தேன். அப்ப‌டியும் வெளியில் எங்காவ‌து பார்த்து இம்சித்துவிடுவான்.

இன்னிக்கு தான் அவ‌ன் கேட்ட‌ விவாக‌ரத்துப் பத்திரத்திலும், வீட்டுப் ப‌த்திர‌த்திலும் கையெழுத்துப் போட்டு விட்டு நிம்ம‌தியாய் இருக்கிறேன். இதை முன்னாடியே செய்திருந்தால் கொஞ்ச‌ம் என‌ர்ஜியாவ‌து இருந்திருக்கும்."

எல்லாம் சொல்லிக் களைத்து, தண்ணி தண்ணி என்று மீண்டும் ச‌ரிந்து செல்வாவின் தோளில் சாய்ந்தாள்.

சாயத் தோள் தந்த செல்வா, நீர் த‌ந்து, நிர்ம‌லாவிற்கு நல்ல வாழ்வும் த‌ந்தான்.


!!! முற்றும் !!!

Thursday, December 18, 2008

வானின் நிறம் நீலம் - 13


Photo: museums.com.sg

"குழந்தை இப்ப‌ ஒரு காப்ப‌க‌த்தில் வ‌ள‌ருது. யூ வோன் பிலிவ் ஐம் எ மாம் நௌ", என்று நிறுத்தினாள். உங்களை சந்தித்தது "டூ லேட் செல்வா" என்று அதிச‌யித்தாள் !!

"மேக‌ மூட்ட‌மா, கொஞ்ச‌ம் புரிஞ்சும், கொஞ்ச‌ம் புரியாம‌லும் மாதிரி இருக்கு. அப்போ, அன்னிக்கு ர‌யிலில் உங்க‌கூட‌ வாக்குவாத‌ம் ப‌ண்ணின‌வ‌ர் உங்க‌ க‌ண‌வ‌ர் ! ச‌ரியா ?"

"அவ‌ர் இவ‌ர்னு, ஏன் ம‌ரியாதை எல்லாம் கொடுக்க‌றீங்க‌. ஆமா, அவ‌னே தான் !!!"

சாட்டைய‌டி போன்ற‌ தொனியில் நிர்ம‌லாவின் குர‌ல், அவ‌ளின் வேத‌னையை பிர‌திப‌லித்த‌து.

"நிர்ம‌லா, உங்க‌ளுக்கு ஒன்னும் பிர‌ச்ச‌னை இல்லையே. அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தா என்கிட்ட‌ சொல்லுங்க‌. என்னால் முடிந்த உதவி செய்றேன்"

'இவ‌ன் என்ன‌ உத‌வி செய்றேன், உத‌வி செய்றேன் என்று சொல்லிகிட்டே இருக்கான். ந‌ம்ப‌லாமா ?'

"என்னை ந‌ம்ப‌லாம்ங்க‌ற‌துக்கு நான் என்ன‌ உத்திர‌வாத‌ம் த‌ர‌ணும், சொல்லுங்க‌" என்றான்.

'ம‌ன‌தைப் ப‌டிக்கிறானே ? எல்லா ஆம்பிளைங்க‌ளும் இப்ப‌டித்தானே ந‌ம் ம‌ன‌தைக் க‌ரைத்துவிடுகின்ற‌ன‌ர்'

"ஒன்னும் பிர‌ச்ச‌னை இல்லை செல்வா. எல்லாம் முடிஞ்சு போச்சு." என்றாள்.

செல்வா விடுவ‌தாய் இல்லை. "இல்லைங்க‌, உங்க‌ முக‌ம் சொல்லுது ப‌ல‌ க‌தைக‌ள்" என்றான். "ச‌ரி, உங்க‌ளுக்கு இஷ்ட‌ம் இல்லை எனில் நான் தொல்லை ப‌ண்ண‌ விரும்ப‌வில்லை" என்று நிறுத்திக் கொண்டான்.

'பேச‌ணும் என்றும் இருக்கு. ஆனா இவ‌னை எப்ப‌டி ந‌ம்ப‌ற‌துனும் இருக்கு. என்ன‌ இது புதுக் குழ‌ப்பம்' என்ற‌ யோச‌னையில், யார் தோளிலாவ‌து சாய்ந்து அழ‌ வேண்டும் போல் இருந்தது.

முழுக்க‌ அலைந்து, மனமும் தளர்ந்து, உட‌ல் சோர்வுற்று, முறையாக‌ உண்ணாம‌ல், நேர‌ம் த‌வ‌றி அருந்திய‌ காஃபி, வ‌யிற்றை க‌ல‌க்கிய‌து நிர்ம‌லாவிற்கு. நெற்றியில் நீர் திர‌ள‌, க‌ண்க‌ள் இருட்டி ம‌ய‌ங்கி விழாத‌ குறை. சில‌ நொடிக‌ள் என்ன‌ ந‌ட‌க்கிதென்றே புரிய‌வில்லை அவ‌ளுக்கு.

"செல்வா, என‌க்கு என்ன‌வோ போல‌ இருக்கு, ப்ளீஸ், ஒரு டாக்ஸி பிடிங்க‌, என்ன‌ வீட்டில‌ ட்ராப் ப‌ண்ணிடுங்க‌, ஐ வான் டு டேக் ச‌ம் ரெஸ்ட்" என்று ச‌ரிந்து விழுந்தாள்.

ப‌ட்டென்று எழுந்த‌ செல்வா, கைத் தாங்க‌லாய் நிர்ம‌லாவைப் பிடித்துக் கொண்டான். பேர‌ர் பெண்ம‌ணியிட‌ம், த‌ண்ணீர் கொண்டு வ‌ர‌ச் சொன்னான். ச‌ரிந்த‌வ‌ளை ச‌ற்று நிமிர்த்தி விசிறி விட்டான். எல்லோரும் வேடிக்கை பார்த்த‌ன‌ரே அன்றி, யாரும் எதுவும் உத‌வி வேண்டுமா என‌க் கேட்க‌வில்லை.

"நிர்ம‌லா, கொஞ்ச‌ம் எழுந்திரிங்க‌ ... மெதுவா ந‌ட‌ந்து வாங்க‌ ... இன்னும் கொஞ்ச‌ தூர‌ம் தான், இதோ டாக்ஸி ஸ்டான்ட் வ‌ந்திடும்" கைத்தாங்க‌லாய் அணைத்துச் சென்று, டாக்ஸியிலும் ஏ(ற்)றினான்.

"கொஞ்ச‌ம் பின் க‌ண்ணாடி க‌த‌வை திற‌ந்துக்க‌ட்டுமா, ஷீ நீட் ச‌ம் ஃப்ரெஷ் ஏர்" என்றான் ஓட்டுன‌ரிட‌ம்.

"லில் பிட் ஹான் ..." என்று எந்த‌ வித‌ உண‌ர்ச்சியும் இல்லாம‌ல் ஓட்டுன‌ர் சொன்னார்.

ச‌ட‌ச‌ட‌வென‌ காற்ற‌டிக்க‌, மெல்ல‌க் க‌ண்க‌ள் திற‌ந்தாள் நிர்ம‌லா.

வெளியே வான‌ம் ப‌ளிச்சென்று இருந்த‌து.

"செல்வா, தேங்க்ஸ் எ லாட் அன்ட் ஸாரி ஃபார் த‌ ட்ர‌பில்"

"என்ன‌ங்க‌ பெரிய‌ வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. இனி ஒரு வாட்டி ஸாரி சொன்னீங்க‌ன்னா, அப்புற‌ம், இப்ப‌டியே இற‌ங்கிப் போயிடுவேன்" என்று ப‌ய‌ம் காட்டுவ‌தாய் பாவ‌லா காட்டினான்.

"உள்ளூர‌ ர‌சித்தாள். உட‌னே அழுதாள்"

கட்டிடங்களும், மரங்களும், மனிதர்களும் பின்னோக்கிச் செல்ல, நிர்மலாவின் நினைவுகளும் பின்னோக்கி பயணித்தது.

"ரொம்ப‌ நாளா ம‌ன‌சுக்குள்ளே வ‌ச்சு ஆர‌ப்போட்டுகிட்டு இருந்தேன். முடிய‌ல‌. யாருகிட்ட‌யாவ‌து சொல்லி அழ‌லாம் என்றால் அண்ண‌ன் தான். இப்ப‌ அவ‌னும் அண்ணி பின்னால‌."

"நீங்க‌ தைரியமா என் கிட்ட‌ ப‌கிர்ந்துக்க‌லாம் நிர்ம‌லா. மேல‌ சொல்ல‌லாம் என்றால் சொல்லுங்க‌ என்றான்"


தொட‌ரும் .....

Wednesday, December 17, 2008

வானின் நிறம் நீலம் - 12


Photo: farm4.static.flickr.com

"சில‌ நொடிக‌ளில், ச‌ரிங்க‌ உங்க‌ இஷ்ட‌ம்" என்றான்

'ச‌ரி ரொம்ப‌த் தொல்லை ப‌ண்ண‌ வேண்டாம் இவ‌னை' என்று, "எதுக்குங்க‌ உங்க‌ளுக்கு வீண் சிர‌ம‌ம், நானே அங்க‌ வ‌ர்றேன். 'டோம்ஸ் காஃபியில்' மீட் ப‌ண்ண‌லாம்"

முத‌ன் முறையாய் ஜிவ்வென்று (நீல) வானில் ப‌ற‌ப்ப‌தாய் உண‌ர்ந்தான் செல்வா.

"ம்...வ‌ந்து...ஐ ஹேவ் டு கோ டூ ராபிள்ஸ் திஸ் டைம். திஸ் இஸ் ஃபைன‌ல் ஃபார் ஸ்யூர்" என்று குழைவாய் விண்ண‌ப்பித்தாள்.

க்ரீச்ச்ச்ச் என்ற ப்ரேக்கில், சில‌ அடிக‌ள் இழுத்து நின்ற‌து டாக்ஸி. திரும்பி எல்லாம் பார்க்க‌வில்லை ஓட்டுன‌ர். "நாட் எனி மோ. பே மீ செவ‌ன் டால‌, தேட்டி சென்" க‌டுக‌டுத்த‌ குர‌லில் ஓட்டுன‌ர்.

'இது என்ன‌ இட‌ம். இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளில் இங்க‌ல்லாம் வ‌ந்த‌தே இல்லியே. சிங்க‌ப்பூர் குட்டியூண்டு தான், இருந்தாலும், முழுதும் பார்க்க‌ இய‌ல‌வில்லையே'. ஆனா ஒன்னு, அதே ஆரஞ்சுக் கலர் பஸ் ஸ்டாப்கள், ஹாக்கர் சென்டர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள். ஒன்றும் புரிய‌வில்லை நிர்ம‌லாவுக்கு. எதிர் திசையில் சென்று ம‌ற்றொரு டாக்ஸி பிடித்தாள்.

டோம்ஸில் அவ்வ‌ள‌வாக‌க் கூட்ட‌மில்லை. இருவ‌ர் அம‌ரும் மேசையை தேர்வு செய்து அம‌ர்ந்து கொண்டாள். ஆர்ட‌ர் கேட்ட‌ இள‌ம்பெண்ணிற்கு, "ஐம் வெய்டிங் ஃபார் எ ஃப்ரெண்ட், ஐ வில் கால் யூ, தாங்க்ஸ்" என்று அனுப்பி வைத்தாள்.

தொலைபேசியில் "செல்வா நான் டோம்ஸ் வ‌ந்திட்டேன், நீங்க‌ வேலை முடிச்சு வாங்க‌, ஒன்னும் அவ‌ச‌ர‌மில்லை, பை"

கைக‌ள் ப‌ர‌ப‌ர‌க்க‌, கால்க‌ள் குறுகுறுக்க‌ அடுத்த‌ ப‌த்தாவ‌து நிமிட‌ம், நிர்ம‌லாவின் எதிரில் செல்வா.

"ஹேய் என்ன‌து. ஆபீஸா இல்ல வீடா ?!! நென‌ச்ச‌ நேர‌ம் போறீங்க‌, வ‌ர்றீங்க‌."

"ரொம்ப‌ முக்கிய‌மா இப்ப‌ அதெல்லாம். ச‌ரி என்ன‌ சொல்ல‌ணும் ?"

"நான் இன்னும் ஒன்னும் சொல்ல‌லை, உங்க‌ளுக்கு தான் வெய்டிங்"

"அதான் வ‌ந்திட்டேன்ல‌ சொல்லுங்க‌"

கைய‌சைத்து வெய்ட்ர‌ஸ்ஸை அழைத்தாள் நிர்ம‌லா.

"இப்ப‌ சொல்றேன்" என்றாள்.

கிர்ர்ர்ர் என்று முறைத்தான் செல்வா

எஸ்ப்ர‌ஸோ, காப்புசீனோ, லாட்டே ...

"ம்...எது...சீக்கிர‌ம் சொல்லுங்க‌, பாவ‌ம் பொண்ணு நிக்குது பாருங்க‌" என்று உசுப்பேத்தினாள்.

"இர‌ண்டு லாட்டே, எக்ஸ்ட்ரா ஹாட் சொன்னார்க‌ள்."

"ந‌ல்ல‌ வேளை ம‌கேஷ் தொல்லை ஒழிஞ்ச‌து இன்னிக்கோட‌. என்கிட்ட‌ ஒன்னும் இல்ல‌ இல்லியா, இனி வ‌ர‌மாட்டான். ஆனா அண்ணி பழைய மாதிரி பேசுவாங்களா தெரியலையே ?!!" என்று நிறுத்தினாள்.

'அப்பாடா, லைன் க்ளிய‌ர்' என்று ம‌ன‌ம் குட்டிக் க‌ர‌ண‌ம் அடித்த‌து.

"என்ன‌வோ தெரிய‌ல‌ செல்வா, ம‌ன‌சுக்கு ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருக்கு. யாருகிட்ட‌யாவ‌து பேசினா ரிலாக்ஸ்டா ஃபீல் ப‌ண்றேன். அண்ணன் கூட நான் சொல்வதை காதில் போட்டுக்க மாட்டார். இப்ப‌ யாருமே இல்லை, அதான் உங்க‌ கிட்ட‌ ... த‌ப்பா எடுத்துக்காதீங்க‌."

"ஓ.மை.காட். இன் ஃபாக்ட் சொல்ல‌ப் போனா, உங்க‌ள‌ முத‌ன்முத‌லில் பார்த்த‌ப் இருந்தே என‌க்கு பிடித்துவிட்ட‌து. அக‌ அழ‌கு ம‌ட்டும‌ல்லாது, உங்க‌ள‌து செய்ல‌க‌ளும் சேர்த்து. " "அத‌னால‌ ..."

"அத‌னால‌ ..."

"ஐ ல‌வ் யூ நிர்ம‌லா" என்று அவ‌ள் க‌ண்க‌ளை நோக்கினான்.

சோக‌த்தை எல்லாம் ம‌ற‌ந்து, வான் நோக்கி, கண்கள் பணித்து, குற்றால‌ அருவியாய் ச‌ட‌ ச‌ட‌வென‌ சிரிக்க‌லானாள் ....

"என‌க்கு ...ஏற்க‌ன‌வே ....க‌ல்யாண‌ம் ...ஆகிடுச்சுங்க ....செல்வா" என்று சிரிப்பினூடே விட்டு விட்டு சொன்னாள்.

சற்று அமைதியாகி, "ஒரு குழ‌ந்தை வேறு இருக்கு".... என்றாள்


தொடரும் ....

வானின் நிறம் நீலம் - 11


Photo: image14.webshots.com

முத‌ன் முறையாய் செல்வாவின் அக்க‌றை, பிடிப்ப‌தாய் (தேவைப்படுவதாய்) உண‌ர்ந்தாள்.

சில நொடிகளில்,

'ஐயோ, இந்த‌ ஆண்க‌ளின் ச‌க‌வாச‌ம் வேண்ட‌வே வேண்டாம். ஒரு எல்லையில் நிறுத்துவ‌து தான் ந‌ல்ல‌து. ம‌கேஷிட‌ம் ப‌ட்ட‌தே போதும்'.

"சாரி, 'ராஃபில்ஸ்' வேண்டாம் 'புக்கிட் பாத்தோக்' போங்க". என்றாள் ஓட்டுனரிடம்.

திரும்பி முறைப்ப‌து போல் பார்த்தார் ஓட்டுன‌ர். கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து வேற‌ எங்காவ‌து சொல்லுவாளோ என்று அவ‌ர் முக‌த்தில் கிலி அப்பிய‌து.

"புக்கி பாத்தோக் ஆ, லேட்ட டோன் சேஞ் டூ ச‌ம் அத‌ ப்ளேஸ் ஓ.கே ஹான்..." என்று க‌ட்ட‌ளை இட்டார் ஓட்டுன‌ர்.

'போயா போயா' என்று ம‌ன‌துள் சொல்லி "யா ஸ்யூர்" என்றாள் திட‌மாய்.

க‌ண்ணாடி வ‌ழி வெளியே சிறிது நேர‌ம் வேடிக்கை பார்த்து வ‌ந்தாள். சில‌ ப‌ல‌ சிந்த‌னைகள், பின் செல்லும் பொருட்க‌ளோடு போட்டி போட்டு பிம்பங்களாய்ச் சென்ற‌ன‌. என்ன‌து இவ்ளோ நேர‌ம் ஆகியும் ஒரு ஃபோன் கூட‌வா வரலை என்று யோசித்து, பையிலிருந்து செல்லை எடுத்துப் பிரித்தாள். சைலன்ட் மோடில் இருந்தது செல்.

"1 மிஸ்ட் கால்" காட்டிய‌து திரை. என்ன‌து புது ந‌ம்ப‌ரா இருக்கு. திரும்ப‌ கால் ப‌ண்ண‌லாமா, வேண்டாமா என்று யோசித்தாள். வேண்டாம் என்று சிவ‌ப்பு பொத்தானை அழுத்த‌, "1 வாய்ஸ் மெய்ல்" என்ற‌து செல்திரை. அழுத்திக் கேட்டாள். செல்வாவின் குர‌ல் ... "நிர்ம‌லா, உங்க‌ பெர்ச‌ன‌ல் விச‌ய‌த்தில‌ குறுக்கே வ‌ர்றேனு நினைக்காதீங்க‌. ஒரு ஆளுட‌ன் நீங்க‌ வாக்குவ‌தும் ப‌ண்ற‌ மாதிரியும் தெரிந்த‌து. அதே ச‌ம‌ய‌ம் அவ‌ர் உங்க‌ளுக்கு ந‌ன்கு ப‌ரிச்ச‌ய‌மான‌வ‌ர் என்றும் புரிந்த‌து. ச‌ரினு விட்டுட‌ முடிய‌ல‌. கார‌ண‌ம், உங்க‌ முக‌த்தில் ஒரு வாட்ட‌மும், கோபமும் இருந்த‌து. அதான், உங்க‌ளுக்கு ஏதாவ‌து உத‌வினா, த‌ய‌ங்காம‌ என்கிட்ட‌ கேளுங்க‌, இதான் என் நம்ப‌ர், டேக் கேர்"

'அட‌ப் பாவிங்க‌ளா ... ஏன்டா ஒரு பொண்ணோட‌ ம‌ன‌ச‌ இப்ப‌டி நோக‌டிக்க‌றீங்க‌' என்று நொந்து கொண்டாள்.

'உண்மையாவே இவ‌ன் அக்க‌றை காட்டுகிறானா என்று ஏன் யோசிக்க‌ மாட்டேன்க‌ற‌' என்ற‌து ம‌ன‌ம்.

'இல்லை வேண்ட‌வே வேண்டாம். எல்லாம் போதும்'

'என்ன‌ போதும். எல்லோருமே ம‌கேஷ் மாதிரி இருப்பாங்க‌ன்ற‌து என்ன‌ நிச்ச‌ய‌ம்'

சில‌ நொடிக‌ள் யோசித்தாள். செல்லில் ...

"செல்வா நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும். உங்க‌ கிட்ட‌ சொல்ல‌லாமா, வேண்டாமா என்று தெரிய‌வில்லை. ஆனா ம‌ன‌சு கெட‌ந்து அடிச்சிக்குது"

'நானே உன் கிட்ட‌ ஒன்னு சொல்ல‌ணும் என்று யோசிச்சிகிட்டு இருக்கேன். நீ என்ன‌டானா.' "ச‌ரி, எப்போ எங்கே பேச‌லாம் ?"

ம‌ணி பார்த்தாள், திருப்பி போட்ட ஏழாய், மணி ரெண்ட‌ரை காட்டியது.

"நீங்க‌ செர‌ங்கூன்ல‌ தான‌ இருக்கீங்க‌. அங்கேயே இருங்க‌, ஆபீஸ் முடிச்சு அஞ்சு அஞ்சரைக்கா நான் வ‌ர்றேன். அங்க‌ எங்காவ‌து மீட் ப‌ண்ண‌லாம். அதுவ‌ரைக்கும் முஸ்தாபா, ஹ‌னிஃபானு ஷாப்பிங்க்ல‌ இருங்க‌". என்றான்

"இல்ல‌ வேண்டாம். எங்காவ‌து லைப்ர‌ரில‌ மீட் ப‌ண்ண‌லாம்".

"ச‌ரி எந்த‌ லைப்ர‌ரி சொல்லுங்க‌ ?"

'எல்லாத்துக்கும் ச‌ரி என்கிறானே. உண்மையா ? ந‌டிக்கிறானா ??'

"இன்னிக்கு வேணாம். நாள‌ நாள‌ன்னைக்கு பார்க்க‌லாம்".

எதிரில் மௌனம்

தொடரும் ....

Tuesday, December 16, 2008

வானின் நிறம் நீலம் - 10

நாளைக்கு ஒன்று (அல்லது ஓரிரு நாட்களுக்கு ஒன்று) என்று விரிந்து சென்ற 'வானின் நிறம் நீலம்' தொடர் சில காரணங்களால் தொடர முடியாமல் போனதற்கு முதற்கண் மன்னிக்கணும்.

அதை மறக்காம ஞாபகம் வைத்து அக்கறையுடன், யோசனையும் சொன்ன ராமலஷ்மி அவர்களுக்கு உளமார்ந்த நன்றி. முடிந்த வரையில் அவர்கள் யோசனையை (முழுத்தொடரையும் தட்டச்சிட்டு பாகங்களாகப் பதிவது) இனி வரும் தொடர்களிலும் நடைமுறை படுத்தப் பார்க்கிறேன். நேரம் தான் ஒத்துழைக்கணும் :))

இந்தத் தொடர் முழுதும் தட்டச்சிட்டு ரெடி. பாகங்கள் பிரித்து, இன்னும் மூன்று அல்லது நான்கு பாகங்களில் முடியும்.

recap
-----
நிர்மலா, அண்ணன் வீட்டில் தங்கிக் கொண்டு சிங்கையில் வேலை பார்க்கும் சென்னைப் பெண். நண்பர்களுடன் தங்கி சிங்கையில் வேலை பார்க்கும் செல்வா. சில காரணங்களால், அண்ணி வெறுக்க, மன வேதனையில் உழலும் நிர்மலா. பார்த்த வேலையை விட்டு, வேறு வேலை தேடி, செல்வாவின் அலுவலகத்திலேயே நிர்மலா சேர, செல்வா அவளின் அழகில் மயங்கி, அவளைப் பின் தொடர, ஏற்கனவே மகேஷ்ஷுடன் தொடர்பிருப்பதை பார்த்து அதிர்ந்து ...

பொறுத்த நெஞ்சங்கள் பலவற்றிக்கும் நன்றிகள் பல. மேல படிங்க, கருத்து சொல்லுங்க.

முழு கதையையும் வாசிக்க இங்கு க்ளிக் பண்ணுங்க‌

---

வானின் நிறம் நீலம் - Part 10


Photo: panoramio.com


"சரி ஃபார்ம கொடு"

"ஹ‌ன்ன்ன் ... ரோட்டுலயா ... வேண்டாம். எங்காவ‌து உட்கார்ந்து பேச‌லாம்"

"சொன்ன‌தையே திருப்பி திருப்பி சொல்ற‌, என‌க்குப் பிடிக்கலை"

"என‌க்குப் பிடிச்சிருக்கே. அந்த‌ வீடு பிடிச்சிருக்கு, ம‌ரிய‌த்தை பிடிச்சிருக்கு. நீ கையெழுத்துப் போட்டா தான் எல்லாமே ந‌ட‌க்கும் க‌ண்ணு."

வ‌ரும் ஆத்திர‌த்தில் அப்ப‌டியே ரோட்டில் அவ‌னைப் பிடித்து த‌ள்ளிட‌லாமா என்று கூட‌ யோசித்தாள் நிர்ம‌லா. சே, அந்த‌ பாவ‌ம் ந‌ம‌க்கெத‌ற்கு என்று ம‌ன‌ம் பின்வாங்கிய‌து.

வீர‌மாகாளி அம்ம‌ன் கோவில் அருகில் இருந்தன‌ர்.

எங்கேயாவ‌து உட்கார‌ணும், அவ்ளோ தானே. இங்கே உட்கார‌லாம் என்று அவனை (எதிர்)பாராது, கால‌ணிக‌ளை க‌ழ‌ட்டி, பாத‌ங்க‌ளை சுத்த‌ம் செய்து கொண்டு கோவிலுக்குள் நுழைந்தாள்.

உச்சிகால‌ பூசை முடிந்து, உச்சி வெய்யிலுக்கு உள்ளே சில‌ர் குளிர்காய்ந்து கொண்டிருந்த‌ன‌ர். ஆள் அதிக‌ம‌ற்ற‌ ராம‌ர் ச‌ன்னிதியின் பின், கொட்டகையில் நிர்ம‌லாவும், ம‌கேஷும் அம‌ர்ந்த‌ன‌ர்.

"கொண்டா பேப்பரை" என்றாள்.

பேக் பேக்கிலிருந்து சில‌ தாள்க‌ளை உருவினான் ம‌கேஷ்

'செத்துத் தொல‌ ச‌னிய‌னே' என்று திட்டி "இந்தா பிடி, இனி ஒரு முறை கூட‌ என் எதிரில் வ‌ந்திடாத" என்று இரு கர‌ம் கூப்பி த‌லை குனிந்தாள்.

இவ்வ‌ள‌வு எளிதில் காரிய‌ம் முடியும் என்று ம‌கேஷ் எண்ண‌வில்லை.

நீ எப்ப‌வுமே ஸ்மார்ட் நிமி. இந்த‌ ம‌ரிய‌ம் ம‌ட்டும் குறுக்கே வ‌ல்லேன்னா இப்ப‌டி ஆயிருக்காது...

'இந்த‌ மாதிரி எத்த‌னை பேரு கிட்ட‌ சொன்னியோ, சொல்ல‌ப் போறியோ. ந‌ல்ல‌ வேளை என்னை விட்டியே அதுவே நான் செய்த‌ பாக்கிய‌ம்' என்று க‌ண்க‌ள் மூடி யோசித்தாள்.

இனி எதுவும் பேச‌ மாட்டாள் என, வெற்றி க‌ளிப்புடன் அங்கிருந்து ந‌க‌ர்ந்தான் ம‌கேஷ்.

வாய்க்கும், வ‌யிற்றுக்கும் இடையில் என்ன‌வோ செய்த‌து. இன‌ம் புரியாத‌ ஒரு சோக‌ம் அப்பிக் கொண்ட‌து. ச‌ன்ன‌தியில் சாய்ந்து க‌ண்மூடினாள். உல‌க‌மே சூறாவ‌ளியில் சுழ‌ல்வ‌து போல‌ இருந்த‌து. காற்றின் ச‌ட‌ச‌ட‌ப்பில் எல்லாம் பிய்த்துக் கொண்டு ப‌றந்த‌து. வீட்டுக் கூரைக‌ள், மர‌ங்க‌ள், வாக‌ன‌ங்க‌ள், மனிதர்கள் எனப் பாகுபாடு இல்லாம‌ல் எல்லாம் காற்றின் ஆதிக்க‌த்தில் சுழ‌ன்ற‌து. இடி இடித்து வானம், அழ‌த் தொட‌ங்கிய‌து. சொட் சொட் என்று கொட்ட‌கையில் இருந்து வ‌டிந்த‌ நீர், நிர்ம‌லாவின் மேல் விழ‌, ப‌ட்டென்று க‌ண்விழித்தாள். த‌ன‌க்காக‌ வான‌ம் அழுகிறதோ என‌ சிறிது ம‌கிழ்ந்தாள்.

துப்ப‌ட்டாவை த‌லைக்கு போர்த்திக் கொண்டு கோவிலை விட்டு வெளியில் வ‌ந்து டாக்ஸி பிடித்தாள். 'புக்கிட் பாத்தோக்' என்று சொல்ல‌ வ‌ந்த‌வ‌ள், 'ராஃபில்ஸ் ப்ளேஸ்' என்றாள் டாக்சி ஓட்டுன‌ரிட‌ம் ...


தொடரும் .....